கொண்டு வந்ததுமில்லை. கொண்டு போவதுமில்லை.!
வேட்டையாட வனத்திற்குச் சென்றவன் எதிரில் யானை தென்பட்டது. அருகில் இருந்த பாறை மீதேறி அதை நோக்கி தன்னிடமிருந்த விஷம் தோய்ந்த அம்பை எய்தினான். கோபம் கொண்ட யானை வேடனைத் தாக்க அருகில் வரும்போது அங்கிருந்த புற்று சேதமடைய அதிலிருந்த வெளிப்பட்ட பாம்பு வேடனைத் தீண்டியது. வேடன் தன்னிடமிருந்த கத்தியால் பாம்பை வெட்டினான். பாம்பு இறந்தது. விஷம் ஏறிய வேடன் இறந்தான். விஷ அம்பு தைத்த யானையும் இறந்தது.
உணவிற்காக அலைந்து கொண்டிருந்த நரியின் கண்ணில் இறந்துகிடந்த மூன்று உடல்கள் தென்பட நரி ஆனந்தப்பட்டது. பாம்பின் உடல் இன்றைய பொழுதிற்கும், வேடன் உடல் ஒருவாரத்திற்கும் யானையின் உடல் ஒரு மாதத்திற்கும் உணவாகும் என ஆசையுடன் கணக்குப் போட்டது. கர்ம விதியின் கணக்கைத் தெரியாத அந்த நரி அப்போதைய பசிக்கு வில்லில் உள்ள தோல்வரை சாப்பிட நினைத்து வில்லின் நாணைக் கடிக்க இழுத்து வளைவாக கட்டியிருந்த வில்லின் நாண் அறுபட வேகத்துடன் நிமிர்ந்த வில் நரியின் தொண்டையில் பாய்ந்து நரியும் இறந்தது. மூன்றுடல் நான்கானது பொதுவாக எந்த உயிரும் மற்ற உயிர்களைத் தாக்கக் நினைக்கக் கூடாது. அதிக ஆசை கொள்ளக்கூடாது.
தனக்கு கிடைத்த உணவை மற்ற பிரணிகளும் உண்ணட்டும் என்று எண்ணாமல் தானே அனுபவிக்க நினைத்த நரி இறந்துபட்டது. இதைப்போன்றே வாழ்வில் நமக்கு கிடைக்கும் செல்வத்தினை நாமே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது தவறாகும்.. செல்லுமிடமெல்லாம் எடுத்தும் செல்லமுடியாது. கொண்டு வந்ததுமில்லை. கொண்டு போவதுமில்லை. இருக்கும்வரை அறச்செயல்களை செய்து நற்பயன் அடைதல் சிறப்பு.
$$$$$$