குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
காயத்திரி மந்திரங்கள்! (23)
ஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
&&&&&
ஸ்ரீ சாஸ்தா காயத்திரீ
(பயங்கள் நீங்க)
”ஓம் பூதநாதாய வித்மஹே
பச நந்தநாய தீமஹி
தன்னோ சாஸ்தா பிரசோதயாத்”
(ஐம்பூதம் அடக்கும் ஐயனே சரணம்.
ஐயமில்லா வாழ்வருளும் சாஸ்தாவே
சரணம், உய்ய நலம் தருவாய் ஐயப்பனே சரணம்.)
$$$$$
ஓம்நமசிவய!
இருள்கடி சுடரே போற்றி
ஓம் இதயத்துள் இனிப்பாய் போற்றி
ஓம் இடரெல்லாம் களைவாய் போற்றி
ஓம் இளயானை முகத்தாய் போற்றி
######
ஸ்ரீ துளசி காயத்திரீ
(அறியாமல் செய்த பாவங்கள் நீங்க)
”ஓம் ஸ்ரீ ப்ருந்தா தேவ்யை ச தரிபுராய வித்மஹே
துளசி பத்ராய தீமஹி
தன்னோ துளஸீ பிரசோதயாத்”
(ப்ருந்தா தேவியே, துயர் போக்கி
துன்பமறுக்கும் மாதாவே, தூயவளே
துளசி தாயே போற்றி.)
######
ஓம்நமசிவய!
ஆதியாம் தேவே போற்றி
ஆகம முடியே போற்றி
இந்தொழிற் சடையாய் போற்றி
இலங்குமோர் கொம்பாய் போற்றி
######
ஸ்ரீ வாஸ்து பகவான் காயத்திரீ
(வீடு மனைகள் கட்ட)
”ஓம் தனுர் தராயாய வித்மஹே
ஸர்வ ஸித்திச்ச தீமஹி
தன்னோ தரா பிரசோதயாத்”
(குடும்பம் வாழ்வு பிரகாசித்திட
வீடுகளில் அமர்ந்து நல்வாழ்வு அளிக்கும்
பகவனே எல்லா பாக்கியங்களும் அளித்திடுவாய்!)
######
ஓம்நமசிவய!
ஆருயிர்த் துணையே போற்றி
ஆறணி சடையாய் போற்றி
ஆக்கமே தருவாய் போற்றி
ஆரண முதலே போற்றி
######
ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்திரீ
(மகிழ்வான வாழ்விற்கு)
”ஒம் த்ரிமூர்த்தி ரூபாய வித்மஹே
அனசூயா புத்ராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்”
(மும்மூர்த்தியரின் திருவடிவே,
முனிபத்னி அனுசூயாவின் புத்திரனே,
வழமுடன்வாழ அருள்வாய்.)
######
ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனர் காயத்ரீ
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
அரன் முதன்மகனே போற்றி
ஆனைமா முகனே போற்றி
ஆதாரப் பொருளே போற்றி
ஆனந்த வடிவே போற்றி
######
ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனர் காயத்ரீ
(காணாமல் போன பொருள் கிடைத்திட)
”ஓம் கார்த்தவீர்யாய வித்மஹே,
சகஸ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ அர்ஜுன ப்ரசோதயாத்”
(ஆயிரங்கை கொண்ட அரசனே, சேயுயிர்கள்
காத்தவனே, தவறியது கிட்டிட அருள்வாய்
கார்த்தவீர்யா போற்றி.)
######
ஓம்நமசிவய!
அறுமுகன் அண்ணா போற்றி
அமுதமே அனையாய் போற்றி
அரசடி அமர்வாய் போற்றி
அன்பர்கள் அகத்தாய் போற்றி
######
ஸ்ரீ ராகவேந்திரர் காயத்திரீ
(அருள் கிடைத்திட)
ஒம் பிரகலநாதாய வித்மஹே
வியாசராஜாய தீமஹி
தந்னோ ஸ்ரீ ராகவேந்த்ர ப்ரசோதயாத்!
(நரசிம்ம பக்தன் பிரகலாதன் வழி
வந்தவரே, வியாச அரசரே,
ராகவேந்திரரே அருள் புரிவாய்!)
######
ஓம்நமசிவய!
அகரமாய் எழுந்தாய் போற்றி
அறிவாக மலர்ந்தாய் போற்றி
அகிலத்தின் புகலே போற்றி
அறுகினை உவப்பாய் போற்றி
######
ஸ்ரீ நாகராஜன் காயத்ரீ
(சர்ப்ப தோஷங்கள் விலகிட, சந்தான பாக்யம் பெற)
”ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே,
நாகமணி சேகராய தீமஹி
தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத்”
(ஸர்பங்களின் அரசே, ஒளிமிகக் கொண்ட நாகமணியை
வைத்திருக்கும் நாகதேவனே, நலம் தந்து
குலம் காப்பாய் வலம் வந்து உனைப் பணிந்தேன்.)
######
ஓம்நமசிவய!
இச்சைகள் அளிப்பாய் போற்றி
இன்னல்கள் ஒழிப்பாய் போற்றி
இமயவர் தலைவா போற்றி
ஈசனார் மகனே போற்றி
######
ஸ்ரீ ஆஞ்சநேயர் காயத்திரீ
(சகல காரியங்களும் சித்தியாக)
”ஒம் அஞ்சனா ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்னோ ஹனுமன் ப்ரசோதயாத்”
(அஞ்சனையின் மைந்தனே, ஆஞ்சநேயனே,
அரும் காற்றின் மைந்தனே,
ராமதூதன் அனுமனே போற்றி.)
######
ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே
அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங்
கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல்
என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே
விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
######
ஸ்ரீ சுதர்சனமூர்த்தி காயத்திரீ
(விபத்துக்கள், எதிரிகளிடமிருந்து காப்பாற்ற)
”ஒம் சக்ர ராஜாய வித்மஹே
சகஸ்வர ஜ்வாலாய தீமஹி
தந்னோ சக்ர ப்ரசோதயாத்”
(விஷ்ணுவின் கரங்களில் சுழலும் சக்கரமே,
கவலைகளின் இருளை நீக்கும் கனலே,
பகை அச்சம் தீர்ப்பாய் சுதர்சனா போற்றி..)
######
ஓம்நமசிவய!
நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.
######
ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரீ
(பயம், அச்சம் நீங்க)
”ஓம் ஸ்ஹஸ்ர சீர்ஷாய வித்மஹே,
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ சேஷ ப்ரசோதயாத்”
(1000 தலை கொண்ட நல்ல அரவே, பரந்தாமன்
பள்ளி கொள்ள பாயான பாம்பரசே வரம்தா
பயம் நீங்க அருள்வாய் உன்னருளே.)
######
More...
ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப்
பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச
வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக்
கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச்
சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
######
ஸ்ரீ மன்மதன் காயத்திரீ
(மனவிருப்பப்படி மணமாலை அமைய)
”ஒம் புஷ்ப ஹஸ்தாய வித்மஹே
ரதிதேவி நாதாய தீமஹி
தந்னோ அனங்க ப்ரசோதயாத்”
(ஐந்து மலர் கனைகள் கொண்டவனே, ரதிதேவி
நாயகனே, மதி அழகுடன் விதி மீறா திறன் கொண்ட
அனங்க ரூப மன்மதனே போற்றி.)
######
ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத்
திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்
வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை
யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி
வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.
######
ஸ்ரீ ப்ரம்மா காயத்திரீ
(விதிகளின் பாதிப்பு குறைந்திட)
”ஒம் கமலாசனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்னோ ப்ரம்ம ப்ரசோதயாத்”
(வேதங்களின் நாயகனே, பேதமில்லா
பெருங்கருணையே, வேதம் ஓதுபவரின் உளம்
வாழ் பிரம்மனே போற்றி.)
######
ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப்
போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
######
ஸ்ரீ லட்சுமி குபேரர் காயத்திரீ
(செல்வ வளம் பெருக)
”ஒம் யகேஷசாய ச வித்மஹே
வைஷ்ரவனாய தீமஹி
தந்னோ ஸ்ரீத ப்ரசோதயாத்”
(யாகம் செய்து சிறப்பு பெற்றவனே, வளமளிக்கும்
மகேசன் தோழா செல்வ வளம்
அருளவாய் குபேரா போற்றி.)
”ஒம் மகேஸ்வரப் ப்ரியாய வித்மஹே
வைஷ்ரவணாய தீமஹி
தந்னோ குபேர ப்ரசோதயாத்”
(மகேஸ்வரருக்குப் பிரியமானவரே, சங்க நிதி,
பத்ம நிதி அடைந்த குணநிதியே, உன் மகத்துவத்தினால்
நிறைவான தனம் பெருகச் செய்வாய் குபேரா போற்றி.)
######
ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
######
இறை வாகன காயத்திரி மந்திரங்கள்!
(மயில், நந்தி, கருடன்,)
######
ஸ்ரீ மயில் காயத்ரீ
(விஷக்கடி ஆபத்துகள் நீங்க)
”ஒம் மயூராய வித்மஹே
சுக்ல பாதாய தீமஹி
தன்னோ சிகி ப்ரசோதயாத்”
(வடிவேலன் வாகனமான மயிலே,
பணிந்திட்டேன், விஷக்கடியிலிருந்து என்னைக்
காப்பாய் மயிலே சரணம்.)
######
ஸ்ரீ நந்தி காயத்திரீ
(சிவ கடாட்சம் பெற)
ஒம் தத் புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்னோ நந்தி ப்ரசோதயாத்!
(தேவ புருஷனே, ஒரே எண்ணம்
கொண்ட சிவ பக்தனே, சிவ கடாட்சம்
பெற்றவரே, நந்தி தேவரே அருள்புரிவாய்!)
######
ஸ்ரீ கருடன் காயத்ரீ
(மரண பயம் நீங்க)
”ஓம் பட்சி ராஜாய வித்மஹே,
விஷ்ணு வாகனாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்”
(பட்சிகளின் அரசே, பெருமாளின் வாகனமாய்
இருக்கும் கருடபகவானே, உள்ளத்தில் காலன் பயம்
ஒழித்து கள்ளமிலா பக்தர் தமை காத்திடுவாய்.)
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.