gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

பிரணாயாமம் (அ) பிராணணைக்கட்டுப்படுத்தல்

Written by

பிரணாயாமம்(அ) பிராணானைக் கட்டுப்படுத்துதல்
நாடிகளைத் தூய்மைப்படுத்துதல், பிராணன், சித்து பிராணான், சித்து பிராணனைக் கட்டுப் படுத்துதல் (பயிற்சி) என நான்கு வகைகளாக பார்ப்போம்.
1.நாடிகளைத் சரிசெய்து தூய்மைபடுத்துதல்-
முதலில் நேராக நிமிர்ந்து உங்களுக்கு பழகிய ஆசனத்தில் உட்கார்ந்து கொள்ளவும். முதுகுத்தண்டு முதுகெழும்புடன் சேர்ந்திராவிடினும் அதனுள் இருப்பதால் முதுகு வளையாமல் நேராக நிமிர்ந்து உட்கார்ந்தால்தான் சுவாசப்பயிற்சிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மார்பு, கழுத்து, தலை ஆகியவை ஒரே நேர்கோட்டில் இருக்குமாறு அமரவும்.
அடுத்து நமது நரம்புகளை வசப்படுத்தவேண்டும். நரம்பு மையம் சுவாசபையையும் மற்ற நரம்புகளையும் அடக்கி தன் இயக்கத்தில் இயங்க வைக்கின்றது. ஒழுங்கான, வசமான சுவாசமே நரம்புகளின் சரியான இயக்கத்திற்கு ஏற்றது. பொதுவாக நாம் விடும் மூச்சு ஏற்றத் தாழ்வுடன் ஒழுங்கற்று இருக்கின்றது. ஆண், பெண் மூச்சுவிடுவதில் வேறுபாடுகள் உள்ளது. எனவே அளவான மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவதுதான் முதன்மையான பயிற்சி.
வலது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு இடப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். இடைவெளிவிடாமல் இடப்புற நாசியை மூடிக்கொண்டு வலப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும். பின் இடது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு வலப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே தங்கவிடாமல் இடைவெளியில்லாமல் வலப்புற நாசியை மூடிக்கொண்டு இடப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும்.
இதை தினமும் காலை, நண்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு காலங்களில் 9 முறை செய்து பழகவும். சில நாட்களுக்குப்பின் பயிற்சியின் போது ‘ஓம்’ என்ற உச்சரிப்போடு செய்து பழகவும்.
இந்த பயிற்சி நம் உடலை வசப்படுத்தும். 15 லிருந்து 30 நாட்களுக்குள் நாடிகள் தூய்மையடைந்துவிடும். “ஓம்” என்ற சொல்லின் உச்சரிப்புடன் மூச்சின் இயக்கம் சரி சமமாக ஒழுங்காக இயங்கும்போது உடல் முழுவதும் ஓர் உணர்ச்சி ஏற்பட்டு உடல் வசப்படுவதை உணரலாம். அப்போது உறக்கத்தைவிட சிறந்த ஒய்வு என்பதன் பலன் தெரியவரும். ஓய்வு கிட்டியபின் தளர்ச்சி பெற்றிருந்த நரம்புகள் அமைதியடையும். நமது உடம்பில் 72 லட்சம் நரம்புகள் இருப்பதாக கணக்கிட்டிருக்கின்றார்கள். இதற்குமுன் இப்படியெரு ஓய்வை அனுபவித்திருக்க மாட்டீர்கள். இதுதான் நாடிசுத்தி எனப்படும்.
இதன் பின்னர்தாம் பிராணாயாமம் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.

