குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
Displaying items by tag: மனங்கோணா தர்மம்!
மனங்கோணா தர்மம்!
மனங்கோணா தர்மம்!
பெண் ஒருத்தி தன்வாழ்விற்கு ஆதாரமாக இட்லி கடை வைத்திருந்தாள். தினமும் கடை ஆரம்பித்த கொஞ்சம் நேரம் கழித்து வயதான முதியவர் வந்து கையை மட்டும் நீட்டி யாசிக்க இப்பெண்ணும் தவறாமல் இரண்டு இட்லி கொடுப்பாள். தினமும் இட்லி பெற்றுக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவன் செல்வது அவளுக்கு வருத்தத்தை அழித்தது.. வருத்தம் கோபமாக மாறியது. இட்லி நன்றாய் இருக்கின்றது என்று சொன்னால் பரவாயில்லை என்ற எதிர்பார்ப்பு அவளிடமிருந்தது. எதிர்பார்ப்பு ஓர் இனம் புரியாத வெறியாக மாற நாம் ஏன் அவனுக்கு தினமும் இட்லி தரவேண்டும். இனி தராமல் இருந்துவிடலாம் என்று நினைத்தாள். ஆனால் அடுத்த நாள் அவன் வந்த போது அவளை அறியாமல் பழக்க தோஷத்தில் இரண்டு இட்லிகளை எடுத்து கொடுத்து விட்டாள். என்ன நினைத்திருந்தோம் இப்படி செய்து விட்டோமே என வருந்தி அந்தக் கிழவனுக்கு விஷம் கொடுத்துவிட்டால் நமக்கு தினமும் இந்த தொல்லை இல்லை என்று நினைத்தாள். அதன் படி செய்ய நினைத்து இரண்டு இட்லிகளில் எலி மருந்தை தடவி தயாராக வைத்திருந்தாள். நேரம் ஆக ஆக அவள் நல்ல மனது விழித்தது. இந்தப் பாவத்தை நாம் ஏன் செய்ய வேண்டும். நமக்கு அவனுக்கு இட்லி கொடுக்க விருப்பமில்லையெனில் இட்லி இல்லை என்று சொல்லாமல் தன் மனம் இப்படி மோசமாக நினைத்தற்கு மிகவும் வருதப்பட்டாள். அந்த கிழவன் வந்ததும் இன்முகத்துடன் வேறு இரண்டு இட்லிகளைப் கொடுத்தாள். சந்தோஷத்துடன் வாங்கிச் சென்றான்.
அன்று மதியம் அவள் வீட்டு கதவு தட்டப்பட கதவை திறந்த அவள் அங்கு தன் மகன் அலங்கோலமாக நிற்பதைப் பார்த்து அதிர்ந்தாள். வீட்டில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுப் போனவன் இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வருகின்றான். வேலை எங்கும் கிடைக்கவில்லை. கிடைத்த சின்ன வேலைகளைச் செய்து எப்படியே வாழ்ந்துவிட்டு வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்ப நினைத்தவன் கையில் இருந்த காசு போதாமல் நடந்தே வந்திருக்கின்றான். வரும் வழியில் பசி மிகுதியால் களைப்படைந்து மயக்க மடையும் நிலையில் ஓர் பெரியவர் அவன் நிலைக் கண்டு தன்னிடமிருந்த் இரு இட்லிகளை அவனுக்கு கொடுத்து உதவ அதை சாப்பிட்டபின் அந்த தைரியத்திலே ஊருக்கு வந்து சேர்ந்திருக்கின்றான். இதை அறிந்த அவள் மனம் தான் தினமும் இட்லி அளிக்கும் பெரியவரைத்தான் முதலில் நினைத்தாள். அன்று அவருக்கு விஷமிட நினைத்திருந்தென். அப்படி பாவம் செய்திருந்தால் இன்று என் மகனுக்கு அந்த ஒரு வேளை உணவு கிடைத்திருக்குமா என்று எண்ணி கண் கலங்கினாள். அன்றே முடிவு செய்தாள். தர்ம காரியத்தினை மனம் கோணாமல் சந்தோஷத்துடன் செய்வது என்று! நீங்கள் எப்படி!
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.