ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#*#*#*#*#
சாலைகள்!
சாலை பொதுவாக ஒர் இடத்தையும் மற்றொரு இடத்தையும் இணைக்க ஏற்படுத்தப்பட்டது. ஒற்றையடிப்பாதை, இருசக்ர வாகனங்கள் செல்லும் பாதையாகமாறி பின்னர் மாட்டு வாண்டிகள் கார் பயணிக்க மாற்றம் கொண்டு தற்போது பயணிகள் பேருந்து, சரக்கு வாகனங்கள் பெரிய எந்திரங்கள் ஆகியவற்றிற்காக பயன் படுத்தப்படுகின்றது.
நிறைய போக்குவரத்து உள்ள வழித்தடங்கள், பெரிய ஊர்களை இனைக்கும் சாலைகள் ஆகியன நெரிசல் காராணமாக இரு வழிப் பாதயாக மாறி தற்போது நான்கு வழிச்சாலை மற்றும் எட்டு வழிச்சாலையாக மாற்றம் கண்டு வருகின்றன. இவையெல்லாம் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு தங்கு தடையின்றி விரைந்து செல்லவும் மக்கள் நலன் கருதி ஏற்படுத்தப் பட்டுள்ளன.
அதனால் இந்த பெருவழிச் சாலைகளின் சட்ட திட்டங்களை மக்கள் அவசியம் புரிந்து கொண்டு செயல்படவேண்டும். மீறீனால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழக்கும் அபாயம் ஏற்படலாம். விபத்துக்கள் தவிர்க்கப் படுவதற்காக ஆங்காங்கே குறியீடுகளும், சாலையை கடக்க வழிமுறைகளையும் எற்படுத்தியுள்ளனர். இதை மீறி செயலாக்கம் கொண்டு விபத்துகளை சந்திக்க நேர்ந்தால் அதற்கு யாரும் பொறுப்பில்லை. வாகனங்களுக்கோ உயிருக்கோ பாதுகாப்பு பாலிசிகள் எடுத்திருந்தாலும் அது உதவாது. எனெனில் நீங்கள் சட்டத்தை மீறி தானாகே விபத்தைத் தேடி ஏற்படுத்திக் கொண்டீர்கள் என்பதால் எந்த பணமும் கிடைக்காது. ஆனால் மருத்துவ உதவி மட்டும் கிடைக்கும்.
சாலைகள் சீராக இருந்தால்தான் பயணம் நன்றாக இருக்கும் உடல் உபாதைகள் குறையும். சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தால் பயணம் செய்யும் மக்களுக்கு உடல் உபாதைகள் அதிகம். ஓர் இடத்தில் சாலை செப்பனிட்டு புதியதாக அமைத்தால் அடுத்த வாரத்திலேயே மின் அல்லது குடிநீர் அல்லது தொலைபேசி இவர்களில் ஏதாவது ஒரு நிர்வாகம் சார்பாக குழிபறித்து விட்டு அவர்கள் வேலை முடிந்ததும் அப்படியே மண்ணை நிரப்பிவிட்டு சென்று விடுகின்றனர்.
ஆனால் அவர்கள் அவ்வாறு குழி பறிப்பதற்கு அந்த சாலைக்குரிய நிர்வாகத்திடம் எழுத்துமூலம் எழுதிகேட்டு அனுமதி பெற்ற பின்னரே குழி தோண்ட வேண்டும் என்பது நியதி. அதன்படி அங்கு தோண்டப்பட்ட குழியை மூடி சமன் செய்து பழைய நிலையான தார் சாலையாக மாற்றுவது உள்பட விரிவான அறிக்கை தயரித்து அதற்காண பணத்தைக் கட்டச் சொல்லிய பின்னரே அனுமதி என்றாலும் ஒரு சில சமயம் அவசரம் காரணமாக சம்பந்தப்பட்ட துறையிடம் சொல்லிவிட்டு வேலை தொடங்குவதும் நடப்பதுண்டு. எப்படியிருப்பினும் அவர்கள் அதற்குரிய தொகையைச் செலுத்தி விடுகின்றனர். ஆனல் அந்த துறை அந்தச் சாலையை மீண்டும் சரியான முறையில் செப்பனிடாமல் அந்த சாலையைப் உபயோகப்படுத்தும் பயணிகளுக்கு தொடர்ந்து துன்பம் விளைவிக்கக்கூடியதாக வைத்து விடுகின்றனர். அவ்வாறு பல குழிகள் சேர்ந்தபின் முழுமையான சாலை அமைக்கும் போதுதான் அந்த மேடு பள்ளம் சரியாகின்றது.
