gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

புதன்கிழமை, 15 March 2023 16:11

வர்ணாசிர தர்மம்!

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!


#*#*#*#*#

 

49. வர்ணாசிர தர்மம்!

 

வர்ணாசிர தர்மம் நான்கு 1. பிரம்மச்சரியம், 2. கிரஹஸ்தியம், 3. கிரஹஸ்தியம், 4. சன்னியாசம்

பிரம்மச்சரியம்

பிரம்மச்சரியம் என்பது திருமணமே புரியாமல் நித்ய கர்மானுஷ்டங்களை கடைப் பிடிப்பது ஆகும். ஒருவன் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்றால் மனதையும் ஐம்புலன்களையும் அடக்க வேண்டும். இன்சொல்லால் பேசி அறவழியில் நடக்க வேண்டும். இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை மட்டுமே உண்ண வேண்டும். இறைவன் நாமங்களையே உச்சரித்து சதா இறை சிந்தனையில் இருக்க வேண்டும்.

கிரஹஸ்தியம்

இல்லறத்தில் ஈடுபட்டு மனை மக்களுடன் இல்லற தர்மத்தை கைக்கொண்டு வாழ்வது. இறைபூஜை, அதிதிபூஜை செய்வது சிறப்பு.

வனப்பிரஸ்தம்

அரசாட்சி செய்பவர்கள் குறிப்பிட்ட காலம் வரை நல்லாட்சி செய்து உரிய காலத்தில் அரச பதவியைத் துறந்து உரியவர்களிடம் ஒப்படைத்து தன் துணையுடன் காட்டிற்குச் சென்று பற்றைத் துறந்து பகவான் பதத்தை நாடுவது ஒன்றையே குறிக்கோளாக வைத்து வாழ்வது.

சன்னியாசம்

அனைத்து உறவுகளையும் துறந்து பற்றற்ற நிலையில் வாழ்வது. கிடைத்தால் சாப்பிடுவது இல்லாவிட்டால் கிடைத்த இடத்தில் படுப்பது என்பதை ‘சத்திரா போஜனா-மடாநித்திரா’ என்பர். தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளவதில்லை. நாளைக்கு என எதையும் சேமிப்பதில்லை.

 

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 16:09

பிராயச்சித்தம்!

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

 

#*#*#*#*#

 

48.பிராயச்சித்தம்!



ஒருவன் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதே பிராயசித்தம் எனப்படும். செய்த பாவங்களை உணர்ந்தால் அவற்றிற்கு என்ன பரிகாரங்கள் எனத் தெரிந்து செய்யவேண்டும். என்ன பாவங்கள் என்ன பரிகாரம் எனத் தெரியாவிட்டாலும் தானம் தர்மம் பூஜைகளைச் செய்து வருவது புண்ணிய பலன்கள் பயக்கும்.

பன்னிரண்டு வயதுவரை குழைந்தைகள் செய்யும் பாவங்கள் பெற்றோரையே சேரும். பெற்றோர் இல்லை என்றால் அக்குழந்தைகளை வளர்க்கின்றவர்களை சேரும். இதற்குப் பிரயசித்தம் செய்து கொள்ளலாம். வளர்க்கின்றவர்கள் செய்யும் பாவங்கள் குழந்தைகளைச் சேராது.

ஜீவஹிம்சை-பிரயச்சித்தம்

ஜீவஹிம்சைக்கு பிரயச்சித்தாமாக மகாயக்ஞங்கள் செய்யவும்.
1. பிரம்ம யக்ஞம்- வேதம் ஓதுதல்
2. பித்ரு யக்ஞம்- பித்துருக்களை திருப்தி செய்தல்
3. தேவ யக்ஞம்- ஹோமம் செய்தல்
4. பூத யக்ஞம்- உதவிநாடி வருவோரை உபசரித்தல்

 

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 16:00

தவறுக்கான தண்டனைகள்!

ஓம்நமசிவய!


பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.


#*#*#*#*#

 

47.தவறுக்கான தண்டனைகள்!


மனதால் செய்த பாவத்தை மனதாலும், வாக்கால் செய்த பாவத்தை வாக்காலும், உடலால் செய்த பாவத்தை உடலாலும் அனுபவிப்பர்.

தாமிஸிரநரகம்!

பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைத்து மீண்டும் மீண்டும் இங்கு தள்ள மயங்கி கிடப்பான்.

அநித்தாமிஸ்ரநரகம்!

கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.

ரௌரவநரகம்!

பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள். பொன் பொருளை இழ்ந்து துன்பத்திற்கு ஆளானவர்கள் நரகத்திற்கு வந்தால் அவர்களும் இவனை இம்சிப்பார்கள். காம மிகுதியினால் தன் சுக்கிலத்தை பூமியில் விட்டவன் அந்த பூமியின் தூள் ஒன்றுக்கு ஒருவருஷம் வீதம் இந்த நரகத்தில் துன்பப்படுவான்.

மகாரௌரவநரகம்!

மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து, முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.

கும்பிபாகம்!

வாயில்லா விலங்குகளை , உயிர்களை வதைத்தும் பலவிதங்களில் கொடுமைப் படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கொப்பறையில் போட்டு, பாவிகளைத் துன்புறுத்துவார்கள். பசுக்கள் மேய்ச்சலுக்குச் செல்லும் பாதையை அடைத்து பயிரிடுபவன் நூறு ஆண்டுகள் இந்த நரகத்தில் உழல்வான்.

காலகுத்திரம்-காலவெம்மை!

பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். தன்னாலவது பிறராலாவது தானம் செய்ததும், பிராமணர் உழைப்பில் சம்பாதித்ததுமான நிலத்தை அநியாயமாக அபகரித்தவன் சந்திர சூரிய காலம் இருக்கும்வரை இந்த நரகத்தில் துன்பப்படுவான். மேலும் அவனது புத்திரபௌத்திரரும் பூமியும் செல்வமும் சந்ததியும் அற்று பரமதரித்திரத்தை அடைவார்கள். இங்கு அக்னியும் சூரிய வெப்பமும் கொளுத்தி வாட்டும் போது அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கப்படுவது உறுதி.

எவன் கங்கை நீரைக் கையில் எடுத்துக் கொண்டு பொய்யை சொல்கின்றானோ அவன் பிரமனின் வயது காலம் வரை காலசூத்திரத்தில் உழல்வான் என சிவன் பிரதிக்ஞை செய்துள்ளார்.

அசிபத்திரம்- வாளலகு!

தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியை விட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும். வாளலகு என்ற ஒருவகை இலையினால் செய்யப்பட்ட சாட்டையால் அடித்து துன்புறுத்துவார்கள். அடிக்கும்போது அங்குமிங்கும் ஓடி கால் இடறி கீழே விழுந்தால் அசிபத்திரம் கத்தியினால் உடலில் கீரி துன்பப்படுவர். மாட்டு மந்தைகள் இருக்குமிடம், தடாகம் ஆகியவற்றை ஆக்கிரமித்து உபயோகிப்பவன் பதினான்கு இந்திரன் ஆயுட்காலம்வரை இந்த நரகத்தில் கிடப்பான்.

பன்றிமுகம்!

குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள். உண்ணத் தகுந்ததை உண்னமுடியாமல் உண்ணத் தகாததை உண்ணும் பன்றியைப் போல் உண்பான்.

அர்த்தகூபம்-பாழுங்கிணறு!

உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

அக்னிகுண்டம்!

பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக் கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். பிறர் சொத்துக்களின்மேல் ஆசைக்கொண்டு ஆக்கிரமிப்பு, வயலில் வரப்பை தள்ளிப் போடுதல், எல்லைக் கற்களை மாற்றி தன் எல்லையை அதிகரித்துக் கொள்ளல் ஆகியன குற்றமே. இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள். கிணறு, குளம் ஆகியன பாழடைந்து சிதிலமாக இருந்தும் அதைச் சீர்படுத்தாமல் வேறு கிணறு, குளம் வெட்டுதல் குற்றமே. அவர்கள் இந்நரகத்தில் துன்புறுத்தப்படுவார்கள்.

வஜ்ரகண்டகம்!

சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.

கிருமிபோஜனம்!

தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.

சான்மலி!

நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை வஜ்ரகண்ட முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி!

நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நீர் நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

பூபோதம்!

சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும். மலம். சிறுநீர், சீழ், உதிரம் நிறைந்த நகரத்தில் தள்ளப்பட்டு அவற்றையே உண்ண வேண்டி வரும்.

பிராணிரோதம்!

பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

விசஸனம்!

பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.

லாலாபக்ஷம்!

மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் இந்திரிய குண்டத்தில் தள்ளி அதில் அமுக்கி அதையே உண்ணச் செய்து வதைபடும்.

சாரமேயாதனம்!

வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும். நாய்களால் கடிப்பட்டு நாய் இறைச்சியை திண்ண வேண்டி வரும்.

அவீசி!

தானம் செய்யும்போது தன் பெயரை முன்னிலைப் படுத்துபவரும், பொய்சாட்சி சொல்பவரையும் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.

பரிபாதாளம்.!

எந்தக் குலத்தில் பிறந்தவராயிருந்தாலும் மது போதையூட்டம் பானங்களை அருந்தியவர்களை இந்த நரகத்தில் நெருப்பைக் காய்ச்சி உருக்கியுள்ள எஃகிரும்பை குடிக்கச் செய்வர்.

க்ஷாரகர்த்தமம்.!

கயவன் தன்னை புகழ்ந்துகொண்டு யாரையும் மதிக்காமல் அவமரியாதை செய்பவன் இந்த நரகத்தில் தள்ளப்பட்டு தலை கீழாகப் கிடத்தப்பட்டு துன்பங்களை அனுபவிப்பான்.

ரக்ஷோகணம்.!

யாகத்திற்காக மனிதர்களைப் பிடித்து நரமேத யாகம் செய்பவர்களும் நரமாமிசம் சாப்பிடுபவர்களும் இங்கு தள்ளப்பட்டு நரப்பசுவாக கொல்லப்பட்டவர்களே இங்கு வந்து கத்தியால் இவர்களை கீறி ரத்தத்தை குடிப்பர்.

சூலப்புரோதம்.!

தீவினை புரியாதவர்களை கொலை செய்பவரும். சூலத்தினால் / கயிற்றினாலே தற்கொலை செய்து கொள்பவர்களும் இங்கு தள்ளப்பட்டு சூலம் முதலிய வற்றால் குத்தி கோர்க்கப்படுவார்கள். கொக்கு கழுகு போன்ற பறவைகள் அவர்களை கொத்தி துன்புறுத்தும்.

