ஊர்:திருவையாறு.தி.த-105+மு+அ-45
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபஞ்சநாதேஸ்வரர், ஸ்ரீஐயாற்றீசர்,ஸ்ரீசெம்பொற்சோதீஸ்வரர், ஸ்ரீபிரணதார்த்திஹரன்
இறைவி: ஸ்ரீதர்மசம்வர்த்தினி-4கரங்கள்-தனிகோயில்,ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி, ஸ்ரீதிரிபுர சுந்தரி
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீசண்டீஸ்வரர். ஸ்ரீஹரிகுருசிவயோகதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஓலமிட்ட விநாயகர், ஸ்ரீமுருகன்-ஒருமுகம் -4கரங்கள், வில்லேந்தியகோலம் வள்ளி, தெய்வானையுடன், ஸ்ரீஆட்கொண்டார், உலகமாதேவீச்சுரம், ஸ்ரீஒலகவீதிவிடங்கர்- ஸ்ரீசோமாஸ்கந்தர்
7நி.ராஜகோபுரம்+3-3நி.உள்கோபுரம். ஐந்து பிரஹாரங்கள்
தீர்-சூர்ய(அயனரி),காவிரி,சமுத்திர, தேவாமிர்த, நந்தி
மரம்-வில்வம்.
தி.நே-0600-1200, 1600-2000
# 26-07-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
காசிக்குச் சம்மான தலம்-1/6. 3நி.கோபுரம்(1). அப்பர் கயிலை காட்சி கண்ட தலம்-தென்கயிலை-3நி.கோபுரம்(2)- வேலைபாடு மிக்க தூண்கள். வடகயிலாயம்- உலகமாதேவீச்சரம் சிறப்பு. 3நி.கோபுரம்(3)- இம்மூன்றாம் பிரகாரத்தின் தென்மேற்கு கோடியில் வடக்கு நோக்கி நின்று ஐயாரப்பா என்றால் எழு முறை எதிரொலிக்கும். ஒலி கேட்கும் இடம். சேரமான், சுந்தரருக்கு காவிரியை விலகச் செய்து இக்கரைக்கு அழைத்து வந்து இறைவன் காட்சி. சுந்தரர் அக்கரையில் பதிகம் பாடும்போது இங்கு ஓலம் ஓலம் என அபயக்குரல் கொடுத்து அழைத்து வந்ததால் ஒலமிட்ட விநாயகர். இந்திரன் இலக்குமி, வழி பட்டது. சங்கு சக்ரத்துடன் அம்பாள் அரியின் அம்சமாதலால் விஷ்ணு ஆலயம் இல்லை. 16வயது அறிவுள்ள மகனாக யாகம் செய்தபோது பெட்டியில் தோன்றிய நந்திதேவர் அயனரி தீர்த்தத்தில் காலின் மேல் கால் ஊன்றி கடும்தவம் செய்ததனால் கடல்வாழ் உயிரனங்களால் அரித்த உடல் நன்னிலையடைய திருநந்தி தேவருக்கு ஐயாரப்பர் கங்கை நீர், கமண்டல நீர், அம்மையின் கொங்கையின் பால், மேகத்தின் நீர், இரிசப நந்தியின் வாய்நுறைநீர் ஆகிய ஐந்து நீரினால் அபிஷேகம் செய்வித்து அவை காவிரியில் கலந்தவுடன் -திரு-ஐ-ஆறு.- திருவையாறானது. கருவறையை நோக்கி எழுந்தருளியுள்ள ரிஷபதேவரை நந்தி என்றழைப்பர். சைவ முதல் குருவான தட்சிணாமூர்த்தியால் ஆகம சாஸ்திரங்களை உபதேசம் செய்யப்பட்டவர் இந்த நந்திகேசவர். சிவ கணங்களுக்குத் தலைவர் பதவி பெற்றவர். காவிரி 5ஆறுகளாக இங்கு பிரிகின்றது. நந்திதேவர், விஷ்ணு, அகத்தியர் ஆகியோர் உபதேசம் பெற்ற முக்தி மண்டபத்தில் அமர்ந்து ஒருமுறை பஞ்சாக்கரம் ஜபித்தால் லட்சமுறை பஞ்சாக்கரம் ஜபித்ததிற்குச் சமம். அக்ரஹாரத்தில் ஆஞ்சநேயர் சன்னதி. லிங்கம் பிருத்வி -மண் லிங்கம்- புனுகு சாத்தப் படுகின்றது. மரகதலிங்கம், ஸ்படிக லிங்கம், ஸ்படிக அம்பாள் பூஜை. ஆவுடை விநாயகர், துர்கத்தாம்பாள், மகாலட்சுமி சரஸ்வதியுடன் கூடியுள்ள சன்னதிகள் சிறப்பு. ஆதிசைவர் ஒருவர் காசிக்குச் செல்ல அவர் உறவினர்கள் அவர் உடைமைகளைப் பறித்துக் கொள்ள அவர் மனைவி ஐயாரப்பரிடம் முறையிட வேதியர் உருக்கொண்டு அம்மணைக்குச் சென்று நியமப்படி பூஜை செய்து வந்தார். காசிக்குச் சென்றவர் திரும்பிவர அனைவரும் ஐயம் கொண்டனர். தங்களிடம் உள்ள ஆவணங்களைக் காட்ட அந்தணருடையதே உண்மையானது என அனைவரும் கூற பெருமான் ஆகாயத்தில் திருக்கோலத்துடன் காட்சி அருள்- தன்னைத்தானே வழிபடுவது -சித்திரை ஆயில்ய விழா-ஏழூர் இறைவரும் உலா. அப்பர்குளம் சிறப்பு. குரு-பரிகாரத்தலம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
குங்கிலியப் பொட்டலம் தீயிடல். தாய் தந்தையை இழந்த சுசரிதன் திருப்பழனத்தில் இரவு தங்கியிருந்தபோது கனவில் யமன் தோன்றி இன்றிலிருந்து ஐந்தாம் நாள் மரணம் அடைவாய் எனக்கூறக் கேட்டவன் திருவையாறு வந்து வசிட்டர் ஆலோசனையின் பேரில் தெற்கு கோபுரவாயிலில் நீராடி பஞ்சாக்ரம் ஜெபிக்க ஈசன் துவாரபாலகர்களை அனுப்பி சிறுவனைக் கக்க கட்டளையிட்டார். அவர்கள் யமனைத் துரத்த சிவன் சுசரிதனுக்கு இல்லறத்திலிருந்து மகப்பேறு அடைந்து முக்தியடைய ஆசிகூறினார். எமபயம் தீர்த்த இந்த மூர்த்தியே ஆட்கொண்டேசப் பெருமான்.
சித்திரை பூர்ணத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழா சிறப்புடையது. அதில் நந்தி தேவர் சுயம்பிரகாசையோடும், ஐயாரப்பர் அறம் வளர்த்த நாயகியுடனும் ஏழு ஊர்களுக்கு கண்ணாடி பல்லக்கில் ஊர்வலம் வருவர்.(திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம்). இது நந்தி தேவருடைய திருமண ஊர்வலமாக கருதப்படுகின்றது.
இங்கு பூசித்து திருமால், பிரமன், இந்திரன், சூரியன் முதலான தேவர்களும், அகத்தியர், ததீச விரசன், கௌதமர், காசிபர், ஆங்கிரசர், குற்சர், அத்திரி, பிருகு, வசிஷ்ட்டர், சதானந்தர், சிலாதர் முதலிய முனிவர்களும், சிவதாசன், துஷ்பிரவர்த்தி, துஷ்பிரக்ஞன், சிவப்பிரியன், சுரதன், தர்மநாசன், நாதன்சர்மாவாலியார், சுசரிதன், கரிகாலன் ஆகியோரும் முக்தி அடைந்துள்ளனர்.
சூரிய புஷ்கரணி குளத்திற்கு மேல் கரையில் தஷிணகயிலாயம். நாலவது திருச்சுற்றில் ஐயறப்பர் கோவிலுக்கு வடபக்கம் ஒலகமாதேவீச்சரம்-உத்தரகயிலாயம். ராஜகோபுரத்தை அடுத்த 100க்கால் மண்டபத்தில் தண்டபாணிக் கோவில். தென்கயிலாயம்-ஐயாறப்பர் கோவிலுக்குதெற்கு பிரஹாரத்தில்- பஞ்சவன் மாதேவியால் புதுப்பிக்கப்பட்டது. பஞ்சநதிவாணன், அஞ்சலை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)