நிராகரிப்பின் கொடுமை!
போர் முனையிலிருந்து திரும்பிய மகனிடமிருந்து பல நாட்களுக்குப்பின் போன் வர ஆவலுடன் பேச ஆரம்பித்தனர் பெற்றோர்கள். அவன் குரலைக் கேட்டதும் நெகிழ்ந்து போயினர். அவன் சொன்னான், ‘அம்மா நான் சீக்கிரம் வீடு திரும்பி விடுவேன். என் நண்பன் ஒருவன் போர் முனையில் கை கால்களை இழந்துவிட்டான். அவனுக்கு நம்மைத் தவிர யாருமில்லை. எனவே அவனை நம்முடன் வைத்துக்கொள்ள நான் அவனை கூட்டிவரட்டுமா என ஆலோசித்தான்.
அப்பா சொன்னார், கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தாலும் அவனை எப்படி நம்முடன் வைத்துக் கொள்வது. உனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டும். எனவே அவன் வாழ்வதற்கு ஓர் நல்ல இடமாகப் பார்த்துக் கொடுத்து விடலாம் என்றார். அவனை நம்முடன் வைத்துக் கொண்டால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றான் மகன். தந்தை கோபமுற்றார். அவனுக்கு உதவி செய்வதாக நினைத்து நம்மையெல்லாம் தியாகம் செய்யச் சொல்கின்றாயா! அவனது வாழ்க்கையை அவனே பார்த்துக் கொள்வான். நீ அவனை விட்டு விட்டு உடனே வா என்றார்.
உடன் தொலை தொடர்பை துண்டித்தவன் பிறகு பேசவேயில்லை. சிறிது நாட்கள் கழித்து அந்நகர் காவல் அதிகாரியிடமிருந்து ஒரு தகவல் வந்தது. உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டான் என்று கேள்விப்பட்ட பெற்றோர் மிகவும் பதைபதைத்து மகனிருக்கும் ஊருக்கு விரைந்தனர். நேரில் சென்று பார்த்தபோது அவர்கள் மிகவும் அதிர்ச்சியாயினர். அவர்களது மகனுக்கு ஒரு காலும் கையுமில்லை. போரில் நண்பன் இழந்ததாக கூறியது தன்னைத்தான் எனப்புரிந்து கொண்டனர். ஊனமுற்றவரை தன் பெற்றோரே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் மனமுறிவு ஏற்பட்டு விட்டது. நிராகரித்தல் எவ்வளவு கொடுமையானதாக மாறியது! என்பதை உணர்ந்து நீங்கள் அவ்வாறு நிராகரிப்பு செய்யாதீர்கள்.