ஓம்நமசிவய!
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!
$$$$$
கேது!
ஸ்வர்னபானு -பாற்கடலில் கிடைத்த எல்லாவற்றையும் தேவர்களே பெறுவது கண்ட அசுரர்கள் தகராறு செய்ய ஆரம்பிக்க பிரம்மா நீங்கள் அமிர்தம் பெற்றுக் கொள்வீர்களாக என்றார். அதன் படி அமுதம் முழுவதும் தங்களுக்கே வேண்டும் என்று அசுரர்கள் தகராறு செய்ய தேவேந்திரன் அமுதத்தை எப்படியும் தேவர்கள் வசம் சேர்க்க எண்ணம் கொண்டு திருமால் உதவியை நாட அவர் மோகினியாகி அனைவரையும் தன் அழகால் கட்டுப்படுத்தி அசுரர்களை நீராடி வரச்சொல்லிவிட்டு இடைப்பட்ட நேரத்தில் அமுதத்தை தேவர்களுக்கு வழங்கும்போது நிகழ்வை அறிந்த அசுரன் ஸ்வர்னபானு தேவன்போல் உருமாறி அமுதம்பெற்று அருந்திவிட்டதைக் கண்டுபிடித்த சூரியன், சந்திரர் திருமாலிடம் கூற தன் கையில் இருந்த கரண்டியால் அந்த அசுரனின் தலையை துண்டிக்க, அமிர்தம் அருந்தியதால் ஸ்வர்பானுவின் உயிர் போகாமல் இருக்க தலையை பைடினஸன் தம்பதியினரும் உடலை மினி என்ற அந்தனரும் இருவேறு இடத்தில் இருவராலும் வளர்க்கப்பட்டு பின் அவர்கள் விஷ்ணுவை வழிபட்டு வேண்டி பாம்பு உடல் பெற்று ராகு எனவும் பாம்புத் தலை பெற்று கேது எனவும் கிரக பதவிதனை திருமாலால் அடைந்தனர்.
ராகு கேது இரண்டும் ஒரே உருவாக இருந்த அசுரனின் இருகூறான உடல் பகுதிகள் என்பதால் இரண்டில் எந்த அமைப்பு சரியாக இல்லாவிட்டாலும் அதை சர்ப்ப தோஷம் என்றே சொல்லப்படும். இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று ஏழம் இடமான சமசப்த ஸ்தானம் என்ற அமைப்பிலேயே இருக்கும். ராகுவிற்கும் கேதுவிற்குமிடையே மற்ற கிரகங்கள் கடிகாரச் சுற்றிற்கு எதிர் சுற்றிலிருந்தால் அதை காலசர்ப்ப தோஷம் என்பர். ராகுவும் கேதுவும் சாயா-நிழல் கிரகங்கள். நேரடியான தாக்கமின்றி மற்ற கிரகங்களின் தாக்கத்தை இந்த கிரகங்களின் அமைப்பு அதிகரிக்கச் செய்யும். கேது மனைவி -சித்ரலேகா.கேதுவின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-மா மரம்
கௌரவக் குறைபாடு, தொழிலில் நஷ்டங்கள், ஞாபக சக்தி குறைபாடு, வீண்பழி, மனவருத்தம், பிற மொழியினரால் பிரச்சனை, கல்வி, கலையில் நாட்டம் குறைதல், ஆன்மீகத்தில் வெறுப்பு, செல்வாக்கு குறைதல் ஆகியவற்றிற்கு கேது தோஷம் காரணம். விநாயகர் வழிபாடு -பிள்ளயார்பட்டி, கீழ்பெரும்பள்ளம், காளஹஸ்தி பரிகாரத்தலம்.
கிரகத்தின் பெயர்: கேது
உரிய மலர்: செவ்வல்லி
உரிய மரம்: மா மரம்.
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
ரத்தினம்: வைடூரியம்
கிழமை: ஞாயிற்றுக் கிழமை
திசை: வடமேற்கு
உலோகம்: கருங்கல்
நிறம்: சிகப்பு
சமித்து: தர்ப்பை
வழிபடும் பலன்கள்: தரித்திரம், வியாதிகள், பீடைகள் நிவர்த்தி.
நவகிரக கேது பகவான் காயத்திரீ-(ஞானமும் வீடு பேறும் அடைய)
”ஓம் அச்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுவே பிரசோதயாத்”
(பரியினைக் கொடியில் கொண்ட கேதுவே கீர்த்தித் திருவே. பாபம் தீர்ப்பாய். வாதம் வம்பு வழக்குகளின்றி ரக்ஷிப்பாய் கேதுவே சரணம்.)
#####