Print this page
திங்கட்கிழமை, 07 May 2018 03:16

தை மாத விரதங்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

&&&&&

தை மாத விரதங்கள்!

தை பௌர்ணமி- தைமாதம் புஷ்பராக லிங்கம் வழிபாடு சிறப்பு பூரண உபவாசம் இருந்து தான தர்மங்கள் செய்து சிவ பூஜை செய்தல்.

தைமாத அஷ்டமி-சர்வானி-சம்பு(எ)ருத்திரன்- வணங்கினால் யாகபலன்.       

தைப்பூச விரதம்- பாரம்பரிய பழக்கம் உள்ளவர்கள் மார்கழிமாதம் முதல் நாள் குளித்து பூஜை செய்து மாலை அணிந்து கொள்ளல் வேண்டும். பின் தினமும் காலையும் மாலையும் குளித்து முருகனை பாடல்களால் துதிக்க வேண்டும். அருகில் உள்ள முருகன் கோவிலுக்கோ அல்லது சன்னதிக்கோ சென்று வழிபடவும். தைப்பூசத்தன்று பாத யாத்திரையாக முருகன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். தை பூசத்தன்ரு மட்டும் விரதம் இருந்து வழிபட்டும் விரத்த்தை முடித்துக் கொள்ளலாம்.

இறைவனும் இறைவியும் தங்களது தலையில் சூடிய பிறைகள் அவர்கள் ஐக்கியமாகும்போது ஒன்று சேர்ந்து முழு நிலவாகத் தோன்றும். அப்படித் தோன்றிய ஒருநாள் தைப்பூசம்.

சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் தோன்றுவதால் இருவரும் சமபலத்துடன் இருக்கும்நாள் தைப்பூசம். ஈசனின் வலதுபுற விழி சூரியன், அன்னையின் இடதுபுற நயன விழி சந்திரன் இரண்டும் நேர் கோட்டில் இருப்பது சிவசக்தி ஐக்கியத்தைக் குறிக்கும். சிவனும் சக்தியும் சமபலத்துடன் இருக்கும் நாள் தைப்பூசம்

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமிவரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியது. இதன்படி பன்னிரண்டு நவராத்திரிகள் உண்டு. என்றாலும் அவற்றில் முக்கியமானது நான்கு மட்டுமே கொண்டாடப்படுகிறது.
1.ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரி.
2 புரட்டாசி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி.
3. தை மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சியமளா நவராத்திரி.
4. பங்குனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி..

தை அமாவாசை- நிம்மதியான குறையிலா வாழ்வு பெற மக்கள் நீத்தோர் நினைவு செய்தல் அவசியம். இறந்த முன்னோர்களுக்கு நீரும் எள்ளும் விடுத்து செய்யும் பித்ரு வழிபாட்டை தை அமாவாசையன்று நீர் நிலைகளில் நீராடி அதன் கரைகளில் அமர்ந்து செய்வித்தால் குடும்ப ஒற்றுமை நீடித்து குழந்தைகளுக்கு நல்ல படிப்பும், பண்பும் வளரும்.

தேவர்களின் பகல் பொழுது தொடக்கமான உத்ராயணாயன காலத்தின் ஆரம்ப மாதமான தைமாத அமாவாசை பிதுர்களின் வழிபாட்டிற்கு சிறந்த நாளாகும். நம்மைவிட்டுப் பிரிந்த முன்னோர்கள்- பிதுர் தேவர்களை நினைத்து நாம் சிரத்தையுடன் வழிபாடு செய்வதால் அது சிரார்த்தம் எனப்படும். அவரவர் வழக்கப்படி சிரார்த்தம், திவசம், படையல் என வழிபடலாம். இந்த வழிபாட்டினால் பூர்வ தோஷங்கள், முன்னோர் சாபங்கள் போன்றவை நீங்கி புண்ணியம் கிடைக்கும். திருமணப்பேறு குழந்தைகள்பேறு ஆகியவையும் கிட்டும். நாம் எள்ளும் தண்ணீர் விட்டு அர்க்கியம் செய்வது போன்றவைகளையும் இஷ்ட தெய்வங்களுக்குச் செய்யும் பூஜைகள் வழிபாடுகள், ஆராதனை உற்சவம் எல்லாம் நம்மிடமிருந்து பெற்று நம் பிதுர்களுக்கும் அந்தந்த தேவதைகளுக்கும் சேர்க்கும் பொறுப்பு சூரியபகவானைச் சேர்ந்தது. அதனால்தான் முன்னோர்களை வழிபட்டபின் முழங்கால் அளவு நீரில் சூரியன் இருக்கும் திசை நோக்கி நின்று மூன்று முறை நீரை இரு கைகளினாலும் எடுத்து விடுகின்றோம். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம் குலதெய்வம் தனக்கு முன்னுள்ள மூன்று தலைமுறை தந்தை பெயர்களைக் கூற வேண்டும். பின் வீட்டில் முன்னோரின் படம் இருந்தால் தெற்கு முகமாக வைத்து அவர்கள் உபயோகித்த பொருட்களை வைத்து வழிபடவேண்டும். அவர்கள் விரும்பியவற்றை சமைத்து / வைத்து இலையில் பரிமாறி படைத்து ஆரத்தி காட்டி வழிபட்டு காக்கைக்கு வைத்துவிட்டு உண்ணவேண்டும். இதற்குத்தான் தென்புலத்தார் வழிபாடு எனப்பெயர்.

