ஓம்நமசிவய!
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!
$$$$$
புதன்!
சந்திரன் செய்த யாகத்திற்கு பிரகஸ்பதி தன் மனைவி தாராவை அனுப்பிவைத்தார். யாகத்தின் போது சந்திரனின் தேஜஸைக் கண்ட தாரா அவனுடன் இருந்து விட்டாள். சந்திரனும் அவள் விருப்பிற்கு உடந்தையானான்.. பிரம்மா சந்திரன், தாராவுடன் பேசி தாராவை பிரகஸ்பதியிடம் சேர்க்கும்போது தாரா கருவுற்றிருக்க பிரகஸ்பதி அந்த கருவை விட்டுவரச் சொல்ல தாரா அக்கருவை ஒரு மரத்தடியில் விட்டுச் சென்றாள். அந்தக் கரு வளர்ந்து சந்திரனைப் போல அழகுடன் விளங்க அதற்கு புதன் என்று பெயரிடப்பட்டு தவம் செய்து கிரகங்களுள் ஒன்றாக பதவி பெற்றான்.
குருவின் அருளால் கோடி கிடைத்தாலும் அதனை அனுபவிக்க புதனின் அருள் தேவை. கல்வி, கலை என அனைதையும் கற்ற அறிவாளி அதை முறையாகப் பயன்படுத்த புத்திசாலித்தனம் தருபவர் புதன். சந்திரனின் மகன் ஆவார். புதன் மனைவி -ஞானசக்தி, புதனின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-ஆல மரம்
மனநிம்மதியின்மை, தீர்க்க முடிவு எடுப்பதில் குழப்பம், சேமிப்பதில் ஆர்வமில்லாமை, பணத்துடன் செலவும் வருதல், மற்றவர்களிடம் பேசுவதில் தயக்கம், தன்னம்பிக்கை இல்லாதிருத்தல், போதுவான பயம், தயக்கம் ஆகியன இருத்தலுக்கு புதனின் அமைப்பே காரணமாகும். புதனின் அமைப்பினால் ஏற்படும் தன்மைகளை குறைக்க பெருமாள் வழிபாடு சிறந்தது. திருப்பதி மற்றும். புதன் வணங்கிய திருவெண்காடு தலம் சிறப்பு.
கிரகத்தின் பெயர்: புதன்
உரிய மலர்: வெண்காந்தான்
உரிய மரம்: ஆலமரம்
தானியம்: பச்சைப் பயறு
வாகனம்: குதிரை
ரத்தினம்: மரகதம்
கிழமை: புதன் கிழமை
திசை: வடகிழக்கு
உலோகம்: பித்தளை
நிறம்: பச்சை
சமித்து: நாயுருவி
வழிபடும் பலன்கள்: சகல சாஸ்திர ஞானம்
நவகிரக புதன் பகவான் காயத்திரீ-(ஞாபக சக்தி அதிகரித்து படிப்பில் உயர்வு அடைய)
”ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத பிரசோதயாத்”
(இதமுற வாழ இன்னல்கள் நீக்கி சுகம் தரும் புதபகவானே, யானையை கொடியில் கொண்டவனே பதம் தந்தருளவாய் உதவி அருளும் உத்தமனே.)
$$$$$