gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
சனிக்கிழமை, 25 December 2021 11:45

பயிற்சிகள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

@$@$@$@$@$@

பிரணாயாமம் பயிற்சி செய்து பழகாதவர்கள் நலனுக்காக!

அமைதியில்லாமல் அவதிப்படும் உயிர்கள் கண்களை மூடியபடி நிதானமாக நாசிகளின் வழி மூச்சை மெல்ல மெல்ல ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் கொண்டு எவ்வளவு உள்ளே இழுக்க முடியுமோ அதுவரை இழுத்து பின் மூச்சை வெளியேற்றும் போது தளர்வாகுக, இரண்டு, மூன்று என்று மனதில் எண்ணிக் கொண்டு அல்லது மூச்சை உள்ளே இழுக்கும் போதும் வெளியே விடும்போதும் உயிர்களுக்கு பிடித்தமான கடவுளின் பெயரை மனதில் நினைத்து குறைந்தது ஐந்து நிமிடங்கள் / வேண்டும் வரை பயிற்சி செய்தால் அவ்வுயிர்களுக்கு அமைதி கிட்டும். முச்சுக் காற்று உள்ளே செல்லும்போதும் வெளியே செல்லும்போதும் கவனத்தை அதன் மீது செலுத்துங்கள். மனதில் சஞ்சலம், கோபம், படபடப்பு மற்றும் பயம் நீங்கி சுவாசத்தின் வேகம் குறையும்.

#####

எல்லா செயல்களுக்கும் முன் உயிர்கள் தங்கள் உடலைத் தயார் செய்து தளர்த்திக் கொள்ள வேண்டும். அது உடல் தசைகள் இறுக்கத்திலிருந்து விடுபட்டு செயல் செய்ய ஆயத்த நிலையாகும். அந்த ஆயத்த நிலைக்கு உடலைத் தயார் செய்யவது பயிற்சிகள். பிரணாயாமம் / தியானம் செய்வதற்கு முன் உடலை சீர்படுத்தும் பயிற்சிகளை செய்து உடலுக்கு தகுதி நிலை ஏற்படுத்திய பின்னரே பிரணாயாமம் / தியானம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் எந்த சிக்கல்களும் ஏற்படாமல் வெற்றிகரமாக பிரணாயாமம் / தியானம் செய்து முடிக்க முடியும்.

நாடிசுத்தம், பிரணாயாமம் பயிற்சிகளுக்கு முன் அனைவரும் யோக ஆசனங்களில் இதற்குப் பயன்படும் ஆசனங்களான பத்ம ஆசனம், வஜ்ர ஆசனம் ஆகியவற்றை பற்றி அறிந்து அவைகளை கற்றுக் கொள்ளவேண்டும் இந்த இரு ஆசனங்களே நாடிசுத்தம், பிரணாயாமம் ஆகியவற்றிற்கு மிகச்சிறந்த ஆசனங்களாகும்.

ஆசனம் என்றால் இருக்கை என்று அர்த்தம். இந்த பயிற்சி முறையில் ஸ்தூல உடலில் உள்ள ஆதார சக்கரங்களின் சூட்சும சக்திகள் தூண்டப்படும். ஆசனத்தில் முதுகெலும்பு பகுதிதான் அதிக, பயன்படுத்தப்படும். எனவே எல்லா பயிற்சிகளும் முதுகெலும்பைச் சுற்றியே அமைந்திருக்கும். நாடிசுத்தம், பிரணாயாமம், தியானம் ஆகியவற்றிற்கு அமரும்போது நிலையாக உடல் ஆடாமல் அசையாமல் அமர வேண்டும். முடிந்தளவு ஆசனங்களை ஒரு குருவிடம் முறைப்படி கற்பது நல்லது. நீண்ட நேரம் தன்னை மறந்து அமர்ந்திருக்கும் தியான நிலை உறுதியாக இருக்க வேண்டும். கால்களில் வலி ஏற்பட்டு நாடிசுத்தம், பிரணாயாமம், தியானம் ஆகியவற்றை கலைக்க வழிவகை செய்துவிடும். எந்த வித உபாதையினாலும் பயிற்சிகள் பாதியில் கலையாமல் இருக்க ஆசனங்களை நன்றாக பழகவேண்டும்.

பத்ம ஆசனம்!

ஓரணையப்பதம் ஊருவின் மேலேறிட்டு
ஆரவலித்ததன் மேலவைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே. திருமூலர்.

பத்மம் என்றால் தாமரை. இந்த ஆசனம் தாமரைமலர் விரிந்து இருப்பதுபோல இருப்பதாகும். ஒரு சமதள விரிப்பின்மீது அமர்ந்து வலதுகாலை இடது தொடையின்மீது வைத்து இடதுகாலை வலது தொடையின்மீது வைக்க வேண்டும். இரண்டு குதிகால்களும் அடிவயிற்றைத் தொட்டபடி இருக்க வேண்டும். முதுகுத் தண்டுவடம் கழுத்து ஆகியவை ஓர் நேர் கோட்டில் நிமிர்ந்த வண்ணம் இருக்க கைகள் இரண்டையும் இரண்டு பக்கமும் உள்ள முழங்காலின் மேல் சின்முத்திரை காட்டியபடி வைக்கவேண்டும். கண்கள் மூடிய நிலையில் இருக்க வேண்டும்.

இந்த ஆசனம் யோகம் தியானம் பழகுபவர்களுக்கு மிக மிக நல்ல பலன் தரும். தொடர்ந்து செய்து வந்தால் அடிவயிற்றுப் பகுதின் இரத்த ஓட்டம் சீராகும். இரப்பையில் ஜீரண சக்தியை தூண்டும். மூட்டு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படாது. மேலும் மனதிற்கு அமைதிதரும் ஆசனமிது. இதில் அமர்ந்து தியானம் செய்தால் மனதை ஒருமுகப்படுத்தும் திறன் அதிகரிக்கும்.

முதன் முதலில் செய்யும் போது கால்களில் வலி ஏற்படலாம். அதனால் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து பழகியபின் பத்மாசனத்தை செய்ய ஆரம்பிக்கலாம். அர்த்த என்றால் பாதி எனப்பொருள். பத்மாசனத்தின் பாதிநிலையில் செய்யப்படுவதால் அர்த்தாசனம் என்றானது. வலதுகாலை இடது தொடையின்மீது வைத்து வலது குதிகால் அடிவயிற்றைத் தொட்டபடி அமரவேண்டும். கண்களை மூடியவண்ணம் இரண்டு கைகளையும் சின் முத்திரை காட்டியபடி இரண்டு முழங்கால்மீது வைத்து நிமிர்ந்து நேராக அமரவேண்டும். இதை நன்றாக பழகியபின் முழுமையாக பத்ம ஆசனத்தை செய்து பழகுக!

வஜ்ர ஆசனம்!

வஜ்ரம் என்றால் வைரம். இந்த ஆசனத்தில் அமரும்போது உடல் வஜ்ரம்போல் உறுதியான நிலையில் இருக்கும். மூச்சுப் பயிற்சிக்கு பொருத்தமான ஆசனம். இதை செய்யும்போது கால்களில் வலி ஏற்படக்கூடும். பழகிய பின்னர் எளிமையான நல்ல பலன்களைத் தரக்கூடிய ஆசனம்.

இரண்டு கால்களையும் நன்றாக நீட்டி அமருங்கள். வலது காலை மடித்து குதிகாலை சாய்த்து அதன்மீது அமர்ந்து கொண்டு இடது காலை அதேபோல் மடக்கி சாய்த்து வைத்து அதன் மீதும் சேர்ந்தவாறு புட்டம் இருக்கும்படியாக அமர்ந்து கொள்ளவும். இப்போது இரண்டு குதிகால்களும் ஆங்கில் எழுத்து V வடிவில் இருக்கும். முதுகுத் தண்டை வளைக்காமல் நேராக கழுத்துடன் நிமிர்ந்து உட்காருங்கள். இரண்டு கைகளையும் இரண்டு முழங்கால்மீது வைத்துக் கொண்டு கண்களை மூடியபடி சீரான மூச்சை இயக்க வேண்டும். சிறிது நேரத்தில் வயிறானது சகஜ நிலையை அடையும். உணவு உண்டபின்னரும் இந்த ஆசனத்தில் அமர்ந்து யோகப் பயிற்சிகள் செய்யலாம்.

