
ஊர்: ஆலங்குடி#தி.த-215+நவ5/9. இரும்பூளை. காசிஆரண்யம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாசிஆரண்யேஸ்வரர்(சு), ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஏலவார்குழலி , ஸ்ரீஉமையம்மை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகலங்காமல் காத்த விநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி-குருபகவான். ஸ்ரீசப்தலிங்கங்கள். ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீசூரியேசர், ஸ்ரீசேமேசர், ஸ்ரீகுருமோக்ஷேஸ்வரர், ஸ்ரீசோமநாதர், ஸ்ரீசப்தரிஷிநாதர், ஸ்ரீவிஷ்ணுநாதர், ஸ்ரீபிரம்மேசராகிய சப்த லிங்கங்கள். ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீபைரவர், ஸ்ரீநவகிரகங்கள், ஸ்ரீபாதாள பைரவி காளியம்மன், ஸ்ரீவீரபத்திரர். உ: சோமாஸ்ஸ்கந்தர், நின்ற கணபதி, சந்திரசேகரர், சண்டேசுவரர், கல்யாண சாஸ்தா, சப்தமாதா
த.வி. கலங்காமல் காக்கும்விநாயகர்.
5நிலைராஜகோபுரம்.
தீர்-அமிர்தபுஷ்கரணி.ஞானகூபம்,பூனைவளஆறு.
மரம்-பூளை.
தேர்விழா. நான்கு கால பூஜை.
தி.நே-0530-1030, 1130-1230,1630-2030
,
#03112003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
தொலைபேசி-04374-269407
சுமார் 1400 ஆண்டுகள் பழமை. விஸ்வாமித்திரர், அஷ்டதிக்பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகபிரம்மரிஷி, ஆதிசங்கரர், முசுகுந்த சக்ரவார்த்தி, சுந்தரர் ஆகியோர் வழிபாடு.
பஞ்ச ஆரணயத்தலம்.4/5. சுந்தரர் இத்தலம் வந்தபோது ஆற்றில் வெள்ளம். ஓடக்காரராக வந்து அக்கரையில் கொண்டு சேர்ப்பதாக பொற்காசுகள் பெற்று அடியவர்களை முதலில் கொண்டு விட்டு பின் சுந்தரரைக் கூட்டிச் செல்லும்போது சுழலில் பற்றுக் கோலை நழுவவிட்டு எடுப்பதுபோல் பாசங்கு செய்து தண்ணீரில் தத்தளிக்க சுந்தரர் ஆபத்சகாயேஸ்வரரை மனதார வேண்ட படகு பாறையில் மோதி நொருங்கியது. சிவபெருமான் ரிஷபரூடராக தோன்றி காப்பாற்றி அருள்.
தேவர்கள் அமுதம் கடைந்தபோது ஏற்பட்ட ஆலகால விஷத்தை இறைவன் உண்டு தேவர்களை காத்த தலம்- ஆலம்குடி. ஆலம்- நீர் சூழ்ந்த இடம்- கோவிலைச் சுற்றி நீர் சூழ்ந்து அமைந்துள்ளதால்- ஆலம்குடி என்றும் சொல்லலாம். இங்கு விஷத்தால் எவர்க்கும் தீங்கில்லை.
திருமால், பிரம்மா, லட்சுமி, கருடன், அஷ்டதிக்பாலகர், ஐயனார், வீரபத்திரர் வழிபட்டது.
கஜமுகாசுரனால் தேவர்களுக்கு நேர்ந்த துன்பங்களை களைந்து காத்தமையால் தலவிநாயகர்- கலங்காமல் காத்த விநாயகர்.
பூளை தலவிருட்சம்- இரும்பூளை-குரு நவக்கிரகத்தலம்-5/9 (வியாழக்கிழமை தோஷபரிகாரம்-சகல சம்பத்துக்கள், புத்திரப் பேறு, வித்தைகள் சித்தி). மாசி வியாழன் சிறப்பு அபிஷேகம். சுக்ரவார அம்பிகை சிறப்பு. தட்சிணாமூர்த்தியாக குரு பிரகஸ்பதி அருள்.
தட்சிணாமூர்த்தி-உற்சவர் இங்கு மட்டும் மாதா, பிதா, குரு என கோயில் அமைப்பு. சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு ஞான உபதேசம் பெற்றார். குரு திசை தெற்கு- தெற்கு ராஜகோபுரம். புகழ், மகிழ்ச்சி, உடல்நலம் அருள்பவர். திருவிடை மருதூர் -தட்சிணா மூர்த்தி பரிவாரத் தலம்-5/9. சித்திரை, தை, பங்குனி விழா.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். வியாழக்கிழமை- முல்லை மலர் வழிபாடு சிறப்பு.
குருபரிகார வழிபடும் முறை- முதலில் கலங்காமல் காத்த விநாயகரை வழிபட்டு கொடிமரத்தில் உள்ள துவஜ கணாபதியை வணங்கி ஆபத்சகாயேஸ்வரர் பின் குரு தட்சிணாமுர்த்தி சங்கல்பம் அர்ச்சனை முடித்து சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி, துர்கை, சண்டிகேஸ்வரர் நவகிரகங்கள் உற்சவமூர்த்தி, ஏலவார்குழலி என வழிபட்டு சனிபகவானைத் தொழுது கொடிமரத்தருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பின்னர் குருவிற்கு பரிகாரமாக 24 நெய் தீபங்களை அதற்குரிய இடத்தில் ஏற்றி கோவிலை மூன்று முறை வலம் வந்து ஒவ்வொரு முறையும் கொடிமரத்தின் முன் கீழேவீழ்ந்து வணங்கி குரு பரிகாரத்தை நிவர்த்தி செய்யவும்.
விசுவாமித்திரர், அஷ்டதிக்பாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காக புஜண்டர், சுகர்பிரம்மரிஷி, ஆதிசங்கரர் பூஜித்த தலம். திருமால், பிரம்மா, இலக்குமி. கருடன், வீரபத்திரர் ஆகியோர் தம் பெயரால் லிங்கம் நிறுவி வழிபடனர். முசுகுந்த சக்ரவர்த்தி, சுவாசனன் வழிபட்டது.
முகுந்த சக்ரவர்த்தியின் அமைச்சர், சிவபக்தர் அமுதோகர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட கோவில். அவர் பெற்ற சிவபுண்ணியத்தில் பாதியை தனக்குத் தத்தம் செய்துதர கேட்க மறுத்த அமுதோகரை சிரச்சேதம் செய்ததனால் மன்னருக்கு ஏற்பட்ட தோஷங்கள் நீங்க இங்கு வந்து வழிபட்டு பலன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
