காட்டில் விறகு பொறுக்கி விறபவன் விறகைச் சேகரித்து வரும்போது வழியில் நரி ஒன்று படுத்திருக்க கண்டான். அதற்கு முன்கால்கள் இரண்டும் நொண்டியாக இருக்கவே, அதைப் பார்த்து பரிதாபப் பட்டான். அதற்கு எப்படி உணவு கிடைக்கும் என புலம்பினான். அதைக் கேட்ட, அந்தப் பக்கமாக வந்த ஒருவர் கடவுள் இருக்கின்றார். அவர் காப்பாற்றுவார் எனக்கூறியது இவனுள் பொறிதட்டியது போன்ற உணர்வு ஏற்பட, அந்த நரிக்கு உணவு எப்படி கிடைத்திடும் எனக்காண ஆவலில் அங்கேயே காத்திருந்தான்.
அப்போது சிங்கம் ஒரு மானை அடித்து இழுத்துக் கொண்டு வந்து அங்கேபோட்டு தான் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீதியை அப்படியே விட்டுச் சென்றது. நரி தவழ்ந்து சென்று மீதியிருந்த மானை உண்டது. இதனால் ஆச்சரியமுற்றவன் முடியாத நரிக்கு உணவு கொடுக்கும் இறைவன், தினமும் கோவிலுக்கு சென்று வழிபடும் நமக்கு உணவு தரமாட்டாரா என எண்ணத் தொடங்கினான். அதன் விளைவு வேலைக்குச் செல்லாமல் கோவில் வளாகத்தில் தூணில் சாய்ந்து அமர்ந்து கடவுள் நமக்கு ஏதேனும் தருவார் எனக் காத்திருந்தான்.
இரவு பகல் மாறி மாறி வந்தது. அவன் எதிர்பார்த்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. நாளுக்குநாள் பசியால் வாடி எழும்பும் தோலுமாய் மெலிந்து காணப்பட்டான். ஒருநாள் இரவு கோவிலில் யாருமில்லாத நேரம், ‘கடவுளே உன்னை எப்போதும் நினைக்கும் என் பக்தியில் என்ன குறைகண்டாய், கால் முடமாகிய நரிக்கு சிங்கத்தின் மூலம் உணவு வழங்கினாய், நான் இப்படி பட்டினியால் சாகத்தான் வேண்டுமா!’ என புலம்பினான்.
கடவுள் இப்போது அவனிடம் பேசினார். ‘நீ பாடம் கற்றது சரியில்லை, நரியைவிட்டு சிங்கத்தை ஏன் முன்னுதாரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதுதான் நீ செய்த தவறு.’ கடவுளை வணங்கும்போது யாரிடமிருந்தாவது உதவி கிடைக்குமா என வேண்டாதீர்கள், உங்களால் யாருக்காவது உதவி செய்ய முடியுமா! என வேண்டுங்கள். உயர்வு பெறுவீர்.
குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நரியா! சிங்கமா!
Written by குருஸ்ரீ பகோராதலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.