குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
நிகழ்வுகள் சிந்தனைக்கு
ஓம் சிவாயநமக!
பிள்ளையாரின்குட்டுடனேபிழைநீக்கஉக்கியிட்டு
எள்ளளவும்சலியாதஎம்மனத்தையும்உமக்காக்கித்
தெள்ளியனாய்த்தெளிவதற்குத்தேன்தமிழில்போற்றுகின்றேன்
உள்ளதைஉள்ளபடிஉகந்தளிப்பாய்கணபதியே!
0=0=0=0=0=0
நிகழ்வுகள் சிந்தனைக்கு
எல்லோர் வாழ்விலும் தினசரி ஏதாவது ஓர் நிகழ்வு ஏற்படும். சொந்த வாழ்விலே அல்லது மற்றவர் வாழ்விலே நிகழும் நிகழ்வுகள் பல மனதை நெருடும். சில தொடும். சிந்திக்க வைக்கும். நடந்த நிகழ்வுகளைத்தவிர படித்தலில் கேட்டலில் பார்த்தலில் பல நிகழ்வுகள் சிந்தனையைத் தூண்டி விடுவதாக அமையும். அவ்வாறான நிகழ்வுகள் பண்டைக் காலம் தொட்டு நடந்து கொண்டுதானிருக்கின்றது.அதுபற்றிப் படித்துக் கேட்டுப் புரிந்து சிந்தித்து நற்பயன்களை பலர் அடைந்த வண்ணம் அவற்றை இன்றைய வாழ்வில் பயன்படுத்தி இன்றுவரை பலனடைந்தவர்களாகவே உள்ளார்கள். எனவே அதுபோன்றே முன்னாளிலும் இன்னாளிலும் நடந்த பல நிகழ்வுகள் தொகுத்து சீர்படுத்தி இன்றைய மனித சமுதாயத்தின் சிந்தனை பெற்று வாழ்வில் பயன்கொண்டு முன்னேற்றமடைய கொடுக்கப்பட்டுள்ளது.
விரும்பியதைப் படித்து தேவையானது என நீங்கள் நினைப்பதை வாழ்வில் உபயோகம் கொண்டு பயன் அடையுங்கள் என அன்புடன்---குருஸ்ரீ பகோரா.
அவர் சொன்னார்! இவர் சொன்னர்!
Written by குருஸ்ரீ பகோராஅவர் சொன்னார்! இவர் சொன்னர்!
சிற்பி ஒருவர் தன் சீடனிடம் களி மண்னால் ஆன சிலை ஒன்றைச் செய்து வரச் சொன்னார். சிலை செய்வதற்கான களிமண்ணைத் தேடி இறுதியில் ஒரு தோட்டத்தில் கண்டு பிடித்தான். அந்த விவசயிடம் சிலை செய்ய களிமண் வேண்டுமென்று கேட்க விவசாயி சிலையை என் தோட்டத்திலேயே நீ செய்வதானால் நான் தர சம்மதிக்கின்றேன் என்றான். குருவின் அனுமதி வாங்கி அந்த தோட்டத்திலேயே சிலை செய்ய முயற்சித்தான்.
களிமண்ணை எடுத்து நன்கு பிசைய ஆரம்பித்தான். அதைப் பர்த்துக் கொண்டிருந்த விவசாயி இவ்வளவு இறுக்கமாக இல்லாமல் கொஞ்சம் நீர்விட்டு இளக்கமாகப் பிணைந்து எப்படி மிதிக்க வேண்டும் என்றும் ஆலோசனை சொன்னான். பின்னர் மண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிலை செய்ய முயற்சித்தான். விவசயி கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எப்போது செய்து முடிப்பது நிறைய எடுத்து அப்பி பின் சரி செய் என்றார். அதன் படி செய்தபோது நிறைய இளகிய மண் பாரம் தாங்காமல் சரிந்து சரிந்து விழ்ந்தது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து முடியாமல் போகவே களைப்படைந்தான்.
சீடன் எவ்வாறு சிலை செய்கின்றான் என்பதைப் பார்க்க வந்த சிற்பி தன் சீடனுக்கு விவசாயி ஆலோசனைகள் வழங்குவதால் சீடன் தன் செயல் முறைகளை அடிக்கடி விவசாயின் ஆலோசனைக்கேற்ப மாற்றிக் கொண்டிருப்பது கண்டார். விவசாயிடம் நீங்கள் களிமண் சிற்பங்களைச் செய்து இருக்கின்றீர்களா என்றார். நான் சிலைகளைச் செய்ததில்லை. ஆனால் களிமண்ணை எப்படிப் பக்குவப் படுத்துவது என்பது தெரியும் என்றார்.
சிற்பி சீடனிடம் நீ சிலை செய்ய வந்தயா! விவசாயம் கற்றுக் கொள்ள வந்தாயா என்றார். சிற்பக் கலையைக் கற்கவே விரும்புகின்றேன் என்றான், சீடன். அப்படியானால் நான் சொல்லிக் கொடுத்தபடி செய்யாமல் ஏன் இவர்சொல்லியபடி செய்து கொண்டிருக்கின்றாய் என்றார். இவருக்கு களிமண்ணைப் பற்றி பல விபரங்கள் தெரிந்திருப்பதால் அவர் சொன்னபடி செய்தேன் என்றான். அவருக்கு களிமண்ணைப் பற்றிய விஷயங்கள் தெரிந்திருக்கலாம். அவைகள் விவசாயம் பண்ண உதவியாய் இருக்கும். அந்த விஷயங்களை வைத்து சிற்பம் செய்ய முடியாது. களிமண்ணில் சிற்பம் செய்யும் முறைவேறு. உனக்கு கற்பித்தபடி செய்து சிலையை முடி என்றார் சிற்பி.
அவர் சொன்னார்! இவர் சொன்னர் என்று சிலர் சொல்வதையெல்லாம் கேட்டு உங்கள் முறைகளை தேவையின்றி மாற்றி அவதியுறாதிர்கள். எல்லா விஷயங்களுக்கும் வழிகாட்ட ஆலோசனை சொல்ல பலர் இருப்பர். உங்கள் செயலுக்கு யார் சரியான வழிகாட்டி என்று அறிந்து அதன்படி செயல் படுங்கள்.
######
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.