2.பிராணன்-
பிரணாயாமம் என்பது சுவாசம் பற்றியது அல்ல. சுவாசத்திற்கும் அதற்கும் உள்ள தொடர்பு குறைவானது. பிரணாயாமம் பற்றி தெரிந்து கொள்ள உதவும் பயிற்சிகளில் ஒன்று சுவாசம். மூச்சுவிடுதல் என்பது உயிர் தத்துவம். பிராணன் அந்த தத்துவத்தைக் குறிக்கின்றது. பிராணன் என்றால் ஆக்ஜிசன் அல்ல. பிராணான் என்பது ஒருவரது உடலிலுள்ள உயிர்சக்திகள். ஆயாமம் என்றால் அதை அடக்கி ஆளுதல் என்பதாம். எனவே பிரணாயாமம் என்றால் பிராணனை அடக்கி ஆளுதல் என்பதாகும்.
நமது பிரபஞ்சம் இரண்டு பொருள்களினால் ஆனது. 1. ஆகாசம்- எங்கும் வியாபித்து பொருள்கள் அனைத்திலும் ஊடுருவியுள்ளது ஆகாசம். கூட்டுப்பொருள்கள் அனைத்தும் உருவம் உள்ள பொருள்களும் ஆகாசத்தினின்றே வெளிப்பட்டுள்ளன. அந்த ஆகாசமே காற்றாகவும், திரவப் பொருள்களாகவும், திடப் பொருள்களாகவும் மாறுகிறது. ஆகாசமே சூரியன், சந்திரன், பூமி, நட்சத்திரங்கள், மனித உடல், பிராணி உடல், தாவரங்கள் மற்றும் நாம் இன்று காணும் உணரும் பொருள்கள் எல்லாமயின. ஆகாசம் ஓர் சூட்சமப் பொருள். கண்ணால் பார்க்க இயலாது. அது உருவம் பெற்றால்தான், தூலப் பொருளாய் ஆகும்போதுதான் நம்மால் காணமுடியும். துவக்கத்தில் இருந்த ஆகாசத்திலிருந்தே வாயுக்கள், திரவங்கள், திடப்பொருள்கள் எல்லாம் தோன்றி கல்பங்கள் முடியும் போது மீண்டும் சூட்சமப் பொருள்களாக மாறிவிடுகின்றது. மறுபடியும் படைப்பு தோன்றும் போது ஆகாசத்திலிருந்தே பொருளகள் தோற்றுவிக்கப் படுகின்றன.
பிராண சக்தி - இந்த பிராண சக்தியால் ஆகாசம் பிரபஞ்சமாக மாறும். பிரபஞ்சத்தில் ஆகாசம் எங்கும் நிறைந்திருப்பதுபோல் பிராண சக்தியும் எங்கும் நிறைந்து எல்லையற்றதாய் இருக்கின்றது. கல்பத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் எல்லாம் ஆகாசத்தில் ஒடுங்கிவிடும். எல்லா பிரபஞ்ச சக்திகளும் பிராண சக்தியாக மாறிவிடும். அடுத்த கல்பத்தில் பிராணனிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப்படும். இயங்குசக்தி, புவிக்கவர்ச்சி, காந்தக்கவர்ச்சி, உடலில் செயல் புரியும் இயக்கம், நாடிஓட்டம், எண்ணச்சக்தி ஆக அனைத்துமாகத் தோன்றுவதும் பிராணனே. இந்த சக்திகள் தொடக்கத்தில் உள்ள சக்தியாக மாறும்போது அதை பிராணன் என்கிறோம்.
கல்பத்தின் இறுதியில் பிரபஞ்ச சக்திகள் ஒடுங்கியிருந்து பிரளயத்திற்குப் பின் படைப்பின் போது பிராணன் ஆகாசத்துடன் மோதும்போது வாயு, திரவ, திடப் பொருள்கள் என்று உண்டாகும்போது பிராணனும் பல சக்திகளாக மாறுகிறது. அதை அறிந்து அடக்கி ஆளும் முறையே பிரணாயாமம் எனப்படும்.
பிராணனை வசப்படுத்துகின்றவன், உடலையும், உள்ளத்தை பற்றிய எல்லா சக்திகளையும் அறிந்து, தனது மனத்தையும் மற்ற மனங்களையும் உடலையும் அடக்கி ஆளும் திறமை கொள்வான். பிராணசக்தி அனைத்து சக்திகளின் பொதுவான வெளித்தோற்றமாகும்.
நனவு உணர்வுடன் கூடிய எண்ணங்களை ஆராயலாம். தீர்மானிக்கலாம். நினைக்கலாம். பகுத்தறிவைப் பயன் படுத்தலாம். சிந்தனைக்கு எல்லையுண்டு. ஆராயும்போது ஒரு வட்டத்துக்குள் நின்றுவிடும். எனவே பகுத்தறிவு ஒரு வரம்பிற்குட்பட்டது. மனம் தியானத்தில் குவிந்து பகுத்தறிவு எல்லையைத்தாண்டி செல்கின்றது. உணர்வினாலும், ஆராய்ச்சியினாலும், கிடைக்கமுடியாத பல விஷயங்கள் மனதில் நேருக்கு நேராகப் புலப்படும். எனவே உடலின் நுண்ணிய சக்தியாகிய பிராணனின் வெளிப்பாடுகளை பயிற்சியினால் அடக்கி பயன்படுத்தினால் மனம் சக்தியடைந்து நனவு உணர்விற்கு மேம்பட்ட உயர்நிலையை சமாதி நிலையை அடைந்து செயல்படும்.
பிரபஞ்சத்தில் இடைவெளியின்றி தொடர்ச்சியாக ஒரே தன்மையான சடப் பொருள்கள் இருக்கின்றது. நமக்கும் சூரியனுக்குமிடையில் உள்ள சடப் பொருள்கள் அனைத்தும் ஒரே தன்மையுடையது. ஓடிவரும் ஆற்றில் கணநேரத்தில் நீங்கள் பார்த்த நீர் அகன்று அந்த இடத்தில் நீர் இருக்கும். அது நீங்கள் முதலில் பார்த்த நீராக இருக்காது. பிரபஞ்சம் முழுவதும் மூலப் பொருளாக ஆகாசம் இயங்குகின்றது. பிரபஞ்ச வடிவங்கள் ஒவ்வொன்றும் நீர்சுழி போன்று ஒன்றில் சிலகாலம் இருந்து மற்றொன்றில் புகுகின்றது. அது பிராணியாக இருக்கலாம், உலோக கட்டியாக இருக்கலாம். எல்லாம் மாறுதல் அடைந்து பிரிந்து வேறு பொருளாக மாறிக்கொண்டே இருக்கின்றது.
மனமும் அதைப் போன்றதே. சடப்பொருள் ஆகாசத்தால் வெளிப்படுத்தப்படும் போது பிராணனின் செயல் நுண்ணியதாக இருக்கும்போதும், ஆகாசம் நுண்ணிய அதிர்வுகளுடன் கூடிய மனமாக காட்சி தரும். அந்த நுண்ணிய அதிர்வு நிலையை நாம் அடைந்து பிரபஞ்சம் நுண்ணிய அதிர்வுகளால் ஆக்கப்பட்டிருப்பதைக் கண்டு உணரலாம். பிரபஞ்சம் தூல நிலையில் சடப்பொருள்கள் மயமாய் இருக்கும். சூட்சம நிலையில் எண்ணங்கள் மயமாய் இருக்கும். இச்சக்திகள் அமைதியான செயல்படாத ஒடுக்க நிலையில் இருந்து பின் பலவித சக்தியாக தோற்றமளிக்கும். மறுபடியும் செயலற்ற நிலைக்கு சென்று திரும்பும். இந்த நிகழ்வு இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த பிராணசக்தியை அடக்கியாள்வது பிராணாயாமம் என்பதாகும்.
உடலில் பிராணனின் வெளிப்பாடு புலனாகுவது நுறையீரல்களின் இயக்கத்தினால். சுவாசப்பையின் செயலைக் கட்டுப்படுத்துவதுதான் பிராணாயாயம். மூச்சு பிராணாயாமத்தை உண்டாக்குவதில்லை மூச்சை உண்டுபண்ணி இச்செயலால் மூச்சை உள்ளே இழுக்கின்றது. பிராணன் சுவாசப்பைகளைச் செயல் படுத்துகின்றது. சுவாசப்பை காற்றை உள்ளே இழுக்கின்றது. எனவே பிராணாயாமம் மூச்சு விடுவதல்ல, சுவாசப்பைகளை இயக்கும் தசைகளை அடக்கியாள்வது ஆகும். நரம்புகள் மூலம் தசைகளுக்கும் அங்கிருந்து சுவாசப்பைகளுக்கும் சென்று ஒரே வகையில் இயங்க அசையச் செய்யும் சக்தியே பிராணன்.
உடலின் நுண்ணிய இயக்கங்களை உணர நாம் விரும்புகிறோம். மனம் வெளியில் செல்கின்றது. அகத்தின் நிகழ்வுகளை உணர்வதில்லை. நரம்புகள் உடல் முழுவதும் சென்று தசைகளை இயக்குகிறது. ஊக்கமும் சக்தியும் அளிக்கின்றது. அந்த சக்தியை நாம் உணருவது பிரணாயாமம் பயிற்சியின் மூலம்தான்.
பிரணாமயப் பயிற்சியில் இந்த சக்தி பிராணனை நாம் கட்டுப்படுத்த வேண்டும். பின் உடலில் உள்ள பிராணனின் மற்ற செயல்களும் மெல்ல மெல்ல கட்டுப்பாட்டின் கீழ்வரும். உடலில் ஓய்ந்து இருக்கும் இயக்கங்களையும் அசைவுகளையும் கடின உழைப்பு, பயிற்சியாலும் புதுப்பித்து இயங்க வைக்கலாம். எனவே உடல் முழுவதும் பிராணனை நிரப்பி உடலில் எந்த இடத்திலும் ஏற்படும் வியாதியையும் கட்டுப்படுத்தமுடியும்.
உலகில் எல்லாம் ஒருவரிடத்தில் இருந்து மற்றவருக்கு தொற்றும் தன்மையுடையது. உங்கள் உடலில் ஏற்படும் குழப்பம் மற்றவர்களுக்குத் தாவும். உடல் நலமாகவும், பலமாகவும் இருக்கும்போது அந்த தன்மையை சுற்றி இருப்பவர்களுக்கு உண்டாக்கலாம். நோயுற்று துன்பமுற்றிருந்தாலும் சூழ இருப்பவர்களுக்கு அதே துன்பத்தை உண்டாக்கலாம். மனிதன் மற்றவனை குணப்படுத்தும்போது தன்னுடல் நலத்தை மற்றவனுக்கு அளிக்கின்றான். தெரிந்தோ தெரியாமலோ ஒருவரின் உடல் நலத்தையும் மற்றவருக்கு அளிக்க முடியும். தூரத்தில் இருக்கும் ஒருவனுக்கு பிராண சக்தியை அளித்து நோயைக் குணப்படுத்தலாம். பிராணன் ஓர் பகுதியில் குறைவாக அல்லது அதிகமாக இருந்தால் அதன் சமன்நிலை வேறுபடுவதால் ஏற்படும் நோய்களை அதிகமாக இருக்கும் இடத்தில் இருந்து எடுத்து குறைந்த இடத்திற்கு அளித்து நோய்களைக் குணப்படுத்த முடியும்.
ஒருவர் ஒருவரிடம் பேசும் பொழுது அவரின் பிராண சக்தியை வெற்றிகரமாக இயக்க நிலைக்கு கொண்டுவந்து ஊக்கமுடன் பேச ஆரம்பித்தால் மற்றவர் ஆர்வத்துடன் கேட்பர். ஊக்கமின்றி பேச ஆரம்பித்தல் மற்றவர் கேட்பதில் விருப்பம் இருக்காது. உலகின் தீர்க்க தரிசிகள் தங்கள் பிராண சக்தியை வசப்படுத்தி உயர்ந்த இயக்க நிலைக்கு கொண்டுவந்து அந்த சித்த சக்தியால் மற்றவர்களை ஆளத்தக்க சக்தியை பெற்றுள்ளனர்.
பிராணனை நாம் ஒருவகைச் சலனத்தில் வெளிப்படுத்துகிறோம். அதே சலன எல்லைக்குள் இருக்கும் பிராணிகள் ஒன்றை ஒன்று காணமுடியும். உயர்ந்த சலனத்தில் உள்ள பிராணிகள் இருந்தால் அவற்றைக் காணமுடியாது. பிராணனை உயர்ந்த அதிர்வு எண்ணில் இயக்குவதால் நம்மால் காணமுடிவதில்லை. எனவே ஒரே வகை அதிர்வு நிலை உள்ள பிராணனைப் பெற்ற உயிர்கள் ஒன்றையொன்று காணுதல் இயலும். யோக சக்தியால் ஒருவருடைய பிராணனின் அதிர்வு நிலையை மற்றவைகளுக்கு இனையாக அதிகரித்து அவற்றை காணலாம்.

