ஊர்: தேவிபட்டணம்
மூலவர்: ஸ்ரீகாளியம்மன்
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்::
பிறசன்னதிகள்: ஸ்ரீகருப்பசாமி, ஸ்ரீசின்னக் காளியம்மன்.
மரம்: ஆலமரம்
தீர்:
தி.நே-0700-1900
தலவரலாறு-தவம் செய்து வந்த சித்தர்களுக்கு திருவிலங்கப் பாறையில் தலையில் கும்பம் தாங்கி ஒற்றைக் காலில் தவக்கோலத்தில் பராசக்தி காட்சி. அன்று முதல் ஊர்மக்கள் விளக்குத்தூண் வடிவில் பிரார்த்தனை. திருவிலங்கம்பாறைக்கு வடக்கில் சேத்தூர் ஜமீனும், தெற்கில் சிவகிரி ஜமீனும் ஆட்சி செய்து வந்தபோது குடிநீர்ப் பிரச்சனையால் மோதல் ஏற்பட சக்தியின் ஆணைப்படி மலை அடிவாரத்தில் சமரணை கட்டப்பட்டு இரு ஜமீன் மக்களுக்கும் நீர் கிடைத்து வந்தது. பெருமழையால் வெள்ளம் வந்தபோது விளக்குத் தூண் அடித்துச் செல்லப்பட்டு தட்டாங் குளத்தில் கரை சேர்ந்தது. தட்டாங்குளத்தில் நீர் எடுக்கச் சென்றவர்கள் விளக்குத்தூணை வழிபட்டனர். அங்கு விளையாடும் சிறுவர்கள் விளையாட்டாக ஆற்று மணலை பொங்கலாகவும் செங்கற்களை தேங்காயகவும் வைத்து பூஜை செய்து விளையாட அதை ரசித்த அம்மன் காட்சியளித்து படைத்த அத்தனை பொருட்களையும் உண்மையான படையல்களாக மாற இதை அறிந்த ஊர்மக்கள் ஒன்று கூடி வழிபட்டனர். அன்று இரவு ஜமீன்தாரின் கணவில் தோன்றி ஆலயம் கட்டச் சொல்லி ஆணை பிறக்க அவ்வாறு கட்டப்பட்டது இக்கோவில். தேவி வந்து அமர்ந்த இடமாதலால் தேவிபட்டணம் ஆனது.
ஆனிமாதம் திருவிழா. கிரக தோஷம் கடன் தொல்லையிலிருந்து விடுதலைக்கு வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)