ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
#*#*#*#*#
4. "உணவுப்பொருட்களும் நீர்பண்டங்களும்"!
38 உணவுப்பொருட்கள் சிவனிடம் வேண்டப்படுகின்றன
வாழ்க்கை வாழ்வதற்கு மனிதனுக்கு முதல் தேவை உணவும், தண்ணீரும். இவை இல்லாவிடில் வாழ்வது கடினம், அதனாலேயே, இவற்றைத் தேடி எங்கெல்லாமோ அலைகிறான். மனிதனின் உழைப்பும், ஆண்டவனின் கருணையாலும் மட்டுமே இவற்றைப்பெற முடியும். நாம் உழுது செப்பனிட்டு, நிலத்தை சீராக்கி, விதை தூவி வைத்திருக்கும் போது, ஆண்டவன், மழை வடிவத்தில், கருணை புரிந்து உணவை வளரச்செய்கிறான். பாலும், நெய்யும் பருப்பும், அரிசியும், தேனும், எல்லோருடனும் சேர்ந்து உணவருந்துதலும், பயிர்களும், கோதுமைகளும், பருப்பு வகைகளும் மற்றும் அனைத்து வகையான உணவுப்பொருட்களும் இப்பகுதியில் கோரப்படுகின்றன. அதாவது முழுநிலையும், அதற்கு மேலான 'பரம் பொருளை' அடைந்து பேரின்பம் என்ற பேறைப் பெற முயற்சிக்கும் வேண்டுதல்கள் சீர்மிக்க சிறப்பு.
சமஸ்கிருதம்::
ஊர்க்சமே ஸுந்ருதா ச மே பயச்ச மே ரஸச்ச மே க்ருதஞ்ச மே மது ச மே ஸக்திச்ச மே ஸபீதிச்ச மே க்ருஷிச்சமே வ்ருஷ்டிச்சமே ஜைத்ரஞ்ச ம ஔத்பித்யஞ்ச மே ரயிச்சமே ரயச்சமே புஷ்டஞ்சமே புஷ்டிச்சமே விபு ச மே ப்ரபு ச மே பஹு ச மே பூயச்ச மே பூர்ணஞ்ச மே பூர்ணதரஞ்ச மேக்ஷிதிச்ச ம கூயவாச்ச மேன்ன்ஞ்ச மேக்ஷுச்ச மே வ்ரீயஹயச்சமே யவாச்ச மே மாஷாச்ச மே திலாச்ச மே ம்த்காச்ச மே கல்வாச்ச மே கோதூமாச்சமே மசுராச்ச மே ப்ரியங்கவச்ச மேணவச்ச மே ச்யாமாகாச்ச மே நீவாராச்சமே.
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
சாதமும், இதமான வார்த்தைகளும், பாலும், அதன் சுவையும், நெய்யும், தேனும், உற்றார்களுடன் கலந்து உணவருந்துதலும், கூடி அருந்துதலும், பயிர்த் தொழிலும், சரியான நேரத்தில் பொழியும் மழையும், செழிப்பான நிலமும், மரம் செடி கொடிகளின் உற்பத்தியும், வேகமாக விளையும் மூலிகைச் செடிகளும், பொன்னும், விலைமதிக்க முடியாத கற்களும், மணிகளும் செல்வத்தின் செழிப்பும், குறையில்லா குழந்தைகளும், நிறைவான உறவினர்பால் ஏற்படும் பாதுகாப்பும், நன்றாக பராமரிக்கப்பட்ட திடகாத்திரமான உடம்பும், சிறந்த பயிர்களும், அதன்பால் விளையும் உணவுப் பண்டங்களும், அதனால் ஏற்படும் மேன்மையும் அதன் பலவகை இன்பம் தரும் சுவைகளும், மேலும், மேலும் வளர்ச்சியும், முழுநிலையும், முழுநிலைக்கு மேலாக உள்ள உன்னத நிலையும், உணவும், உணவினால் பசி நீங்குதலும், சிறந்த நெல் வகைகளும், வால் கோதுமை வகைகளும், உளுந்து வகைகளும், எள் வகைகளும், பாசிப்பயறுகளும், தட்டைப்பயறுகளும், கோதுமைகளும், நரிப்பயருகளும், தினனகளும், ஊசிச்சம்பா நெற்களும், சாமைகளும், செந்நெற்களும் ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்.
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி !!
#####