மீன் பிடிக்கச் சென்றவன் துடுப்பை விட்டு விட்டான் படகு திசை மாறியது, வழியில் வீசிய காற்றால் படகு சேதமாயிற்று. உடைந்த மரத்தினைப் பிடித்து கரை சேர்ந்தான். அங்கு யாரும் வசிப்பதாகத் தெரியவில்லை. எனினும் மனம் தளராமல் இறைவன் நம்மைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையுடன் அந்த தீவில் தென்னை ஒலையால் ஒர் குடில் அமைத்துக் கிடைத்ததைக் கொண்டு நாட்களைத் தள்ளினான்.
ஓர் நாள் உணவு சேகரிக்க வெளியில் சென்றிருந்தபோது அவன் குடிசை தீப்பற்றி எரிந்தது. இந்த யாருமில்லாத் தீவில் அநாதையாக வாழ்ந்த எனக்கு வழிகாட்டுவாய் என நம்பியிருந்தேன். இறைவா! நான் தங்கியிருந்த குடிலும் எரிந்து விட்டதே என்று வேதனைப் பட்டான். கரையோரம் புலம்பியபடி நடந்தான். அப்போது தூரத்தில் ஓர் பெரிய படகு தெரிந்தது. தன்னால் இயன்றமட்டும் சப்தத்துடன் குரல் கொடுத்தான். படகு கரைக்கு வந்தது.
அவர்களிடம் நல்லவேளை நான் போட்ட சப்தம் உங்கள் காதிற்கு கேட்டதால் பரவாயில்லை. என் படகு உடைந்ததால், நான் பல மாதங்களாக இத்தீவில் மாட்டிக் கொண்டேன் என்றான். அதற்கு படகிலிருந்து வந்தவர்கள், உன்குரல் கேட்டு வரவில்லை. தீவில் நெருப்புடன் புகைவரவே யாராவது இருப்பார்கள் என்று வந்தோம் என்றனர்.
அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. தன் குடில் எரிந்ததைப் பார்த்து வந்திருக்கின்றார்கள். இறைவனுக்குத் தெரிந்திருக்கின்றது அது இனிமேல் நமக்குத் தேவையில்லை என்று. அது புரியாமல் புலம்பியுள்ளேன். இறைவா என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி என மனமுருக வேண்டினான்.
குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
மனம் உருகி நன்றி கூறுதல்!
Written by குருஸ்ரீ பகோராதலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.