ஊர்: தென்குடித்திட்டை#தி.த-132. திட்டை. ரதபுரி, தேரூர், தேனுபுரி. வெண்ணாறு, வெட்டாறு இடையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்(சு), ஸ்ரீபசுபதீஸ்வரர், ஸ்ரீபசுபதிநாதர், ஸ்ரீதேரூர்நாதர், ஸ்ரீதேனுபுரீஸ்வரர், ஸ்ரீஸ்வயம்புதேஸ்வரர், ஸ்ரீஅனந்தேஸ்வரர், ஸ்ரீநாகேஸ்வரர்,ஸ்ரீ ரதபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஉலகநாயகி, ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீமங்களேஸ்வரி, ஸ்ரீசுகுந்தகுந்தளாம்பிகை
தாயார்
உற்சவர்: ஸ்ரீகுரு பிறசன்னதிகள்: ஸ்ரீபுஷ்டிவிநாயகர், ஸ்ரீகுரு. ஸ்ரீமகாலிங்கம், ஸ்ரீஅண்ணாமலையார்
3நிலைராஜபுரம்.
தீர்-சூல,சக்கர,பசு
மரம்-சண்பகம்,
2பிரகாரம்
தி.நே-0-1230,1630-2030,வியாழக்கிழமை-06-14,1600-2100
#12062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
1000 ஆண்டுகள் பழமை. வசிட்டர், சுமாலி, தேவர், பைரவர், முருகன், பிரம்மா, திருமால், காமதேனு, ரேனுகை, இந்திரன், ஆதிசேஷன், வழிபட்டது. திருநீற்றுக் கோயில்-சிறப்பு. திருமேனி மீது 25நொடிக்கு 1முறை நீர்- சந்திரன் ஈரப்பசையை வாங்கி தேக்கி வைக்கும் சந்திர காந்தக்கல் விமானத்துள். பாம்பு உருவம் அடைந்த முருகன் சாபம் நீங்கியது. பைரவர் பிரமஹத்தி தோஷம் நீங்கியது. சூல தீர்த்தம் - மக்களை பக்தியில் திளைக்கவைக்கும், பசு தீர்த்தம் நம் -பாவம் போக்கவல்லது. திருமால் உண்டாக்கியது சக்கர தீர்த்தம்- தீய சக்திகளை அழித்து சர்வ வல்லமைகளைத் தரவல்லது. தானே தோன்றியதால்- ஸ்ரீஸ்வயம்பூதேஸ்வரர், வசிஷ்டர் வழிபட்டதால்- ஸ்ரீவசிஷ்டேஸ்வரர், பசுக்கள் வணங்கி வழிபட்டதால்- பசுபதீஸ்வரர். சேஷன் என்கிற அனந்தன் வழிபட்டதால் அனந்தேஸ்வரர். நாகர் வழிபட்டதால் ஸ்ரீநாகநாதர். சர்ப்பதோஷ நிவர்த்தி தலம்.
சோமநாதனின் பக்திமான்- அவன் மகள் மங்களாவிற்கு திட்டையில் திருமணம் ஆனது. அன்றுமுதல் திட்டை மங்களாம்பிகையை தினமும் துதித்துவந்தாள். ஒருநாள் அவள் கணவன் வெளியில் சென்றபோது யட்சன் அவனை தின்பதற்காக எதிரில் வந்தான். தன் மனைவியிடம் சொல்லி விட்டு வருகிறேன் என ஓடிவந்து மனைவியிடம் சொல்ல அவள் அம்பிகையிடம் வந்து முறையிட்டாள்.அம்பிகைத் தோன்றி தீர்க்க சுமங்கலியாக வாழ ஆசீர்வதித்தாள். அம்மனிடம் இருந்த பெற்ற விபூதியை யட்சன்மேல் தூவ அவள் கணவன் ஆயுளுடன் இருந்தான்.-மங்களாம்பிகை,மங்களேஸ்வரி.
ஒங்காரத்தின் பொருள் கேட்டு சொல்லாததால் பிரமனை சிறை செய்த முருகனை அதன் பொருள் சொல்லக் கேட்க பொருள் சொல்லிவிட்டு கடைசியில் சுப்ரமணிஓம்! என்றார். சதாசிவஓம்! என்பதற்குப் பதில் சுப்ரமணிஓம்! என்று முருகன் சொன்னதைக் கேட்டு தேவர்களும் முனிவர்களும் அதிர்ந்தனர். புகழ்ச்சிக்கு மயங்குவதும், தற்புகழ்ச்சியுடன் பேசுவதும் ஆபத்து. இது தவறு என தன் குமரினிடம் கூறிய சிவன் சர்ப்பமாக மாற சபித்தார். ஸ்ரீபிரம்மாவை சிறையிலிருந்து மீட்டார். சர்ப்பமான முருகன் பல தலங்கள் சென்று வழிபட்டு திட்டை வந்தார். பல வருடங்கள் பூஜை செய்து வழிபட்டு அருள் பெற்று தன் பழைய உருவை அடைந்தார். ஸ்ரீசுப்ரமணியராகவும், அருவமாக சர்ப்ப வடிவிலும் முருகன் அருள்.
தேவர்கள் செய்த பிழையால் கோபமடைந்த உமா அனைவரையும் மரம் செடி கொடிகளாகச் சாபமிட்டாள். செய்த தவரை உணர்ந்தவர்கள் ஈசனிடம் மன்னிப்பு கேட்டனர். அவர்களுக்கு சாபவிமோசனம் அளித்து தென்குடித்திட்டைத்தலத்தின் கொடிமரத்தில் ஓர் அம்சமாக விளங்க அருள். சம்ஹார ருத்திரன்- ஆலமர சூட்சும வடிவம், ஸ்ரீமகாவிஷ்ணு அரசு மரமாகவும், ஸ்ரீபிரம்மா பாலாச /புரசமரமாகவும் அருள். ருத்ராணி -ஸமீ விருட்சம், லட்சுமி-பில்வ மரம், நீலாதேவி-துளசி மரம், பூமி-பிரயங்கு மரம், சாவித்திரி-செண்பக மரம், ஸ்யாமளாதேவி- கதம்ப மரம், இந்திராணி-மாலதிக்கொடி மரமாக இருந்து அருள்.
ஆலங்குடிபோல-ராஜகுரு பரிகாரத் தலம். 27 நட்சத்திர லிங்கங்கள்- குரு சபையில். குரு -உற்சவர் இங்கு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)