ஓம்நமசிவய!
பாதாள விநாயகா போற்றி!
பார்வதி மைந்தா போற்றி!
பாலசந்திர விநாயகா போற்றி
பால விநாயகா போற்றி
வீரபத்திரர்!
காசிபர் முனிவருக்கு திதி, அதிதி மூலம் பிறந்தவர்கள் தேவர்கள் மற்றும் அசுரர்கள். இருதரப்பினரும் சகோதர்களாக இல்லாமல் தீராப்பகைக் கொண்டு போர் புரிந்து வந்தனர். இந்திரன் அசுரர்களை வெற்றி கொண்டு போரில் புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அசுரர்களின் குரு சுக்கிராச்சாரியார் வீரமார்த்தாண்டன் என்ற அசுரனே தேவர்களை வெல்லக் கூடியவன் என்று அவனை அழைத்து பிரமதேவனை நோக்கித் தவமிருக்கச் செய்தார். வீரமார்த்தாண்டன் தவமிருந்து மூன்று உலகங்களிலும் தன்னை வெல்ல யாருமில்லாதபடி அரசாள வரம் வேண்டிப் பெற்றான்.
வரம் பெற்றதும் அகந்தை கொண்டு தேவர்கள் மீது போர்தொடுத்து வெற்றி பெற்று இந்திரனை துரத்திவிட்டு தேவருலகத்தை தானே ஆட்சி செய்தான். தேவமாதர்கள், எண்திசைக் காவலர்கள் ஆகியோரைத் துன்புறுத்தி, பசுக்களைக் கொன்று, முனிவர்கள் செய்யும் வேள்விகளைச் சிதைத்தான். தேவர்கள் வீரமர்த்தாண்டனை எப்படி ஒழிப்பது என ஆலோசனை நடத்த, அதை அறிந்த வீரமார்த்தாண்டன் அவர்களைக் கொல்லத் துரத்தினான். அவர்கள் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தார்கள்.
பெருமான் வீரபத்திரரை அழைத்து வீரமார்த்தாண்டனை அழிக்க கட்டளையிட வீரபத்திரர் படையுடன் சென்று அவனை கொன்றார். இந்திராதி தேவர்களை மீண்டும் பதவியில் அமர்த்தினார். அசுரர்களால் தேவர்களுக்கு ஏற்பட்ட துயரங்களைத் தீர்த்து அசுரர் தலைவன் வீரமார்த்தாண்டனை அழிப்பதற்கு சிவன் அம்சமாக உருவானவர்- வீரபத்திர மூர்ர்த்தி..
#####