இறைமீது குற்றம்!
எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை பூர்வ ஜென்ம பலனால் பார்த்து களித்த ஓர் உயிர் உடல் இறைவனிடம் ஓர் சந்தேகத்தை கேட்டது. உலக படைப்பில் ஏழை. பணக்காரன் இல்லை என்று சொல்லிவிட்டு உன்னை தரிசிப்பதற்கு கட்டணத்தை வைத்திருப்பது நியாமா என்றான்!
புன்னகைத்த இறைவன், தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று சொல்லியும் உலக உயிர்கள் அதன் படி நடப்பது இல்லை. மேலும் அவர்களை பாதுகாக்காமல் தனி இடத்தில் விட்டு விடுகின்றீர்கள். தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் என்றேன். அதையும் நம்பவில்லை. உலக உயிர்களை நேசித்து பசியாற்றுங்கள் என்றேன். உற்றாருக்குகூட உதவ மறுக்கின்றீகள் அன்பே சிவம் என்றேன். அன்பையே மறந்து விட்டீர்கள். என்னை தரிசிப்பதற்கு கட்டணத்தை ஏற்படுத்திய நீங்கள் உங்கள் தவறை மறைக்க எல்லாவற்றிற்கும் கர்ம பலன் என்று சொல்லி என்னை குறை சொல்வதை பழக்கமாக்கிக் கொண்டீர்கள் என்றார்.
உணர்வு பெற்று இறையை வணங்கினான் காட்சி கண்டவன். மற்ற உயிர்கள்மேல் குற்றம் குறை காண்பதைவிட்டு எல்லா உயிர்களிடமும் அன்புடன் நேசம்காட்டி மூத்தோர்களை மதித்து எளியோருக்கு உதவி செய்து நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை வழிபடுதல் சிறப்பு என்பதை புரிந்து செயல் பட உறுதி கொண்டான்.-குருஸ்ரீ
######