ஊர்:தூத்துக்குடி.அ-22
மூலவர்: ஸ்ரீஇசக்கியம்மன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஉத்திர மாடசாமி.
மரம்:
தீர்: நான்கு கால பூஜைகள் தி.நே-0600-1300,1600-2200:
தூத்துக்குடியை நோக்கி வந்த மாட்டுவண்டி முன் பாரம் தாங்காமல் வண்டியை இழுக்க முடியாமல் மாடுகள் திணர அருகிலிருந்த இரண்டு கல்லை எடுத்து பின்னால் வைத்து பாரத்தை சமன் செய்து வண்டியை ஓட்டிவந்தான் வண்டிக்காரன். துத்துக்குடியில் வண்டியை இழுக்க முடியாமல் மாடுகள் படுத்துவிட பின்னால் இருந்த இரண்டு கல்லையும் அருகில் இருந்த வேப்ப மரத்தடியில் போட்டுவிட்டான். காடாக இருந்த அந்தப் பகுதியில் ஆடு மேய்க்க வந்த பெரியவர் அந்தக் கல்லில் தலைவைத்து ஓய்வெடுத்தார். அப்போது என்மீது தலை வைத்து படுத்திருக்கின்றாயே என்ற குரல் கேட்டு விழித்தவர் யாரும் காணாமல் திகைக்க மீண்டும் அசரீரி எழுந்து நான் இந்தக் கல்லில் குடி கொண்டுள்ளேன். தினமும் என்னை வழிபடு என்றது. அதன்படி பெரியவர் தினமும் அருகிலிருந்து நீர் எடுத்துவந்து ஊற்றி மஞ்சள் தடவி, குங்குமம் வைத்து வழிபட்டார். அவர் வாழ்வில் ஆனந்தமும் ஆரோக்கியமும் ஏற்படக்கண்ட மக்களும் வழிபட்டு மாடக்கோவில் ஆக்கினர். பின்னர் இசக்கியம்மன் கோவிலாக கட்டினர். வேப்பமரத்தடியில் இருந்ததால் வேம்படி இசக்கியம்மன் எனறனர். முதல் கும்பாபிஷேகம் 1975 -ல், இரண்டாவது கும்பாபிஷேகம் 2002-ல் கோவில் விரிவாக்கப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)