ஊர்:திருப்புள்ளமங்கை.தி.த-133. பசுபதிகோயில். ஆலந்துறை, புள்ளமங்கலம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீஆலந்துறைநாதர், ஸ்ரீபசுபதீஸ்வரர், ஸ்ரீபசுபதிநாதர்
இறைவி: ஸ்ரீஅல்லியங்கோதை, ஸ்ரீசௌந்தரநாயகி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஆறுமுகம்-வள்ளி,தெய்வானையுடன்.மயில்மீது,ஸ்ரீ நர்த்தன விநாயகர். ஸ்ரீஅஷ்டபுஜ துர்க்கை, சப்தமாதர்கள், ஸ்ரீபைரவர்
3நிலைராஜகோபுரம் -65'உயரம்
தீர்-திருக்குளம்.
மரம்-ஆல்.
தி.நே-0700-1200,1700-2000
திருவையாற்று சப்தஸ்தானத்தலம்-1/7. அமுதத்தை கடைந்த போது தோன்றிய விஷத்தை இறைவன் அமுதாக்கிய தலம். கூடாத திருமணம் கைகூடும். மரணப்பிடியிலிருந்து கணவரை மீட்கும் சக்தி. ஏவல் பில்லி சூன்யம் தீர வழிபாடு. சாமுண்டியுடன் அம்பிகை வழிபட்டது. நாகதோஷம் கண் திருஷ்டி தோஷம் நீங்க வழிபாடு. மகிஷாசுரமர்த்தினி- துர்க்கை சிறப்பு+ திருநாகேஸ்வரம், பட்டிஸ்வரம் ஒரேசிற்பி. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
சப்த மங்கையரும் காளிதேவிக்குத் துணையாகப் போருக்குச் செல்லுமுன் ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலத்தில் சிவபூஜை செய்தனர். சக்கரப்பள்ளி- சக்ரமங்கை, ஹரிமங்கை- அரிமங்கை(அய்யம்பேட்டை ரயிலடி-1), சூலமங்கலம்- சூலமங்கை(பசுபதிகோவில் ரயிலடிக்கு அருகில்), நல்லிச்சேரி- நந்திமங்கை(அய்யம்பேட்டை-3), பசுபதிகோவில்- பசுமங்கை, பசுபதிகோவில் -தாழமங்கை, பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை இந்த எழு தலங்களிலும் மங்கைப் பருவ தேவியர் சிவ பூஜை செய்து சிவதரிசனம் பெற்ற ஏழு தலங்களும் சப்த மங்கைத் தலங்கள் எனப்பட்டன. ஏழு தலங்களும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள தலங்கள்.
சப்த மாதர்களில் சாமுண்டி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை. அஷ்ட நாகங்களுடன் வந்து வழிபட்டதால் நாகதோஷம் நீக்கும் தலம். பிரம்மன் தவம்செய்து வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர். இந்த அம்பிகை அல்லியங்கோதை காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஏழாவதான பேரிளம் பருவத்தினளாக காட்சி மஹிஷாசுரமர்த்தினி, சிவகாளி, பத்ரகாளி எனப்படுபவள். ரத்த சாமுண்டா, ப்ரம்ம சாமுண்டா எனவும் துதிக்கப்படுபவள். சிவசக்தியின் அம்சம். தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் போரில் வெற்றிபெற அருள் புரிபவள். மனித உடல் ஒன்றின் மீது அழுந்திய பாதம். ஈட்டி, மண்டைஓடு, சூலம், வாள்கள் ஏந்தியிருப்பாள்.
விமானத்திலும் அர்த்த மண்டபத்திலும் சிற்பங்கள் சிறப்பு. நரசிம்மர் வலதுகாலை ஊன்றி இடது காலால் பிரகலாதனை வளைத்தபடி இராண்டு கைகளாலும் அணைத்தபடி இருக்க பிரகலாதன் நரசிம்மரை அண்னாந்து பார்கின்றான். பாதரட்சை அணிந்து கவர்ச்சியாய் காணும் பிட்சாடனர், விஷ்ணு, பிரம்மா, வாத்தியம் இசைக்கும் பெண்கள், விமானம் தாங்கிகள், ராமாயணக் காட்சிகள், சிவ லீலைகள், சிவ நடனக் காட்சிகள், நிகம்பசூதினி, கஜசம்ஹாரமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பூவராகர், பூதகியிடம் கிருஷ்ணன் பாலருந்துவது, உலகலந்த பெருமாள், தசதரன் புத்திரப்பேறு, ராமன் வில்லை ஒடிப்பது, குகப்படலம், சூர்பனகை மூக்கறுப்பு, சடாயுவதம், மாரீசன் வதம், வாலியின் மரணம் என எண்ணிலடங்கா சிறபங்கள் சிறப்பு.
சப்த மங்கைகள் தரிசித்த இந்த ஏழு தலங்களுக்கும் பார்வதி வந்தபோது இறைவன் சிறப்பு காட்சி தந்ததால் இத்தலங்களின் தரிசனம் 1.நெற்றிக்கண் தரிசனம், 2.கங்காதேவி தரிசனம், 3. திரிசூல தரிசனம், 4.பாத தரிசனம், 5.உடுக்கை தரிசனம், 6.மூன்றாம்பிறை தரிசனம், 7.நாக தரிசனம் எனப்படும். சக்ரப்பள்ளி சப்தஸ்தான ஏழூர் திருவிழா2 நாட்கள் பங்குனிமாதம் சித்திரை நடசத்திரத்தன்று புஷ்ப பல்லக்கில் சக்கரவகீஸரும், வேதநாயகியும் எழுந்தருள, வெட்டிவேர் பல்லக்கில் நாதன்சர்மா-அனவித்யை தம்பதிகளுடன் புறப்பட்டு ஆறு தலங்களுக்கும் சென்று திரும்பும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)