ஊர்:திருசோற்றுத்துறை.தி.த-130+மு.குடமுருட்டியாறுகரை:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஒதவனேஸ்வரர், ஸ்ரீதொலையாசெல்வர் ஸ்ரீசோற்றுத்துறைநாதர்
இறைவி: ஸ்ரீஅன்னபூரனி, ஸ்ரீஒப்பிலாநாயகி-தனிகோயில்
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்:ஸ்ரீஆறுமுகம்-வள்ளி,தெய்வானையுடன்.மயில்மீது, ஸ்ரீநாராயணாப்பெருமாள் தனிச்சன்னதி, ஸ்ரீஜேஷ்டாதேவி, ஸ்ரீசப்த மாதர்கள், ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீஐயனார், ஸ்ரீசப்த தான லிங்கங்கள், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீபஞ்சபூத லிங்கங்கள்.
3நிலைராஜகோபுரம்.
மரம்-வில்வம்,வாழை தீர்-காவிரி.
தி.நே-0900-1200,1800-2000
திருவையாற்று சப்தஸ்தானத்தலம்-1/7.
இந்திரன், சூரியன், கௌதமர், சம்பகன் வழிபாடு.
அடியவர் பசிப்பிணி தீர உணவு வழங்குபவர்.
வேதங்களைக் கற்ற துர்பாக்கியன் தகாதவர்களுடன் சேர்ந்து அனைத்தையும் இழந்து கொடிய திருடனாக மாறினான். தன் வீட்டிலேயே திருடிவிட்டு ஓடியபோது ஊர் மக்கள் அவனை யாரென்று தெரியாமல் அடித்துக் கொன்றனர். இருளில் ஓடியபோது துர்பாக்கியன் தன் மகனையே மிதித்துக் கொன்றான். இதனால் இறந்த பின்பும் சினம் அடங்காமல் பிரம்ம ராட்சசனாக மாறி அலைந்தான். ஒருநாள் வேதவிற்பன்னர் சுதர்மனைக் கண்டு தன் நிலைப்பற்றி கூற அவர் அவனை தினமும் இறைவனை வணங்கிவரச் சொல்லி, தான் மாசி மாதத்தில் காவிரியில் நீராடி விரதம் மேற்கொண்டு தினமும் ஐந்தெழுத்தை ஓதி அதனால் வந்த 3நாள் பலனை துர்பாக்கியனுக்கு அளிக்க மனிதவடிவம் அடைந்தான். தினமும் ஐந்தெழுத்தை ஓதி மோட்சம் அடைந்தான்.
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)