இந்த ஆசனம் முழங்கால் மூட்டு மற்றும் கால்களுக்கு ஓய்வைத் தந்து நன்றாக இயங்க உதவும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். தொடைப்பகுதி சதைகள் வலுவடையும். மலசிக்கல் பிரச்சனை தீரும். மூல நோய் உள்ளவர்கள் இந்த ஆசனத்தில் அமர்ந்து செய்யக்கூடாது.

சவாசனம்! சவ ஆசனம்!

இந்த ஆசனம் ஒரு சிறந்த பயிற்சியாகும். இறந்த நிலையில் உடலை இருக்க வைக்கும் நிலையாகும். இதை யோக நித்ரா என்றழைப்பதுண்டு. யோகம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் முடிந்ததும் இந்தச் சவாசனத்தை செய்து பின் விழிப்படையச் செய்ய வேண்டும். அதாவது ஒவ்வொரு அரைமணி அல்லது பயிற்சி முடிந்த பின்னர் சவம்போல் சவாசன நிலையில் படுத்திருக்க வேண்டும். தரை விரிப்பின்மீது மெல்ல மல்லாந்த நிலையில் படுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் உடலுக்குப் பக்கவாட்டில் சற்று விரித்து வைத்து உள்ளங்கைகள் வயிற்றின்மீது இருக்க உடலை நன்கு தளர்ந்த நிலையில் வைக்க வேண்டும். இரண்டு கால்களும் V ஆங்கில எழுத்து போல் விரிந்த நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இந்த சவாசன நிலையை சிறுது நேரத்தில் முடித்துக் கொண்டு வலது பக்கமாக திரும்பி சில நிமிடங்கள் அமைதியாக படுத்திருந்து பின்னர் மெல்ல எழுந்து அமர்ந்து மூச்சை மூன்றுமுறை நன்றாக இழுத்து வெளியேற்றிவிட்டு பின்னர் கண்களை திறக்கவும்.

இந்த ஆசனம் உடலுக்கும் மனதிற்கும் நல்ல ஓய்வைத் தரும். மன அழுத்தம் போக்கும். தொடர் தலைவலியை போக்கும். குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

ஆசனங்கள் செய்ய ஓர் பலகையில் / மான் தோல் / புலித்தோல் மீது அமரவேண்டும். ஏனெனில் தரையில் நேரிடையாக அமர்ந்தால் பூமியின் ஈர்ப்பு விசையின் ஆதிக்கம் மூலாதாரத்தின் காந்த சக்தியுடன் மோதி எண்ண ஒட்டங்களையும் மனோ மற்றும் சித்த சலனம் ஆகியவற்றை சரியான முறையில் அடக்கி வைக்க முடியாமல் போகும்.

முத்திரைகள்!

பிரணாயாமம் / தியானப் பயிற்சிகளைச் செய்வதற்குமுன் சில முத்திரைகளை தெரிந்து அவைகளை முறையாகப் பயப்படுத்த வேண்டும்.

ஞான / சின் முத்திரை:

பத்மாசனத்தில் கண்களை மூடியபடி அமர்ந்து கை மணிக்கட்டை முழங்காலின்மீது படியவைத்து உள்ளங்கைகளை வான் பார்த்திருக்கச் செய்து கட்டைவிரல் நுனியையும் ஆள்காட்டிவிரல் நுனியையும் சேர்த்தவண்ணம் பார்ப்பதற்கு இரண்டு விரல்களும் ஓர் வளையம்போல் இருக்கச் செய்யுங்கள். மீதமுள்ள மூன்று விரல்களையும் மடங்காமல் நீட்டி வையுங்கள். இது ஞானத்தை தரும் ஞான / சின் முத்திரை எனப்படும்.

பிரம்ம முத்திரை:

பத்மாசனத்தில் கண்களை மூடியபடி அமர்ந்து இரு முழங்கைகளையும் தொடைமீதி படியும் படிவைத்துக் கொண்டு இடது உள்ளங்கையின் பாதம் வான் நோக்கியிருக்கும் படியாகவும் அதன்மேல் வலது கையின் பாதம் வான் நோக்கியிருக்கும்படியாக வைத்துக் கொள்வதே பிரம்ம முத்திரை.

