ஊர்:மயிலாப்பூர்#தி.த-24+மு+அ-103. திருமயிலை. வேதபுரி, சுக்ரபுரி, கபாலீச்சரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகபாலீஸ்வரர்
இறைவி: ஸ்ரீகற்பகம்பாள் :
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீதண்டாயுதபாணி. ஸ்ரீசிங்காரவேலன்-6முகம்12கரங்கள், வள்ளி, தெய்வானை, ஸ்ரீபுன்னைவன்நாதர், ஸ்ரீசுந்தரேஸ்வரர், ஸ்ரீஜகதீசுவரர், ஸ்ரீஅண்ணாமலையார். ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீதுர்க்காபரமேஸ்வரி, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீதிருஞானசமபந்தர், ஸ்ரீபூம்பாவை,
த.வி. ஸ்ரீநர்த்தனவிநாயகர்.
7நி.132'கி.ரா.கோபுரம்+4நி.132'மே.கோபுரம்.
மரம்-புன்னை.
5காலபூஜை.
தங்கத்தேர்உலா.
தி.நே.05-1230,16-2130
#25052006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
தொலைபேசி-044-24641670
மயில்+ஆர்ப்பு+ஊர்=மயிலாப்பூர். ஐந்தெழுத்தின் பெருமையையும் பிரணவத்தின் பெருமையையும் சிவபெருமான் விளக்கிக் கொண்டிருக்கும்போது அதில் கவனம் செலுத்தாமல் அங்கு தோகை விரித்தாடிய மயிலின்மீது கவனத்தை உமை செலுத்தியதால் மயில் மீது மையல் கொண்டதால் பூ உலகில் மயில் உரு கொண்டிருப்பாய் என சாபமளித்தார். சாபம் நீங்க இங்கு வந்து புன்னை மரத்தடியில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டு தைப் பூசத்தன்று பெருமான் காட்சி பெற்று அருள்-கற்பகாமபாள். அம்பாள் மயில் வடிவில் வழிபட்டது-பிரம்மாவின் கபாலம் ஏற்றதால் பிரம்ம காபாலீசுவரம்.
சிவபக்தர் சிவநேசரின் மகள் பூம்பாவையை பூ நாகம் தீண்டி இறந்துவிட தகனம் செய்த பின் ஒரு குடத்தில் அவளின் சாம்பலை அடைத்து கன்னிமாடத்தில் வைத்திருந்து அங்கு வந்த திருஞான சம்பந்தரிடம் தன் மகளின் நிலை பற்றிகூற, ஞானசம்பந்தர் கபாலீஸ்வரரை வணங்கி பூம்பாவையின் எலும்பை பெண்ணாக்கிய தலம். நீங்கள் வளர்த்த பெண் இறந்து விட்டாள் ஈசன் கருணையால் நான் உருக்குடுத்த இவள் எனக்கு மகளாவாள் .என்வே இவளை மணக்க முடியாது என்றதும் பூம்பாவை தான் சாம்பலாக இருந்த கன்னி மாடத்திலேயே இருந்து சிவனை வழிபட்டு சிவனடி சேர்ந்தாள். எதற்காக இந்த திருவிளையாடல். சம்பந்தர் ஈசனை வழிபட்டபோது அவருக்குள் ஓர் சிந்தனை. பூம்பாவைக்கு இப்பிறவியில் மணப்பேறு கிடையாது. அவளின் தந்தை சிவநேசன் அவளை எனக்கு மணமுடித்து தரவே வளர்ப்பு செய்திருக்கின்றார். நான் திருமணத்திற்கு மறுத்தால் அடியவர் மனம் சங்கடப்படும். என்னையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது என்பதற்காகவே இறைவன் தன் கழுத்திலுள்ள பாம்பை அனுப்பி பூம்பாவையை கடிக்கச் செய்திருக்கின்றார் என்று தோன்றியது.
திருவள்ளுவர் பிறந்ததலம். சிங்காரவேலர் மயில்மீது- சிறப்பு. பங்குனி உத்திரம் விழா. 63வர் திருவிழா. தைப் பூசம் தெப்போற்சவம். ராஜகோபுரத்தில் அரிய ரிஷபகுஞ்சரம் சிற்பம்-ஒருபக்கம் காளைமேல் சிவபார்வதி, மறுபக்கம் யாணைமேல் மகாவிஷ்ணு- திருமகள். பிள்ளைப்பேறு, பிரமஹத்தி தோஷம், திருமணத்தடை, செவ்வாய் தோஷம்- வழிபாடு. முருகன், நான்முகன், வேதம், சுக்கிரன் இராமர் வழிபட்டது. ஐயடிகள் காடவர்கோன் 'குயில் கொக்காகும் முன் மயிலை நினை' என்றார்- அதாவது குயில் கருமை நிறம், கொக்கு வெண்மை நிறம். இளமைக் காலத்தில் ரோமங்கள் கருநிறத்துடன் இருக்கும் அவை வெண்மையாக மாறும் முதுமைக் காலத்திற்குள் மயிலை கபாலீச்வரரின் அருளை பெறுவாய் என்று அர்த்தம். 1/63- வயிலார் நாயனார். ஞானசம்பந்தர்-பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்-திருபுகழ்(140)-பெற்ற தலம்
மயிலை சப்தஸ்தானத்தலங்கள் ஏழில் ஒன்று ( ஸ்ரீதீர்த்தபாலீஸ்வரர், ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீவெள்ளீஸ்வரர். ஸ்ரீவிருபாட்சீஸ்வரர், ஸ்ரீகாரணீச்வரர், ஸ்ரீமல்லிஸ்வரர், ஸ்ரீவாலீஸ்வரர்)
வரை படம்: விரிவாக்கு(enlarge)