ஊர்:வீரவநல்லூர்.கன்னடியன்கால்தெற்குகரை,புன்னைவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபூமிநாதர்(சு)
இறைவி: ஸ்ரீமரகதவல்லி,ஸ்ரீமரகதாம்பிகை
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீசப்தகன்னியர்கள், ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீசுப்ரமணி-வள்ளி.தெய்வானை, ஸ்ரீநடராஜர்-சிவகாமி
தீர்:திருக்குளம்/பூமிதீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் மரம்:புன்னை ஆறுகாலபூஜை தி.நே.0630-1030,1730-2030
மார்கண்டேயனுக்காக காலனை காலால் உதைத்த போது அந்தகன் கொடியாக விழ பூமி பாரம் தாங்காமல் பூமிதேவி ஈசனை வணங்கிய தலம்- பூமிநாதர். பூமாதேவியின் தவத்தை மெச்சி சிவன் யமனை உயிர்பித்து அருள்புரிய, எமனின் கடமைகள் சரிவர நிறைவேற்றப்பட்டதால் பூமியின் இயல்பு நிலை திரும்பியது., அகத்தியர் வழிபட்டது. நகுஷன் சாப விமோசனம். கனகமுனி கயிலை காட்சி. விருகமுனி முக்தி அடைந்ததலம். மார்கழி-பெருவிழா. அதிவீர வழுதிமாறன் புகழ் கண்டு பொறாமை யுற்ற வகுளதாமன் திடிரென்று போர் தொடுத்து வென்றான். தோற்ற வழுதிமாறன் இறைவனிடம் புலம்ப இறைவன் மீண்டும் படையெடுக்கச் சொல்லி அவன் பின்னால் ஒரு குதிரை வீரனாக வர அதைக் கண்ட எதிரிக்கு ஒரு பெரும் படை வருவதுபோல் தோற்றமளிக்க புறமுதுகிட்டு ஓடினான். இது இறைவனின் கருணை என்று உணர்ந்தான் வழுதிமாறன். குதிரை வீரனாக வந்ததால் வீரவநல்லூர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)