ஊர்: தென்னூர், திருச்சி
மூலவர்: ஸ்ரீஉக்ரமாகாளி
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபரிபூரணவிநயகர் , ஸ்ரீகருப்பண்ணசாமி,ஸ்ரீசாம்புகாமூர்த்தி,ஸ்ரீசப்த கன்னியர்,ஸ்ரீமதுரைவீரன்,ஸ்ரீசங்கடவிமோசன ஆஞ்சநேயர்,விஷ்ணுதுர்க்கை
ஐந்துநிலை ராஜகோபுரம் மரம்: திருவோடு(காசி வில்வம்),மகாவில்வம்,வன்னிமரம்.
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
சோரன் மாறன், மாறன்கடையான், நந்திவர்மன் வழிபாடு.
சும்பன், நிசும்பன் இருவரும் சகோதர்கள். பாதாளலோகத்திலிருந்து பூமி வந்து பிரமனை நோக்கித் தவம் இருக்க காட்சி கொடுத்த பிரமனிடம் மரணமில்லா வரம் கேட்க அது தர இயலாது எனக்கூறி வேறு வரம் கேட்கச் சொன்னார். மானிடர்கள், தேவர்கள், மிருகங்கள், பட்சிகள் இவற்றினால் தங்களுக்கு மராணம் ஏற்படக்கூடாது என்றும் தாங்கள் தேவர்களைவிட அழகுடன் திகழவேண்டும் என்றும் வரம் கேட்டு பெற்றனர். பாவம் பெண்கள் தங்களை ஒன்றும் செய்யமுடியாது என நினைத்து அவர்களை வரத்தில் சேர்க்கவில்லை. வரம் கிடைத்ததும் எல்லோரையும் தாங்கள் சொல்வதைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்திக் கொடுமைகள் புரிய ஆரம்பித்தனர். தேவர்கள் குரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி இமயத்தில் சக்தி மகாமாயிடம் முறையிட்டனர். மாகாமாயை தன் உடலிலிருந்து காளியை தோற்றிவித்தாள். அவளை தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அசுரர்கள் இருக்கும் வனத்தினருகே சென்று பாடல்பாட அப்பாடலின் இனிமையால் கவர்ந்த வீரர்கள் சக்தியைக் கண்டு அவளின் அழகை சும்பன் நிசும்பனிடம் விவரித்தார்கள். சும்பன் சுக்ரீவனைத் தூது அனுப்பினான். அவனிடம் உங்கள் மன்னன் 32 அம்சங்கள் பொருந்தியவன் என்று எனக்குத் தெரியும், யுத்தத்தில் என்னை வென்றால்தான் அவனை மணப்பேன் என்றார். இதைக் கேட்ட சும்பன், நிசும்பன் தும்பரலோசனை அனுப்பினான். காளி தும்பரலோசனை பஸ்பமாக்கினாள். பின் சண்டமுண்டர்கள் இருவரையும் காளி கொன்றாள். இதை அறிந்த நிசும்பன் போருக்கு வந்தான். போரின் முடிவில் காளி அவன் தலையை அறுத்தாள். கோபம் கொண்ட நிசும்பன் வந்தான். போரிட்டான். பலநாட்கள் போரின் முடிவில் காளி அவனையும் கொன்றாள். தேவர்கள் பூமரி பொழிந்து காளியை வணங்கினர்.
உலக உயிர்களை உண்டாக்கி துயர்வினை அடையச்செய்து தம்முள் அடக்கி ஆளுவது சக்தி என்ற தெய்வம். உலகில் உள்ள எல்லா உயிர்களின் தோற்றம் சக்தியின் தோற்றம். இருந்தபோதும் அடியவர்களின் நலன் காக்க அச்சக்தி பலபெயர்களில் பல வடிவம் தாங்கி சக்தியாக 7 மாதர்களாக (பிரம்மாரி, மகேஸ்வரி, கௌமாரி, வைணஷ்வி, இந்திராணி, சாமுண்டி, வராஹி) இருக்கின்றது. பில்லி, ஏவல், சூன்யம் தீர வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)