3.சித்து பிராணான்-
முதுகுத்தண்டில் இடது -இடகலை, வலது- பிங்கலை என இரண்டு நரம்பு ஓட்டங்கள் உண்டு. ஞானேந்திரிய நரம்புகள் என இடை நரம்புகளையும், கர்மேந்திரிய நரம்புகள் என பிங்கலை நரம்புகளையும் கூறுவர். துளை பொருந்திய நாளம் சுழுமுனை எனப்படும். அதன் கீழ்ப்பகுதி “குண்டலினிக் கமலம்” எனப்படும். முக்கோண வடிவமான அதில் குண்டலினி சக்தி பாம்புபோல் சுருண்டு படுத்து உறங்குவதாக கொள்ளவும். அந்த சக்தி விழித்தெழும்போது பிராணசக்தியாக சுழுமுனை நாடிவழியாக மேல் எழ மனத்திரைகள் அகல தெய்வீக காட்சிகளும் அற்புத ஆற்றல்களும் அதனை அடையும். இந்த சக்தி ஆதாரச் சக்கரங்கள் வழியாக மூளையை அடைந்தவுடன் உடல். உள்ளம் இவற்றிலிருந்து பிரிந்த நிலை ஏற்பட்டு ஆன்மா சுதந்திரமாக இருப்பதை உணரும். உடலில் உள்ள அனுக்களில் இருந்து இந்த பிராண சக்தி திரட்டப்பட்டு ஒன்று சேர்ந்து மேல் எழுகின்றது. சுழுமுனை வழி செல்லும் இதை சித்து பிராணன் என்கிறோம்.
மூச்சு இழுத்ததும் கரியமிலவாயு வெளியேறி ஆக்சிஜன் இரத்தத்தில் கலக்கின்றது. ஒரு வினாடி நேரத்தில் ஏறுதல் இறங்குதல் ஆகிய இரு நிகழ்வுகள் நடைபெறுகிறது. இயல்பாக உண்டாவதைவிட மூச்சை அடக்கும்போது பிராணன் அதிக அளவில் உற்பத்தியாகின்றது.
மூச்சுப் பயிற்சியினால் சுவாசம் ஒழுங்காக நடைபெறும்போது உடல் மூலக்கூறுகள் ஒருவழிப்படுகின்றன. மனம் இச்சா-விருப்ப சக்தியாக மாறும் பொழுது நரம்பு ஓட்டங்கள் மின்சக்தி போல் இயங்கும். அதன் காரணமாக நரம்புகள் திசை நோக்கும். விருப்பசக்தி நரம்பு ஓட்டமாக மாறும்போது அது மின் சக்தியாக மாறுதல் அடையும். உடல் அசைவுகள் ஒழுங்காக செயல் பட்டால் உடல் ஒரு மின் உற்பத்திக் களஞ்சியமாக மாறும். இந்த சக்தியைத்தான் யோகம் செய்பவர்கள் அடையவிரும்புகின்றனர்.
நம் கற்பனை, கனவு காண்பது எல்லாம் ஆகாசத்தில் காணவேண்டும். இது மஹாகாசம் அல்லது பூதாகாசம் எனப்படும். யோகசக்தியடைந்தவன் மற்றவர்களின் எண்ணங்களை அறியும்போது புலன்களுக்கு எட்டாதவற்றை உணரும்போதும் “சித்தகாசம்” என்ற மனவெளியில் காண்கின்றான். ஆன்மா தனது சொந்த ஒளியில் பிரகாசிக்கும் போது அதை சித்தகாசம் அல்லது அறிவுவெளி என்போம். குண்டலிசக்தி வெளிக்கிளம்பி சுழுமுனை நாடியில் நுழைந்ததும் காட்சி எல்லாம் சிதாகாசத்தில் உண்டாகிறது. அது மூளையை அடைந்ததும் உருவமற்ற காட்சியை சிதாகாசத்தில் பெறுகிறது.
மின்சார இயக்கத்தில் மின்சாரத்தை கம்பி மூலம் அனுப்புகின்றோம். ஆனால் மனத்தின் இயங் குசக்திகளை ஞானேந்திரிய-இடை, கர்மேந்திரிய-பிங்கலை நரம்புகளின் உதவியின்றி சுழுமுனை குழாய் வழியாகச் செலுத்தினால் எல்லா அறிவும் நமக்கு கிடைக்கும்.
குண்டலினி சக்தி ஒவ்வொரு சக்கரத்தின் வழி செல்லும்போது அளப்பரிய எதிர் இயக்கம் உண்டாகும். சிறிதளவு சக்தியால் ஏற்படும் எதிர் இயக்கம் மனக் கற்பனையை ஏற்படுத்தும். தியானத்தால் சேமித்த சக்தி சக்கரங்களைத் தாக்கி அற்புதமான வலிமை மிகுந்த எதிர் இயக்கம் உண்டாகிறது. கனவு, கற்பனையைவிடச் சிறந்தது. பொறிகளின் உணர்வைவிட வலிமையானது. புலன்களைக் கடந்த காட்சி. ஆன்ம தரிசனம், ஞான ஒளி தோன்றும். மனதின் பலவழிகளும் திறக்கப்பட்டு பிரபஞ்சத்தை நுட்பமான காரண நிலையில் காணமுடியும். அண்டங்களுக்கு உணர்ச்சியாகவும், செயலாகவும் அமைந்த ஆதிகாரணம் தெளிவாகி எல்லா அறிவும், காரிய அறிவும் புலப்படும்.

4.சித்து பிராணனைக் கட்டுப்படுத்துதல் (பயிற்சிகள்).
சுழுமுனையில் பயனிக்கும் பிராணனைக் கட்டுப்படுத்துதல் - பதினாறு வகையானப் பயிற்சிகளைப் பார்ப்போம்.
குறிப்பு:- இருதயம் பலவீனமானவர்கள், மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எல்லா பிரணாயாமமும் செய்ய வேண்டாம். பெண்கள் மாதவிடாய் காலத்திலும், மற்றும் கர்ப்பிணி பெண்கள் கபால்பட்டி, வாஹ்யா, அக்னிசார் பயிற்சிகளைச் செய்யக்கூடாது.
காயத்ரி மந்திரம்- “மூன்று அடுக்காக உள்ள பிரபஞ்சம் முழுவதையும் எது ஒளிரச்செய்கிறதோ அதுவே என் அறிவையும் துலங்கச் செய்கின்றது. அதை நான் வணங்குகின்றேன்."

முதல் பயிற்சி-பஸ்த்ரிகா

நற்பயன்கள்- நுரையீரல்கள், இரத்த நாளங்கள், இருதயம், மூளை, தசைகள் சிறந்து இயங்க உதவுகின்றது.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும்.
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். இதில் கும்பகம் இல்லை.
முதலில் தினமும் 9 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

இரண்டாம் பயிற்சி-கபால்பட்டி

நற்பயன்கள்- விஷக்கிருமிகள் உற்பத்தியாக உதவும் வேண்டாத டாக்ஸின் என்ற நச்சுப் பொருளை வெளியேற்றும். நெகட்டிவ் எனர்ஜிகள் எல்லாம் வெளியேற்றப்படுவதால் பாஸிட்டிவ் சக்திகள், எனர்ஜிகள் அதிகமாகி உடலில் எதிர்ப்புத் தன்மை அதிகமாகும். உடலும் உள்ளமும் தூய்மை பெரும். ஜீரண உறுப்புக்கள் சீராகும். உள் உறுப்புக்கள் எல்லாம் ஆரோக்கியத்துடன் செயல்படும். கொலஸ்ட்ரால் குறையும். தைராய்டு குணமாகும். முடி உதிர்வது நிற்கும். வளர்ச்சி ஏற்படும். கண்பார்வை கோளாறுகள் சரியாகும். காதில் சீழ் வடிதல் சரியாகும். தோல் வியாதிகள் குறையும். கண்களில் கருவட்டம் சரியாகும். முகத்தில் சுருக்கம் நீங்கும். கர்ப்பிணி பெண்கள் இதைச் செய்ய வேண்டாம்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வயிற்றை உள்ளே இழுத்து காற்றை வெளியே தள்ள வேண்டும். மூச்சு வெளியே வரும் போது அடுத்து மூச்சு உள்ளே செல்லும். அந்த இயக்கம் தெரியாதவாறு மூச்சு வெளிவிடுதல் மட்டும் தெரியுமாறு செய்யவும். தோள்பட்டை குலுங்ககூடாது. தலை இடுப்பு ஆடக்கூடாது.
முதலில் தினமும் 120 முறை 1 நிமிடத்தில் செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

