ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
####
பலராம அவதாரம்!
விஷ்ணுவும் ஆதிசேஷனும் ஒரே சமயத்தில் அண்ணனாகவும் தம்பியாகவும் பிறப்பு எடுத்தது.
பாரத போரில் எந்தப் பக்கமும் சேரமுடியாத தர்மசங்கடமான நிலையில் போர் நடைபெறும்போது பலராமர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். நைமிசரண்யம் சென்ற போது சூதமுனிவரைத்தவிர மற்றவர் மரியாதை செலுத்த சூதமுனிமேல் கோபங்கொண்ட பலராமர் ஓர் தர்ப்பையை எடுத்து மந்திரித்து ஏவ அது சூதரைக் கொல்ல, பலராமரால் கொல்லப் பட்டதால் சூதர் பிரம்மலோகம் சென்றார். பலராமரை பிரமஹத்தி தோஷம் பற்ற மானிட பிறப்பு எடுத்த அனைவரும் உலக நியதிக்கு கட்டுப் பட்டவர் என்பதற்காக தமது தோஷ பரிகாரத்திற்கு பன்னிரண்டு ஆண்டுகள் தீர்த்த யாத்திரை தொடர்ந்தார்.
இந்த பலராமர் தரிசனம் –குளிகன் தோஷம் நீக்கும். பெரும்பாலான திருத்தலங்களில் தசாவதாரச் சன்னதிகளில்.
#####