ஊர்: வில்லிவாக்கம்
மூலவர்:ஸ்ரீசௌமியதாமோதரர்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅம்ருதவல்லி
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தொலைபேசி: 044 26173306
அத்ரி மகரிஷி புதல்வன் துர்வாசருக்கும் சூரனின் தங்கை அசுமுகிக்கும் வில்வலன், வாதாபி என இரு மகன்கள். மகன்களை ஞான வழியில் வளர்க்க தந்தை விரும்ப தாயோ அசுர குணமுடையவராக வளர்க்க விரும்ப வெறுப்படைந்த துர்வாசர் கானகத்தில் தவநிலை மேற்கொண்டார். தன்னை விட்டு அகன்ற துர்வாசர் மேலிருந்த கோபத்தால் அனைத்து முனிவர்களையும் அழிக்க தன் மகனகளுக்கு உத்தரவிட்டாள். அந்த பகுதியை ஆக்கிரமித்து வில்லிவாதாபி பாக்கம் என அழைத்தனர். எதிர்கொள்ளும் முனிவர்களின் வயிற்றுக்குள் வாதாபி உணவு வடிவில் செல்ல சற்று நேரத்தில் வாதாபி வெளியே வா என வில்லவன் சொல்ல வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிவந்து ரிஷிகள், முனிவர்கள் இறப்பிற்கு காரணமானார்கள். சிவபெருமானின் திருமணம் காண அனைவரும் கயிலை செல்ல வடபுலம் தாழ சிவன் அகத்தியரை புவிநிலை சரியாக தென்புல பொதிகைமலைக்கு அனுப்ப வரும்வழியில் வாதாபி வில்வலன் சகோதரர்கள் அகத்தியரை அழிக்கத் திட்டமிட்டனர். அகத்தியர் வயிற்றுக்குள் உணவாக வாதாபி செல்ல ஞானத்தால் இதனை அறிந்த அகத்தியர் வாதாபி ஜீரணோத்பவ எனச் சொல்லி வயிற்றைத் தடவ வாதாபி மறைந்தான். கோபம் கொண்ட வில்வலன் அகத்தியரைத் தாக்க வர அகத்தியர் தெய்வங்களை வேண்டி ஓர் தர்ப்பையை கமண்டல நீர் தெளித்து அனுப்ப அது வில்வலனை சம்ஹாரம் செய்தது. தன் பாவம் தீர அகத்தியர் அங்காரக தீர்த்தம் உண்டாக்கி நீராடி சிவனை வழிபட்டார். -அகத்தீசர். பெருமாளை வழிபட்டார். சௌமிய தாமோதரப்பெருமாள். தாம்-கயிறு. உதரம்- வயிறு சௌமிய-அழகு. .
வரை படம்: விரிவாக்கு(enlarge)