தந்த சூகம்.!

பம்பு முதலிய துஷ்ட ஜந்துக்களும் தேள் முதலான விஷப் பூச்சிகளாலும் பாவிகள் துன்புறுத்தப்படுவார்கள்.

வடாரோதம்.!

கூடுகளிலும், வளைகளிலும் வாழும் பிராணிகளை துன்புறுத்துபவர்கள் இந்த நரகத்தில் புகையாலும் நெருப்பாலும் விஷத்தாலும் துன்புறுத்தப்படுவார்கள்.

பர்யாவர்த்தனகம்.!

உணவருந்தும் வேளையிலும் பணி செய்யும் அதிகாரிகளை சுட்டுப் பொசுக்கவேண்டும் என்று லோப குணத்துடன் செயல்படுபவர்கள இந்த நரகத்தில் அவன் கண்களை கழுகு, காகம், முதலிய பறவைகள் கொத்த துன்புறுத்தப்படுவான்.

சுசீமுகம்!

நான் செல்வத்துடன் இருக்கின்றேன் என்ற கர்வத்துடன் இருப்பவர்கள் பிறரைப் பார்த்து தன்னுடைய பணத்திற்கு செலவு வந்துவிட்டது என்று நினைத்து முகத்தில் வெறுப்பைக் காட்டுபவர்கள், பூதம்போல பணத்தைக் காப்பவர்கள் இந்த நரகத்தில் அளவற்ற துன்பங்களை அனுபவிப்பார்கள்.

மேலும் பசுக்கள் குதிரைகளை விரோதத்தின் பேரில் கொல்வது, கனிகள் தரும் நல் மரங்களை அழிப்பது, தங்கத்தை திருடுவது, ஆண் / பெண் ஐ கடத்திச் செல்வது, தெய்வ சொத்துக்களை அபகரிப்பது, பெண்ணை பலவந்தப்படுத்துதல், பிற உயிர்க்கு விஷத்தைக் கொடுத்தல், பொருள்களின் அளவுகளிலும் தரத்திலும் தில்லுமுல்லு செய்வது, குற்றம் செய்து சிறையில் அடைக்கப்பட்டவர்களை தப்ப விடுவது, அரசு உத்தரவுகளை சரியாகச் செய்யாமால் மீறுவது ஆகியனவையும் குற்றங்களே. இவைகளுக்கும் தக்க தண்டனைகள் உண்டு.

சிரார்த்தம் செய்யும் பூமியின் உடமைக் காரனுக்கு பணம் ஏதும் கொடுக்காமல் பிதுர்களுக்கு பிண்டம் போடுபவன் நரகத்தை அடைவான். தீபத்தை ஆசனமில்லாமல் பூமியின்மேல் வைத்தால் ஏழு ஜென்மங்கள் குடிகாரனாகவும், புத்தகத்தை பூமியின்மேல் வைப்பவன் பிறவி முடிவில் குஷ்டரோகியாகவும், முத்து, ரத்தினம், தங்கம் ஆகியவற்றை பூமியின்மேல் வைப்பவன் ஏழு பிறவிகளுக்கு அந்தகனாகவும், சிவலிங்கத்தை மண்மீது வைப்பவன் நூறு மன்வந்திரம் புழுக்களைத் திண்பவனாகவும், சங்கு, மலர்கள், கோரோசனம், சந்தனம், கற்பூரம், மலர்மாலை, ஜபமாலை, ருத்திராட்சம், தர்ப்பை ஆகியவற்றை பூமியின்மேல் வைப்பவன் மன்வந்திர காலம் நரகத்திலும், கிரகண காலத்தில் பூமியை வெட்டுபவன் மகாபாபியாகவும் உறுப்புகள் குறைந்தவனாகவும், யாகஞ் செய்ததனால் உண்டாண உஷ்ணத்தை பாலினால் நனைக்காதவன் ஏழு பிறவி உஷ்ணத்துடன் அல்லல் படுபவனாகவும் இருப்பார்கள்.

 

#*#*#*#*#

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

 

#*#*#*#*#

 

46.கிரகங்கள் பாதிப்பிலிருந்து விடுபட!

 

கிரகங்கள் அமைதியான வாழ்க்கை, செல்வம், உடல் நலம், நீண்ட ஆயுள், மழை வளம் என அனைத்தையும் தருபவன. எனவே அவைகளை ஆராதிக்க வேண்டும். வேள்வி செய்யலாம். கிரகங்களை ஆராதித்து வழிபடுவதால் அவற்றின் பாதிப்பிலிருந்து விடுபட முடியும். கிரகங்களின் மூல மந்திரம் தெரியாவிடினும் அந்தந்த கிரகங்களின் காயத்ரி மந்திரத்தை சொல்லி பயன் பெறலாம்.

சூரியன், சந்திரன், அங்காரகன் எனும் செவ்வாய், புதன், பிரகஸ்பதி என்ற தேவ குருவாகிய வியாழன், சுக்கிரன் என்ற வெள்ளியாகிய அசுர குரு, சூரியனின் மகனான சனி, ராகு-கேது என்ற நிழற் கிரகங்கள் ஆகிய ஒன்பதும் நவகிரகங்கள்.

ஒரே ராசியில் சனி, செவ்வாய், ராகு, சூரியன் சஞ்சரித்தல் திடீரென அசம்பாவிதங்கள் நடைபெறும். மக்கள் சமுதாயமே நலிவடையும்.

சூரியன் சில காலம் தெரியாவிட்டாலும் புகையுடன் தெரிந்தாலும், வானில் தூமகேது, எரிநட்சத்திரம் தெரிந்து விழுந்தாலும் இவைகள் எல்லாம் துர் நிமித்தங்கள்.

ஒவ்வொரு நட்சத்திரதிற்கும், கிரகங்களுக்கும் துர் நிமித்தங்களை மாற்றியமைக்கவோ அல்லது தீவிரத்தைக் குறைக்கவோ ஆற்றல் உண்டு. அதற்கு வேள்வி ஆகுதிகள் செய்ய வேண்டும்.

அமைதியான வாழ்க்கை, செல்வம், உடல் நலம், நீண்ட ஆயுள், நாட்டில் பசுமைக்கு நல்ல மழை என்ற அனைத்தையும் இவைகளே கொடுப்பதால் இவைகளைத் திருப்தி படுத்த வேள்விகள் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

சூரியன் உருவத்தை செம்பிலும்-எருக்கு சமித்துடன், சந்திரனை ஸ்படிகத்திலும்-பலாசமித்துடன், அங்காரகன் எனும் செவ்வாய் உருவத்தை சிவப்பு நிறத்திலும்-கருங்காலி சமித்துடன், புதன் உருவத்தை சந்தன மரத்திலும்-நாயுருவி சமித்துடன், வியாழன் என்ற பிரகஸ்பதியை தங்கத்திலும்-அரசு சமித்துடன், சுக்கிரனை வெள்ளியிலும்-அத்தி சமித்துடன், சனி-வன்னிசமித்துடன், ராகு-அருகம்புல்லுடன், கேது-தர்ப்பையுடன் சனி, ராகு, கேது உருவங்களை ஈயத்திலும் வடித்து ஆராதனை செய்ய வேண்டும். இந்த சமித்துகளை தேன், நெய், தயிரில் தேய்த்து கோளுக்கான மந்திரங்களுடன் ஹோமகுண்டங்களில் பய பக்தியுடன் சேர்த்து முடிவில் அந்தணர்களுக்கு உணவளித்து தானங்கள் செய்தால் கிரகங்களின் பாதிப்புகளிலிருந்து விடுபடமுடியும்.

சந்தனக் குழம்பில் அந்தந்த உருவங்களை வரைந்தும் வழிபடலாம்.

 

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 15:55

தானம் ஏன் செய்ய வேண்டும்!

ஓம்நமசிவய!


தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!


#*#*#*#*#

 

45.தானம் ஏன் செய்ய வேண்டும்!

 

தானம் செய்வதை நாளை நாளை என தள்ளிப் போடக்கூடாது.

நீச்சமான நடத்தை உள்ளவர்களிடம் தானம் பெறக்கூடாது. தன்னுடைய ஆச்சாரியர், குரு மற்றும் வேலைக்காரன் ஆகியோரிடமிருந்து தானம் பெறக்கூடாது.

நல்வழியில் ஈட்டிய பொருட்களையே தானம் அளிக்க வேண்டும்.

தானம் கொடுப்பவன் கிழக்கு நோக்கியும் வாங்குபவன் வடக்கு நோக்கியும் இருக்க வேண்டும்.

பூதானம் என்பது மிகவும் உன்னதமானது. வேதம் விதித்த கர்மங்களை விதிமுறைப்படி அனுஷ்டித்து வரும் ஒரு நல்ல அந்தணனுக்கு தனக்குள்ள பூமியில் சாணளவாவது தானமாகக் கொடுப்பவன் சிவலோகத்தை அடைவான். பயிர்கள் விளைந்திருக்கும் பூமியைத் தானம் செய்பவன் அந்த பூமியில் எவ்வளவு அணுக்கள் உண்டோ அவ்வளவு காலத்திற்கு சொர்க்கத்தில் வாழ்வான்.

தேவதைகள பூஜித்து முன்னோர்களை வணங்கி தானம் அளிக்கவேண்டும். தானம் கொடுப்பவர், வாங்குபவர் ஆகிய இருவரின் கோத்திரம், தகப்பனார், பாட்டனார், முபாட்டனார் ஆகியோரின் பெயரைக்கூறிச் செய்தால் இரு சாராரின் ஆயுள் பெருகும்.

குறிப்பறிந்து செய்யும் தானமும் தர்மமும் பலமடங்கு புண்னிய பலனைத் தரும். பசி என ஒரு உயிர் யாசித்தலுக்குமுன் உணவளித்தல் உத்தமம். உணவு கேட்டபின் அளிப்பது மத்திமம். கேட்டும் கொடுக்காமல் இருப்பது அதர்மம். ஏழ்மையின் பிடியில் ஒரூஉயிர் துன்பப்படும்போது வலியச் சென்று உதவுவது பிறவியில் ஐஸ்வர்யத்தைக் கொடுக்கும். வசதியின்றி நோயால் துன்பப்படும் உயிர்க்கு செய்கின்ற உதவி அந்த உயிர்க்கு பல பிறவிகளுக்கு ஆரோக்கிய ஆனந்தத்தைக் கொடுக்கும்.