இந்த ஞான / சின் இரு முத்திரைகளும் வெகுவாக தியானப் பயிற்சிக்குப் பயன்படும். பிரணாயாமத்தின்போது ஒருகை சின் முத்திரையை பயன்படுத்த வேண்டும்.


ஓங்காரம்!

அ உ ம என்ற எழுத்துக்களை தனித்தனியே உச்சரித்தால் அதை உணரமுடியாது. மூன்று எழுத்துக்களையும் ஒன்றாகச் சேர்த்து முறையாக உச்சரித்தால் அது ஓம் எனும் பிரணவ மந்திரம் ஆகும். எல்லா ஓசை ஒலிகளுக்கும் ஓம் என்பதே பிரதானமானது. எல்லா மந்திரங்களுக்கும் முன் ஓம் சேர்த்து சொல்லப்பட்டால் அதன் ஆற்றலும் வலிமையும் அதிகரிக்கும். ஓம் என்ற தொடர் உச்சரிப்பால் உடலில் அதிர்வலைகள் தோன்றி மனதில் அமைதி உண்டாக்கும். முறைப்படி உச்சரித்தால் மரண பயம் நீங்கும். உடலிலும் உள்ளத்திலும் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

பத்மாசனம் / வஜ்ர ஆசனம் ஏதாவது ஒன்றில் அமர்ந்து கண்களை மூடிக் கொள்ளுங்கள். ஞான / சின் முத்திரையில் கைகள் இருக்கட்டும். இரண்டு முறை காற்றை ஆழமாக சுவாசித்து வெளியேற்றுங்கள். பின்பு சுவாசத்தை முடிந்தளவு உள்ளே இழுத்து வெளியேற்றும் சமயத்தில் ‘ஓ’ என்ற எழுத்தை அடிவயிற்றிலிருந்து ஒரு பங்கு அளவிற்கு உச்சரித்து பின்னர் ‘ம்’ என்ற எழுத்தை இரண்டு பங்கு அழுத்தம் என்ற அளவில் உச்சரியுங்கள். இப்போது உடலில் ஓர் இன்ப அதிர்வு தோன்றும். தொடர்ந்து உச்சரித்து வாருங்கள். காலையில் யோகம், பிரணாயாமம் மற்றும் தியானம் செய்வதற்கு முன்னாலும் இரவு சயனத்திற்கு செல்லும் முன்பு ’ஓம்’ பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.

வழிபாடு!

ஓஜஸ் சக்தி உள்ள அந்த அளவிற்கு ஒருவன் ஆற்றல் உள்ளவன் ஆகின்றான்- ஆன்மீக ஞானம். பிரபஞ்ச சக்தியை, இறையை பணிந்து செயல்பட்டால் நலம் கிட்டும் என்ற நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம். அதனால் பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும்போது வழிபாடு செய்தல் வேண்டும்..

எல்லா உயிர்களுக்கும் குலதெய்வம் என்ற முறைதனை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். எந்தச் செயலை செய்வதாயிருந்தாலும் உயிர்கள் அவர்களுடைய குலதெய்வத்தை வணங்கி செயல்களைச் செய்ய ஆரம்பித்தால் அந்த காரியம் விநாயகர் துணையுடனும் குலதெய்வ ஆசியுடன் சிறப்பான வெற்றிகளைத் தரும். எனவே விநாயகரையும் குலதெய்வத்தையும் வழிபட்டு பயிற்சிகளைத் தொடருங்கள்.

பிரபஞ்சத்தின் அனைத்துமாக இருக்கும் இறையான அவர் எங்களைப் பாதுகாத்து காப்பாற்றட்டும். அவர் எங்களுக்குச் சக்திகளை ஊட்டி அருள் புரியட்டும். எங்களுக்குச் சக்தி தந்து எங்களின் செயல்களுக்கு வலிமை தரட்டும். இந்த பயிற்சிகள் எங்களுக்குள் ஒளியூட்டி நல்ல பலன் தரட்டும். ஒருவரை ஒருவர் புரிந்து அன்புடன் நேசித்து எங்கும் அமைதி நிலவட்டும். அமைதி பரவட்டும். வாழ்க இந்த பூமி.

பதஞ்சலி முனி யோக, பிரணாயாம நெறிமுறைகளுக்கு முன்னோடி என்பதால் அவரை வணங்குகின்றோம்.

மனதில், எண்ணங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி உடல் மற்றும் மனத்திற்கான இலக்கண நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்த முனிவர்களில் பெயர் சொல்லக்கூடிய நிலையில் முதலாக இருப்பவரும் சக்தி நிறைந்தவருமான “பதஞ்சலி முனி” அவர்களே உங்களை நான் இருகரம் கூப்பி மரியாதை கொண்டு வணங்குகின்றேன். உங்களுக்கு எனது பனிவான வணக்கங்கள்.

சூர்ய உதயத்திற்குமுன் செய்வது சிறந்தது என்பதால் அந்த நேரத்தில் சூரியனை வணங்குதல் சிறப்பு.

“ஓ சூரியனே!” பாத்திரத்தை மூடியிருக்கும் மூடியைப்போல் உன்னுடைய தங்கநிற மேனியின் ஒளிக்கற்றைகள் உண்மையின் கதவுகளை மூடியுள்ளது. எனக்காக, அதை திறந்து உண்மைதனை அறிய அதை நோக்கிச் செல்ல எனக்கு வழிவிடுவாயாக! உன்னை நான் வணங்குகின்றேன்.

மூச்சுப் பயிற்சிகளைச் செய்வதற்கு முன் சிறிது தொலைவிற்கு நடைப் பயிற்சி செய்து சுத்தமான காலைநேரக் காற்றை சுவாசித்தால் உயிர்களின் உடலும் மனதும் புத்துணர்ச்சி பெற்று நாள் முழுதும் சுறுசுறுப்புடன் இயங்க ஏதுவாகும். வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டில் சில உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

வலது பக்கம் படுப்பது ஏன்!

பிரணாயாமம் / தியானம் / யோகப் பயிற்சிகள் செய்து முடிந்தபின்னர் சவாசனத்தில் படுத்து வலது பக்கம் திரும்பி சிறிது நேரம் படுத்திருந்து எழுந்திருக்க வேண்டும். வலது பக்க நுறையீரலானது மேற்பகுதி, நடுப்பகுதி, கீழ்ப்பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடது பக்க நுரையீரலானது மேற்பகுதி மற்றும் கீழ்ப்பகுதி என் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இடது பக்க நுரையீரலானது வலது பக்க நுரையீரலைவிட சற்று சிறியதாக அமைந்துள்ளது.

வலது பக்கம் சாய்ந்து படுத்தால் உடலில் அதிக அளவு பிராண வாயு கிடைக்கும். பயிற்சிகள் முடிந்ததும் வலது பக்கம் திரும்பி படுத்து எழுந்து உடகாரச் செய்வதால் அதிக அளவு பிராணவாயு கிடைக்கும் என்பதாலேயே அவ்வாறு செய்ய சொன்னார்கள் முன்னோர்கள்.

உணவு பழக்கங்கள்!

யோகம், பிராணாயாமம், தியானம் ஆகிய பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதற்குச் சிறந்த உணவு பாலாகும். பாலை நெருப்பில் வைத்துக் காய்ச்சி நீண்டநேரம் கொதிக்க விடக்கூடாது. கொதிநிலையை அடைந்ததும் இறக்கி வைக்கவும். அப்போதுதான் அதிலுள்ள வைட்டமின் போன்ற சத்துப் பொருட்கள் வீணாகாமல் இருக்கும்.

உணவே மருந்தாகும். இதை நினைவில் கொண்டு உணவை அளவிற்கு அதிகமாகவும் அடிக்கடி உண்ணாமலும், சத்தில்லாதவற்றை உண்ணாமலும், பசித்தபின்பே உணவை உட்கொள்ளுவதும் சிறந்த பழக்கம்.

வயிற்றின் கொள்ளளவில் பாதி பாகம் அளவுள்ளா உணவை சப்பிட்டு பின்னர் கால் பாக அளவிற்கு நீரைக் குடிக்க வேண்டும். மீதி கால்பாகம் வெற்றிடமாக இருக்க வேண்டும்.
#####


பயிற்சிகள்!

நாடி சுத்தம்!
பிரணாயாமம்!
தியானம்!

#####

Read 3832 times Last modified on சனிக்கிழமை, 01 January 2022 12:13
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27043658
All
27043658
Your IP: 3.149.239.110
2024-04-19 23:39

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg