ஊர்: திருநெல்வேலி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசொக்கநாதர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
600 ஆண்டுகள் பழமை.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நிகராகக் கருதப்படுவதால் மதுரையைப்போன்றே போன்றே இங்கும் பிரதோஷ காலங்களில் மீனாட்சிக்கு அபிஷேகம் நடைபெறுவதில்லை.இங்கு வடபுறமாக மீனாட்சியை தரிசித்தால் மதுரை மீனாட்சியை தரிசிப்பதாக ஐதீகம்.
தலவரலாறு: அழகிய பாண்டியன் சொக்கநாதர் பேரில் அளவுகடந்த பக்தி கொண்டவன். அவரை வணங்கியே அன்றைய பணிகளை ஆரம்பிப்பான். சேர மன்னன் புருஷோத்தமன் மதுரை மீது படையெடுக்க அழகிய பாண்டியனும் பெரும் படையுடன் நெல்லையில் முகாமிட்டான். படை திரட்டி வந்ததால் தினமும் சொக்கநாதரை தரிசனம் செய்யமுடியவில்லை என்பதால் வருத்தமடைந்தான். அப்போது சுந்தர முனிவர் ஆசிரம வில்வ மரத்தடியில் லிங்கம் இருக்கின்றது என அசரீரி கேட்க ஆவலுடன் தோண்டி லிங்கமெடுத்து வந்த வேலையை மறந்து ஆலயம் கட்ட ஆரம்பித்தான். இந்த வேளை சரியானது எனக்கருதி சேரன் நெல்லை அருகே படையுடன் வர பாண்டியனின் சேனையைப் பார்த்து மிரண்டான். இவ்வளவு பெரிய சேனையை வெல்வது கடினம் என்று நினைத்து மாறுவேடத்தில் பாண்டியனின் முகாமில் நுழைந்து அவள் மகள் மனோன்மணியை கண்டு காதல் வயப்பட்டு பாண்டியனிடம் நான் போரிட வந்தேன். உங்கள் மகளை எனக்கு திருமணம்செய்து கொடுங்கள் என்று கேட்க பகை மறந்து திருமணம் நடந்தது. சிறிய படை சொக்கனின் திருவிளையாடலால் பெறிய படையாக சேரனுக்கு தெரிந்தது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)