மூன்றாம் பயிற்சி- அணுலோம்-விலோம்- நாடி சுத்தி-

உடலை வசப்படுத்த அளவாக மூச்சை இழுத்து வெளியே விடுவது ஆகும். இது முன்பகுதியில் நாடிகளைத் சரிசெய்து தூய்மைப்படுத்துதல் என்ற தலைப்பில் சொல்லப்பட்டுள்ளது.
நற்பயன்கள்- பிரணாயாமம் செய்வதற்கு இது நல்ல அடித்தளம் அமைக்கும். உடம்பிலுள்ள 72 லட்சம் நாடிகளும், இணைக்கும் சக்கரங்களும் சுத்தப் படுத்தப்படுகின்றன. அதனால் உடம்பினுள் ஓர் ஒளி தோன்றும், கண்களின் ஒளி பிரகாசமாகும், இயற்கையான ஆர்வம் ஏற்படும். நுரையீரல்கள், இதயம், வயிறு ஆகியன சுத்தமாக்கப்படுகின்றது. சீரான சுவாசத்திற்கு வழி காட்டும். நுறையீரல்களின் கொள்ளளவு அதிகரிக்கும். நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கும். இதயத் துடிப்பு சரியாக பராமரிக்கப்படும். நரம்பு மண்டலம் சரியாகும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வலது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு இடப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே தங்கவிடாமல் இடைவெளியில்லாமல் இடப்புற நாசியை மூடிக்கொண்டு வலப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும்.
3.பின் இடது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு வலப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே தங்கவிடாமல் இடைவெளியில்லாமல் வலப்புற நாசியை மூடிக்கொண்டு இடப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும்.
4.உள்ளே காற்றை இழுப்பதற்கும் வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் ஒரே அளவாக இருக்கட்டும். இதை ஒரு நாடி சுத்தி எனக்கணக்கிட்டு குறைந்தது 9 முறை செய்ய ஆரம்பிக்கவும்.
5.சில நாட்களுக்குப்பின் காற்றை உள்ளே, வெளியேவிடும் பயிற்சியின் போது ‘ஓம்’ என்ற உச்சரிப்போடு செய்து பழகவும்.

இதை தினமும் காலை, நண்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு காலங்களில் செய்து பழகவும். பழக்கத்தில் 25 வரையும் அதற்கு மேலும் செய்யலாம்.

நான்காம் பயிற்சி –சந்திரனுலோமா

நற்பயன்கள்- இருமல், நீடித்த சளி, சைனஸ், இறுக்கத்தினால் ஏற்படும் தலைவலி ஆகியவை நீங்க உதவி செய்யும். ஜீரணசக்திக்கு உதவும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.இடது நாசித் (சந்திர நாடி) துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது நாசி வழியாக வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். காற்றை உள்ளே இழுக்கும்போதும், காற்றை வெளியே அனுப்பும்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். இதில் கும்பகம் இல்லை.
முதலில் தினமும் 9 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

ஐந்தாம் பயிற்சி-சூரியனுலோமா

 

நற்பயன்கள்- இருமல், நீடித்த சளி, சைனஸ், இறுக்கத்தினால் ஏற்படும் தலைவலி ஆகியவை நீங்க உதவி செய்யும். ஜீரணசக்திக்கு உதவும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வலது நாசித் (சூரிய நாடி) துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் வலது நாசி வழியாக வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். காற்றை உள்ளே இழுக்கும்போதும், காற்றை வெளியே அனுப்பும்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். இதில் கும்பகம் இல்லை.
முதலில் தினமும் 9 முறை செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

ஆறாம் பயிற்சி- உள் கும்பகம்

 

நற்பயன்கள்- குண்டலினி சக்தியை எழுப்பும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வலது நாசித்துளையை வலதுகட்டை விரலால் மூடுங்கள். பின்பு இடது நாசித் துளை வழியாக நுரையீரலைக் காற்றால் நிரப்புங்கள். சில நொடிகள் காற்றை உள்ளே நிறுத்துங்கள். இரு நாசித் துவாரங்களையும் விரல்களால் மூடவும்.
3.அப்பொழுது மனதை நரம்புகளின் இயக்கத்தின் மீது குவியுங்கள். அந்த நரம்புகளின் இயக்கம் தண்டுவடம் வழியாக கீழே உள்ள முக்கோண வடிவிலான குண்டலினி இருக்கும் மூலாதாரப் பகுதியைச் சென்று தாக்குவதாக நினைக்கவும். அந்த நினைவை அப்படியே அங்கு சிறிது நேரம் வைத்திருந்து பின் அந்த நிலை நிறுத்திய நரம்பு இயக்கத்தை மேலே வலது நாசித் துளைக்கு மெதுவாக இழுப்பதாக நினைக்கவும்.
4.சுண்டு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் இடது நாசித் துளையை அழுத்தி மூடி, கட்டைவிரலை வலது நாசியிலிருந்து நீக்கி பிங்கலையான வலது நாசித்துளை வழியாக காற்றை வெளியில் விடுங்கள்.
5.உள்ளிழுக்கும் பூரகத்திற்கு 4 நொடிகள், மூச்சை உள்ளே அடக்கும் கும்பகத்திற்கு 16 நொடிகளும், வெளியே விடும் ரேசகத்திற்கு 8 நொடிகளும் என எடுத்துக் கொள்ளவும். இடது வலது மாற்றிச் செய்யவும். இதை ஒருபிராணாயாமம் எனலாம்.
தினசரி காலை, மாலை 4 பிராணாயாமம் செய்யலாம்.

ஏழாம் பயிற்சி- வெளிக் கும்பகம். 

 

நற்பயன்கள்- குண்டலினி சக்தியை எழுப்பும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.வலது நாசித் துளையை வலது கட்டைவிரலால் மூடுங்கள். பின்பு இடது நாசித் துளை வழியாக நுரையீரலைக் காற்றால் நிரப்பும் பொழுது (பூரகம்) மனதை நரம்புகளின் இயக்கத்தின் மீது குவியுங்கள்.
3.அந்த நரம்புகளின் இயக்கம் தண்டுவடம் வழியாக கீழே உள்ள முக்கோண வடிவிலான குண்டலினி இருக்கும் மூலாதாரப் பகுதியைச் சென்று தாக்குவதாக நினைக்கவும். இதற்கு 4 நொடிகள்.
4.பிறகு சுண்டுவிரல், மோதிரவிரல்களால் இடது நாசித் துளையை அழுத்தி மூடி, கட்டைவிரலை வலது நாசியிலிருந்து நீக்கி பிங்கலையான வலது நாசித்துளை வழியாக காற்றை உடனே வெளியில் (ரேசகம்) 8 நொடிக்கு அனுப்புங்கள்.
5.பிறகு இடது நாசித் துளையைச் சுண்டு விரல், மோதிர விரல்களாலும், வலது நாசித்துளையை கட்டை விரலாலும் அடைத்துக்கொண்டு வெளியில் காற்றை 16 நொடிகள் நிறுத்தவும் (கும்பகம்). இடது வலது மாற்றிச் செய்யவும் இதை ஒருபிராணாயாமம் எனலாம்.

