ஊர்:சேய்ஞலூர்.தி.த-95.சேங்கனூர்,சத்தியகிரி,குமாரபுரி,சண்டேசுவபுரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசத்தியகிரீஸ்வரர்(சு),சத்தியகிரிநாதர்
இறைவி:ஸ்ரீசகிதேவியம்மை.சுசுதேவி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீசண்டேஸ்வரர், ஸ்ரீகாலபைரவர்.ஸ்ரீசூரியன்,ஸ்ரீசந்திரன்
மாடக்கோயில்-
2பிரகாரங்கள்.
2காலபூஜைகள்
மரம்:
தீர்-மண்ணியாறு,சத்தியபுஷ்கரணி. அப்பன்குளம்
தி.நே-0600-0900,1730-1900
தொலைபேசி: 90250 25031
#15.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
சேய்-(முருகன்)-நல்-ஊர். முருகன் சிவனை வழி பட்டு சர்வசங்காரப் படைகலம் (உருத்திர பாசுபதம்) பெற்றதலம்.
அரிச்சந்திரன்(அப்பன்குளம்), சிபிச்சக்ரவர்த்தி, கோச்செங்கட்சோழன்(மாடக்கோயிலாக கட்டியவர்) ஆகியோர் இந்த சத்யகிரியில் வழிபட்டுள்ளனர். கோயில் கட்டு மலைமேல். பல முனிவர்கள் விலங்குகளாகவும் பறவைகளாகவும் மரங்களாகவும் உருவம் கொண்டு இறைவன் இறைவியை வழிபட்டு வருகின்றனர்.
வாயுவிற்கும் ஆதிசேஷனுக்கும் நடந்த போட்டியில் மேருமலையை அசைக்க ஒன்பது சிகரங்கள் ஒன்பது கண்டங்களில் விழா அவற்றில் ஒன்று ஏழு சிறு சிகரங்களாக ஏழு இடங்களில் விழுந்தது. அந்த சிகரமே சத்தியகிரி எனப்பட்டது. சோழர்கள் முடிசூடும் ஐந்து நகரங்களில் ஒன்று.
தனக்கு ஏற்பட்ட கிரக தோஷத்தை நீக்க காம்பிலி மன்னன் சிபிசக்ரவர்த்தி யாத்திரை சென்று இங்கு வந்து சிலகாலம் தங்கியிருந்தான். அடியார்களுக்கு பூதானம் செய்ய விரும்பி பல ஊர்களிலிருந்து 360பேரை வரவழைத்து அவர்களுக்காக வீடு கட்டினான். அவ்வூருக்கு வரும் வழியில் எச்சதத்தன் என்பவரின் மனைவி பிரசவமாக ஆண்மகவை ஈன்றதால் அவர்களால் மன்னனிடம் தானம் பெறமுடியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு பசு தானமாக கொடுக்க கடைசியில் ஒரு பசு மீதம் இருக்க யார் வரவில்ல என வருந்தியபோது இறைவனும் இறைவியும் ஒரு வயோதிகராக வந்து தானம் பெற்றனர். மறுநாள் ஒவ்வொரு வீடாகச் சென்று நலன் விசாரித்த மன்னன் ஒரு வீடு சாத்தியிருப்பதைக் கண்டு தட்டினான். கதவு திறக்கவில்லை கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றால் இறைவனும் இறைவியும் குடி கொண்டுள்ளதும் நேற்று இறுதியாக வந்து பசுவைப் பெற்றதும் அவர்களே எனத் தெரிந்தது. அவர்களை வணங்கி வீடு திரும்பினான்.
பத்துநாள் கழித்து எச்சதத்தன் மன்னனிடம் வந்து தானம் கேட்க தன்னிடமிருந்த 360 பசுக்களையும் கொடுத்துவிட்டதால் தானம் அளிக்க முடியவில்லை. வருந்திய எச்சதத்தனுக்கு ஊரில் உள்ள மற்றவர்கள் தங்கள் பசுக்களை மேய்த்து வந்தால் அவனுக்கு வேண்டியதை தருவதாக அவர்கள் வாக்களித்தனர். அதன்படி அவ்வூர் பசுக்களை மேய்த்து வந்தான்.
எச்சத்தன்-பவித்திரை மகன் விசாகருமர்- விசாரசர்மன் மற்றவர்கள் பசுக்களை அடித்து மேய்ப்பதைக் கண்டு தானே பசுக்களை மேய்க்க ஒத்துக்கொண்டான், விசாரசர்மன் மணலில் லிங்கம் செய்து பாலைக் கறந்து அபிஷேகம் செய்வதைக் கண்ட தந்தை எச்சத்தன் பால் குடத்தை கவிழ்த்து விசாகருமரை அடிக்க, அபிஷேகப் பால் கவிழ்ந்தது கண்டு கோபம் கொண்டு தந்தை என பாராமல் கையிலிருந்த கோலால் அடிக்க அது மழுவாக மாறி காலை வெட்டியது. சிவபார்வதி காட்சி- ”நம் பொருட்டு ஈன்ற தந்தையை எறிந்தாய்! இனி உமக்கு நாமே தந்தை. நாம் உண்டகலமும் உடுக்கும் வஸ்திரமும் சூடும் மலர்களும் உனக்கே..” என்று சண்டேஸ்வர் என்னும் பதத்தை அருளி, என்றும் சிவனை வழிபட்டு கடைசியில் உன்னை வழிபட்டால் தான் முழுப்பயன் என அருள். சண்டேஸ்வரர் அவதாரத்தலம். 47/63-சண்டேஸ்வர நாயனார்.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)