முறைப்படி அனுமதி பெற்று தோண்டுவது ஒருபுறம் என்றால் அனுமதியில்லாமல் மக்கள் தங்கள் சுயநலம் கருதி பல இடங்களில் தோண்டி சாலையை மேடுபள்ளம் ஆக்கி விடுகின்றனர். போதுவாக சாலைகளை யாராயிருந்தாலும் எந்தப் பணிக்காக இருந்தாலும் உரிய உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதிபெற்று வேலை முடிந்த பின்னர் அவர்களே சரியான முறையில் சாலையை செப்பனிட வேண்டும் என்று கட்டாயம் இருக்க வேண்டும். வீட்டிற்குள் ஓரு வேலை செய்து விட்டு அதை சரிசெய்யாமல் அப்படியே விட்டு விடுவார்களா என்ன! அனுமதி பெற்று வேலை முடிந்தபின்னர் மேற்பார்வை செய்து சாலையை செப்பனிடாமல் விடுபவர்களை உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். தண்டனை என்ற பயம் இருந்தால் எல்லாம் சரியாக இயல்பாக நடைபெறும். சாலையில் தோண்டும் ஒவ்வொரு குழிக்கும் கட்டணம் செலுத்தி இரசீது பெற்றபின்னரே குழி தோண்ட வேண்டும். அவசரம் கருதி அவசரகாலப் பணியாகவும் அனுமதி வாங்கலாம்.
எந்த சாலையும் மேடுபள்ளங்களின்றி மக்களின் ஆரோக்கிய பயணத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். அதனால் உடனுக்குடன் செப்பனிடல் நடைபெற வேண்டும். அனுமதியின்றி குழிதோண்டல் விளம்பரங்களுக்காக தோண்டல் கூட்டங்களுக்காக தோண்டல் என்று எதுவாக இருந்தாலும் அனுமதியில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபருக்கு அதற்குரிய தண்டணை வழங்கப்பட வேண்டும்.
சாலைகளை ஆக்ரமித்து கடைகளையும் வீட்டின் பகுதிகளையும் அதிகப் படுத்தி உபயோக்கும் எண்ணங்கள் சரியில்லை. அவ்வாறு செய்பவர்கள் முதலில் எச்சரிக்கை செய்யப் படவேண்டும்,. பின்னும் அவ்வாறு தொடர்ந்தால் அவர்கள் தண்டிக்கப் படவேண்டும். ஒரு வியாபார இடத்திற்கு முன்னால் அங்கு வரும் வாகனங்களுக்கு நிறுத்துவதற்கு அவர்களே ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவ்வாறின்றி சாலைகளில் தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்திற்கு இடைஞ்சல் செய்ய விடுவது வியாபாரம் செய்பவர் அல்லது அந்த இடத்தினுடைய சொந்தக்கார்களே பொறுப்பு என்பதை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சாலை ஆக்கிரமிப்புகளால் பல உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.
பெரிய நகரங்கள் /ஊர்களை இனைக்கும் சாலைகளில் சேரும் குறுக்குச் சாலைகளிலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக கவனமுடன் வரவேண்டும். அதை விடுத்து அவர்கள் வேகமாக வந்து திரும்புவார்களாம். அதனால் நெடுஞ்சாலையில் சாலையை உயர்த்தி மேடாக்கி தடுப்பு அல்லது தட்டிகள் வைத்து ஒருசமயம் ஒரு வண்டி செல்வது போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றனர்.