தானம் கொடுப்பது பெருமைக்கு அல்ல. தானம் பெற்ற பொருளை சரியாக உபயோகிக்க வேண்டும். உதாரணமாக பசுக்களைப் பெறுபவன் அதை விற்கவோ பட்டினி போடவோ கூடாது. நன்கு பராமரிக்க வேண்டும். உரியவர் பார்த்து தானம் அளித்தல் சிறப்பு. தகுந்தவனுக்கு தகுந்த காலத்தில் நல்ல ஷேத்திரத் தலத்தில் தானம் செய்ய வேண்டும்.

நல்ல ஞானம் உடையவன், நற்குணங்களை உடையவன், தரும சிந்தனை உடையவன், எந்த பிராணிக்கும் இம்சை செய்யாதவன் ஆகியவர்களே தானம் பெறத் தகுதியுடையவர்கள்.

திருமணத்தின்போது மணமகனுக்கு பெண்ணுடன், சொர்ணம், எள்ளு, யானை, பணிப்பெண்கள், வீடு, வாகனம், சிவப்பு நிறப்பசுக்கள், குதிரைகள், பட்டாடைகள் வழங்குவது தசமகா தானம் எனப்படும்.

பசு(கோதானம்), தங்கம்(சொர்ணதானம்), எள்(திலதானம்), உப்பு(லவணதானம்), தான்யங்கள்(தானியதானம்), காலணி, சந்தனக் கட்டை, நீர்ப்பாத்திரங்கள், உணவருந்தும் பாத்திரங்கள், நிலம்(புவிதானம்), குடை, விசிறி, கட்டில், ஜோடியான ஆடைகள் ஆகியவற்றைத் தானமாகக் கொடுக்கலாம். புடவை கொடுக்கும்பொது இரவிக்கையுடனும் வேஷ்டி கொடுக்கும்போது துண்டும் கொடுக்க வேண்டும்.

தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை ஏற்றிச் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்போது தானமாகக் கொடுத்தல் உலகத்தில் நல்ல வாழ்கையுடன் முக்தியையும் தர வல்லது.

கோதானம் செய்தால் ஒருவன் இப்பிறவியில் வளமான வாழ்வையும், நீண்ட ஆயுளையும் பெறுவதுடன், மரணத்துக்குப்பின் சொர்க்க வாசம் பெறுவான்.

பூணூலுக்கும், மங்கல சரட்டிற்கும், ஆடைக்கும் பருத்தியே சிறந்தது. எனவே பருத்தி ஆடையைத் தானம் செய்வது –வஸ்திர தானம் சிறப்புடையதாகும்.

பலவகையான தானங்கள் அளிப்பவர் இப்பிறவியில் உலக சுகங்களைப் பெற்று அடுத்த பிறவியில் முக்தியடைவர்.

கிருத யுகத்தில் ஒருவனைத் தேடிச் சென்று தானம் அளிக்கப்பட்டது.
திரோதயுகத்தில் அந்தணர்களை வரவழைத்து திருப்தியாக தானம் அளிக்கப்பட்டது.
துவாபரயுகத்தில் தானம் கேட்பவர்களுக்குத் தானம் அளிக்கப்பட்டது.
கலியுகத்தில் தானம் அளிப்பவர்களைத் தேடிச் சென்று தானம் பெறப்படுகின்றது.

கயை, பிரயாகை, கங்கை போன்ற புண்ணிய இடங்களில் தானம் பெறுபவர்களைத் தேடிச் சென்று தானம் அளிக்க வேண்டும்.

இஷ்ட தானங்கள்(அக்னி ஹோமம், தவ விரதங்கள் கடைப்பிடிப்பது, வேத நெறியில் நடப்பது, உண்மை பேசுவது, கர்மாக்கள் செய்வது),

பூர்த்தி தானங்கள்(நீர் நிலைகள் உண்டாக்குதல், அன்னசத்திரம் அமைத்தல், யாத்திரிகர் தங்குவதற்கு சத்திரம் கட்டுதல், பழமரங்கள் நடுதல்),

பருத்தி தானம் மகாதானம். பருத்தி தானம் மரித்தபின் சிவலோகம் வாசம் கிடைக்கும்.

மேலும் கன்யாதனம், சிரார்த்த தானம், ஹிரண்ய கர்ப்ப தானம், கோதானம், லவணதானம் (உப்பு), குளாத்ரிதானம் (வெல்லப்பாகு), திலதானம் (எள்ளு), ஸ்வக்ணதானம், பூதானம் (பூமி) ஆகிய தானங்கள் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகிவிடும்.

தன் மகளை கன்னிகா தானம் செய்துகொடுப்பதால் அவளது தந்தை சிரேஷ்ட பலன்களை அடைவார். அவருக்குப் பதில் வேறொருவர் கன்னிகா தானம் செய்தாலும் அவர் அப்பலன் பெறுவர்.

எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானம். வறுமையில் வாடுபவர்களுக்கும், பசியால் தவிப்பவர்களுக்கும் அன்னமளிக்கும் இந்த இணையற்ற தானத்தில் பதினாறில் ஒரு பங்கு அளவுகூட மற்ற தானங்கள் பலனளிப்பதில்லை.

