உலக நியதி!
சன்னியாசி ஒருவர் மலை உச்சியில் இருந்து இயற்கை அழகைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பறவை ஓர் இறைச்சித் துண்டினை வாயில் வைத்து பறந்திருக்க மற்ற பறவைகள் அதை துரத்துவதைப் பார்த்தார். எவ்வளவு வேகமாகப் பறந்தும் மற்ற பறவைகளிடமிருந்து அதனால் தப்பிக்க முடியவில்லை. அருகில் வந்தப் பறவைகள் இறைச்சி வைத்திருக்கும் பறவையைத் தாக்கத் தொடங்கின. அவைகளிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்து அத்தனையும் பலனிற்றிப் போகவே தன்னிடமிருந்த இறைச்சித் துண்டினை கீழே விட்டது/ உடனே துரத்தி வந்த வேறு ஓர் பறவை அதைக் கவ்விப் பறக்க மற்ற பறவைகள் அதைத் துரத்த ஆரம்பித்தன. இறைச்சியை இழந்திருந்தாலும் அந்த பறவை நிம்மதி பெருமூச்சுவிட்டு ஆசுவாசம் அடைவதைப் பார்த்தார்.
அப்போது ஓர் உண்மை அவர் மனதில் பளிச்சிட்டது. ஊண் துண்டை இழந்த பறவை நிம்மதி யடைந்ததுபோல் உலகப் பற்றைத் துறப்பவர்கள் மன நிம்மதி அடைவர் என்பதே உலக நியதியாக இருக்கும்போது பலர் அதை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து அவதிபட்டுக் கொண்டிருக்கின்ற உயிர்களை நினைத்து வருந்தினார்!