இருவேறு தன்மைகள் கொண்ட சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணையும் நாள் அமாவாசை. இந்த நாளில் எந்த ஒரு கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை. மற்ற எல்லா திதிகளிலும் ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் பெற்றிருக்கும். அமாவாசைய்னறு எந்த கிரகமும் தோஷம் அடைவதில்லை. அமாவாசை, பௌர்ணமி என்ற இரு நாட்களும் விரத நாட்களாக கருதப்படுவது இதனால்தான். அமாவாசையன்று தந்தை மற்றும் தாயை இழந்தவர்கள் வழிபாடு செய்யும் முறை பிதுர் தர்ப்பணம் / சிரார்த்தம் ஆகும். ”பித்ரு தேவதா நமஹ, மாத்ரு தேவதா நமஹ” என வேதங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரதசப்தமி விரதம்

தை அமாவாசிக்குப்பின் சுக்லபட்ச சப்தமி அன்று வரும் ரதசப்தமி விரதம் சூரியனுக்கு மிகவும் பிரியமானது. ஒளி ஆயுள், ஆரோக்கியம், புகழ் ஐஸ்வர்யம் அனைத்தையும் அளித்து, நல்ல விளைச்சலால் செல்வமும் மகிழ்ச்சியும் இல்லங்களில் மிகுந்திருப்பதால் அது நீடித்து இருக்க சூரிய கடவுளுக்கு நன்றி கூறி விரதமிருந்து தான தருமங்கள் ஆலயவழிபாடு செய்து வழிபடும் நாள் ரதசப்தமி. சூரியன் ஒளிப்பிளம்பாய் ஏழு குதிரைகள் கொண்ட தேரில் வலம் வருவதால் திதிகளில் ஏழாவதுநாள் சப்தமி திதி வரும்.

அன்று சூரிய உதயத்திற்குமுன் எழுந்து காலைக் கடன்களை முடித்தபின் ஆண்கள் எருக்கன் இலைகள் ஏழை எடுத்து அதனுடன் சிறிது அட்சதை-பச்சரிசி விபூதி இரண்டையும் வைத்து ஒன்றின்மேல் ஒன்றாக ஏழையும் வைத்து கிழக்கு நோக்கி நின்று சூரியனை வழிபட்டு நதி, குளம், ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளில் நீராட வேண்டும். பெண்கள் அட்சதையுடன் மஞ்சள் பொடி சேர்த்துக் கொள்வது சிறப்பு. அன்று ஆதித்தியஹ்ருதயம் அல்லது சூர்ய காயத்ரி செல்வது நல்லது. (தமிழில்-ஏழு ஜென்மங்களில் என்ன பாவம் செய்திருந்தாலும் அதனால் ஏற்பட்ட கர்ம தாக்கங்களை இந்த ரதசப்தமி ஸ்நானம் போக்கி அருள வேண்டும் எனச் சொல்லி நீராடல் சிறப்பு.) அன்று சூர்ய உதயம் காண்பது நல்லது. வீட்டில் வாசலில் பூஜை அறையில் சூரியன் தேர் போன்று கோலமிடலாம். சக்திக்கேற்ற அன்னதானம் செய்யவும்,

&&&&&

Read 4089 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 17 March 2019 20:11
Login to post comments