குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
சேருமிடம்சேர்! நல்லோர் நட்பு!
Written by குருஸ்ரீ பகோராசேருமிடம்சேர்! நல்லோர் நட்பு!
காட்டில் கிளி ஒன்று மரப்பொந்தில் கூடு அமைத்திருந்தது. அதில் முட்டையிட்டு பாதுகாத்து வந்தது. வளர்ச்சியடைந்த முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வந்த குஞ்சு மரத்திலிருந்து கீழே விழுந்தது. அந்தப் பகுதிக்கு வந்த வேட்டைக்காரன் அந்த கிளிக்குஞ்சைப் பார்த்து அதை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்து வந்தான். காட்டில் பர்ணசாலை அமைத்து தவம் புரிந்தவந்த முனிவர் வரும் வழியில் அந்த மரத்திலிருந்து இன்னொரு கிளிக்குஞ்சு ஓட்டை உடைத்து வெளிவந்திருந்தது. மரத்தின் கீழ் இருக்கும் கிளிக்குஞ்சை பார்த்து அதை எடுத்துச் என்று வளர்த்து வந்தார். வேடனும் முனிவரும் அந்த கிளிக் குஞ்சுகளுக்குப் பேசவும் கற்றுக் கொடுத்தனர்..
அந்தப் பகுதிக்கு வேட்டைக்கு வந்த அரசன் வரும்வழியில் வேட்டைக்காரன் குடில் அருகில் கிளி இருக்க கண்டார்.. குடிலுக்கு அருகில் வந்தவுடன், டேய்! யார் நீ என்று அதிகாரமாகப் பேசியது கிளி. அதன் ஆரம்ப பேச்சு அரசனுக்கு எரிச்சலைத் தந்தது. அதனால் அங்கிருந்து விரைவில் கிளம்பி விட்டார். தொடர்ந்து காட்டிற்குள் சென்றவர் பர்ணசாலையைக் கண்டு அங்கே சென்றார். அங்கு இருந்த கிளி வணக்கம். யார் நீங்கள் .என்று அன்புடன் வரவேற்றது. அந்தச் சூழலில் மனம் ஆனந்தம் அடைய மன்னன் மகிழ்ந்தான்.
இரண்டு கிளிகளும் ஒரே கிளியின் குஞ்சுகள்தாம். ஆனால் அவற்றின் வளர்ப்பில் சுற்றுச் சூழலில் வித்தியாசம் தென்படுவதால் அதன் குணாதிசயங்கள் மாறுபட்டிருக்கின்றன.
கரு மேகங்கள் தரும் நீர் சுத்தமானதாக இருந்தாலும் அது சேரும் இடத்தைபோல் நிறம் கொள்கின்றது. சுவையை அடைகின்றது.
பிறப்பில் அரக்கனாய் இருந்தாலும் இராமருடன் செர்ந்ததால் விபீஷணன் நல்ல மனம், குணமடைந்தான். தர்மவானாகிய கர்ணன் துஷ்டன் துரியோதனுடன் நட்பு கொண்டமையால் அவப் பெயர் அடைந்தான்.
எனவே உயிர்களே சேருமிடம் சேருங்கள்! நலமடையுங்கள்!-குருஸ்ரீ
######
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.