Print this page
புதன்கிழமை, 07 March 2018 10:32

நட்சத்திரங்கள்

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆங்காரம்முளை அறுப்பாய் போற்றி!
பாங்கார் இன்பப் பராபர போற்றி!
கற்றவர் விழுங்கும் கனியே போற்றி!
மற்றவர் காணாமலையே போற்றி!
சொல்லொடு பொருளின் தொடர்பே போற்றி!
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி!

நட்சத்திரங்களின் நன்மை!

இப்பூவுலகில் பிறந்துள்ள அனைத்து உயிர்களும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில்தான் பிறந்திருக்க வேண்டும் என்பதே சாஸ்திர நியதியாகும். அவ்வாறு பிறந்த உயிர்கள் முதலில் தான் இவ்வுலகில் ஜன்னம் எடுக்க காரணமாயிருந்த தாய் தந்தையரை வணங்கவும். பின் அவர் குலதெய்வத்தை வணங்க வேண்டும் பின்னர் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய அதிதேவதை, பைரவர், தெய்வம் ஆகியவற்றை தொடர்ந்து அந்த நட்சத்திர நாளில் வழிபட்டு வந்தால் அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கர்ம பாவங்கள் குறைந்து நன்மைகளைப் பெறுவார்கள். இடவசதியிருந்தால் நட்சத்திரக்காரர்கள் தங்கள் நட்சத்திற்குரிய மரத்தை நட்டு நீர் ஊற்றி வளர்த்து வழிபடுதல் சிறப்பு.

மரம் என்றால் எதாவது ஒரு மரத்தை நிழலுக்காக அல்லது கட்டிடத்தின் முன் அழகு படுத்த வளர்க்கலாம். ஆனால் இங்கே சொல்லப்படுவது ஒருவருடைய நட்சத்திரத்திற்குரிய மரத்தை தன் சொந்த இடத்தில் நட்டு வளர்க்க வேண்டும். அதன் பலன்கள்- அந்த மரம் வளர வளர அவருடைய வாழ்வு வளம் பெரும். மரம் வளர்ப்பவருடைய பாவக் கதிர்களைக் கிரகித்துக்கொண்டு ஓர் ஒப்பற்ற அற்புதமான ஆன்மீகத் தொடர்பை செய்ய வல்லது. அவருடைய தோஷங்களை அந்த மரம் ஈர்க்கும் தன்மையுடையது. அந்த மரம் பூத்துக் குழுங்கும்போது அவரின் வாழ்வு செழிப்பான நிலையில் இருக்கும். கர்ம வினைகள் குறைந்து விடும்.

சித்தர்களின் ஜீவசமாதி தலங்களில் இருக்கும் சித்தரின் உச்சந்தலைக்கு மேல் இயங்கும் துவாத சாங்க சக்கரத்திற்கும் வானில் உள்ள நட்சத்திரம், நவகோள்களுக்கும், பன்னிரு ராசிகளின் வீடுகளுக்கும் உள்ள தொடர்புகள் என்னாளும் எந்த நிலையிலும் மாறுவதில்லை. அதனால்தான் பிறந்த நட்சத்திரம், ராசி, லக்னத்திற்கு ஏற்ற ஜீவசமாதி ஐக்கிய நிலைகளுக்குச் சென்று வழிபட்டு சித்தர்களின் ஆசி பெற்று வழமுடன் வாழ்த்தும் குருஸ்ரீ பகோரா

மற்ற உயிர்களிடம் அன்பு செய்யுங்கள் ஆனந்தம் அடைவீர். மேலும் நாயன்மர்களை வழிபடுதல் சிவ வழிபாட்டிற்கு ஈடானது. அடியார்க்கும் அடியேன் என்ற கூற்றுப்படி மேம்பட்டது அடியார்களை தொழுபவர்களை காத்து அருள் புரிவர் சிவபெருமான் என்பது மரபு. எனவே அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தாங்கள் ஜன்ம நட்சத்திரப்படி பிறந்த தினத்தன்று அல்லது அந்த நட்சத்திரதிற்கு உரிய நாயன்மார்களது குருபூஜையன்று அந்தந்த நயன்மார்களுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து அர்ச்சித்து ஆரதனை செய்து வழிபட்டால் வாழ்வில் வியத்தகு முன்னேற்றம் காண்பீர்கள். -குருஸ்ரீ பகோரா.

######

நட்சத்திரங்கள் 27

 

ஸ்வினி
பரணி
கார்த்திகை
ரோகிணி
மிருகஷீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
ஹஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி

$$$$$

Read 12703 times Last modified on வெள்ளிக்கிழமை, 21 June 2019 09:01
Login to post comments