ஒரு ஜீவன் மரிக்கும் சமயம் திலம் (எள்) லவணம் (உப்பு), பருத்தி, தான்யம், இரும்பு, பொன், பசு, பூமி என தானம் தரலாம்.

எள், இரும்பு தானம் யமனை மகிழ்ச்சியடையச் செய்யும். லவண தானம் யமபயத்தைப் போக்கும். தானிய தானம் யம தூதர்களை மகிழ்விக்கும். செர்ணம், கோ தானங்கள் பாவங்களைப் போக்கும்.

சாஸ்திரப்படி யாகங்கள் செய்தாலும் யாகம் நடத்தியவருக்கு தட்சினை கொடுக்க வேண்டும். அப்போதுதான் யாகத்தின் முழுப்பலன் கிட்டும்

தானம், தட்சினை என்பதைப் பிறர்வாழக் கொடுப்பதாகக் கருத வேண்டும்.

வறியோர் வாழ வளத்தைக் கொடுப்பதுதான் உண்மையான தவம். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமான் உடம்பு மட்டும் இருந்தால் போதும் என நினைக்கக்கூடாது.

அறவழியில் நில்லாதவர்கள் தானம்பெறத் தகுதியில்லாதவர்கள்.

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 15:53

வணங்கும்முறை!

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

 

#*#*#*#*#

 

44.வணங்கும்முறை!

 

1.ப்ரதுதானா- எழுந்து நின்று வணங்கி வரவேற்பது.

2.நமஸ்காரா- நமஸ்தே / வணக்கம் என்று கூறி வணங்குதல்.

3.உபஸங்க்ரஹன்- பெரியோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதங்களை தொட்டு வணங்குதல்.

4.அஷ்டாங்க / ஸாஷ்டாங்க- இறைவன் மற்றும் பெரியோரின் முன்னே கால்கள், முழங்கால்கள், வயிறு, மார்பு, நெற்றி மற்றும் கைகள் நிலத்தில் படுமாறு கீழே விழுந்து வணங்குதல். ஆண்களுக்கு மட்டுமே உரியது. எட்டு அங்கங்கள் தரையில் படும்படி வணங்குவதாகும்.

5.ப்ரத்யபிவாதனா- பிறர் வணக்கத்திற்கு பதிலாக வணக்கம் கூறுதல்.

6.பஞ்சாங்கநமஸ்காரம்- இது பெண்களுக்குரியது. இறைவன் மற்றும் பெறியோர்களை நெற்றி, முழங்கால்கள் இரண்டு, பாத நுனிகள் இரண்டும் பூமியில் படுமாறு வணங்குதல்.
7.உத்தம நமஸ்காரம்- லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து மனதில் மந்திரங்களை உச்சரித்து இறைவனை மனதார வணங்குதல். மனிதன் தன் ஆத்ம இருப்பிடமான இதயத்திலிருந்து வணங்குவதாக ஐதீகம்.


#*#*#*#*#

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!


#*#*#*#*#

 

43.செவ்வாய்க்கு செவ்வாய் தோஷம்- ஏன்!

 

ஓர் ஆணின் இரத்தம் Rh+ ஆக இருந்து அவர் மனைவியின் இரத்தம் Rh- ஆக இருந்தால் அவர்களின் குழந்தைக்கு அப்பா இரத்தத்துடன் ஒன்றி Rh+ ஆக இருக்கும் அல்லது அம்மாவுடன் ஒன்றி Rh- ஆக இருக்கும். குழந்தை அம்மா வயிற்றில் வளர்வதால் அம்மாவின் இரத்தத்தைப்போல் Rh- ஆக இருந்தால் தவறு ஒன்றுமில்லை. ஆனால் Rh+ ஆக அப்பாவினுடையது போலிருந்தால் அது அம்மாவின் Rh- இரத்தத்துடன் கலக்கும்போது இரத்தத்தில் எதிர்ப்பு அணுக்கள் உற்பத்தியாகி குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அப்பாவின் இரத்தமும் அம்மாவின் இரத்தமும் ஒன்றாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

சரி இதை ஏன் இந்தப் பகுதியில் சொல்லியிருக்கின்றேன் என்றால் நமது முன்னோர்கள் செவ்வாய் தோஷக்காரர்களுக்கு செவ்வாய் தோஷமுடைய பெண்தான் வேண்டுமென்று கண்டிப்புடன் சொல்லிவைத்தனர். பொதுவாக செவ்வாய் தோஷமுள்ளவர்கள் ஆணாக இருந்தாலும்/ பெண்ணாக இருந்தாலும் அவர்ளில் 90% பேர் Rh- இரத்தம் உடையவர்களே என தற்போது ஆராச்சியில் கண்டு பிடித்துள்ளார்கள்.. எனவே மேலே சொன்னது போல் ஆணின் இரத்தமும் பெண்ணின் இரத்தமும் Rh- ஆக இருந்து இணைவது அவர்களின் குழந்தைக்கும் குடும்ப வாழ்விற்கும் உகந்தது என அறிந்து அதை நடைமுறைப் படுத்திவைத்துள்ளது விஞ்ஞான வியப்பாகும்.

 

#*#*#*#*#

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!


#*#*#*#*#

 

42.எந்த மாதத்தில் என்ன செய்யலாம்!

