
ஊர்:திருக்கடையூர்#தி.த-164+மு+அ-15. திருக்கடவூர். வீரட்டம், வில்வாரண்யம், பிரமாந்திரத்தலம், கடபுரி, பாபவிமோசன புண்ணியவர்த்தம். பிஞ்சிலவனம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர், ஸ்ரீகாலசம்ஹாரமூர்த்தி,ஸ்ரீவில்வவனேஸ்வரர்.ஸ்ரீஅமிர்தலிங்கேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅபிராமி-4கரங்கள்,
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநாகநாதேஸ்வரர், ஸ்ரீசந்திரசேகர், ஸ்ரீகாலசம்ஹாரமூர்த்தி, ஸ்ரீபஞ்சலிங்கங்கள். ஸ்ரீஎமன்தர்மராஜா. ஸ்ரீமார்கண்டேஸ்வரர், ஸ்ரீபாலாம்பிகை , ஸ்ரீகஜலட்சுமி. ஸ்ரீமரகதலிங்கம். ஸ்ரீமுருகன்-ஒருமுகம்- 4கரங்கள்,வள்ளி,தெய்வானை. ஸ்ரீகாலசம்ஹாரமூர்த்தி-மிருத்யுஞ்ஜயமந்திரம், ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீஅதிகார நந்தி,
த.வி.கள்ளவாரணப்பிள்ளையயர்.
7நி.ராஜகோபுரம்.5நி.உள்கோபுரம்,5பிரகாரங்கள். :
மரம்-வில்வம்,ஜாதிமுல்லை-பிஞ்சிலம் :
தீர்-அமிர்த,சிவகங்கை-கால.மார்க்கண்டேய : தி.நே-0500-1200,1600-2100
#15052008-குருஸ்ரீ பகோரா பயணித்தது(9)
தொலைபேசி-04364-287429
மிருகண்டு புதல்வர் மார்கண்டேயருக்காக இறைவன் எமனை உதைத்தருளிய அட்ட வீரட்டதலம்-1/8. வாசுகி, அகஸ்தியர், புலஸ்தியர், துர்கை வழிபட்டதலம். குங்கிலிநாயனார், காரிநாயனார் வழிபட்டு வாழ்ந்த தலம். பிரம்மன் ஞான உபதேசம் பெறவிரும்ப இறைவன் அவர் கையில் ஓர் வில்வ விதையினை தந்து இது முளைக்குமிடத்தில் தங்கி வழிபடச்சொல்ல இங்கு விதை முளைத்ததால் வழிபட்டு அருள் பெற்றதலம்-வில்வவனம்- வில்வவனேஸ்வரர்-பிரம்மபுரீஸ்வரர். சுப்ரமணி ஐயர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்- அபிராமவல்லி கோவிலில் தியானத்தில் இருந்தபோது திருவிழா நிகழ்வுகளுடன் சுவாமியை தரிசிக்க வந்த மன்னன் தனக்கு மரியாதை செலுத்தாத சுப்ரமணியிடம் இன்றைய திதி என்னவென்று கேட்க தியானத்தில் இருந்த அவர் அமாவாசை என்பதற்குப் பதில் பௌர்ணமி திதி என்றார். மக்கள் அவரைப் பித்தன் என்றனர். தியானம் கலைந்தபின் மற்றவர்கள் கூற தான் பித்தனாக நடந்துகொண்டதை உணர்ந்து வருந்தினார். மன்னரின் ஆனைப்படி தீமூட்டி உரிகட்டி அதன்மீது அமர்ந்து உயிர்த் தியாகம் செய்ய முடிவெடுத்தார். உரியில் அமர்ந்து தன் பழிதீர்க்க அபிராமியை வேண்டி அந்தாதி பாடல்களைப் பாட ஆரம்பித்தார். (அந்தாதி என்பது அந்தம்+ஆதி=கடைசி+முதல் வகை) சில பாடல்களைப் பாடியதும் அன்னை அபிராமி தன் ஒரு தோட்டினை கழற்றி வானில் வீசி எறிய அதன் ஒளி சந்திரனை ஒத்ததாக இருந்ததால் பௌர்ணாமி என தவறாகச் சொல்லிய சுப்ரமணி ஐயரின் கூற்றை நிஜமாக்கினார். பழி தீர்ந்த்தாலும் தொடர்ந்து பாடுமாறு அன்னை கூறியதால் நூறு பாடல்கள் பாடி முடித்து அபிராமி பட்டர் எனப் பெயர் பெற்றார். அபிராமி பட்டர் பூசித்தது. அந்தாதி பாடல்களை கேட்ட அபிராமி அம்மை ஸ்ரீசக்கர தாடங்கத்தை வீசி அமாவாசையை முழுமதி நாளாக்கிய அற்புதம் நிகழ்ந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்ட தலம். பூமிதேவி அனுக்ரஹம் பெற்ற தலம். எமபயம் போக்க வல்ல தலம். ம்ருத்யுஞ்ச ஹோமம். உக்ரகசாந்தி, பீமரதச்சந்தி, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம் செய்ய சிறப்பான தலம். சிலப்பதிகார மாதவி வீடு தேரோடும் வீதியில். கார்த்திகை-திங்கள்1008 சங்காபிஷேகம். சித்திரை விழா. பாற்கடலில் கடைந்த அமுதத்தை இங்கே வைத்து விட்டு நீராடச் சென்ற தேவர்கள் திரும்பி குடத்தினை எடுக்க முயன்றபோது பாதாலம்வரை ஊடுருவிச் சிவலிங்கமானது. அமுதமே- லிங்கமானதால் அமிர்த கடேசுவரர். கள்ள வாரணப் பிள்ளையாரை வணங்கி மறைந்த அமுதத்தை திரும்ப பெற்றனர். 23/63-குங்குலி நாயனார். 24/63-காரியார் நாயனார். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(179)- பெற்ற தலம்.
அமுதத்தை தேவர்களுக்கு பரிமாறுமுன் சிவ பூஜை செய்ய நினைத்த திருமால் தனது ஆபரணங்களைக் கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அன்னை தோன்றினாள். பின்னர் பூஜை செய்து அமுதத்தை தேவர்களுக்கு பரிமாறினார் திருமால். அண்ணனின் ஆபரணத்திலிருந்து அபிராமி தோன்றியதால் விஷ்ணுவை அம்பிகையின் அன்னையாக வணங்குகின்றனர். முதலில் வணங்கப்பட வேண்டிய மூர்த்திகள் அகத்தியர் வழிபட்ட பாபகரேஸ்வரர், புலத்தியர் வழிபட்டபுண்ணிய கரேஸ்வரர். தனிச் சன்னதியான புண்ணியகரேஸ்வரருக்கு எதிரில் உள்ள துளை வழியாக அகத்தியர் பூஜித்த பாவகரேஸ்வரரைத் தரிசிக்க வேண்டும். மார்கண்டேயருக்கு அருள லிங்கத்திலிருந்து ஈசன் வெளிப்பட்டமையால் மூலவர் திருமேனியில் வெடிப்பும் எமன் வீசிய பாசக்கயிரின் தழும்பும் உள்ளது. தினமும் சாய ரட்சை பூஜையின் போதுஆதி வில்வ வனநாதருக்கு முதல் பூஜை. இந்த சன்னதிக்குள் அமிர்த கடேஸ்வரருக்கு தீர்த்தம் எடுக்கச் செல்லும் பாதாள குகை உள்ளது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.
