ஆன்மாவை வளமுடன் வைத்திருங்கள்!
ஒருவனுக்கு நான்கு மனைவிகள். ஒரு மனைவியுடன் உயிர்கள் திண்டாடும்போது நான்கு மனைவிகளா என்பீர்! ஆம் அந்த நான்கு மனைவிகளுடன் அவன் நிலை என்ன என்பதைப் பார்ப்போம்.
நான்கு மனைவிகளில் நான்காவது மனைவியை அவன் மிகவும் அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி இன்பமடைந்தான், தன் மூன்றாவது மனைவியை நேசித்தாலும் அவளை தன் உலகியல் வாழ்க்கைப் பயணத்தில் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. தன் இரண்டாவது மனைவியிடம் தனக்கு பிரச்சனைகள் ஏற்படும் பொழுதெல்லாம் ஆலோசனை கேட்டுப் பெற்று ஆறுதலடைவான். ஒருபோதும் தன் முதல் மனைவியை மட்டும் அவன் நேசிக்கவேயில்லை. ஆனால் அவள் அவனது தேவைகள் அனைத்தையும் கவனித்து வந்தாள்.
அவனது மரண காலத்தில் நான்காவது மனைவியிடம் இறப்பிற்கு பிறகும் தன்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என விரும்பினான். அவள் மறுத்து விலகினாள். மூன்றாவது மனைவியைக் கேட்டபோது நீயே சாகப் போகிறாய். நான் வேறு ஒருவரிடம் செல்வதுதான் நன்று என்றாள். இரண்டாவது மனைவி என்னால் உன் கல்லறைவரை கூட வரமுடியாது என நழுவினாள். நொந்து போனான். அவனுடன் இருந்த அவனது நான்காவது மனைவி நீ எங்கே சென்றாலும் இறுதிவரை நான் உன்னுடன் இருப்பேன் என்றாள். அந்த அன்பைக் கண்டு மனம் உருகி இதுவரை அவளை தான் கண்டு கொள்ளவில்லையே என மிகவும் வருந்தினான். வருத்தத்தில் மன உலைச்சலில் மாண்டு போனான்.
இந்த நான்கு மனைவியரும் நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என நினைத்துக் கொள்ளுங்கள்.
அதாவது நான்காவது மனைவியான உங்கள் உடலை என்னதான் வாழ்நாள் முழுக்க சிறப்பாக கவனித்துக் கொண்டாலும் இறுதியில் அது உங்களுடன் வரப்போவதில்லை. நீங்கள் இறந்ததும் அதுவும் அழிந்துவிடும்.
மூன்றாவது மனைவி என்பது நீங்கள் சேர்த்து வைத்த சொத்தாகும். நீங்கள் மறைந்தால் அவை வேறு யாருக்கோ உரிமையாகிவிடும்.
இரண்டாம் மனைவியாகப்பட்டது உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் இறுதிச் சடங்கிற்காக மாயானம் வரையில் வருவார்கள். அதற்குமேல் வருவதற்கில்லை.
நீங்கள் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி உங்களது ஆன்மா. நீங்கள் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அதனை சரியாக கவனிக்காமல் நலிந்து போயிருந்தாலும் உங்கள் இறப்பிற்குப் பிறகும் உங்களுடையதாகவே உங்களுடனே மறைவது உங்கள் ஆன்மா மட்டுமே. அதைப் பேணிக் காப்பாற்றுங்கள். அதை வளமுடன் வைத்திருக்க நினையுங்கள்.-குருஸ்ரீ