ஆறாம் பயிற்சியில் கும்பம் உள்ளே நிகழ்ந்தது. ஏழாம் பயிற்சியில் கும்பம் வெளியே நடைபெறுகிறது. காற்றை உள்ளே சுவாசப்பையில் நிறுத்திவைக்கும் பிராணாயாமத்தின் எண்ணிக்கையை அதிகமாகச் செய்யக்கூடாது.
தினசரி காலை, மாலை 4 பிராணாயாமம் செய்யலாம். மெதுவாக எண்ணிக்கையும் நேரத்தையும் அதிகரிக்கலாம். உடலில் ஆற்றல் மிகுதலையும், இன்பம் எழுவதையும் உணரலாம். அப்போது பிராணாயமத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். ஒழுங்கீனமாக பயிற்சிகள் செய்யத் துனிந்தால் அப்பயிற்சிகள் உடலுக்கு கேடு விளைவிக்கும்.
மூச்சை இழுத்தல் 1மடங்கு: அடக்குதல் 4மடங்கு: வெளிவிடல் 2மடங்கு இது பிரணாயமத்தின் இலட்சிய அளவு. அதன்படி 12:48:24 நொடிகள் முதல் வகை. உடல் வியர்க்கும். 24:96:48 நொடிகள் நடுத்தரமானது. இதில் உடல் நடுங்கும். 36:144:72 நொடிகள் உயர்ந்த வகையாகும். இதில் உடல் இலேசாக இருக்கும். உள்ளத்தில் பேரானந்தம் பிறக்கும். ஒவ்வொரு பிராணாயாமத்திற்கும் முன்னால் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது நலம் விளைவிக்கும்.

எட்டாம் பயிற்சி-பாராம்ரி- (தேனி சப்த நிலை)

 

நற்பயன்கள்- இந்த பயிற்சி சொல்லி அளவிடமுடியா ஓர் பேரானந்தம், சுவர்க்க இன்பத்தை இதயத்தில் ஏற்படுத்தும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும். ஆள் காட்டி விரல் புருவத்தின் மேலும், மற்ற விரல்கள் கண்களின் மேலும், கட்டைவிரல் காது துவாரத்தின் மேலும் இருக்க வேண்டும்.
2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், காற்றை உள்ளே இழுக்கவும். ஆண் தேனீ ஏற்படுத்தும் ரீங்காரத்துடன் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். அப்போது வயிறும் மார்பும் விரிவடைய வேண்டும்.
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது வயிறும் மார்பும் சுருங்க வேண்டும். வெளியில் வரும் காற்றுடன் தொண்டையில் ஓர் பெண் தேனீ ஏற்படுத்தும் இனிமையான ஹம்மிங் ரீங்காரத்துடன் சப்தம் எழுப்பி அனுப்பவேண்டும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

ஒன்பதாம் பயிற்சி- உத்கீத்

 

நற்பயன்கள்-அதிர்வுகளால் நரம்புகள் பலம்பெறும். இயக்கம் சீராகும். 
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.இடது, வலது நாசித் துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். கைகள் சின் முத்திரையில் இருக்கவேண்டும். உடலில் உள்ள சக்கரங்களை நினைத்துக் கொள்ளவும்.
3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக ஓங்கார நாதத்துடன் இடது, வலது நாசி வழியாக வெளியே அனுப்பவும். ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
4.காற்றை உள்ளே இழுக்கும்போதும் காற்றை வெளியே அனுப்பும் போதும் காலஅளவு ஒரே அளவாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து 15 முதல் 30 தடவை செய்யவும்.

பத்தாம் பயிற்சி- வாஹ்யா-உட்டியாணா (வயிற்றை உள்ளிழுத்தல்)

 

நற்பயன்கள்- அடிவயிற்றை மார்பு கூட்டுக்குள் போகுமாறு செய்தல். சிறுகுடல், பெருங்குடல் கசங்கி நன்றாக இயங்கும். மார்புக்கூட்டை ஒட்டியுள்ள உள் உறுப்புக்கள் நன்கு இயங்கி நன்மைகள தரும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம், சுகாசனம் ஆகிய ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்து கொள்ளவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வயிற்றின் மேல்பகுதி அடிப்பகுதி ஆகியவைகள் நெஞ்சிக்கூட்டின் உள்ளே செல்லும் மாறு செய்யவும்.
3.இந்த நிலையில் அப்படியே சில நொடிகள் இருக்கவும். அதன்பிறகு மெதுவாக மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த பயிற்சியை 3/5 முறை செய்யவும்

பதினோராம் பயிற்சி- அக்னிசார்- (வயிற்றை மடக்குதல்)

 

நற்பயன்கள்- அடிவயிற்றை மார்பு கூட்டுக்குள் போகுமாறு செய்தல். சிறுகுடல், பெருங்குடல் கசங்கி நன்றாக இயங்கும். மார்புக்கூட்டை ஒட்டியுள்ள உள் உறுப்புக்கள் நன்கு இயங்கி நன்மைகள தரும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம், சுகாசனம் ஆகிய ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்து கொள்ளவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வயிற்றின் மேல்பகுதி அடிப்பகுதி ஆகியவைகள் நெஞ்சிக்கூட்டின் உள்ளே செல்லும் மாறு செய்யவும்.
3.இந்த நிலையில் அப்படியே அடிவயிற்றை உள்ளே இழுத்தும் வெளியில் தள்ளியும் செய்யவும். சில நொடிகள் இருக்கவும். அதன்பிறகு மெதுவாக மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த பயிற்சியை 3/5 முறை செய்யவும்

பன்னிரண்டாம் பயிற்சி- மௌலி (வயிற்றை சுழற்றுதல்)

 

