உரிமை கொண்டாடுவதே துன்பத்திற்கு காரணம்!
ஆற்றில் ஒருவன் குளித்துக் கொண்டிருந்தான் திடிரென்று அவன் மேல் ஒரு கம்பு மோதியது அதை பிடித்தான். அது மிகவும் நேர்த்தியான அழகுடன் இருக்கவே அதன்மேல் பற்று கொண்டு அதனுடன் கரையேர முயற்சித்தான். வழியில் ஒரு சுழலில் மாட்டிக்கொள்ள அதிலிருந்து மீளமுடியாமல் கையிலிருந்த கம்பை விட்டுவிட்டு ஒருவழியாக கரை சேர்ந்தான். சுழலிருந்து மீண்டது அவனுக்கு பெரியதாகத் தெரியவில்லை. கையில் கிடைத்த மனதைக் கவர்ந்த அந்த கம்பை விட்டு விட்டோமே என்று மனம் வருந்தியது.
அருகில் இருந்த ஞானி கேட்டார். புனித தீர்த்ததில் குளித்தும் புத்துணர்ச்சி அடையாமல் சேர்ந்துபோய் இருக்கின்றாய் ஏன்! என்று கேட்க கையில் கிடைத்ததை நழுவ விட்டேன் என்று வருத்தப்பட்டு நடந்ததைச் சொன்னான்.
ஞானி சொன்னார்! உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது. அந்தக் கம்பு இப்போதும் மிதந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றது. ஒரு சில நிமிடங்கள் அந்தக் கம்பைப் பற்றியிருந்ததிற்கே சொந்தம் கொண்டாடி அதை இழந்ததாக வருத்தப் படுகின்றீர்கள். அது உங்கள் கைத்தடி என்று எப்படி சொந்தம் கொண்டாட முடியும். வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. நிரந்தரமும் இல்லை. பிறக்கும் போது எதையும் கொண்டுவராத மனிதன் இறக்கும்போதும் எதையும் கொண்டு போவதில்லை. இருந்தாலும் அவன் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடி துன்பங்களைச் சேர்த்துக் கொள்கின்றான் உங்களைப் போல். தெளிவு கொள் மனிதா!