நீங்களும் உதவி செய்யலாம்…
ஜாதி, மத, மொழி, இன வேறுபாடின்றி அகில உலக மனித சமுதாயத்திற்கும் பயன் தரக்கூடிய வகையில் சிறப்புற செயல்படுவது என்ற நிலைப்பாடுகளை கொண்ட இந்த நவபழனிகோ அறக்கட்டளையில், ஆரோக்கிய வாழ்வு வாழ தேக, மன, யோக, முத்திரைப் பயிற்சிகள் கற்று இறுக்கம் மற்றும் அழுத்தம் இல்லா “சீரான வாழ்வு” முறைக்கு ஆன்மாக்களுக்கு உதவிடவும், கால நிறைவில் ஆகம முறைப்படி உயர்ந்த, சிறந்த, மேலான நிறைந்த அதிர்வுகளுடன் கூடிய ஒப்பில்லாத நவீன, உலகின் முதன்மையான "மூலிகைவனநாதர்" மற்றும் “சிவநாராயணர்" கோவிலுடன் அதிர்வுகளுடன் கூடிய தியானக்கூடம் அமைத்து ஆன்மாக்களுக்கு முக்தி, ஜீவன்முக்தி அடைய உதவி புரியவும், தூய மாசில்லா காற்று எல்லா உயிர்களுக்கும் கிடைக்க ஏதுவாக “மூலிகைக் காற்று வனம்” அமைக்கவும், இந்த சீரிய நோக்கங்களை நல்ல மனிதநேயம் கொண்ட உங்களின் உதவியுடன் வென்றிட உங்களால் முடிந்த உதவிகளை மனத்தாலோ, செயலினாலோ, பெருளினாலோ மனமுவந்து அளித்து எங்களுக்கு ஆதரவு தந்து மனிதநேயப் பணி செய்திட ஊக்கப்படுத்திடுங்கள். என்றோ நம்முன்னோர்கள் வென்ற பலவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம், நம் வருங்கால சந்ததியினருக்கு உதவிட நம்மால் முடிந்த நல்லவைகளைச் செய்து முடிப்போம். எழுத்து மற்றும் கருத்துச் சுதந்திரம் பெற்ற நீங்கள் உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளவளர்ச்சிக்கு உறுதுணையாக உங்கள் செயல்பாடுகள் திகழவும் வாருங்கள், இந்த அறக்கட்டளையுடன் இனைந்து செயலாக்கம் கொள்ளுங்கள் என அன்புடன் அழைக்கும்—குருஸ்ரீ பகோரா (படிக்க: “மூலிகைக் காற்று வனம்” அமைப்பு வரைமுறை)