நற்பயன்கள்- வயிற்றை சுழற்றுவது. மலச்சிக்கல், பித்தப்பை, சிறுநீர்ப்பை, குடல் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும் இருதயம் அருகிலுள்ள தசைகள் பலமடையும். குண்டலினியை விழிப்படையச் செய்யும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம், சுகாசனம் ஆகிய ஆசனங்களில் ஒன்றில் அமர்ந்து கொள்ளவும்.
2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வயிற்றின் இடப்பகுதியில் கவனமாக ஆரம்பித்துத்து கடிகார வட்டப்பாதையில் சுற்றுவதுபோல் வயிற்றை சுழற்றவும்.
3.அப்படியே சில நொடிகள் செய்யவும். அதன்பிறகு மெதுவாக மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் மெதுவாக முதல் நிலைக்கு வரவும்.
இந்த பயிற்சியை 3/5 முறை செய்யவும்

பதிமூன்றாம் பயிற்சி-உஜ்ஜயி

 

நற்பயன்கள்- காற்று வழியில் ஏற்படுத்தப்படும் தடை சுவாசிக்கும் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும்.
3.உள்ளே காற்றை சில நொடிகள் தங்கவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் தொண்டையில் ஓர் சப்தத்துடன் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். காற்று வெளியில் தாராளமாக வராமல் ஓர் தடையுடன் அனுப்பவேண்டும். அதாவது வெளியில் வரும் காற்றுடன் தொண்டையில் ஓர் சப்தம் எழுப்பவும். அது வெளிவரும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

பதினான்காம் பயிற்சி-க்ஷீத்கரி- (நாக்கு மடங்கிய நிலை)

 

நற்பயன்கள்- பிரணாயாமத்திற்கு ஒருவித குளிர்ந்த தன்மையை ஏற்படுத்துகின்றது. இந்த குளிர்விக்கும் தன்மை மனதின் எதிர்பார்ப்புகளினால் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து அமைதிப் படுத்தும். மூச்சுப் பாதையில் ஏற்படும் கோளாறுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி உதவி செய்கிறது. ஆஸ்துமா, இருமல் உள்ளவர்கள் இதை செய்ய வேண்டாம்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
3.நாக்கை பின்புறமாக மடித்து மெதுவாக அழுத்திப் பிடிக்கவும். நாக்கின் இரண்டு பக்கத்திலும் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ் சப்தத்துடன் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்)
4.பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

பதினைந்தாம் பயிற்சி-க்ஷீத்தலி- (நாக்கு வளைந்த நிலை)

 

நற்பயன்கள்- பிரணாயாமத்திற்கு ஒருவித குளிர்ந்த தன்மையை ஏற்படுத்துகின்றது. இந்த குளிர்விக்கும் தன்மை மனதின் எதிர்பார்ப்புகளினால் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து அமைதிப் படுத்தும். மூச்சுப் பாதையில் ஏற்படும் கோளாறுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி உதவி செய்கிறது. ஆஸ்துமா, இருமல் உள்ளவர்கள் இதை செய்ய வேண்டாம்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.நாக்கை இருபுறமும் மடித்து மெதுவாக வெளியில் சிறிதளவு நீட்டி அழுத்திப் பிடிக்கவும். இருபுறம் மடிந்த நாக்கைச் சுற்றி உதடுகள் இருக்கட்டும். மடித்த நாக்கின் நடுவில் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ்ஸ் சப்தத்துடன் காற்றை உள்ளே இழுக்கவும். காற்று உள்ளே போகும்போது ஒருவித குளிர்ந்த நிலையை நாக்கு உணரும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். முடிந்தவரைக்கும் காற்றை உள்ளே இழுக்கவும்.
3.சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

பதினாராம் பயிற்சி-சதான்த- (பற்கள் வழி உறிஞ்சும் நிலை)

 

நற்பயன்கள்- பிரணாயாமத்திற்கு ஒருவித குளிர்ந்த தன்மையை ஏற்படுத்துகின்றது. இந்த குளிர்விக்கும் தன்மை மனதின் எதிர்பார்ப்புகளினால் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து அமைதிப் படுத்தும். மூச்சுப் பாதையில் ஏற்படும் கோளாறுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி உதவி செய்கிறது. இந்த பயிற்சி பற்கள் மற்றும் ஈறுகளினால் ஏற்படும் உபாதைகளைச் குறையச் செய்யும். ஆஸ்துமா, இருமல் உள்ளவர்கள் இதை செய்ய வேண்டாம்.
1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.
2.மேல்தாடைப் பற்கள் கீழ்த்தாடைப் பற்களைக் கடித்தவாறு இருக்கட்டும். கடித்த நிலையில் உள்ள இருத்தாடைப் பற்களுக்கும் நடுவில் உள்ள சந்தின் வழியாக ஒருவித ஹிஸ்ஸ் சப்தத்துடன் காற்றை உள்ளே மெதுவாக தடையில்லாமல் இழுக்கவும். காற்று உள்ளே போகும்போது ஒருவித குளிர்ந்த நிலையை நாக்கு உணரும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். முடிந்தவரைக்கும் காற்றை உள்ளே இழுக்கவும்.
3.சில நொடிகள் காற்றை நிறுத்திவைக்கவும். (இருதய கோளாறு உள்ளவர்கள் காற்றை நிறுத்தி வைக்காமல் செய்யவும்) பின் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.
முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.
இந்த பயிற்சியை 3/5 முறை செய்யவும்

பொதுவான பலன்கள்- ஒரு மனிதனுக்கு 21,600 சுவாசம் ஒருநாளைக்கு என்பர்.
ஒருமணிக்கு-21600/24 = 900 சுவாசம். ஒரு நிமிடத்திற்கு-900/60 = 15 சுவாசம்.
நான்கு விநாடிக்கு 1 சுவாசம். சராசரியான மனிதர் அனைவருக்கும்.
தினந்தோறும் பயிற்சி செய்பவர்களுக்கு உடல் உள்ளம் அமைதி பெறும். குரல் இனிமையடையும். குண்டலினி சக்தி விழிப்படையும். இயற்கை மாறும். அதன் இரகசியங்கள் உங்களுக்கு தெரியவரும். ஞானம் எளிதில் உங்களை வந்தடையும். உங்கள் மனமே ஞானத்தின் இருப்பிடமாக மாறும்.
உடலில் உள்ள ஆற்றல்கள் மேன்மை பெறும்போது அவை ‘ஓஜஸ்’ எனும் சக்தியாக மாறுகிறது. உடலில் உள்ள சக்திகளில் உயர்ந்தது ஓஜஸ் சக்தி. மூலாதாரத்திலிருந்து மூளைக்குச் சென்று சேகரித்து வைக்கப்படுகிறது. எந்த அளவிற்கு ஓஜஸ் சக்தி உள்ளதோ அந்த அளவிற்கு ஒருவன் ஆற்றல் உள்ளவன் ஆகின்றான், ஆன்மீக ஞானம் பெறுகின்றான்.

திருமந்திரக் கருத்துக்கள்:-
கொல்லான், பொய்கூறான், திருடமாட்டான், நல்ல குணங்களைவுடையவன், அடக்கம் உடையவன், நடுநிலை தவறான், பகிர்ந்து உண்பான், குற்றம் இல்லாதவன், மது அருந்தாதவன் இயமம் வழி நிற்பவன்- தி.ம.554
வேதத்தில் கூறும் பறம்பொருள் தன் தலைமேல் இருப்பதாகவும், அது ஜோதி வடிவாகவும் இந்த ஜோதியை நாபிக்குகீழ் உள்ள பராசக்தி வடிவமான குண்டலினி சக்தி மேலெழுந்து அடையும் என்ற நீதியை உணர்வது நியதி- தி.ம.555
ஸ்வஸ்திகாசனம், வீராசனம், முக்தாசனம், கோமுக்தாசனம், பத்மாசனம், சிம்மாசனம், பத்ராசனம், மயூராசனம் ஆகிய ஆசனங்கள் பரிந்துரைக்கப்பட்டவை- தி.ம.563
ஐந்து பொறிகளுக்கும் நாயகன் ஆகிய மனத்தையுடைய தலைவனின் உயிர் உய்ய பிராணன் உதவுகிறது. மெய்யாகப் பின்பற்றினால் வாகனம் ஏறி பயனிக்க இக்குதிரை இடம் தரும் வேளையில் பொய்யாக பின்பற்றுபவரை கீழே தள்ளி விழவைத்துவிடும்- தி.ம.564
தூயவனாகிய ஆன்மாவில் மனம், பிராணன் என்ற நல்ல குதிரைகளை நுட்பமான கடவுள் அருளாலும், குருவின் அருளாலும் பிடித்தால்தான் அவை வசமாகும்- தி.ம.565
மனமும், பிராணனும் ஆகிய அக்குதிரைகளை அடக்கினால் கள்ளுண்டு மகிழ்வர்போல் களிப்படையலாம். நடையில் ஓர் விசை இருக்கும். சோம்பல் தவிரும். தியானம் செய்வோர்க்கு இது உண்மையாகும்.- தி.ம.566
மனமும், பிராணனும் ஒத்து இயங்கினால் இறந்து, பிறக்கும் வாழ்வு இனி இல்லை. பேச்சில் மௌனம் சாதித்து, பிராணனை நாடிகளில் மாற்றி எழுப்பி சக்தி அதிகம் பெறுவீர்- தி.ம.567
வாமம்-இடது மூக்கால் காற்றை இழுத்தல் பூரகம்-16 விநாடி, கும்பகம்-64 விநாடி மூச்சை அடக்குதல், ரேசகம்-32 விநாடி வலது மூக்கால் வெளிவிடுவது. 1:4:2 விகிதமாம்- தி.ம.568
மூச்சுக்காற்றை வாங்கி வயிறு புடைக்குமாறு அடக்கினால் உடல் நாளடைவில் பளபளப்பு அடையும். வயது முதிர்ந்தாலும் இளமையான தோற்றம் இருக்கும். குருவின் திருவருளுடன் பயிற்சிகளில் வெற்றி பெற்றால் வெட்டவெளியில் காற்றிலும் செல்லலாம்- தி.ம.569
எந்த ஆசனத்தில் இருந்தாலும் இடப்பக்க பிராணாயாமம் செய்யவும். இதனால் உடம்பிற்கு அழிவு இல்லை. வலப்பக்கம் செய்யும் போது அளவுகள் மாறாமல் செய்தால் உடம்பில் சங்கின் ஓசை கேட்டு கடவுளை உணரலாம்.- தி.ம.570
பூரகத்தில் ஏற்றி ரோசகத்தில் இறக்கி கும்பத்தில் அடக்கும் கணக்கினையும் கால அளவையும் அறிந்தவர் இயமனை வென்றவராவார்.- தி.ம.571
வயிறு, இதயம், மேல்பக்கம் பெறுகுமாறு மூச்சை இழுத்து – உள்ளடக்குமாறு மூச்சை வெளியே விட்டு- தொப்புள் பகுதியுள் கும்பகம் அடக்கி பயிற்சி செய்தால் சிவனின் அருளைப் பெறலாம்- தி.ம.572
மூச்சுக்காற்றை வெளியில் விடும்போது அந்த இடத்தில் வைத்த தவிடுகூட அசையாதபடி மெல்ல விடவேண்டும். பத்து நாடிகளும் நிறையும்படியாக உள்வந்த அபானனும் மேலேறும் பிராணனும் அடங்குமாறு கும்பகம்செய்து புரிந்தவர்க்கு இயமன் துன்பமில்லை- தி.ம.574
உடலில் இருந்து புறப்பட்ட பிறாணனும் உள்ளே வந்த அபானனும் பல இடத்தும் திரியாமல் ஒரு நெறியுடன் மனதையும் அடக்கிப் பயிற்சி செய்தால் உள்ளே இருக்கும் கடவுள் வெளியே செல்லான்- தி.ம.575
இழுக்கும் மூச்சின் கனம்-12 விரல் அளவு (அங்குலம்). அடக்கும்போது அதன் கனம்-8 விரல். வெளிவிடும்போது கனம்-4 விரல் அளவு. இந்த அளவில் பயிற்சி செய்தால் பஞ்சாட்சர ஜபத்தின் பலன் கிட்டும்- தி.ம.576
பகல் வெப்பத்தால் காற்று லேசாகுவதும் இரவின் குளிர்ச்சியால் கனமாகுவதாலும் மூச்சு விடுவதில் இயற்கை மாறுதல் நிகழும். இந்த மாற்றம் தவிர ஒரே அளவாக பகலிலும் இரவிலும் பன்னிரண்டு விரல் கனம் மாறாது பிராணாயமம் செய்து வந்தால் பகல் இரவுகளின் விளைவு இல்லை- தி.ம.577

“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.

   

1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை

                                   ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880829
All
26880829
Your IP: 34.228.7.237
2024-03-19 16:44

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg