ஊர்: வரகனேரி(திருச்சி)
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீகமலாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:விநாயகர்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
800 ஆண்டுகள் பழமை.
நாரதர், பிரம்மா பிரதிஷ்டை செய்து வழிபாடு.
ஒரு அரசனின் மந்திரிக்கு கனவில் தேவன் ஒருவர் பொன் மயமான புத்தகத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருக்க கண்டு என்ன எழுதுகின்றீர்கள் எனக்கேட்டான். அவர் கடவுளிடம் அன்பு கொண்டவர்கள் பெயர்கள் எனக்கூற அதில் தன் பெயர் இல்லை என அறிந்ததும் தன் பெயரை மக்களின் அன்பர் என எழுதிக் கொள்ளுங்கள் என்றான் மந்திரி. அடுத்தநாள் கனவில் மீண்டும் அந்த தேவன் கையில் அந்த புத்தகத்துடன் தோன்ற அதைப் பார்க்க விரும்ப அவரும் காண்பிக்கின்றார். அதில் மந்திரியின் பெயர் முதலாவதாக எழுதப்பட்டிருந்தது. இது எதைக் குறிக்கின்றது என்றால் உலக உயிர்களிடம் அன்பு கொள்பவர்க்கே எல்லாம் என்பதை. அன்பே பக்தி. உயிர்களுக்கு உதவி புரிபவன்.
வேதநிதி- அந்தணன். தெய்வபக்தியில்லாதவன். மது மங்கை மாமிசம் என அலைந்திருந்தான். அவன் தந்தை அரசனிடம் பணிபுரிந்து வந்தார். தன் பணியில் முழுக்கவனம் செலுத்தியதால் தன் குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை. அவன் பணியை பாராட்டி மோதிரம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார் மன்னன். அதை தலமுறை தலைமுறைக்கு வைத்திருக்க வேண்டும் என கணவன் மனைவி இருவரும் முடிவு செய்தனர். வேதநிதி பணம் கேட்க பணமில்லை என்று சொன்னாள் அவன் தாய். வீட்டில் தேடி பணம் கிடைக்காததால் கிடைத்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு தாசி அபராஞ்சியை சந்திக்க சென்றான். அடுத்தநாள் அரண்மனை நாட்டியமண்டபத்தில் அபராஞ்சிதாவின் நாட்டியமுறை. அவள் கைகளில் இருந்த மோதிரம் மன்னன் கவனத்தைக் கவர்ந்தது. மன்னர் விசாரிக்க அபராஞ்சி மோதிரத்தை மன்னனிடம் கொடுத்தாள். தான் பரிசளித்த மோதிரத்தைக் கொண்டுவரச் சொன்னார் மன்னர். வீட்டில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மன்னரிடம் சொல்ல மன்னர் தான் பரிசளித்த மோதிரம் தாசி அபராஞ்சிதாவின் கையில் இருந்தது எனக் கூற அவமானப்பட்ட தந்தை மகனை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிட்டார். பணமில்லாததால் அபராஞ்சி அவனை வெளியில் தள்ள இதுவரை கோவிலுக்குச் செல்லாதவன் வேறுவழியின்றி அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றான். கூட்டம் அதிகமாக இருக்க ஓரமாக அமர்ந்திருந்தான். பசி வயிற்றைக் கிள்ளியது. மக்கள் எல்லாம் போனபிறகு பூஜையில் வைத்திருந்த பழங்களை எடுத்து தின்ன எண்ணம் கொண்டு எழுந்தான். திடீரென்று வீசிய காற்றால் விளக்கு அணைய திடீர் இருட்டால் ஒன்றும் தெரியவில்லை. தன் வேட்டியைக் கிழித்து வெளியிலுள்ள விளக்கில் பற்றித் திரிபோட்டான். கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு அவசரமாகத் திரும்பியவன் காலிடற கீழேவிழ சத்தம் கேட்ட காவலர்கள் கருவறையில் திருடன் என அவனை உதைத்தனர். காலையிலிருந்து உணவு உண்ணாததாலும் அடிபட்டதாலும் உயிர் துறந்தான். எமதூதர்கள் வந்து உயிரை இழுத்துச் செல்லும்போது ஈசனின் சிவகணங்கள் குறுக்கிட்டு தடுத்து- அன்று சிவராத்திரி 1.காலையிலிருந்து இவன் எதையும் சாப்பிடவில்லை. 2.அனைந்த கருவறை விளக்கை எரியவைத்துள்ளான் ஆதலால் இவன் சிவலோகம் செல்லத் தகுதியுடையவன் என்றனர். இப்படி மது மங்கை மாமிசம் என அலைந்து திரிந்தவன் தனக்குத் தெரியாமல் செய்யும் காரியங்களால் நற்பலன்கள் கிட்டும் என்றால் தெரிந்து செய்யும் செயல்களால் நன்மைகள் நிச்சயம் அடைவீர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)