 

சாந்த்ர-சுக்லபக்ஷம் பிரதைமுதல் அமாவாசை வரை சாந்த்ர மாதம் எனப்படும். சிரார்த்தம், திதி போன்ற தர்ம காரியங்களுக்கு சாந்த்ர மாதம் பயன்படும்.

சௌர-சூரியன் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு போகும் வரையில் சௌர மாதம். விவாஹம் போன்ற சத் காரியங்களைச் செய்ய பயன்படும்.

சாவனம்-சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம்வரை சாவனம். 30 நாட்களைக் கொண்டது. வருடம் பூராவும் சாவன மாதம் வருகிறது. பிராயசித்தம், அன்னப்ராசனம், மந்திர உபாசனை, ராஜகிரஹம் போவதற்கு, வேள்வி ஆகியவற்றைக் கணிக்க சாவன மாதம் பயன்படும்.

நட்சத்திர- அஸ்வினி முதல் ரேவதி நட்சத்திரம்வரை நட்சத்திர மாதம். பித்ரு கணங்களின் காரியங்களைச் செய்ய நட்சத்திர மாதம் பயன்படும். பௌர்ணமி எந்த நட்சத்திரத்தில் வருகின்றதோ அதைக் கொண்டு அந்த மாதத்தின் பெயர் வைக்கப்படும்.

30 நாட்கள் முழுமையாக அமையாத மாதம் மல மாதம் எனப்படும். மல மாதங்களில் பிண்டம் கொடுக்கலாம். விவாகம், வேள்விகள் செய்யக் கூடாது. தீர்த்த யாத்திரை, தேவதரிசனம், விரத உபவாசம், சீமந்தம், ருதுசாந்தி, ராஜ்யாபிஷேகம் போன்ற சுப காரியங்களைச் செய்யலாம். பொதுவாக ஆடி, மார்கழி தவிர மற்ற மாதங்கள் விவாகம் நடத்திட ஏற்றவை. விரத ஆரம்பம், பிரதிஷ்டை, உபநயனம், மந்திரோபாசனை, விவாஹம், புதுமனை புகுவிழா, ஆகியவை தவிர்த்தல் நலம்.

30 க்கும் மேற்பட்ட நாட்கள் 31 / 32 இருந்தால் அந்த மாதம் புருஷோத்த மாதம் எனப்படும். 2 ½ ஆண்டுகளுக்கு ஒரு முறை 32 நாட்கள் வரும்.

 

#*#*#*#*#

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.


#*#*#*#*#

 

41.தேக நலம் தரும் கோடைகால வழிபாடுகள்!


ஒவ்வொரு பருவகால மாற்றத்திலும் அப்போது நிலவும் சூழலுக்கு ஏற்ப வழிபாடு முறைகளை ஏற்படுத்தி உடல் நலத்தைக் காத்துக் கொள்ள வகை செய்துள்ளனர் முன்னோர்கள்.

உஷ்ணகாலத்தில் வழிபட வேண்டிய தெய்வங்கள்: ஜுரதேவர், சீதளாதேவி, மாரியம்மன், திருச்செந்தூர் முருகன் ஆகிய தெய்வங்கள். வெம்மை நோயிலிருந்து காத்து ஆரோக்கிய ஆயுளை அருள்பவர்கள்.

சீதளாதேவி: தேவலோகப் பெண் ஒருத்தி பிரம்மனிடம் மற்ற தெய்வங்களைப் போல் தன்னையும் வணங்க வரம் கேட்க அவள் தகுதியை பரிசோதிக்க உலக மக்களுக்கு வரக்கூடிய நோய்களை எல்லாம் ஒன்று திரட்டி அதை உளுந்தம் பருப்பாக மாற்றி அந்தப் பெண்ணிடம் கொடுத்து இதை கீழே சிந்தாமல் நான் குறிப்பிடும் காலம் வரை எங்கு சென்றாலும் எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்ல, பூலோகத்தில் அவளது கவனம் திசை திரும்பி உளுந்து சிந்த, பிரம்மன் அந்த உளுந்தில் அடக்கி வைத்திருந்த பிணிகள் எல்லாம் வெளிப்பட்டு பரவி மக்களை வாட்டி வதைக்க, தன்னால்தான் இந்நிலை என வருந்தியவள், மக்களை காப்பாற்ற பிரம்மனிடம் சென்று தன் செய்த தவறை ஒப்புக்கொண்டு தன்னை தண்டித்து மக்களை நோய்களிலிருந்து காக்க வேண்டினாள்.

செய்த தவறை மறைக்காமல் ஒப்புக்கொண்டு மக்கள் படும் அவஸ்தையை கண்டு மனம் வருந்தும் தகுதியால் பூவுலகில் உன்னால் பரவிய நோய்களைத் தீர்க்கும் தெய்வமாக நீ விளங்குவாய் என அருளினார். சீதளாதேவி எனும் பெயருடன் உஷ்ணத்தால் ஏற்பட்ட மக்களின் வெம்மை நோய்களை தன்னை வணங்குபவர்களுக்கு நீக்கி அருள் புரிகின்றாள்.

ஜுரதேவர்: சீதளாதேவியின் சகோதரர் ஜூரதேவர். தன் தங்கையை பூவுலகில் பார்த்துவிட்டு வரும் வழியில் மக்கள் விஷஜுரத்தால் பாதிக்கப்பட்டு தவிப்பதைப் பார்த்து பிரம்மனிடம் சென்று மக்களின் துயரத்தைப் போக்க வேண்டினார். தங்கையைப் பார்த்த சந்தோஷத்தைவிட மக்களின் துயரத்தை நினைக்கும் உனக்கு அந்த விஷ ஜுரத்தைப் போக்கும் ஆற்றலை அளிக்கின்றேன் என்றார். உன்னை வழிபடுபவர்களுக்கு அருள் புரிவாய் என்றார்.


மாரியம்மன்: கோடைக்காலதில் அனைத்து உயிர்களையும் தன் அருள் மழையினால் குளிர வைப்பதால் மாரி. அம்மை நோய் கண்டு தன்னை வணங்குபவர்களின் இன்னலைத் தீர்ப்பவள். தான் தங்கிட குளிர்ந்த நிழலும் காற்றும் தந்த வேப்ப மரமும் அதன் இலைகளுமே கோடையில் வரும் நோய்களை தடுக்கும் ஆற்றல் பெற அருள்.

திருச்செந்தூர் முருகன்: தன்னை வழிபட்ட மக்களுக்கு பன்னீர் இலையில் அளிக்கப்படும் பிரசாதம் வெப்ப மற்றும் ஆரோக்கிய குறைபாடுகளை நீக்க வல்லது.


#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 15:42

மூச்சுகள்!

ஓம்நமசிவய!

கூர்வாமரோ. முருகார் மலர்த்தாம் முடியானை அடியார்
முயற்சித்திறம் திருகாமல் விளைவிக்கும் தயானைவதனச்
செழுங்குன்றினைப் பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி
புத்தேளிரும் ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.


#*#*#*#*#

 

40.மூச்சுகள்!

 

மூச்சு விடும் அளவிலும் ஒழுக்கமுறை வேண்டும். மனிதனின் ஒருநாள் சுவாச எண்னிக்கை 21600 என்ற அளவில் இருக்க வேண்டும். இதைக் கடைபிடிப்பவர்கள் 120 ஆண்டுகள் வாழலாம். ஒரு மானிட உடம்பு தினந்தோறும் நிமிஷத்திற்கு பதினைந்து மூச்சுகள் என மூச்சு விடுகின்றது. மூக்கின் வலது இடது துவாரங்கள் வழியாக நம் சுவாசம் நடக்கின்றது. உள்ளுக்கும் இழுக்கும் மூச்சுக்கு நிஸ்வாஸம்(பூரகம்)- நிச்சுவாசம் என்றும் வெளிவிடும் மூச்சுக்கு உஸ்வாஸம்(ரேசகம்)- உச்சுவாசம் என்றும் பெயர். உள்ளே இழுத்த மூச்சை நிறுத்துவது அதாவது கட்டுவது, மற்றும் வெளியே விட்டு மூச்சை நிறுத்துதல் அதாவது அசைவுற செய்தல் என்பதை கும்பகம் என்பர். முன்னது உள்கும்பகம், பின்னது வெளிக்கும்பகம் எனப்படும். பூரக, ரேசக மூச்சுகளை யோகவலிமையால் நிறுத்திவைக்க முடிந்தவருக்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றின் விகாரங்கள் ஒடுங்கிவிடும். இதை லயம் என்றும் கூறலாம். யோகாப்பியாசன சித்தி பெற்றவர்களுக்கே இந்த லயம் ஏற்படும். உள்ளே வாங்கும் நிஸ்வாஸ(பூரக), வெளியே விடும் உஸ்வாஸ(ரேசக) மூச்சுகள் ஹம்ஸ என்றும் சொல்லப்படும்.

இந்த பூரக ரேசக மூச்சுகள் ஒவ்வொரு ஜீவனின் உடம்பிலும் உள்ள ஆறு ஆதாரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாதகம், விசுக்தி, ஆக்ஞேயம் என்பதிலும் மற்றும் ஸகஸ்ராரம் என்பதிலும் சுற்றி சுற்றி வந்து அந்த ஜீவனின் ஆயுள் பிரமாண காலத்தை நடத்திக் கொண்டிருக்கும். இப்படிக் கலையில் நடக்கும் ஐம்பூதங்களின் அந்தக் கரண வியாபாரத்தால் மூச்சுகளின் எண்ணிக்கை அதிகரித்து அறிவைத் தோற்றுவிக்காமல் ஆயுளை க்ஷீணப்படுத்தி நரை திரை மூப்பை எளிதில் உற்பவம் செய்யும். ஆனால் தற்போது ஜீவன்கள் ஓடுவதனாலும் நடப்பதனாலும் தூங்குவதனாலும் போகம் செய்வதனாலும் சுவாசம் அதிகரித்து உடலின் ஜீவசக்தி குறைந்து 120 ஆண்டுகள் என்பது குறைந்து விடுகின்றது. ஜீவன் விடும் சுவாசம் குறைந்தால் வயது ஏறும். அதற்காண பயிற்சிகளே பிரணாயாமம், வாசியோகம். எனவே இதிலிருந்து விடுபட்டு நலமுடன் இருக்க பிரணாயாமம் செய்ய வேண்டும்.

 

#*#*#*#*#

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26930861
All
26930861
Your IP: 34.204.196.206
2024-03-28 21:30

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg