இடைக்காட்டு சித்தர்
தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஊரில் பிறந்தார். ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்து வந்தார் இடைக்காடர். அவைகளை மேய விட்டு சிந்தனைவயப்பட்டு மரத்தடியில் அமர்ந்து அமைதியாய் இருப்பார். ஒருநாள் இவ்வாறு அமர்ந்திருக்கையில் வான்வழி சென்ற சித்தர் ஒருவர் கீழிறங்கி நீர் என்ன சிந்தித்துக் கொண்டிருந்தாய் என வினவினார்.
சுயநினைவிற்கு வந்தவர் அவருக்கு பால் கொடுத்து தாகம் தீர்க்க, மனம் மகிழ்ந்த சித்தர் இவருக்கு வைத்தியம், சோதிடம் ஞானம், யோகம் முதலியன உபதேசித்து மறைந்தார். அன்று முதல் இடைக்காட்டுச் சித்தர் ஆனார். அந்த திறமைகளால் பன்னிரண்டு ஆண்டுகளுக்குபின் ஏற்படும் பஞ்சத்தை அறிந்தார்.
முன்னெச்சரிக்கையாக எக்காலும் கிடைக்கும் எருக்க இலைகளைத் திண்ண ஆடு மாடுகளுக்கு பழக்கினார். கெடாமல் இருக்கக்கூடிய குருவரகு தானியத்தை சேற்றோடு கலந்து குடிசைக்கு சுவர் எழுப்பினார். எதிர்பார்த்தபடி பஞ்சம் வந்தது. புல்பூண்டுகளும் அழிந்தன. எருக்க இலைகளைத் தின்றதால் ஏற்படும் அரிப்பை போக்க ஆடுகள்சுவரில் உடம்பைத் தேய்க்கும்போது சுவரிலிருந்து உதிரும் குருவரகை ஆட்டுப்பாலில் காய்ச்சி உண்டு உயிர் வாழ்ந்தார். பஞ்சத்தால் உயிர்களெல்லாம் அழிய இடைக்காடரும் அவருடைய ஆடுகளும் உயுருடன் இருப்பதைக் கண்ட நவகிரகங்கள் இவரைப் பார்க்க வந்தனர்.
அவர்களை வரவேற்று வரகு சாதத்தையும் ஆட்டுப்பாலையும் கொடுத்தார். பாலில் சமைத்த உணவை உண்டு அவர்கள் அப்படியே உறங்கி விட்டனர். நவகிரகங்கள் மயங்கி படுத்திருப்பதைக் கண்ட இடைக்காடர் தன் சோதிட அறிவிற்கேற்றவாறு மழை வருவதற்கான முறையில் கிரகங்களை இடம் மாற்றிப் படுக்கவைத்தார். கிரக நிலைகள் மாறியதால் வானம் இருண்டு மழை பொழியத்தொடங்கியது. பூமி குளிர்ந்தது. ஆறுகளும் ஏரிகளும் நிறைந்தன.
மழையின் குழுமை நவகிரங்களை எழுப்பியது. நாட்டின் பஞ்சத்தைப் போக்கிய சித்தரின் திறமையை பாராட்டினார்கள். மேலும் வரங்கள் கொடுத்து அவரை ஆசிர்வதித்தனர். பல ஆண்டுகள் வாழ்ந்து திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.
வருடாதி, மருத்துவ, தத்துவப் பாடல்கள், ஞானசூத்திரம் 70 ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
இடைக்காட்டுச் சித்தர் தியானப்பூசைக்கு
“ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து அபலைகளுக்
அருளிய கோணார்பெருமானே ஓடுகின்ற கிரகங்களை கோடு
போட்டு படுக்கவைத்த பரந்தாமனின் அவதாரமே, மண்சிறக்க
விண்சிறக்க கடைகண் திறந்து காப்பீர் இடைக்காடர் சுவாமியே”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் ஸ்ரீஇடைக்காடர் சித்தர் திரு உருவப் படத்தை வைத்து குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து தென்னம் பூ மற்றும் மல்லிகை மலர்களாலும் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அங்குசம், அபயவரம் உடையவரே போற்றி
இளநீர் பிரியரே போற்றி
ஒளிமயமானவரே போற்றி
கருவைக் காப்பவரே போற்றி
கருணா மூர்த்தியே போற்றி
கால்நடைகளைக் காப்பவரே போற்றி
கிருஷ்ணணை தரிசிப்பவரே போற்றி
தேவலீலைப் பிரியரே போற்றி
பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி
பூலோகச் சூரியனே போற்றி
ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்ரி
ஸ்ரீ லட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி போற்றி.
நிவேதனமாக பழங்கள், பால், வடிகட்டிய இளநீர் இவற்றுடன் பச்சை வஸ்திரம் வைத்து புதன்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
புதன் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் புதன் பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி பலன் ஏற்படும். சரியாக படிக்கமுடியாத கல்வித்தடைகள் அகலும். வியாபாரத்தில் ஈடுபட்டோருக்குள்ள பிரச்சனைகளைச் சமாளிப்பர். கற்பனைத்திறன் கூடி கவித்திறம் பெறுவர். அரசாங்க வரிப் பிரச்சனைகள் சுமுகமாகத்தீரும். புத்திசாலித்தனம் அதிகமாகும். பிள்ளைவரம் கிட்டும். தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.
“ஓம் ஸ்ரீம் எல்லாம் வல்ல ஸ்ரீ இடைக்காட்டுச் சித்த சுவாமியே போற்றி”
******
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்
அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்