குறுக்குச் சாலையில் எப்பொழுதாவது சில வண்டிகள் வரும். நெடுஞ்சாலையில் அடிக்கடி வண்டிகள் வரும். ஒரு சில வண்டிகளுக்காக நெடுஞ்சாலையைக் கடக்கும் நூற்றுக் கணக்காண வண்டிகள் தங்கள் வேகத்தை குறைத்து மேட்டில் ஏறி இறங்கி மெதுவாக செல்ல வேண்டுமாம். தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக இருக்கின்றது. இது போன்று ஒரு நெடுஞ்சாலையில் பல மேடுகளைக் கட்டி தடுப்பு செய்துள்ளதால் நெடுந்தொலைவு பயணிக்கும் மக்கள் துன்பமடைகின்றனர். பொதுவாக சாலைகள் மேடு பள்ளங்கள் நிறந்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை போதாது எண்பதற்காக இந்த மேடு பள்ளங்கள்வேறு. இதனால் ஒவ்வொரு முறையும் வண்டி ஏறி இறங்கும்போது அதில் பயணம் செய்யும் மக்களின் முதுகுத் தண்டு தேவையில்லாமல் தேய்வடைகின்றது. பலருக்கு கழுத்து சுளுக்கு ஏற்படுகின்றது. நிறைய பயணிகளுக்கு பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு சாலை தடுப்புகளை குறுக்குச் சாலைகளில் மட்டும் அமக்க வேண்டும். இரு பக்கமும் எச்சரிக்கை பலகைகளை முறைப்படி பொறுத்த வேண்டும்.
இது மட்டுமில்லாமல் வாகனங்கள் தங்கள் வேகத்தைக் குறைத்து மெதுவாக அந்த இடத்தை கடக்க கீர்முறையை மாற்றி செயல் படுவதால் நிறைய பெட்ரோல் தேவையின்றி வீணாக்குகின்றோம். இப்படியெல்லம் செய்து விட்டு பெட்ரோலை சிக்கனப்படுத்த நடவடிக்கை என்று விளம்பரங்கள் எதற்கு!
அடுத்து பள்ளிகளுக்காக தடுப்புகளை சாலையில் ஏற்படுத்துகின்றனர். பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர்கள் வேகமாக கவனமின்றி சாலையைக் கடப்பதாலேயே பெரும்பாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. நம் குழந்தைகள் அறிவில் சிறந்தவை. புத்திசாலித்தன மிக்கவர்கள். அவர்களுக்கு முறையான விளக்கங்களைச் சொல்லி வழி முறைகளை கற்றுத் தந்தால் அவர்களின் செயல் பாடுகள் நம்மை மிஞ்சி இருக்கும். அவர்களுக்கு சாலைகளின் குறியீடுகள் சாலியை கடக்குமுன் செயல் படும் முறைகளை சரியாக கற்றுத்தாராமல் அவர்களை சரியான இயக்கமில்லாத மண்பொம்மைகளாக்கி விடுகின்றோம்.
எல்லா பள்ளிகளின் வாயிலில் முறையான தடுப்பை ஏற்படுத்தி மாணவ மாணவிகளின் வேகத்தை குறைத்து தாங்கள் ஒரு சாலையை கடக்க இருக்கின்றோம் என்ற விழிப்பு நிலையை ஏற்படுத்தி செயல் படவைத்தால் எந்த பள்ளிக் குழந்தையும் விபத்தில் சிக்காது. இந்த விழிப்புணர்வு மற்ற இடங்களில் அவர்கள் சாலையைக் கடக்கும்போதும் உபயோகமாயிருக்கும். இதற்கு உதவியாக காலை, மதியம் மற்றும் மாலை ஆகிய மூன்று நேரங்களிலும் அந்தப் பள்ளியில் உள்ள உடற்பயிற்சியாளர்கள், பாட்டு மற்றும் கலைத் துறை ஆசிரியர்கள், நூலகப் பெருப்பாளர் ஆகியோரின் உதவியுடன் குழந்தைகள் பள்ளி வாயிலிலுள்ள சாலயைக் கடக்கச் செயல் முறைப்படுத்தலாம்.
பள்ளிக்கூடங்களின் வாயிற் கதவுகள் திறந்திருக்கக் கூடிய காலங்கள் காலை மதியம் மற்றும் மாலை ஆகிய மூன்று வேளைகள் சேர்ந்து மொத்தம் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே. இந்த மூன்று மணி நேரத்திற்காக ஒரு நாளைக்கு மற்ற இருபத்தியோரு மணி நேரமும் அந்த நெடுஞ்சாலையில் செல்வோர் மேடுகளில் ஏறி இறங்கி முதுகு தண்டு வடத்திற்கு அதிர்ச்சி தந்து செல்ல வேண்டுமா! இதுமட்டுமல்லாமல் விடுமுறை தினங்கள் வேறு.! இந்த சிந்தனை கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் சிந்தித்து நம் மக்களின் உடல்நலப் பாதுகாப்பிற்கு உதவ வேண்டுகின்றேன்.
ஒரு இரயில் பாதையை மற்றும் நான்கு வழிச் சாலகளை கடக்கும்போதும் எப்படி கவனுத்துடன் இருபுறம் பார்த்து செல்கின்றோமோ அதே கவனம் எந்த சாலையாயிருப்பினும் கவனமுடன் கடந்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.
இப்படி வீணற்ற தடுப்புகளால் பயணம் செய்வோரின் கழுத்து, முதுகுத் தண்டுவடம் பாதிப்பு என்ற நிலை குறைவது மட்டுமல்லாமல் நாட்டில் பெட்ரோல் சிக்கனமும் ஏற்படும்.
அடுத்து சாலை தடுப்புகளை சில கல்லூரி, மருத்துவ நிர்வாகங்கள் தாங்களாகவே ஏற்படுத்திக் கொள்கின்றன. இவர்கள் விளம்பரம் செய்வதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள். விளம்பரங்களை உரிய
இடங்களில் சாலை ஓரங்களில் அனுமதி பெற்று வைத்துக் கொள்ள வேண்டும் கண்ட பொது இடங்களில், சாலைகளில் வைக்கக்கூடாது என்று கட்டாய மாக்கப் படவேண்டும்.
பெரிய ஊர்களில் சாலைகளை முறையாகக் கடப்பதற்கும் போக்குவரத்தை சீர்படுத்தவும் மின் விளக்கு (சிமப்பு-ஆரஞ்சு-பச்சை) கம்பங்களைப் பெறுத்தியிருக்கின்றனர். அதிலும் சில நிர்வாகங்கள் விளம்பரங்கள் செய்ய தங்களது தட்டிகளை பெரிய அளவில் வைத்துள்ளனர். எங்கு செல்ல வேண்டும் என்ற குறிப்புகள் மறைக்கப் பட்டோ அல்லது சிறிய அளவிலே வைக்கப்பட்டுள்ளது. அது எப்படி மக்களுக்கு சாலையை முறையாக கடந்து வேண்டிய இடத்திற்கு செல்ல வழிகாட்டியாக உதவும்.
போக்குவரத்து விளக்கு கம்பங்களில் விளம்பரங்கள் செய்வது தடுக்கப் படவேண்டும். இதை யார் அனுமதிக்கின்றனர் என்றே தெரிவதில்லை. சாலைகளில் நேராக விளம்பரங்களைப் பார்த்துக் கொண்டு வாகன ஒட்டி வண்டியைச் செலுத்தினால் ஏன் விபத்துக்கள் அதிகமாகாது.
பொதுவாக பெரிய நிர்வாகங்கள் வளர விளம்பரங்கள் வேண்டியதுதான். அதை முறைப்படி மக்களுக்கு பாது காப்பாகவும் அதே சமயம் பயன் படுபவனாகவும் இருக்கும்படி விளம்பரங்கள் செய்ய வேண்டியது அவர்களது சமுதாய கடமை. அதற்கு அரசு நிர்வாகங்கள் தகுந்த மேற்பார்வை முறைகளை ஏற்படுத்தி சாலைகளை முறையாக பயணிப்போர் நலன் கருதி மேம்பாட்டுச் செயல்களைச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்!— குருஸ்ரீ பகோரா
#####