ஊர்:உத்திரகோசமங்கை#+மு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமங்களேசுவரர்(சு) ஸ்ரீபிரளயகாலேசுவரர்
இறைவி: ஸ்ரீமங்களாம்பிகை-தனிசன்னதி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசகஸ்வரலிங்கம்.ஸ்ரீமரகதநடராசர்-6’.ஸ்ரீஆறுமுகம்-12கரங்கள்.மயில்மீது,வள்ளி,தெய்வானையுடன்-ஸ்ரீ மாணிக்கவாசகர். ஸ்ரீஸ்படிக லிங்கம்
த.வி.காட்சிகொடுத்தநாயகர்.
7நி.ராஜகோபுரம்+5நி.உள்கோபுரம்.இரட்டைகோபுரங்கள்.அம்பாள்5நி.ராஜகோபுரம்.
தீர்-குளம்.அக்னி.
மரம்-எலந்தை.
ஆறுகாலபூஜை தி.நே-06-1230,16-2030
#06092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை சாபம் பெற்று பரதவர் குலபெண்னாகப் பிறந்த அன்னைக்கு உபதேசித்த தலம். உத்தரம்- உபதேசம் கோசம்-ரகசியம். மங்கை- பார்வதி. இங்கு ஆடி பின்னர் சிதம்பரத்தில் சிவபெருமான் ஆடியுள்ளதால் இது ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படும். உத்திரகோசமங்கை திருத்தலத்தில் தவம் புரிந்த ஆயிரம் முனிவர்களுக்கு காட்சியளித்து தன்னிடமிருந்த சிவ ஆகமங்களை தந்து தான் திரும்பி வரும் வரை பாதுகாக்கும்படி சொல்லி மறைந்தார். குழந்தை வடிவில் தன்னை தரிசிக்க விரும்பி தவமிருந்த மண்டோதரிக்கு அருள்புரிய இலங்கை சென்று காட்சி அருளியபோது வந்திருப்பது யார் என்பதை அறிந்த மண்டோதரி ஆனந்தப்பட்டு சிவ குழந்தையை எடுத்துக் கொஞ்ச அங்கு வந்த சிவநேசனான இராவணன் உண்மையறிந்து - குழந்தையை எடுக்க முற்படும்போது இறைவன் மேனியை இலங்கேஸ்வரன் தீண்டிய உடன் மறைந்து இங்குத் தீர்த்தக் குளத்தில் தீப்பிழம்பாக தோன்ற ஒரு முனிவர் நீங்கலாக 1000 முனிவர்கள் பரவசமடைந்து குளத்தில் குதிக்க, அந்த முனிவர் இறைவனின் ஆகமங்களைக் காப்பது தன் கடமை என அப்படியே அமர்திருந்தார். அவர்க்கு ரிஷிபாரூடராக காட்சி. அவரை பாண்டிய நாட்டில் மீண்டும் பிறந்து சைவமும் தமிழும் தழைத்தோங்க தொண்டு செய்ய அருள் - அவரே மாணிக்கவாசகர். குளத்தில் குதித்த முனிவர்கள் லிங்கங்களாய் மாற அவர்களின் நடுவே தானும் லிங்கமாய் வீற்று சகஸ்ரலிங்கமாய் காட்சி அருள். ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு- ஆதிரை நாளில் அபிஷேகமுடிந்து- 6அடி உயர பச்சைமரகத் திருமேனி தரிசனம். நடராஜர் திருமேனி மரகதத்தால் ஆனது-இரத்தினசபை. ஸ்படிகலிங்கம். தாழம்பூவிற்கு சாப விமோசனம். இறைவனுக்கு தாழம்பூ சார்த்தல் சிறப்பு. தலமரம் எலந்தை-3000 ஆண்டுகள் முந்தையது. சிவன் செந்த ஊர் என நம்பப்படுகிறது. தடைபட்ட திருமணம் நடைபெறும். சிவாலயங்களில் பள்ளியறைப் பூஜையின்போது பாடப்படும் ;பொன்னூஞ்சல்” பாடல் இத்தலத்தில் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது. தினமும் 1230 மணிக்கு ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம். ஆளியின் வாயில் உருளும் கல் பந்து சிறப்பு. இலந்தை மரத்தடியில் வியாசரும், பராசரும் தவம். காகபுசுண்டர் வழிபாடு. அதிகாலை 0530 தொடங்கி இரவு 8 மணிவரை அபிஷேகம் அலங்காரம், நிவேதனம், தீப ஆராதனை என ஆறு முறை பூஜை. ஊர் எல்லையி வராஹிக்கு கோவில் (வரஹிக்கு காசி, தஞ்சை மற்றும் உத்திரகோசமங்கை)
வரை படம்: விரிவாக்கு(enlarge)