ஊர்:திருநெல்வாயில்அரத்துறை.திருவரத்துறை,திருவட்டுறை.தி.த-33+மு+அ-88. தீர்த்தபுரி.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆனந்தீஸ்வரர், ஸ்ரீதீர்த்தபுரீஸ்வரர்(சு) ஸ்ரீஅரத்துறைநாதர்
இறைவி: ஸ்ரீஆனந்தநாயகி, ஸ்ரீதிரிபுரசுந்தரி-4கரங்கள், ஸ்ரீஅரத்துறைநாயகி,
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீவர்த்தமானலிங்கங்கள். ஸ்ரீமகாவிஷ்னு,ஸ்ரீஜோதிலிங்கம். ஸ்ரீஅண்ணாமலை, ஸ்ரீஆதிசேஷன், ஸ்ரீபூத, ஸ்ரீசேர ஸ்ரீசோழ ஸ்ரீபாண்டிய லிங்கங்கள். ஸ்ரீகாசிவிஸ்வநாதர்- ஸ்ரீவிசாலாட் சி. ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்வள்ளி,தெய்வானை.
தீர்-நீவாநதி.வெள்ளாறு,நீலமலர்பொய்கை
மரம்-ஆலம்.
4காலவழிபாடு.
தி.நே-0600-1130,1800-2000
2000ஆண்டுகள் பழமையானது. சூரியன் மற்றும் சந்திரனுக்குச் சொந்தமானது 12 இராசிகளுக்குரிய வீடுகள். செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐவரும் தங்களுக்குச் சொந்தமாக வீடு வேண்டும் என விண்னப்பித்து சந்திர, சூரியரிடம் பெற்றனர். இதை அறிந்த ராகுவும் கேதுவும் தங்களுக்கும் அதுபோல் சொந்தமாக வீடு வேண்டும் எனக் கேட்க அவர்கள் நண்பர்கள் அல்ல என மறுத்துவிட்டனர் சூரியனும், சந்திரனும். எப்படியும் வீடு பெற்று விடவேண்டும் என முயற்சித்த ராகுவிற்கும் கேதுவிற்கும் சனியும் செவ்வாயும் தங்களுக்களிப்பட்ட வீடுகளில் அளித்தனர். இதனால் கோபம் கொண்ட சூரியனும் சந்திரனும் சனியையும் செவ்வாயையும் சபித்தனர். சனியை தொழுநோயும், செவ்வாயயை எழும்புருக்கி நோயும் பீடித்தது. அவர்கள் இருவரும் வைத்தியநாதசுவாமியிடம் தஞ்சமடைந்து தவமிருந்து வழிபட்டு சாபம் தீர்த்து மீண்டும் தங்கள் நிலையை அடைந்தனர். செவ்வாய், சனி தோஷ பரிகாரத்தலம். வான்மீகிமுனி, அரவான் வழிபட்டது. நிவா நதியின் வெள்ளம் நந்தி திருப்பிபார்க்க வடிந்தது. துறைக்கோயில்கள்-5/7. திரு+ அரவம்+ துறை-திருஅரத்துறை. கணவனை இழந்த பெண்கள் மகம் வாசல் வழி வந்து தரிசனம்-கணவர் ஆத்மா சாந்தி. துக்கம் தாங்கும் சக்தி. அரத்துறை அந்தனர் அனைவருக்கும் ஒரே சமயத்தில் கனவில் தோன்றி மாறன்குடியிலிருந்து இங்கு வரும் ஞானசம்பந்தருக்கு முத்து சிவிகையும், குடையும் அருளிய தலம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். கலியகுல மன்னன் திரிபுவன் யாத்திரைவந்து வான்மீகமுனிவரிடம் பொன் பொருள் கொடுக்க அவர் ஆலோசனைப்படி கோவில் கட்டினான். பின் வந்த சோழர்கள் திருப்பணி. ஆடிப்பூரம்-10நாள், மாசிமகம்-15நாள் திருவிழாக்கள்.
வாயு- ஆதிசேஷன் போட்டியில் வாயு நாரதரின் உதவி கேட்க அவர்தன்னுடைய மகதி இசைக்கருவியை இசைக்க அதன் இசையில் ஆதிசேஷன் ஆனந்தமாக தன்னிலை மறந்து ஆட அந்த சமயத்தை பயன்படுத்தி வாயு தன் முழு பலத்துடன் மோத 3மலை சிகரங்கள் பெயர்ந்தது. வாயு வஞ்சகமாக தன்னை ஏமாற்றிவிட்டன் என ஆவேசத்துடன் இங்கு வந்து தவமிருந்து வாயுவை வெல்லும் ஆற்றல் பெற்றார்- அரவம் தவமிருந்து அருள் பெற்றதால் -அரத்துறை- மறுவி திரு அரத்துறை என்றும் திரு நெல்வாயில் அரத்துறை என்றும் பெயர்.
மதங்கன் தனவானுக்கு திருமகள்போல் 2பெண் குழந்தைகள். இருவரும் பருவம் வந்ததும் தாங்கள் வராகமூர்த்தியைத்தான் மணப்போம் என்றனர். இங்கு தவமிருந்தனர். நீங்கள் இருவரும் மரு பிறவி எடுக்காமல் நதியாக மாறி பல உயிர்களுக்கு புண்ணியம் அளித்து கடலில் கலக்கும்போது உங்கள் எண்ணம் நிறைவேறும் என்றார். ஒரு பெண் சேரநாட்டில் கௌதமமுனியின் கமண்டலத்தில் புகுந்து சுவேதி என்ற பெரியாறாகி செல்லும் வழியில் மூழ்கினோரின் பாவங்களைப் போக்கி வரும்போது சின்னவள் கிருஷ்னை என்ற சிற்றாறாக வந்து பெரியாறுடன் கலந்து இங்கு பார்வதிதேவியின் காலடியில் தவழ்ந்தாள். பார்வதி நதியே நீவா என்றாள். அதனால் நீவா நதியாயிற்று. சிவன் தோன்றி உங்கள் விருப்பம் நிறைவேறும் என ஆசிர்வதித்தார்.
வரை படம்:விரிவாக்கு(enlarge)