gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 11:55

காட்சி அருள்!-இரண்டு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அறிவின் வரம்பை அகன்றாய் போற்றி!
குறிகுணங் கடந்த குன்றே போற்றி!
எட்டு வான் குணத்தெந்தாய் போற்றி!
கட்டறு களிற்று முகத்தோய் போற்றி!
மலரில் மணமாய் வளர்ந்தாய் போற்றி!
அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி! போற்றி!

காட்சி அருள்!-இரண்டு!

1.முன்பே ஒரு மார்க்கண்டேயன்! சுவேதன்!

சுவேதன் என்பான் தான் வாழப்போகும் காலம் குறுகியது எனப் புரிந்து எதிலும் பற்று பாசங்களைத் துறந்து பரம யோகியாக வாழ்ந்து வந்தாதால் அவனுக்கு ஞானமார்க்க வழி திறந்தது. தன் இல்லத்தில் சிவனுக்கு என சிறு சந்நதி அமைத்து சிவலிங்கப்பிரதிஷ்டை செய்தான். தினமும் நீராடி ஜபதபங்கள் முடித்து சிவ பூஜையில் ஈடுபட்டு அபிஷேக ஆராதனை செய்து அர்ச்சித்து வந்தான். உகந்த விரதங்களையும் அனுஷ்டிப்பான். பரமேஷ்வரனின் பஞ்சாட்சர மந்திரங்களை விடாமல் ஜெபித்து எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம் என்றிருந்தான்.
உரிய காலத்தில் சுவேதன் உயிரைப் பறிக்க தன்னுடைய செயல்களைத் தவறாமல் செய்யும் தர்மராஜனான எமதர்மன் பூலோகம் வந்தான். சுவேதன் ஈசனின் திருச்சந்நதியில் அமர்ந்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிக்கொண்டிருக்க எமன் வந்ததை அறிந்து சிறிதும் அச்சப்படாமல், தர்மராஜனே ஈசனின் தாளை வணங்கித் துதித்துச் சரணடைந்தோருக்கு மிருத்யுபயமோ துன்பமோ ஏற்படலாமா என்றான்.
பயமின்றி பேசும் சுவேதன் மீது தன் பாசக்கயிறை வீச, சுவேதன் பரமேஸ்வரா என்னைக் காப்பாய் எனக்கூறி லிங்கத்தை கட்டிக்கொண்டான். தன்னை இரு கரங்களாலும் அணைத்துக் கொண்டு கதறிய சுவேதனின் பாசக்குரலுக்கு கட்டுப்பட்டு யமனின் பாசக்கயிறிலிருந்து காப்பாற்ற ரிஷபரூடராய்காட்சி அருள். காலம் தாழ்த்தினால் கடமை தவறியவனாவேன். அதனால்தான் தங்கள் பக்தன் என்று அறிந்தும் பாசத்தை வீசினேன் என்னை மன்னித்து அருளவேண்டும் என யமன் வேண்ட ஈசன் அருள்.

2.அடியாருக்கு அபசாரம்!

தர்மசிவன் என்பவர் வேளாளர்- மிகுந்த செல்வந்தர்- சிறந்த சிவபக்தியுடையவர்- அக்னீஸ்வரர் திருவிளையாடலால் அவரின் செல்வங்கள் எல்லாம் அடியார்களுக்கு செலவழித்து முற்றிலுமாக தீர்ந்தன. வீட்டில் பயிராகும் சுரைக்காயை விற்று அதனால் கிடைக்கும் காசை வைத்து அடியவர்களை கவனித்துவந்தார்.
ஒரு சுரையை மட்டும் விதைக்கு என விட்டு வைத்திருந்தார். அவர் வெளியில் சென்றிருந்தபோது அடியார் ஒருவர் வந்தார். அவர் வீட்டிலிருந்த சுரையைப் பார்த்து இது மிகவும் சுவையாக இருக்கும் போலிருக்கின்றதே என்றார். அவர் மனைவி கணவர் வரும் வரை அடியவரை எப்படி பசியுடம் இருக்கவைப்பது என்பதால் அரை சுரைக்காயை அறுத்து அவருக்கு உணவு பரிமாற ஏற்பாடு செய்தாள். அப்போது அங்கே வந்த தர்ம சிவன் அடியார் விரும்பிய சுரையை முழுவதும் பயன்படுத்தாமல் அரை சுரைக்காயை அறிந்து அபசாரம் செய்து விட்டாய் எனக்கூறி அவர் கையை வெட்ட வந்தபோது ஒரு கரம் வான் வெளியில் தோன்றி தடுத்தது. ஈசன் உமையுடன் தோன்றி அருள். எனவே இன்றும் நெய்வேத்தியத்துடன் சுரைக்காய் உபயோகம். --அக்னீஸ்வரர்.—கஞ்சனூர்

#####

Read 18891 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:44
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26952416
All
26952416
Your IP: 23.20.51.162
2024-03-29 19:49

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg