gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

பெருமாள்

Written by

                ஓம்நமோநாராயணாயஓம்

விஷ்ணு- அழிக்கும் கடவுள்
பெருமாள்- வைணவ நெறிகளின் தலைவன்
வேறுபெயர்கள்- மகாவிஷ்ணு, பரமாத்மா, வேணுகோபாலன், ஸ்ரீராமபிரான், ஸ்ரீஅரங்கநாதர், வேங்கடவன், கோவிந்தராஜன், வெங்கடேசப் பெருமாள், சீனிவாசன்

உகந்த நாட்கள்- புதன் மற்றும் சனிக்கிழமை சிறப்பு. எந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்- தாமரை, மருக்கொழுந்து, பவளமல்லி, துளசி சிறப்பு.
விழாநாட்கள்- மாசிமகம் தீர்த்தவாரி- பாற்கடலில் தோன்றிய பார்கவியை பரந்தாமன் மணந்ததால், தன் மாமனார் கடலரசனை கண்டு நீராடும் நாளாகும்.
புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரதன்று வாமன அவதாரம். புரட்டாசி துவிதியை திதியன்று பலராமன் அவதாரம், புரட்டாசி மூல நட்சத்திரத்தில் சரஸ்வதி தேவி அவதாரம். சூரியன் கன்யாராசியில் பிரவேசிப்பதால் இம்மாதம் கன்யா மாதம் எனப்படும். புரட்டாசி சனியன்று சனீஸ்வரன் அவதாரம். புரட்டாசி பௌர்ணமியில் சிவன் திரிபுரம் எரித்தார். திருப்பதியில் புரட்டாசிமாத அம்மாவாசைக்குப்பின் மகா நவராத்திரி பிரமோற்சவத்தை பிரம்ம தேவன் முன்னின்று நடத்தி வழிபடுகிறார் என்கின்றது புராணங்கள்.
வணங்கும்முறை- கோவிலுக்கு வெளியில் உள்ள சிறிய திருவடியை-அனுமானை வணங்கவும். பிராதனக் கோவிலின் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கவும். ஆழ்வார்கள், ஆச்சாரியர்களை வணங்கவும். எல்லா சன்னதிகளிலும் அனுக்கிரகம் பெற்று தாயார் சன்னதிக்கு வெளியில் உள்ள துவார பாலகிகளைச் சேவித்து அனுமதியுடன் தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு அர்ச்சனை செய்து அல்லது வணங்கி மூலவரான பெருமாளின் எதிரில் உள்ள கருடாழ்வார் துவாரக பாலகர்களை வணங்கி அவர்களின் அனுமதியுடன் மூலவரான பெருமாளைத் தரிசிக்கவும். 
இறைவனுக்கு நெய்வேத்தியம் என்பது சர்வ வல்லமை படைத்த இறைவனுக்குச் சொந்தமானதை அவருக்குத் தந்து அதையே நாம் அவரின் அருளாசியுடன் பிரசாதமாக பெற்று புனித உணர்வுடன் உட்கொள்கிறோம் என்பதாகும். நெய்வேத்தியப் பொருட்களை அர்ச்சகரிடம் கொடுக்கவும். நின்ற, இருந்த, கிடந்த ஆகிய எந்த கோலத்தில் இருந்தாலும் பாதத்திலிருந்து சேவித்து முகத் தரிசனம் செய்யவும். அர்ச்சகர் தீப ஆரதனைக் காட்ட கண்களை மூடாமல் இறைவனைப் பார்த்து வணங்கவும். அர்ச்சனை ஆரத்தி முடிந்தபின் துளசி, தீர்த்தம் பெற்று வரவும். அருள் நிறைந்துள்ள பெருமாள் 
கோவிலில் ஒரு பகுதியில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்து துதிகள் அல்லது நாமங்களைச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு எழுந்து வரவும்.

 

உள்ளே.....

1.“ஸ்ரீவெங்கடேச கராவலம்பம்”-திருக்கரங்களால்அருள் புரிய- கஷ்டங்கள் நீங்க-தினமும்-காலை.

2.“அச்சுதன்அஷ்டகம்”-ஆயுள், ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- துக்க மோசக அச்சுத அஷ்டகம்- தினமும்-ஆதிசங்கரர்.

3.“ஸ்ரீரங்கநாத அஷ்டகம்”-எண்ணங்கள் ஈடேறும், புண்ணிய பலன்கள் கிட்டும்- தினமும் / வேண்டும்போது.

4.“ஸ்ரீ பாண்டுரங்க அஷ்டகம்” - சகல மங்களங்கள் பெற- ஆதிசங்கரர் இயற்றியது. பெற்றோரை முதலில் நினைத்து, தினமும் / வேண்டும்போது. 

5.“ஸ்ரீபார்த்தசாரதி ஸ்லோகம்”-புதன், சனி தோஷம் விலகி, வம்சம் சிறந்து வளர- தினமும் வேண்டும்போது.

6.“தன்வந்திரி பகாவான் துதி”- தீராத நோய்கள் தீர- தினமும்/ வேண்டியபோது. 

7.“ராமர் துதி”-ஆபத்துக்களின் பயம் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- தினமும் முடிந்தபோது. 

8.“ஸ்ரீராமபுஜங்காஷ்டகம்”-துன்பங்களை நீக்கி,ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- தினமும்- வேதவியாசர். 

9. “நரசிம்மர் துதி”- கடன், கிரக தோஷங்களிலிருந்து நிவர்த்தி- நரசிம்மர் ஜெயந்தியன்று.

10.“ஸ்ரீ நாராசிம்மர்துதி”-பன்னிரு திருநாமங்கள்-தினமும். 

11.“ஹரிசரணாஷ்டம்”-நீண்டஆயுள் நிறைவாழ்வுக்கு- புரட்டாசி மாதத்தில்-ஆதிசங்கரர் அருளியது.

12.“பஞ்சாயுதத் துதி”- திருமாலின் திருவருளைப் பெற- புரட்டாசி மாதத்தில் -தினமும். 

13.“வெங்கடேச காரவலம்பம்”-கடன்கள் தோஷங்கள்தீர-புரட்டாசி மாதத்தில்-தினமும்/சனிக்கிழமை. 

14.“முகுந்தன் துதி”- கண்ணனின் வருகை-பாலமுகுந்த அஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தியன்று. 

15.“கண்ணன் துதி”- மதுராஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தி.

16.“கிருஷ்ணன் துதி”- குந்திதேவி சொன்ன துதி-கிருஷ்ண ஜெயந்தியன்று.

17.“நவமி ராமர் துதி”-துக்கங்கள் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- ஆதிசங்கரர்- இராமநவமி -அன்று.

18.“ராமர்-மகாவிஷ்னு துதி”- சீரான வாழ்வுடன் மங்களங்கள் யாவும் கிடைக்கப்பெற-இராமநவமி -அன்று-நாரதமுனி அருளிய- ப்ரஹ்மபாரம்-வராஹ புராணம். 

19.நாராயணீயம்- மகாலட்சுமி அவதாரம்- நாராயணபட்டத்திரி பாடியது- வெள்ளிக் கிழமை, தீபத் திருநாள்.

20.“நாராயணீயம்”- வெப்ப உஷ்ணத்தின் பாதிப்பை நீக்க- நாராயண பட்டத்திரி பாடியது

21.“சுந்தரகாண்ட பாசுரம்”- தடைகள் போக்கி சுகங்கள் சேர்க்கும்- சுந்தரகாண்டம் முழுதும் படித்த பலன். 

22.“இராமாயணப் பாசுரம்”- புண்ணியங்கள் சுகங்கள் சேர்க்கும் இராமாயணம் முழுதும் படித்த பலன். சுவாதி திருநாள் மகாராஜா எழுதியது-பவயாமி ரகுராம் துதி.

23.“பஜகோவிந்தம்” வாழ்க்கையில் தெளிவுஏற்பட அவசியம் ஒருமுறை படிக்க வேண்டியது -மூலம்-ஆதிசங்கரர்.

24.“ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிந்தா” 

25.“ஸ்ரீ மகாவிஷ்ணு துதி” - சகல மங்களங்கள் - லட்சுமி கடாட்சம் பெற- ரிக்வேதம்- ஸ்ரீ சூக்தம்- தினமும் / வேண்டும்போது. 

26.ஸ்ரீகிருஷ்ணர்- புத்ர பாக்யம் பெற-108 முறை தினமும்

27.ஸ்ரீ ராமர் - துன்பங்கள் விலக தினமும் 11முறை

28.ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்- கல்வி ஞானம் - தினமும் 11முறை

29.ஸ்ரீ மகா விஷ்ணு- சௌபாக்யங்கள்பெற தினமும் 11முறை

30.ஸ்ரீ ஆதிசேஷன் - நோய்கள் குணமாக தினமும் 11முறை

“ஸ்ரீமங்களாஷ்டகம்:--மங்களங்கள் பெருக-மனக்குறை- பாவங்களிலிருந்து விலகி-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!
நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!

1.“ஸ்ரீவெங்கடேச கராவலம்பம்”- திருக்கரங்களால் அருள் புரிய- கஷ்டங்கள் நீங்க- தினமும்-காலையில்.

oசேஷாசலத்தில் எழுந்தருளியிருக்கும் திவ்யமூர்த்தியே, நாராயணா, அச்சுதா, ஹரியே உன்னை வணங்குகின்றேன். அனைத்து உலகத்தையும் விளயாட்டாகவே காத்தருளும் வேங்கடேசனே! எனக்கு உதவிட உன் திருக்கரத்தை அளிப்பாயாக.

oபிரம்மா முதலியவர்களால் வணங்கப்படும் பாதத் தாமரைகளையுடைய சங்கு பாணியே. கையில் அழகான ஒளிவிடும் சுதர்சன் சக்கரத்தை ஏந்தியவரே, கருணைக் கடலென விளங்குபவரே, சரணடைவோரின் புண்ணிய மூர்த்தியே, ஸ்ரீ வேங்கடேசனே, உமது நேசக்கரத்தை எனக்காக நீட்டியருள்வாயாக.

oவேத வேதாந்தங்களாலும் ஆராய்ந்து அறிய முற்படும் லட்சிய முன்னோடியே, தாமரையில் வீற்றிருப்பவளால் பூஜிக்கப்படும் பாதத் தாமரைகளையுடைய பத்மநாபரே, உலகத்தையே காக்கும் பராத்பரரே, பாபஹாரியே, பாவங்களை அழிப்பவரே, ஸ்ரீ வேங்கடேசனே உம்முடைய அபயகரத்தை எனக்காக நீட்டுங்கள்.

oமகாலட்சுமியின் நாயகரே, வேதங்கள் தேடும் பரம் பொருளே, காமம் போன்ற குரோதங்களை விலக்கியருளும் ஞானவடிவானவரே, அசுரகுலத்தைப் பூண்டோடு அழித்த ஜனார்த்தனா, தர்மத்தை காக்க அதர்மத்தை விளையாட்டாகவே அழிப்பவரே, வாசுதேவனே, எங்கும் உறைந்து விளையாட்டாகவே அனைவரையும் காப்பவரே, ஸ்ரீவேங்கடேசனே. உமது உதவும் கரங்களை எனக்காக நீட்டுங்கள்.

oஅத்யாத்மிகம், ஆதிதைவதம், ஆதிமௌத்திகம் என்கிற மூன்று தாபங்களையும், வன்முறைகளையும் அழித்த முராரியே. தாமரைக் கண்ணாளரே. உம் அபார கருணையால் என்னைக் காப்பாற்றும், தரையில் விழுந்த மீன்களைப் போன்ற எம்மைக் காத்திட விஷ்னுவாகிய, எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவரே, ஸ்ரீவேங்கடேசனே உம்முடைய நேசக்கரத்தை நீட்டுங்கள்.

oநவரத்தினங்கள் அலங்கரிக்கும் ஒளிமயமான முகமுடையவனே, நெற்றிப் பகுதியில் கஸ்தூரி திலகம் தரித்து, பல வண்ணத் தாமரைகள் ஒருங்கிணைந்தாற் போன்ற முகாரவிந்தமுடைய வேங்கடேசனே, உம்முடைய அருட்கரத்தை நீட்டுங்கள்.

oசரணடைந்த உலகத்தார் கோரும் வரங்களை விளையாட்டாகவே நிறைவேற்றுபவரும், கழுத்துப் பிரதேசத்தில் அணிந்திட்ட நவரத்னங்களிழைத்த ஆபரணங்களால் ஒளிர் பவரும், திக்கெல்லாம் ஒளிபரப்பும் ரத்னவங்கிகளை தோள் வளைகளாக அணிந்து உள்ளவருமான வேங்கடேசனே. உமது உதவும் கரங்களை எனக்காக நீட்டுங்கள்.

oசுந்தரமான அங்கங்களுடன் நீண்ட இரு கரங்களுடன் திகழ்பவரே. தோளில் ரத்ன வளைகள் விகசிக்க, பாம்பணி வளையங்கள் கைகளில் ஒளிவீசிட விளங்குபவரே, சரண்டைந்தோரின் ஆசைகளை நிறைவேற்றும் வேங்கடேசனே, உமது நேசக்கரங்களை எனக்காக நீட்டுங்கள்.

oசம்சாரமாகிய ஆழ்கடலில் நடுவில் சிக்கிச் சுழன்று அவதிக்குள்ளாயிருக்கும் உலக உயிர்களை உய்விக்கும் ஜனார்த்தனரே, என்னை உய்விக்க வாருங்கள். தீராத ருணத்தினால் கடன் தொல்லையால் அவதிப்படும் எனக்கு லட்சுமி தேவியை அளியுங்கள். பெரிய யானை கஜேந்திரனைக் காக்க ஓடோடி வந்தவனே, வேங்கடேசனே. உமது உதவிக் கரங்களை நீட்டி எனக்கு உதவுங்கள்.

oதிவ்வியமான பல வண்ணங்களிலான அங்கிகளும், மஞ்சள் பட்டாடைகளும் மற்றும் தங்க மயமான பட்டு மேல் வஸ்திரங்களாலும், சுற்றிச் சுழலும் மேலங்கிகளாலும் கோமள ரங்கனாக, அழகோவியமாக காணப்படும் வேங்கடேசனே. எனக்காக உமது உதவும் கரங்களை நீட்டியருளுங்கள்.

oஇடுப்புப் பிரதேசத்தில் அழகாகக் கட்டப்பட்டுள்ள ரத்னமயமான ஆபரணங்கள், முழங்கால் பகுதியில் மாணிக்கங்களும் கண்ணாடி கற்களுமிழைத்த அங்கிகள், கணுக்காலிலும் முழங்காலிலும் மனதைக்கவரும் அலங்காரம் என எழிலுடன் விளங்கும் வேங்கடேசனே, உம் அபயக்கரத்தை எனக்காக அளியுங்கள்.

oஉலகையே புனிதமாக்கக்கூடிய ஆற்றல் நீயே, தினமும் உன்னைத் தரிசித்து மகா பிரசாதங்களைப் பெற்றுச் செல்லும் பக்தர்களின் இருள் அகல்வதுடன் பூமியெங்கும் அருள்வெள்ளம் பெருக்கெடுக்கும்படியும் செய்யும், உனது மகாபிரசாதங்கள் உலகையே உய்விக்கக் கூடியவை, வேங்கடேசனே, உனது உதவும் கரத்தை நீட்டியருள்வாயாக.

oகாமம் போன்ற ஏராளமான எதிரிகள் எனக்கு முன்னே இருந்தாலும் உன்னுடைய கருணாகடாட்சத்தினால் அவையனைத்தும் ஏழையேனாகிய என்னை பாதிக்காமலிருக்க வேங்கடேசனாகிய நீரே எனக்காக உமது உதவும் கரங்களை நீட்டி அருள்வீராக.

oஸ்ரீமன் நரசிம்ம முனி என்கிற யதிகளால் ஸ்ரீ வேங்கடேசனின் பாதங்களில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த துதிகளை மனம் ஒன்றிப் படிக்கும் ஒவ்வொருவரும், அந்த புருஷோத்தமனின் அருள் பெற்று அனைத்தையும் அடைவர்.

2.“அச்சுதன் அஷ்டகம்”- ஆயுள், ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- துக்க மோசக அச்சுத அஷ்டகம்- தினமும்- ஆதிசங்கரர்.

oபக்தர்களைக் கைவிடாதவன் என்பதால் அச்சுதன் என்ற பெயர் கொண்டவனே! பாவங்களைப் போக்குபவனே! பரமாத்மாவே! ராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதாரம் செய்தவனே! புருஷோத்தமனே! எங்கும் நிறந்தவனே! வாசுதேவரின் மைந்தனே! பகவானே! ஒருபொழுதும் எதிரிகளால் வெல்ல முடியாதவனே! நீ இப்படிப்பட்ட பெருமைகளை உடையவன் என்பதால் அல்லவா பாற்கடலை கடைந்தபோது தோன்றிய செல்வ மகள் மற்ற அனைவரையும் ஒதுக்கிவிட்டு உன்னைக் கணவனாக அடைந்தாள். தூயவனான நீயே எனது எல்லா துக்கங்களையும் சற்றும் மிச்சமில்லாமல் போக்கவேண்டும்!

oஉலகத்திற்கு மங்கலங்களைக் கொடுப்பவனே! எங்கும் நிறைந்திருப்பவனே! உலக உயிர்களைக் காப்பவனே! ஜகதீசனே! நந்தகோபன் மகனே! நரசிம்மமாக தோன்றிய நரேந்திரனே! மனிதர்களுள் மேலானவனே! முக்தியைக் கொடுப்பவனே! முகுந்தனே! முராசுரனை வதைத்தவனே! லட்சுமிகாந்தனே! எனது துயரங்களை சிறிதும் பாக்கியில்லாமல் நீரே போக்க வேண்டும்!

oராமச்சந்திரனே! ரகுநாயகனே! ஆதரவற்றோர்க்கு அடைக்கலமாக இருப்பவனே! பாவங்களைப் போக்குகிறவனே! யாதவ குலத்தில் உதித்த உத்தமனே! முனிவர்களெல்லாம் போற்றுபவனே! வேள்வியின் நாயகனே! நீங்களே எனது அனைத்து துயரங்களையும் போக்க வேண்டும்!

oதேவகியின் மைந்தனே! பக்தர்தம் துக்கத்தைப் பொசுக்குபவனே! ராதாமணவாளனே! அழகிய உருவை உடையவனே! துயரங்களைப் போக்குகின்றவனே! கருணைக் கடலாக விளங்கும் நாதனே! ஸ்ரீ எனும் மகாலட்சுமியின் மணாளனே! எனது எல்லா துக்கங்களையும் முழுமையாகப் போக்கவேண்டும்!

oகோபிகைகளின் முகமாகிய சந்திரனுக்கு புலப்படும் சகோரப் பறவை போன்றவனே! நிர்குணனே! கர்ம சம்பந்தமற்றவனே! வெற்றியை மட்டுமே பெறக்கூடியவனே! நிறைவானவனே! மங்கலங்கள் அள்ளித் தருபவனே! பூரணமானவனே! அனைத்திலும் இருப்பவனே! எனது எல்லா துக்கங்களையும் போக்க வேண்டும்.

oகோகுலத்தின் தலைவனே! கோவர்த்னகிரியை அநாயாசமாகச் சுமந்தவனே! தீரனே! யமுனா நதிக்கரையில் விளையாடியவனே! வீரனே! நாரதர் போன்ற முனிவர்களால் வணங்கப்படும் மலந்த தாமரை போன்ற பாதங்களை உடையவனே! மலர்மகள்நாதனே! எனது எல்லாப் பாவங்களையும் போக்கி அருளவேண்டும்!

oதுவாரகையின் அரசனே! அளவற்ற நற்குணங்களுக்கு இருப்பிடமானவனே! உயிர்க்குலத்தின் நாதனே! பரிபூரணனே! பிறப்பு இறப்பு அற்றவனே! ஞானத்தால் மட்டும் அறியக்கூடியவனே! குணக்கடலே! பரபிரம்ம வடிவானவனே! பொன்மகள் கணவனே எனது எல்லா துக்கங்களையும் போக்க வேண்டும்!

oதீயவர்களை அழிப்பவனே! தேவாதி தேவனே! கருணைமிக்கவனே! பத்மநபனே! பூமியைத் தரிப்பவனே! தர்மத்தின் தலைவனே! ராவணனை அழித்தவனே! முராரியே! லட்சுமி நாயகனே! என்னுடைய சகல துக்கங்களையும் போக்கி அருள்வீராக!

oபிறப்பு இறப்புகளால் ஏற்படும் பயத்தை போக்கவும் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்வரும் எல்லா துன்பங்களிலும் இருந்து விடுபடவும் வேண்டி செய்யப்படும் இந்த அச்சுதாஷ்டகத்தை சிரத்தையுடன் படிக்கும் நான், எல்லா துக்கங்களிலிருந்தும் விடுபட்டு, மரணபயத்தை வென்று நீண்ட ஆயுளையும் சந்தோஷத்தையும் பெற அருள் புரிய வேண்டும்!

3.“ஸ்ரீ ரங்கநாத அஷ்டகம்” - எண்ணங்கள் ஈடேறும், புண்ணிய பலன்கள் கிட்டும்- தினமும் / வேண்டும்போது.

oஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்ய ஞான சொரூபரும், ப்ரபிரம்மமாக உள்ளவரும் வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும், அழகிய உருவமுடைய வரும், ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி செய்பவரும்மான அந்த அரங்கநாதரிடம் என் மனம் லயித்துக் கிடக்கின்றது.

oகாவேரி தீரத்தில் அதீதமான கருணையுடன் அருள் புரிபவரும், மந்தார மரத்தின்மேல் அமர்ந்தபடி செய்யும் அழகான லீலைகளால் மனதைக் கவர்பவரும், அசுரர்களின் அந்திமக் காலத்தை முடிவுக்கு கொண்டுவந்து அகில உலகையும் விளையாட்டாகவே காப்பவருமாகிய ஸ்ரீரங்கனுடைய லீலைகளின்பால் என்மனம் ஈடுபாடு கொண்டு மயங்குகின்றது.

oதிருமாலின் மார்பைவிட்டு என்றும் நீங்காத லஷ்மிதேவியின் இருப்பிடமாக உள்ளவரும், அகில உலகிற்கும் ஆதாரமானவரும் பக்தர்களின் தாமரை போன்ற இதயத்தில் வசிப்பவரும் சூரியமண்டலத்தில் ஒளிர்பவரும், கருணையின் இருப்பிடமாய் இருப்பவரும், காருண்யத்துக்கு ஆதாரமானவரும், ஸ்ரீரங்கத்திலே வசிப்பவருமான அந்த ரங்கநாதரின் பால் என் மனம் வசப்பட்டுள்ளது.

oபிரும்மா முதலிய தேவர்களால் வணங்கப்படுபவரும், உலக உயிர்கள் அனைத்தினாலும் வழிபடத் தகுந்தவரும், முகுந்தனால் துதிக்கப்படுபவரும், தேவேந்திரனால் நமஸ்கரிக்கப்படுபவரும், வியாசர் மற்றும் சனகாதி முனிவர்களால் போற்றப்படுபவரும் ஸ்ரீரங்கத்தில் வசிப்பவருமான ரங்கநாதரை தரிசிக்க என்மனம் விழைகின்றது.

oபிரும்மாவுக்கு அதிபதியும் கருடனுக்கு எஜமானரும், வைகுண்டத்தின் அரசரும், தேவராஜனுக்கு ராஜாவும், மூன்று உலகங்களுக்கும் அரசனும், ஒட்டு மொத்த பிரபஞ்சத்துக்கும் அதிபதியும் ஸ்ரீ ரங்கத்தில் வசிப்பவருமாகிய ரங்கநாதனிடம் என் மனம் லயித்து நாட்டமுடையதாகின்றது.

oஉயர்வான அபய முத்திரையை உடையவரும் முழுமையான நித்திரையை உடையவரும், யோகநித்திரையில் ஆழ்ந்தவரும், பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவரும், அடைக்கல மடைந்தவர்களின் தேடுதலுக்குச் செவிசாய்த்து அருள்பவரும், பிரபஞ்சத்தில் நிலையாக இருக்கும் ஒரே ஒருவருமான ஸ்ரீரங்கவாசனின்பால் என் மனம் எப்போது கவர்ந்து ஈர்க்கப்படுகின்றது.

oஆச்சரியப்படும் வடிவினில் படுத்திருப்பவரும், ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்டிருப்பவரும், நந்தன் மடியில் படுத்திருப்பவரும், பிராட்டியாரின் மடியில் தலை வைத்திருப்பவரும், ஸ்ரீரங்கத்தில் சயனித்திருப்பவரும் ஆகிய ரங்கநாதரின்மேல் என் மனம் எப்போதும் ஈடுபாட்டுடன் திகழ்கின்றது.

oஇதுவல்லவா ஸ்ரீரங்கம். இத்தலத்தில் மரணிப்பவர்கள் மறுபிறப்பால் அவதிப்படுவதில்லை. அப்படி மறு சரீரம் பெற்றால் கையில் சக்கரம், காலில் கங்கா ஜலம், பயணிக்கும்போது கருடன், சயனத்தில் சர்ப்பம் என்று சாட்சாத் மகாவிஷ்ணுவின் சாருப்பயத்தையே அடைவர். இறைவன் தன்னோடு ஐக்கியப் படுத்திக் கொள்வதால் அவர்கள் பகவானின் வடிவையே பெறுவார்கள்.

4.“ஸ்ரீ பாண்டுரங்க அஷ்டகம்” - சகல மங்களங்கள் பெற- ஆதிசங்கரர் இயற்றியது. பெற்றோரை முதலில் நினைத்து, தினமும் / வேண்டும்போது.

oசிறந்தயோக பீடமான பீமா நதிக்கரையில் புண்டரீகனுக்கு வரம் அளிப்பதற்காக முனிவர்களுடன் கூடி நின்று கொண்டிருப்பவரும், ஆனந்தம் என்ற பயிருக்கு ஆதாரமானவரானவரும், அருவமான பரப்பிரமத்துக்கு அடையாளமான உருவத்துடன் விளங்குபவருமான பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

oமின்னல் போன்று பளிச்சிடும் ஒளியுடைய உடையணிந்தவரும், நீலமேகத்தைப் போன்ற நிறமுடையவரும், லக்ஷ்மியின் இருப்பிடமானவரும், அழகானவரும், மிகச் சிறந்தவரும், செங்கல் மீது சமமாகப் பதிந்திருக்கும் பாதத்தை உடையவரும், மகாபலியிடம் மூவடிகேட்டு உலகளந்தவரின் கால்கள் ஒரு செங்கல்மேலும், அருவமான பரப்பிரம்மத்தின் உருவ அடையாளமாக ஒளிரும் பாண்டுரங்கனை வனங்குகின்றேன்.

oஎன்போன்ற சாமான்யர்களுக்காக ஜனன மரணமென்கிற சம்சார சாகரம் என்பது இவ்வளவே என்று கூறுவதுபோல், எவரால் தன் இடைப் பிரதேசம்தன் கைகளால் தாங்கப்படுகிறதோ, பிரம்மாவாசம் செய்வதற்காக தனது தொப்புள்கொடி தாங்கியிருப்பவர் எவரோ அந்த அருவமான பரப்பிரமத்தின் அடையாள உருவமான பாண்டுரங்கனை நான் பூஜிக்கின்றேன். தன்னை நம்பும் பக்தர்களுக்கு சம்சார சாகரம் சிறு குட்டையைப் போன்றதாகிவிடும் என்பதைக் காட்ட இடுப்பளவை சுட்டுவது போன்ற முத்திரை காடும் பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

oகழுத்துப் பிரதேசத்தில் கௌஸ்துப மணியால் அலங்கரிக்கப்பட்டவரும், ஸ்ரீதேவியால் அணிவிக்கப்பட்ட தோள்வளையினை உடையவரும், ஸ்ரீதேவிக்கு இருப்பிடமானவரும், சிவஸ்வரூபியும், சாந்த வடிவினரும், புகழத்தக்கவரும், மிகச் சிறந்தவரும், உலக ரட்சகரும், அந்த அருவமான பரப்பிரம்மத்தின் உருவ அடியாளமாக விளங்குபவருமாகிய பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

oசரத்கால சந்திரனின் உருவைப்போன்ற ஒளியுடையவர், புன்னகை தவழும் முகத்தினை உடையவர், ஒளிரும் குண்டலங்களால் இடிபடும் கன்னப் பிரதேசத்தை உடையவர், செம்பருத்தியைப் போன்ற சிவந்த இதழ்களையுடையவர், செந்தாமரைக் கண்ணன் என்கிற உருவமற்ற பரம்பொருளின் உருவ அடையாள்மாகத் திகழும் பாண்டுரங்கணை துதிக்கின்றேன்.

oஎல்லாதிசைகளிலும் ஒளிரும் கிரீடத்தை அணிந்தவர், மதிப்பிடமுடியாத சிறந்த ரத்தினங்களைக் கொண்டவர், மூன்று வளைவாக நளின எழிலுடன் உடலை வளைத்து நிற்பவர், மயிலிறகு மாலையை அணிந்தவர், அருவமான பரப்பிரம்மத்தின் உருவ அடையாளமாக விளங்கும் பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

oஎங்கும் வியாபித்திருப்பவர், குழலிசைப்பவர், முடிவற்றவர், விளையாட்டாகவே இடையர் வேடம் பூண்டவர், மாடு கன்றுகளை மேய்த்தவர், புன்னகையால் மிளிர்பவர், நீக்கமற பிரபஞ்சவெளியில் வியாபித்தவராக பரபிரமத்தின் உருவ அடையாலமாகத் திகழும் பாண்டுரங்கனைப் வணங்குகின்றேன்.

oபிறப்பற்றவர், ருக்மணியின் உயிரைத் தழைக்கச் செய்பவர், பரமபத நிலையானவர், விழிப்பு, கனவு, உறக்கம் என்ற மூன்றுக்கும் அப்பார்பட்ட ஆத்மாநுபூதியான நான்காவது நிலையில் இருக்கும் ஒரே ஒருவர், அருட்பொலிவானவர், அடியார்களின் துயரை அழிப்பவர், தேவாதி தேவர், அருவமான பரப் பிரம்மத்தின் உருவ அடையாளமாக இருப்பவரான பாண்டுரங்கனை வணங்குகின்றேன்.

oபுண்ணியத்தைக் கொடுக்கும் பாண்டுரங்கன் மீதான இந்த துதியை மனம் ஒன்றி தினமும் படிக்கும் எனக்கு, சகல சௌபாக்யமும் பெற்று, ஆரோக்கியமாய் வாழ்ந்து முடிவில் ஜனன மரணமாகிய இந்து சம்சார கடலைக் கடந்து, ஹரியின் ஆலயமான வைகுண்டத்தை நிலையான இருப்பிடமாக கொள்ள அருள்புரிவாய் பாண்டுரங்கா.

5.“ஸ்ரீபார்த்தசாரதி ஸ்லோகம்”-புதன், சனி தோஷம் விலகி, வம்சம் சிறந்து வளர- தினமும் வேண்டும்போது.

oபீஷ்மர், துரோணர் போன்ற மகான்களின் அம்புகளை அன்புடன் ஏற்றதால் உண்டான வடுக்களோடு கூடிய திருமுகம் கொண்டவரே, சகல சுகபோகங்களை வேண்டுவோர்க்கு மறுக்காமல் அளித்து மகிழ்விப்பவரே, மோட்சம் வேண்டுவோர்க்கு மோட்சத்தையும் அருள்பவரே, பக்தர்களின் துன்பங்களை கனிவான பார்வையால் களையும் புன்னகை மகோன்னதமே, பார்த்தன்மீது கொண்ட அன்பினால் தூது சென்ற பார்த்தசாரதியே, உன்னை வணங்குகின்றேன். எனக்கு அருள்புரிவாய் பெருமாளே!

6.“தன்வந்திரி பகாவான் துதி”- தீராத நோய்கள் தீர- தினமும்/ வேண்டியபோது.

oஉயிர்களைக் காப்பவரே! அமுத கலசத்தினை ஏந்தியவரே, சகல துன்பங்களையும் போக்குபவரே! மூவுலகுக்கும் தலைவரே! தன்வந்திரியாக அவதரித்த மகாவிஷ்னுவே உம்மை வணங்குகிறேன். எனக்கு நோய்களின்றி பாதுகாப்பாய்!

7.“ராமர் ஸ்லோகம்”- ஆபத்துக்கள் பயம் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- தினமும் முடிந்த போது.

o‘ராமா’ என்று சொன்னாலே எல்லா துன்பங்களும் விலகும். இழந்தன எல்லாம் மீட்கப்படும். எல்லாவகையான அனுகூலங்களும் ஏற்படும். இப்படி மனம் மகிழும் படியான நன்மைகளையே வழங்கும், ஸ்ரீராமனை நான் எப்போதும் வணங்குகிறேன்.

oவாழ்வில் ஏற்படும் தாழ்வுகளிலும் மனம் கலங்காத பக்குவத்தைத் தருபவரும், பயத்தை விரட்டும் உறுதியை அளிப்பவரும், நம் எதிரிகளை நமக்கு முன்பாகச் சென்று நாசம் செய்து நம்மைக் காப்பவருமான ஸ்ரீராமசந்திரனை நான் உளமார வணங்குகின்றேன்.

8.“ஸ்ரீராம புஜங்காஷ்டகம்”- துன்பங்களை நீக்கி, ஆரோக்கியம், ஆனந்த வாழ்வுக்கு- தினமும்- வேதவியாசர்.
oஅதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கின்றேன்.

oஅழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கின்றேன்.

oஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகின்றேன்.

oஉலகத்தையே காப்பவரும், நாமரூபமற்றவரும், எப்பொழுதும் இருப்பவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இனையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகின்றேன்.

oபந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இனையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகின்றேன்.

oசம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லாருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக்கடலும், இணையற்றவருமான ஸ்ரீ ராமனை நான் வணங்குகின்றேன்.

oமஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும், எங்கும் நிறைந்திருப்பவராகவும், இனையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை வணங்குகின்றேன்.

oபரமசிவன் தேவி பார்வதியிடம் ராம என்ற மஹாவாக்யத்தை 3முறை சொன்னாலே போதும், அது ஆயிரம் திருநாமங்களால் வழிபட்டதிற்குச் சமம் எனக் கூறியதை நினைவு கொண்டு ராம, ராம, ராம எனவழிபடுகின்றேன்.

oநன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகின்றேன்.

o வியாசரால் சொல்லப்பட்டதும் எளிமையானதும் ஏராளமான புண்ணியத்தை தரக்கூடிய இந்த ராமாஷ்டகத்தை படிப்பதால், எனக்கு கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம், சர்வமங்களம் மற்றும் மங்காத புகழடைந்து முடிவில் மோட்சத்தையும் அளிப்பாய் என்பது நிச்சயம்.

9.“நரசிம்மர் துதி”- கடன், கிரக தோஷங்களிலிருந்து நிவர்த்தி- நரசிம்மர் ஜெயந்தியன்று.

நாராயாண பக்தன் பிரகலாதனுக்கு தரிசனம் தந்து வரம் அருளியவரே! லட்சுமியின் நாயகனே! அசுரன் ஹிரன்யனை வதம் செய்தவரே! மிகப் பெரிய வீரரே! ஸ்ரீநரசிம்ம மூர்த்தியே! உம்மைத் துதிக்கின்றேன். கடன்களிலிருந்தும், சுமைகளிலிருந்தும் என்னை விடுவிப்பீராக! கோள் சஞ்சாரத்தால் துன்பங்களை அனுபவிக்கும் பக்தர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்கள் வருத்தம் துடைப்பவரே! நரசிம்ம மூர்த்தியே உமக்கு நமஸ்காரம்!

10.“ஸ்ரீநரசிம்மர்துதி”-பன்னிருதிருநாமங்கள்-தினமும்.

oநரஹரியாகத் தோன்றிய நாரணரே, உமது பன்னிரு திருநாமங்களைச் சொல்கிறேன். பிரகாச ஒளிபொருந்தியவர் என்பதால் மகாஜ்வாலன். சினம் மிக்க சிம்மமாதலால் உக்ரசீயம். அச்சமூட்டும் கூரிய பற்களை உடையவர் ஆதலின் வஜ்ர தம்ஷ்ட்ரன். மேதாவியாக விளங்குபவன் என்பதால் அதிசதுரன்.

oமனிதனும் சிம்மமும் சேர்ந்த திருவடிவானதால் நரஹரி (நரன்-மனிதன், அரி-சிம்மம்). கச்யபமுனிவரின் மகனான இரண்யனை அழித்ததால் கஸ்பமர்த்தனர். அண்டியவரைக் காத்திட அசுரனை அழித்ததால் யதுஹந்தாசர். தேவர்தம் குறை தீர்த்ததால் தேவவல்லபர்.

oபாலகபக்தன் பிரகலாதனுக்கு அருளியதால் பிரகலாதவரன். எண்ணற்ற திருக்கரங்களை உடையவராதலால் அனந்தஹஸ்தகர் (அனந்த-கணக்கற்ற, ஹஸ்தம்-கை) பாவங்களைப் போக்குவதில் முதன்மையானவர் என்பதால் மகா ருத்ரர். சரியான தருணத்தில் உதவிபுரிபவர் என்பதால் தாருணீ ஆகிய இந்த பன்னிரு திருநாமங்களை உடையவரே உம்மை மனதாரப் வணங்குகின்றேன்.

oமந்திரங்களில் எல்லாம் மேலானதாகவும், அவற்றின் அரசனாக விளங்கும் மகாமந்திரமாகக் கருதப்படும் இந்தப் பன்னிரண்டு திருநாமங்களைச் சொல்லி நரசிம்மரை பூஜிப்பவர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு சகல வளமும் நலமும் பெற்று வாழ்ந்து நிறைவில் நற்கதி அடைவர்.

oஇந்த துதியைச் சொல்வதால் உடல்மெலிவு நோய், தீராப்பணி, தொற்றுநோய், காய்ச்சல்கள் போன்ற வற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அரசாங்க அனுமதி சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரும் இடர்களில் இருந்தும், நெருப்பு, வெள்ளம், திக்குத் தெரியாத காடு போன்றவற்றிலிருந்தும் மீளமுடியும்.

oவழுக்கலும் சறுக்கலுமான மலைகளிலும், கொடிய விலங்குகள் உலவும் காடுகளிலும் உமது துணையால் புலி, திருடர் பயத்திலிருந்து காப்பாற்றப்படுவர். போரிலிருந்தும் மரணத்திலிருந்தும் மீண்டு மேலான சுபமான வாழ்வைப் பெறுவர்.

o இந்த பன்னிரு நாமாக்களையும் நூறுமுறை சொல்பவர் சகல தடைகளில் இருந்தும் விடுபடுவர். அவர்களது ஆரோக்கியம் சீராகும். நோய்களிலிருந்தும் மீள்வர். ஆயிரம் முறை ஜபிப்பவர்கள் கோரியதெல்லாம் அடைவர்!

11.“ஹரிசரணாஷ்டம்”- நீண்ட ஆயுள் நிறை வாழ்வுக்கு- புரட்டாசி மாதத்தில் சொல்ல வேண்டிய துதி- ஆதிசங்கரர் அருளியது.

oசிலர் சிவனைத்தான் தொழவேண்டும் என்று சொல்கிறார்கள். மற்றும் சில பேர் அம்பிகையைத்தான் வணங்க வேண்டும் என்பர். வேறு சிலர் கனேசனையும், இன்னும் சிலர் பிரத்யக்ஷமான சூரிய தேவனையும் துதிக்கச் சொல்வர். ஆனால் இவர்கள் அனைவரிலும் மாறி மாறி பிரகாசிப்பவன் நீயேதான்! ஆகையால் சங்கு சக்ரபாணியான நாரணனே உன்னையே நான் சரணடைகிறேன்.

oஉடன் பிறந்தவனோ, தந்தையோ, தாயோ, மனைவியோ, புத்திரனோ அல்லது உயர்வான குலத்தில் பிறந்தவன் என்ற பெருமையோ இவை எதுவும் எனக்கு உதவக்கூடியதாகத் தெரியவில்லை. ஆகையால் சங்கு சக்கரதாரியான ஹரியே! உன்னை வணங்குகிறேன்!

o நான் எனது அபிமானத்தையும் ஆசையையும் தவிர்த்து விட்டு, மஹாபுருஷர்களையும் சாதுக்களையும் ஆராதனை செய்ததுமில்லை. சிரத்தையும், ஆஸ்தீக புத்தியையும் கைக்கொண்டு, புண்ணிய தீர்த்தங்களை தரிசித்ததுமில்லை. ஒரு பொழுதும் முறைப்படி இறைவனை பூஜித்ததுமில்லை. இவையேதும் தெரியாவிட்டாலும் சங்கு சக்ரபாணியே எனக்கு உன்னை மட்டும் தெரியும். எனவே நான் உன்னை சரணடைகிறேன்.

oகெட்ட வாசனைகள்- மனதுக்கும் உடலுக்கும் கேடுதரும் தீய பழக்க வழக்கங்கள் என்னை எப்போதும் தம் பக்கமாகவே ஈர்த்துக் கொள்கின்றன. பலவிதமான நோய்கள் என் மனதையும் உடலையும் அரித்தெடுக்கின்றன. வாழ்க்கையையும், பிறரை எதிர்பார்தே நான் நடத்திக் கொண்டிருக்கின்றேன். எனவே வாழ்வின் தீவினைகள் யாவும் நீங்கி, நான் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்திட அருளும்படி வேண்டி சங்கையும், சக்கரத்தையும் ஏந்திக்கொண்டிருக்கும் நாரணனே நீங்கள்தான் எனக்கு கதி என்று சரணடைந்து உம்மை வணங்குகின்றேன்....

oமுன்னர் செய்த பாவங்களெல்லாம் நினைத்து நினைத்து எனது உள்ளம் நடுங்கி கொண்டிருக்கிறது. பாவத்தில் விழுந்து மூழ்கியவர்களை தூக்கி நிறுத்தும் உனது கிருபைதான் உலகமறிந்த விஷயம். அதை உணர்ந்து சங்கு சக்ரதாரியாண உம்மைச் சரணடைகிறேன்...

oஹே பிரபோ! உன்னை மறந்தவர்கள் பிறப்பு, மூப்பு இவற்றால் துக்கமடைந்து, நோய்கள் பற்றி வருந்தி, காக்கை-நாய், நரி போன்ற பிறவிகள் எடுத்து நரகத்தில் வாசம் போன்ற விளைவுகள் ஏற்படு நடுக்கமும் கொள்வர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அதனால் சங்கு, சக்ரதாரியாண உன்னை மறக்காமல் உன்னையே சரணடைகிறேன்...

oநீசனாக இருந்தபோதிலும், மகா பாவியாக இருந்தபோதிலும், மிகவும் நிந்திக்கப்பட்டவனாக இருந்த போதிலும் பரவாயில்லை, ஓரு தரம் உன்னையே சரணாகதி என்று எவன் ஒருவன் சொல்கிறானோ, அவனை வைகுண்டத்திற்கு அழைத்து செல்லும் அன்பு மிக்கவன் நீ, அத்தகைய கிருபை உள்ள சங்கு சக்ரதாரியே, உன்னை வணங்குகிறேன்....

oவேதங்களிலும், தர்ம சாஸ்திரங்களிலும், ஆகமங்களிலும். ராமாயணம் மற்றும் பலபுராண தொகுப்புகளிலும் உனது கீர்த்தியே விஸ்தாரமாக கூறப்பட்டுள்ளது. ஆகையால் ஹே பிரபுவே, சங்கு சக்ரபாணியான உம்மையே நான் சரணடைகிறேன். நீங்காத ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ்ந்திட நீரே அருள்வீராக!

12.“பஞ்சாயுதத் துதி”- திருமாலின் திருவருளைப் பெற- புரட்டாசி மாதத்தில் -தினமும்.

oசுதர்சனம்: தீச்சுடரைப் போல் பலமடங்கு ஒளிவிட்டு பிரகாசிப்பதும், வல்லமை பொருந்தியதும், கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போல பிரகாசமானதும், அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்னு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகின்றேன்! எனக்கு அருள்க!

oபாஞ்சஜன்யம்: மகாவிஷ்னுவின் பவளச் செவ்வாய் வழியே வெளிவரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும் தன் கம்பீர ஒசையால் அசுரர்களுக்கு ஒலி அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை வணங்குகின்றேன்! எப்போதும் சரணடைகின்றேன்! எனக்கு அருள்க!

oகௌமேதகம்-கதை: பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்டவாசனின் கைநுனிகளின் ஸ்பரிசபாக்யம் பெற்றதுமாகிய கௌமேதகம் என்ற கதையை சதா சரணடைகிறேன்! எனக்கு அருள்க!

oநந்தகம்- வாள்: கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்பதால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் என்னும் பெயருடைய வீரவாளை என்றும் சரணமடைகிறேன்! எனக்கு அருள்க!

oசார்ங்கம்-வில்: தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக் கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப்போதும் சரணடைகிறேன்! எனக்கு அருள்க!

oஉயர்வானவையும் பரந்தாமனின் கரங்களில் இருக்கும் பாக்யத்தை பெற்றவையுமான பஞ்ச மகா ஆயுதங்களைப் போற்றும் இந்தத் துதியை தினந்தோறும் படித்து வணங்குபவர்களும் அதைக் கேட்பவர்களும் எல்லா துன்பங்களிருந்தும் விடுபட்டு சகல பாக்யங்களையும் அடைகின்றனர்! எனக்கும் அருள்க!

oவனங்களிலும், யுத்த பூமியில் சத்ருக்களின் மத்தியிலும், எதிர்பாரா விபத்துக்களின் போதும், அதீத பயத்தின் போதும் இந்தத் துதியைச் சொன்னாலும் படித்தாலும் ஆபத்துக்களிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் அடைவர்! எனக்கும் அருள்க!

13.“வெங்கடேச காரவலம்பம்”- கடன்கள் தோஷங்கள் தீர- புரட்டாசி மாதத்தில்- தினமும்/ சனிக்கிழமை.

அகில உலகத்திற்கும் இறைவனே. வெங்கடாசலபதியே உனக்கு எனது வணக்கங்கள். அனைத்து உலகங்களையும் காப்பவரே உன்னை வணங்குகின்றேன். கருணைக்கடலே, உலகில் மாயையில் மூழ்கித் தவிக்கும் என்னைக் கரைசேர்த்து ஆதரவு கைகொடுத்து அருள்வாய். நான் பட்ட கடன்களைத் தீர்க்க என்மீது இரக்கம் காட்டு, மாகாலட்சுமியின் நாயகனே, எனக்கு எல்லா செல்வங்களையும் அருளி என் தோஷமெல்லாம் நீக்கி என்னைக் காக்கும் இறைவனே வெங்கடாசலபதியே உனக்கு எனது வணக்கங்கள்.

14.“முகுந்தன் துதி”- கண்ணனின் வருகை- பாலமுகுந்த அஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தியன்று.

oதாமரை போன்ற கையினால், தனது தாமரை மலரையொத்த பாதத்தைப் பிடித்து தாமரை போன்ற முகத்தில் வைத்துக் கொண்டபடி ஆலிலை மேல் படுத்திருக்கும் அழகனை, பால முகுந்தனை மோக்ஷத்தை தருபவனை மனதால் நினைக்கின்றேன்!

oமகா பிறளயம் மூலமாக பிரபஞ்சத்தையே அழித்து விட்டு வடபத்ரசாயியாக ஆலிலை மேல் துயில்கின்றவரும், முதலும் முடிவுமான ஆதியோ அந்தமோ அற்றவரும், எல்லோருக்கும் ஈஸ்வரனும், சகலருக்கும் நல்லதையே அருள்வதற்காக அவதரித்தவருமான அந்த பாலமுகுந்தனை மனதால் நினைக்கின்றேன்!

oநீலோத்பல புஷ்பத்தின் கருமையிலும் ஓர் அழகு தெரியும். அத்தகைய திவ்யமான மிருதுவான வண்ணமுடையவரும், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவராலும் வணங்கப்படும் பாதத் தாமரைகளை உடையவரும், பிள்ளைவரம் வேண்டுமென்று கோருபவர்களின் இஷ்டத்தை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவருமான பாலமுகுந்தனை மனதால் தியானிக்கிறேன்!

oமுன்புறம் தொங்குகின்ற கேசங்களை- மயிர் கற்றைகளை உடையவரும், தொங்குகின்ற நீண்ட ஹாரத்தை உடையவரும், சிருங்கார ரசத்தை ஊக்குவிப்பது போன்ற அழகிய பல் வரிசைகளை உடையவரும் அழகிய கண்களை உடையவருமான பாலமுகுந்தனை மனதால் நினைக்கிறேன்!

oவிரஜ நாயகியான யசோதை வெளியே செல்லும் பொழுது உறியில் பால். தயிர், வெண்ணெய் ஆகியவற்றை பத்திரமாக வைத்து விட்டுப் போவாள். அவள் சென்றதும் குழந்தை கண்ணன் இஷ்டம்போல் அதையெல்லாம் சாப்பிட்டு விடுவான். அதன் பிறகு தூங்குவது போல பாவனை செய்து படுத்திருப்பான். அந்த அரி துயில் செய்யும் பாலமுகுந்தனை மனதால் துதிக்கின்றேன்!

oகாளிந்தி மடுவில் உள்ள காளியன் என்ற பாம்பின் படமாகிய அரங்க மண்டபத்தில் நடனம் செய்வதில் பிரியமுள்ளவரும். காளியனுடைய வாலின் நுனியைக் கையால் பிடித்துக் கொண்டிருப்பவரும், சரத் காலத்து சந்திரனைப் போன்ற முகமுடையவருமான பால முகுந்தனை மனதால் தியானிக்கிறேன்!

oஉரலில் கட்டப்பட்டவரும், மகாசூரரும், மிகவும் உயர்ந்த இரண்டு மருத மரங்களை விளையாட்டாகவே கீழே தள்ளியவரும், மலர்ந்த செந்தாமரை போன்ற நீண்ட அழகிய கண்களை உடையவரும் ஆகிய பாலமுகுந்தனை மனதால் தியானிக்கின்றேன்!

o செல்லமாக பிரியத்துடன் அன்னை யசோதாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே ஸ்தன்யபானம் எனப்படும் தாய்ப்பாலை குடித்துக் கொண்டிருப்பவரும், செந்தாமரை போன்ற கண்களை உடையவரும், சத்ரூபியும், சித்ரூபியும் பலவகயான உருவங்களை உடையவரும், தேவாதி தேவருமாகிய பாலமுகுந்தனை மனதால் நினைக்கிறேன்!

o நீ நினைத்தால் எதுவும் நடக்கும்! என் வாழ்வு வளம்பெற உன்னை துதிக்கின்றேன்!

15.“கண்ணன் துதி”-மதுராஷ்டகம்- கிருஷ்ண ஜெயந்தி.

o மதுராவில் அவதரித்த மாயவனே! உனது இதழ்கள் அழகானவை. முகம் வசீகரமானது. கண்கள் வனப்பானவை. உனது புன்முறுவல் அழகு. இதயம் அழகு, தளிர்நடை அழகு, மதுராதிபனே நீ நிறைந்திருப்பதால் அகிலமே அழகானது.

oஉனது பேச்சு இனியது. தன்மை அழகானது. நீ இருக்கும் இடம் அழகு. தவழ்தல் அழகு, நகர்தல் அழகு. சுழற்சி அழகு, மதுரா நாயகனே எதிலும் நீயே நிறைந்திருப்பதால் உலகமே அழகு.

oஉனது குழல் ஓசை இனிமையானது. பாத துளி உயர்வானது. கைகளும் கால்களும் அழகு. உன்திரு நடனம் ஒய்யாரமானது. பழகுதல் அழகு. மதுரா நாயகனே எதிலும் நீ இருப்பதால் அகிலமே அழகு.

oஉனது கீதம் அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப்பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு.

oஉனது செயல்கள் அழகு. நீ எதையும் கடந்து நிற்பது அழகு. பக்தர்களின் மனதை அபகரிப்பது அழகு. உன்னைப்பற்றி நினைப்பதே இனிமையானது. அணி அழகு, தோற்றம் அழகு, மதுராபுரியரசே, யாவும் நீயாக இருப்பதால் இவ்வுலகமே அழகானது.

oகதம்ப பூக்கள் அழகு. மாலை அழகு. அலைகள் அழகு. நீர் அழகு. கமல மலர் அழகு. மதுராபுரி நாயகனே, அகிலமே உனது என்பதால் அதுவும் பேரழகு.

oகோபிகைகள் அழகு, லீலை அழகு, இனைதல் அழகு, சிஷ்ட பரிபாலனம் அழகு, மதுராதிபனே சகலமும் நீயே என்பதால் அகிலமே அழகு.

oகோபர்கள் அழகு. பசுக்கள் அழகு, பிரிதல் அழகு, பயன் பலிப்பது அழகு, நீயே எதிலும் பரவி நிற்பதால் இந்த உலகமே அழகு.

16.“கிருஷ்ணன் துதி”- குந்திதேவி சொன்ன துதி- கிருஷ்ண ஜெயந்தியன்று.

வாசுதேவர்- தேவகியின் அருமைப் புதல்வனே கிருஷ்ணா, நந்தகோபரின் வளர்ப்பு மகனே கோவிந்தா, பசுக்களைப் பரிபாலித்தவனே கோபாலா, தங்களை வணங்குகின்றேன். நாபியில் கமலமான தாமரையை தரித்திருப்பவரே, தாமரை போன்ற கண்களை உடையவரே, பத்மரேகையைத் தன் கால்களில் கொண்ட மாகவிஷ்ணுவின் அவதாரமே, கிருஷ்ணா, தங்களை மீண்டும் வணங்குகின்றேன்.

17.“ராமநவமி ராமர் ஸ்லோகம்”- துக்கங்கள் விலகி சந்தோஷம் கிடைக்கப்பெற- ஆதிசங்கரர்- இராமநவமி -அன்று.

ராமச்சந்திரனே, ரகு குலத்து நாயகனே, தேவனே, தீனர்களைக் காப்பவனே. பாவங்களைப் போக்குகிறவனே, யாதவர்களில் சிறந்தவனே, யதுக்களுக்கு ஆபரணம் போன்றவனே, யஜ்ஞ வடிவினனே, மகாலட்சுமியாகிய சீதையின் நாயகனே, எனது எல்லா துக்கங்களையும் போக்கி சந்தோஷத்தைத் தரவேண்டும். வணங்குகிறேன்.

18.“ராமநவமி ராமர்-மகாவிஷ்னு ஸ்லோகம்”- சீரான வாழ்வுடன் மங்களங்கள் யாவும் கிடைக்கப்பெற-இராமநவமி -அன்று- நாரதமுனி அருளிய- ப்ரஹ்ம பாரம்- வராஹ புராணம்.

oமேலானவற்றுக்கொல்லாம் மேலானவன், அரியதற்கும் மேலாக அரிதானவன், மிகுந்த சக்தி உள்ளவன், நிரந்தரமானவன், எவராலும் பக்தியால் அடையக் கூடியவன், ஒப்பற்றவன், முன்னைக்கும் முந்தையவன், ஒளிமயமானவன், ஞானிகளுக்கெல்லாம் முதன்மையான பரம ஞானஸ்வரூபனான அந்த விஷ்னுவை நமஸ்கரிக்கின்றேன்.

oபுராதனமானவரும் அன்புருவானவரும், பராபரரும், அதீதமான தேஜசையுடையவரும், கம்பீரத்திற்கும் மேலான கம்பீரமுள்ளவரும், பழமைக்கும் பழைமை யானவரும், சக்தியே வடிவெடுத்தவருமாகிய அந்தப் பரமாத்மாவைத் துதிக்கிறேன்.

oபராத்பரனும் தனக்கு இணையாக எவரும் இல்லாதவரும், சுத்த சொரூபியும், அளவற்றவரும், பராத்பரேசரும், ஆதியானவரும் குற்றமற்ற சுபாவமுள்ளவருமான நாராயணனை நமஸ்கரிக்கிறேன்.

oஅவரே முன்பு சூன்யத்திலிருந்து ‘புரம்’ உலகம் என்பதை உண்டாக்கினார். அவரே பிரகிருதியையும் தோற்று வித்தார். அதில் உறையும் ஆத்மாவான புருஷனையும் அவரே உண்டாக்கினார். வணங்குகிறேன்.

oஅப்பாலுக்கு அப்பாலானவரும், நீதிமான்களில் தலைமையானவரும், அண்டியவரைக் காப்பவரும், அமைதியின் வடிவமானவரும், போற்றுதலுக் குரியவரும், மகானு பாவருமான விஷ்னுவை சதா நமஸ்கரிக்கின்றேன்.

oமுடிவே இல்லாதவரும், ஆயிரக்கணக்கான கை, கால், முகங்களை உடையவரும், எல்லாம் தானாக இருப்பவரும், சூரியனையும் சந்திரனையும் தனது கண்களாகக் கொண்டவருமான அந்த நாராயாணனைத் துதிக்கின்றேன்.

oபடைத்தல் காத்தல், அழித்தல் என்று மூன்று தொழில்களையும் புரிபவனும், மூன்று வேதங்களையும் அடையக்கூடியவனும், இருபத்தெட்டு உருவங்களை உடையவனும், உத்தராயணம், வளர்பிறை, பகல் என்ற மூன்று காலப் பரிமாணங்களில் நிலை கொள்பவனும், தக்ஷிணம், ஆஸ்வனீயம், கார்ஹபத்யம் என்ற மூன்று சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று தத்துவங்களுக் குரியவனுமான நாராயணனை நமஸ்கரிக்கிறேன்.

oக்ருதயுகத்தில் வெண்மையாகவும், திரேதா யுகத்தில் சிவப்பு நிறத்திலும், த்வாபர யுகத்தில் மஞ்சள் நிறத்தோடும், கலியுகத்தில் கருநிறத்தோடும் விளங்கும் அந்தப் பரந்தாமனை நமஸ்கரிக்கின்றேன்.

oபிரபஞ்ச சரீரத்தில் அந்தணர்களை முகத்திலிருந்தும், க்ஷத்ரியர்களை தோள்களிலிருந்தும், வைசியர்களைத் தொடைகளிலிருந்தும், இதரர்களை பாதங்களிலிருந்தும் உண்டாக்கியவர் அவரே. வணங்குகிறேன்.

oஅளவிடமுடியாதவரும், உயர்ந்தவர்களையெல்லாம் விட உயர்ந்தவரும், புதியவர்கள் யாவரையும்விடப் புதுமைக்கும் புதுமையான புதியவரும், ஸ்ரீகிருஷ்ணன் என்கிற உருவெடுத்தவரும், தனது கரங்களில் கதை, வாள். தன்வந்திரியாக அமிர்தம் ஆகியவற்றை வைத்திருப்பவரும் இனையில்லாதவருமான நாராயணரை நமஸ்கரிக்கிறேன்.

oஇவ்வாறு என்னால் துதிக்கப்பட்டவுடன் பகவான் விஷ்னு நேரில் தோன்றி, தேவையான வரத்தைக் கோரிப் பெறுக என்று ஆசியளித்தார். நாரம் என்ற இசை வெள்ளத்தை அவர் எனக்கு அளித்ததால் நாரதன் என்ற பெயர் பெற்றேன். பெருமையும் பெற்றேன். இத்துதியைப் பாடிப் பணிவோர் எவரும் அவன் அருள் வெள்ளத்தில் நனைவது நிச்சயம். வணங்குகிறேன்.

19.நாராயணீயம் - மகாலட்சுமி அவதாரத்தின்போது- நாராயண பட்டத்திரி பாடியது- வெள்ளிக் கிழமை, தீபத் திருநாள்.

oகடலிருந்து காலகூட விஷம் பயங்கர நெருப்பாக வெளிவந்தது. அதனால் பயந்த தேவர்கள், பரமசிவனை தஞ்சமடைந்து துதித்தார்கள். அதனால் மகிழ்ந்து போன பரமசிவன் உன்னுடைய விருப்பத்தை மதித்து அந்த விஷத்தைக் குடித்து விட்டார்! உன்னை வணங்குகின்றேன்!

oமூன்று மூர்த்திகளின் வடிவானவரே! தேவர்களும் அசுரர்களும் மேலும் புது முயற்சியுடன் உன்னை முன்னிட்டு பாற்கடலைக் கடைந்தார்கள். அப்பொது காமதேனு தோன்றினாள். அவளை நீர் வேள்வி காக்க ரிஷிகளிடம் அளித்தீர். பிறகு மிகச் சிறந்த குதிரை உச்சை சிரவஸ் தோன்றியது. அதன் பின் ஐராவதம் என்ற சிறந்த யாணை, கற்பகமரம், அப்சர ஸ்த்ரீ கணங்கள் தோன்றின. அவற்றை தேவர்களுக்கு அளித்தீர்கள்! உன்னை வணங்குகின்றேன்!

oஜகதீசரே! அதன் பின்னர் மனதைத் தங்களிடமே வைத்தவளும் மனத்திற்கு இனியவளுமான மகாலட்சுமி தோன்றினாள். மாசில்லாத அந்த மகாலட்சுமியைக் கண்ட யாவரும் நெஞ்சம் பரபரக்க அவளை அடையவே விரும்பினார்கள்! உன்னை வணங்குகின்றேன்!

oதங்களுக்கென சமர்பிக்கப்பட்ட மனமுடைய லக்ஷ்மிதேவிக்கு தேவேந்திரன் இரத்தினமயமான பீடத்தை அளித்தான். எல்லோரும் அபிஷேக சாமான்கள், சாதனங்களைக் கொண்டுவர, மகரீஷிகள் வேத கோஷங்களோடு அபிஷேகம் செய்தார்கள்! உன்னை வணங்குகின்றேன்!

oதன்மேல் சொரிந்த அபிஷேக நீரோடு, உங்கள் பாசப் பார்வைகளையும் உள் வாங்கிப் பிரகாசிப்பவளுமான மகாலட்சுமியை, தேவர்கள் ரத்ன குண்டலங்கள், ஹாரம் போன்ற அணிகலன்களாலும் மஞ்சள் பட்டாடையாலும் அலங்கரித்தார்கள்! உன்னை வணங்குகின்றேன்!

oஅழகுப் பதுமையான மகாலக்ஷ்மி, கையில் சுயம்வர மாலையுடன் உங்களை நோக்கி வந்தாள். அந்த மாலையை வண்டுகள் ரீங்காரத்துடன் சுற்றிச் சுற்றி வந்து மொய்த்துக் கொண்டிருந்தன. கும்பங்கள் போன்ற அவளின் தனங்களின் பாரம் அழுத்தியதால் அந்த மகாலட்சுமியின் நடை மென்நடையாக இருந்தது. அப்படி அவள் நடந்து வரும்போது பாதச் சிலம்பு ஜல். ஜல்லென்று ஒலித்தது. அந்த ஒலியோடு, நாணம் போட்டியிட நடந்து உங்களை வந்து அடைந்தாள். உன்னை வணங்குகின்றேன்!

oசிவன், பிரம்மா போன்ற சற்குண சீலர்கள் அங்கே இருந்தார்கள். இருந்தாலும் அவர்கள் ஏதேனும் ஒருவகையில் தோஷம் உள்ளவர்களாக இருந்தார்கள். இதனை அலைமகள் உணர்ந்திருந்ததால் தான் எல்ல நல்ல குணங்களை உடையவரும், மனதை மயக்கும் மாயவனுமாகிய தங்களுக்கே, மகாலட்சுமி மாலை சமர்பித்தாள்! உன்னை வணங்குகின்றேன்!

oலோக மாதாவாகவும் உம்மைத் தவிர வேறு எவரிடதிலும் நாட்டமில்லாதவளாகவும் இருந்த அந்த தேவியை உடனே நீர் உமது மார்பில் தாங்கிப் பெருமைப் படுத்தினீர். உமது மார்பில் பிரகாசித்த அந்த மகாலக்ஷ்மியின் சுபிட்சம் என்ற இன்ப மழையால் உலகமே செழித்தது! உன்னை வணங்குகின்றேன்!

oஅதன் பின்னர் எவரையும் விரைவில் மயங்கச்செய்யும் குணமும், வீண் திமிர், கர்வம், கோபம், சுயநினைவு இன்மை ஆகியவற்றை உண்டாக்கும் வல்லமையும் படைத்தவளான வாருணீதேவி பாற்கடலிருந்து வெளிப்பட்டாள். தமோ குணத்திற்கு இருப்பிடமானவள். அசுரர்கள் பாற்கடலை கடைந்ததற்குத் தங்களுக்கு சிறந்த வெகுமதி அவளே எனக் கருதும் வகையில், மதுவுக்கு அதிதேவதையான வாருணீதேவியை அசுரர்களுக்கு அளித்தீர்கள்! உன்னை வணங்குகின்றேன்!

oபிறகு மேகம்போல திரண்ட அழகுத் திருமேனியோடு இரு கைகளாலும் அமிர்தகலசத்தை ஏந்திக் கொண்டு கடலிருந்து தன்வந்திரியாகத் தாங்களே வெளிப்பட்டீர்கள்! என் வாழ்வில் மங்களங்கள் நிலைத்திட நீரே அருள்வீராக, வறுமைகள் விலகவும், நோய்கள் நீங்கி அரோக்கியமும் ஆயுளும் நீடிக்கவும் அருள் செய்வீராக! உன்னை வணங்குகின்றேன்!

20.“நாராயணீயம்”- வெப்ப உஷ்ணத்தின் பாதிப்பை நீக்க- நாராயண பட்டத்திரி பாடியது

oகுருவாயுரப்ப, உன் தோழர்களான ஆயர்குலச் சிறுவர்கள் காணவேண்டு மென்பதற்காகவே, பிரலம்பாசுரனுடன் நடத்திய போரை நெடுநேரம் நடத்தினாய், உன் நண்பர்களும் கண்டு களித்தார்கள். அவர்கள் தம்மை மறந்து இவ்வாறு களித்துக் கொண்டிருந்த போது, மேய்ந்து கோண்டிருந்த பசுக்கள் தாமாகவே பசும் புற்களைத் தேடிப்போய், ஐஷிகம் என்ற காட்டுப்பகுதியை அடந்தன.

o குருவாயூரப்ப, ஐஷிகம் என்ற அந்தக் காட்டில் வெயில் கடுமையாக இருந்தது. அதனை எதிர்பாராத பசுக்களுக்கு ஏன் கொடுமையான அந்த வெம்மை அனுபவம். பிருந்தாவனத்திலிருந்த வரையில் இத்தகைய வெப்பத்தை அவை உணர்ந்திருக்கவில்லை. அந்தக் காட்டை அடைந்தபோது அவற்றின் தவிப்பு மும்மடங்காகியது. வெயிலின் கொடுமை படிப்படியாக அதிகரித்தது. முதல் வாட்டம் என்றால், புதிய திசை தெரியாத காடு என்பதும், கண்ணனாகிய உன்னை விட்டுப் பிரிந்த வருத்தமும் பரிதாக வாட்டியது, அதோடு அவற்றுக்குத் தாளமுடியா தாகம் வேறு வாட்டி எடுத்தது. அவை செயலற்று நின்றன.

o குருவாயூரப்பா! அப்போது நீர் ஏதும் அறியாதவர் போல் ஆயர் சிறுவர்களுடன் சேர்ந்து பசுக்களைத் தேடினீர். சிறிது நேரம் கழித்து கொடிய வெப்பத்தால் தானே பற்றி எரியும் தன்மை கொண்ட முஞ்சைக் காட்டின் நடுவே பசுக்கள் தவிப்பதைக் கண்டீர்கள். அவற்றை மீட்டுவர நீங்கள் முயன்றபோது திடீரென்று வெப்பத்தால் காட்டுத் தீ பற்றி நான்கு திசைகளிலுமிருந்து எரியத்தெடங்கியது அல்லவா.

o அந்தக் காட்டுத்தீ பெருத்த ஓசையுடன் நாலா புறமும் பரவி பற்றி எரிந்தது. அதனால் திரும்பி வரும் வழி தடைப்பட்டது. ஆயனச் சிறுவர்கள் தீயின் வெம்மையும் வெயிலின் கடுமையும் சேர்ந்து வாட்டியதில் பாதி கருகினவர்கள் போலாகி விட்டனர். மனமும் உடலும் நொந்து ஹே ஜெகன்னாதா எங்களைக் காப்பாற்றும் காப்பாற்றும் என்று கூவினார்கள். எத் துன்பத்திலும் காப்பாற்றும் ஒரே பரம்பொருள் நீர்தானே!

o நீ என்ன செய்தாய் தெரியுமா கிருஷ்ணா. அஞ்சிய ஆயனச் சிறுவர்களுக்கு உடனே அபயம் அளித்தாய்! அஞ்சியது போதும் போதும். நீங்கள் எல்லோரும் கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்று கட்டளை போல் சொன்னாய். உன் வார்த்தை அயனச் சிறுவர்களுக்கு வேதவாக்கியம் அல்லவா. அப்படியே கண்களை மூடிக் கொண்டார்கள். அவர்கள் கண்களைத் திறந்தபோது என்ன ஆச்சரியம். காட்டுத்தீ எங்கே. முஞ்சைக்காடு எங்கே. அதிசயம். அவர்கள் பாண்டீர மரத்தின் நிழலில் மிகவும் பத்திரமாக இருந்தார்கள்.

o ஜய ஜய மாதவா எப்பேர்பட்ட மாயை. உமது மாயை என்று ஆயர் சிறுவர்கள் உன்னைப் போற்றிப் புகழ்ந்தார்கள். நீரோ புன்முறுவல் பூத்துக் கொண்டு நின்றீர்கள். அந்தக் காட்டில் பூத்திருந்த பாதிரி மலர்களால் மட்டுமே அது கோடைகாலம் என்பது தெரிந்தது. உனது மாயையினால் அந்த வெப்பத்தைப் போக்கி விட்டாய். பின்னர் உன் தோழர்களுடன் அக்காட்டில் சுற்றித் திரிந்தாய்.

o குருவாயுரப்ப. நீ அந்த யமுனை கரையிலிருந்த போது கோடைகாலம் எப்படி இருந்தது. உன்னிடம் பக்தி இல்லாதவர்களின் உள்ளத்தில் உண்டாகும் துன்பத்தின் வெப்பம் போலிருந்தது. மனதில் உள்ள பாவம் என்னும் சேற்றைக் காய வைக்கும் தன்மையுடைய இதமான வெப்பம் உன்னுடைய சத்சங்க பஜனை சேவைபோல பாகவத சேவை போல இருந்தது. உன்னுடைய கைகளிலிருந்து வெளிப்படும் ஒளிபோல் இருந்தது. நமக்கு குருவாயுரப்பன் அருளால் அத்தகைய கோடைகாலம் கிடைக்கட்டும்.

o குருவாயுரப்ப. அந்தக் கோடைகாலத்தைத் தொடர்ந்து உனது கரிய திருமேனி போன்ற கருமேகங்கள் தோன்றின. தங்கள் இடையில் உள்ள பொன்னாபரணங்களைப் போல ஒளி வீசும் மின்னற் கொடிகள் தோன்றின. எல்லோருக்கும் இதமளிக்கும் மழைக்காலத்தை மலைக்குகைகளில் தங்கி உங்கள் விருப்பம் போல கழித்தீர்கள்.

oதேவதேவா. மலையரசனான கோவர்த்தனகிரி தன்னிடத்தில் உள்ள குகைகளில் தங்கியிருந்த உமது மேன்மையை உணர்ந்து தன்னிடமுள்ள மயில்களைக் கொண்டு காரூக போன்ற ஒலிகளை எழுப்பித் துதி செய்தான். மல்லிகை, கதம்ப மலர்களால் உனக்கு மலர் வழிபாடு செய்யும் பாக்கியத்தைப் பெற்றார்.

oஅதன்பின் சரத்காலம் வரைத் தாங்கள் அந்த வனப் பகுதியில், அடர்ந்த காடுகளின் அழகை ரசித்துக் கொண்டு வலம் வந்தீர்கள். அந்த சரத்காலம் எப்படி இருந்தது தெரியுமா. உங்களின் பக்தர்களின் தெளிந்த நிர்மலமான நதி கருணை பெருக்கொடுத்து ஓடுவது போலிருந்தது. தங்களுடன் வந்த பசுக்கள் புற்களை மேய வகை செய்தும், பல லீலைகளைச் செய்து வேனுகானம் இசைத்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய பவனேபுரீசரே எனக்கு உடல் நலனைக்கொடும். பிரச்சனை எனும் வெம்மை எம்மை அனுகாமல் காத்திடுங்கள். மகிழ்ச்சி, குளுமைத் தென்றலாக வீசிட அருளுங்கள்.

21.“சுந்தரகாண்ட பாசுரம்”- தடைகள் போக்கி சுகங்கள் சேர்க்கும்- சுந்தரகாண்டம் முழுதும் படித்த பலன்.

சீராரும் திறல் அநுமன் மாகடலைக் கடந்தேறி
மும்மதிள் நீளிலங்கை புக்குக்கடிகாவலில்
வாராரும் முலை மடவாள் வைதேகிதனைக் கண்டு
நின்னடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயேத்தி தன்னில் ஒர்
இடவகையில் எல்லியதோது இனிதிருக்க
மல்லிகை மாமாலை கொண்டாய் கார்த்ததுவும்
கலக்கியமா மனத்தினனாய் கைகேயிவரம் வேண்ட
மலக்கியமா மனத்தினனாய்
மன்னவனு மாறாதொழியக்
குலக்குமரா காடுறைப்போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு சுங்கு யேகியதும்
கங்கை தன்னில் கூரணிந்த வேல் வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதுவும்
சித்திர கூடத்திருப்ப பரதநம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலைதீண்ட அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா நின் அபயமென்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன்னொத்த மானொன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர்கோன் உரைத்த அடையாளம்
ஈதுஅவன் கைமோதிரம் என்று
அடையாளம் தெரிந்துரைக்க
மலர்க் குழைவாள் சீதையும்
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அநுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சிமேல் வைத்து உகக்க
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர் கோன்மாக் கடிக்காவை இறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர்கோன் சினமழித்து, மீண்டும் அன்பினால்
அயோத்தியர் கோன் தளர் புரையும் அடி இனைபணியச் சென்றான்.

22.“இராமாயணப் பாசுரம்”- புண்ணியங்கள் சுகங்கள் சேர்க்கும்- இராமாயணம் முழுதும் படித்த பலன். சுவாதி திருநாள் மகாராஜா எழுதியது-பவயாமி ரகுராம் துதி.

oஒ ராமா வணங்குகின்றேன். ரகு குல திலகா, கருணை சொரூபனே உன்னை துதிக்கின்றேன். கருணைக்கடலில் விளையாட்டாகவே ரமிப்பவனே உன்னையெ பணிகின்றேன். வேள்விகளின் நாயகனான சூரியனின் குலத்தில் உதித்தவனே! ரகு குல திலகனே வணக்கம்.

oவனம் சென்று சுபாஹு என்ற அரக்கனை கொன்றவனே. அகல்யா என்ற கௌதமுனி மனைவிக்கு சாபம் தீர்த்தவனே. சிவதனுசை உடைத்தவனே. அதன் பயனாக ஜனககுமாரியின் பிராணநாயகன் ஆனவனே. கார்த்தவீர்யார்ச்சுனன் இழைத்த அநீதியினால் கோபமடைந்து க்ஷத்ரிய வம்சத்தின் தலைமுறைகளை அழித்ததாக கர்வப்பட்ட பிருகுராமனின் கொட்டத்தை அடக்கியவனே. வணக்கம். சாகேத ராமா வணக்கம்.

oபட்டாபிஷேகத்தை ஒதுக்கி, மனைவி சீதை மற்றும், அடக்கம் தர்மத்தின் இலக்கணமான லட்சுமணனுடன் கானகம் சென்று குகனுடைய இருப்பிடத்தை அடைந்தவனே, அதன்பின் சித்ரகூடபர்வதத்தை அடைந்தவுடன், தம்பி பரதன் உன்னை காண ஒடிவந்தான், மன்மதனும் மயங்கும் சுந்திரனே. அப்போது தானே திவ்ய ரத்னங்களிழைத்த பாதுகையில் வைபோகம் நடந்தேறியது.

oஇருளடர்ந்த தண்டகாரண்யம் சென்றபோது விராடன் என்னும் ராட்சசனைக் கொன்றவரே. மாசில்லா குணக்குன்றான நீங்கள் அகஸ்தியரின் சீடரான சரபங்க முனிவருக்கு மோட்சம் அருளியது வைஷ்ணவாஸ்திரம் போன்றது. பஞ்சவடியில் தவசீலனாய் எளிமையாய் வாழ்ந்த உம்மை கழுகுகளின் அரசான ஜடாயு வணங்கியது. கோர சொருபமான சூர்ப்பணகை தனது இறுதிப் பயணம் தேடி ஓட வகை செய்த ராமா உன்னை வணங்குகின்றேன்.

oமாயமான் உருவெடுத்து வந்த அரக்கன் மாரீசனைக் கொன்றவனே. பத்துத் தலைகளையுடைய ராவணன், ஜனகரின் மகளைத் தேடிவந்து கடத்திச் சென்றான். பாவமற்ற புண்ணிய சீலனான அந்த சூரிய குலத்தோன்றலான ராமபிரான் பம்பாதீரத்தில் ஆஞ்சநேயரை சந்தித்தார். அதன்பின் ராட்சசர்களின் நண்பன் வாலியைக் கொன்றான். உன்னை வணங்குகின்றேன்.

oவானர அரசருடன் கலந்து ஆலோசித்து வாயு குமாரனான அனுமனிடம் நூறு சூரிய ஒளிமயமான கெம்பினால் இழைக்கப்பட்ட கணையாழியைக் கொடுத்தார். அவரும் தாம் திரும்பி வரும் போது கொணர்ந்த சூடாமணியைக் கண்டவுடன் அனைத்து செல்வங்களும் மீளக் கிடைத்தாற்போல் உணர்ந்தார். சமுத்திரக் கரையில் விபீஷணர் சரணடைந்த ராமரை நான் பணிவோடு வணங்குகின்றேன்.

oஎவர் சேது அணையைக் கடலின்மேல் கட்டி அசுர வேந்தனின் சிம்மாசனத்தை உலுக்கினாரோ, எவர் தசகண்ட ராவணனை எளிதில் கொன்ற அதிதீரரோ, எவர் அக்னி பிரவேசம் புரிந்து தூய்மையை அறிவித்த ஜனககுமாரியுடன் சாகேதபுரிக்கு வந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டாரோ, அந்த லோக நாயகனான பத்மநாபனை புஜிக்கின்றேன்.

23.“பஜகோவிந்தம்” வாழ்க்கையில் தெளிவு ஏற்பட அவசியம்படிக்க வேண்டியது- மூலம்-ஜகத்குரு ஆதிசங்கரர்.
கோவிந்தன் வாழி! நம் கோவிந்தன் வாழி! 
கதிவேறில்லை மதிகெட்ட மனமே. 
மரணம் வந்தெதிரில் நிற்கும்போது 
சரணம் வேறில்லை, மாதவனடியின்றி.

வாவென்று காலன் வந்தழைக்குங்கால் 
ஆவென்று அலறுவாய் கற்றறி மூடனே!
நெட்டுருஞ் சூத்திரங்கள் அப்போது 
சற்றேனும் உதவா மடமதியே!

செல்வம் ஈட்டும் ஆசைஒரு தீராத்தாகம், வெல்லுதல் வேண்டும் 
அந்தப் பொல்லா நோயை. நல்ல முடிவு செய்துகொள் 
உள்ளத்திலே, சொந்தத்தில் பாடுபட்டு வந்ததை வைத்து
அந்த மட்டில் போதுமென்று மகிழ்ந்து அமர்வாய்.

நம்பாதே நரம்பு வேகத்தை
நோக்காதே நாரியர் தேகத்தை
வலுவில் ஏன் வாவெனல் 
விவேகமழிக்கும் வியாமோகத்தை!

மார்பின் அழகும் இடையின் அந்தமும்
வேர்வையும் மலமும் அழகும் தசையுமென்று
தீர்த்த இந்த உண்மையைத் திரும்ப திரும்ப 
ஓர்த்தோர்ந்து உள்ளத்தில் உறுதி அடைவாய்!

மனஸி விசிந்தய வாரம் வாரம்
ஆயுள் முழுவதும் தீராத் துயரம்
நோயும் நொடியும் உடலை வாட்ட
பற்றும் வாட்ட மதிகெட்ட மனதை

சற்றும் ஒழியாது ஆசைமேல் ஆசை
தாமரை இலையின் நீர்த்துளி போல்
சாகும்வரை அலைச்சல், சுகமொன்றில்லை
சஞ்சலமன்றிச் சாந்தமென்பது கொஞ்சமுமில்லா வாழ்க்கை!

பலமுள்ளபோது சம்பாத்திய சக்தி
சம்பாத்தியமுள்ளவரை பந்து பாத்திய பக்தி
வருமானமுள்ள மட்டும் பரிவாரக் கூட்டம்
கிழவனாய்ப் படுத்தபின் விழுந்தோடிக் கலையும்

மூதேறிப் போனால் ஏதென்பாரில்லை.
மூச்சுள்ளபோது மனையாளின் பேச்சு
கட்டியணைத்த தேகம் பட்டுப் போச்சு என்றதும்
பயங்கொண்டகல்வாள் சுயம்வர மனைவியும்.

விளையாட்டில் தீரும் குழந்தைப்பருவம்,
பின்னர் வளையல் கை மகளிரே சிந்தனையெல்லாம்,
மனைவியும் மக்களும் கிழவன் விசாரம்,
கடவுளை நினைப்பனில்லை எந்த சூழலிலும்.

சொந்தமேது பந்தமேது மனிதர்குலமே, விந்தையே 
அனைத்தும் சிந்தித்தாயேல், மனைவியர் மகனார் 
நீயுந்தானார் அனைத்துமே மாயை என்றுணர்வாய்
குலமேது ஊரேது உயிருக்கு!

நல்லது நல்லது நல்லவர் நேசம், அதனால் 
குறையும் பிடித்த பாசம், பாசம் குறையத் தீரும் 
மோகம். மோகம் போயின் சித்தத்தில் அமைதி
அதுவே உயிருடன் வீடெனக் கண்டுகொள்.

முதுமை மேலிட மாயும் காமவிகாரம்
வற்றிய நீர்நிலை இருந்தவிடம் காணாது,
செல்வம் சுருங்கியது சூழ்ந்த சுற்றம் எங்கே!
ஞானம் பெற்றதும் ஓயும் மாயமெல்லாம்.

துறவு மார்க்கமே மார்க்கம், உறவும் 
பணமும் வயதும் நம்பிட வேண்டாம், ஆங்காரம் 
போங்காலம் வந்தால், சடக்கென்று மறையும் 
மகனே நொடிப்பொழுதில் எல்லாம்.

காலையென்றும், நடுப்பகலென்றும், மாலைச் சந்தியென்றும், 
மீன்திகழ் இரவு என்றும், கோடையென்றும் குளிர்பனியென்றும் 
ஆடியாடிக் களிநடனமாடும் காலதேவியவள். இடையறா 
தறுத்தாயுளைக் கழித்தும், மடைமை ஆசை தணியவில்லையே.

புத்திகெட்ட மனமே, உன்னை நடத்துவார் இல்லையோ!
சொத்தும் மனைவியும் இப்பவும் விசாரமோ!
இறக்கும் தறுவாயேனும் நல்லாரின் சேர்க்கை
பிறவிக் கடலைக் கடத்தும் நல்ல நாவாயாமே!

நரம்பெல்லாம் நைந்தன, மயிரெல்லாம் நரைத்தது,
குரங்கு முகமாச்சு, பல்லும் இழந்தாச்சு,
கோலூன்றி நடக்கின்றான் தள்ளாடும் கிழவன்,
மேலும் மேலும் ஆசை இதற்கென்ன செய்வதையோ!

மரத்தடி இருப்பிடம், எடுப்பது பிச்சை,
இரவினில் மோவாய்ச் சேருது முழங்கால் 
இவனையும் ஆட்டுது போராசைப் பேய்
எவனையும் விடாதோ தீரா இந்நோய்!

கங்கையில் குளித்து கடலில் மூழ்கி எங்கேயும் போய் 
எந்த நோன்பு நோற்றும், தானங்கள் பலசெய்து புண்ணியம் 
பல சேர்த்தும், ஞானத்தை அடையாது விடுதலையில்லை.
இமயமுதல் குமரிவரை நிலைத்த சமயங்கள் சொன்னது இதுவே!

போகமும் சொத்தும் நீத்ததே செல்வம், ராக விகாரம்
காத்ததே இன்பம், அன்றொரு கோபுரவாயில்,
இன்றொரு மரத்தின் நிழல், படுப்பது தரை, உடுப்பது தோல்
தடுப்பார் யார் வேண்டாமையின்பம்!

யோகத்திலிருப்பவனும் ஒரு சுகவேகத்திலிருப்பினும்
கூட்டத்திலிருப்பினும், தனியிடத்திலிருப்பினும்
அகிலம் கடந்த மெய்ப்பொருளில் கலந்து
மகிழும் மகிழ்ச்சியே அளவிலா மகிழ்ச்சி.

சிறு அளவேனும் பகவத்கீதை ஓதி, ஒரு துளியேனும் 
கங்கைநீர் அருந்தி, ஒரு கணமேனும் 
எப்போதேனும் திருமாலை வழிபட்டிருந்தாயேல்
ஒருவித பேச்சும் வாதமுமில்லை வரும் எமணுக்கு உன்னிடம்.

பொறுப்பது கஷ்டம்! அருள்வாய் முராரி!
பிறப்பது மிறப்பதும் மறுபடி பிறப்பதும்
கரைகாணேன் பிறவிக் கடலுக்கு,
சரணம் சரணம் காப்பாய்!

புண்ணியம் தேடமாட்டான் பாவமும் செய்யான்
கண்ணனில் கரைந்து போச்சு இந்தபித்தனின் சித்தம்
குப்பைக் கந்தலுடுத்தியதுவே நல்லாடையென்பான்
எப்பவும் ஆனந்தம் மனந்த ஆனந்தமிவன் உள்ளம்.

என்ன ஈதெல்லாம், நான் யார்! நீர் யார்!
அன்னையும் யார்! அப்பனார் யார்! யாதெம் ஊர்!
ஒன்றுமில்லை இங்கே தேடும் பொறுள் எனக் 
கனவின் கவலைகளைத் துறப்பாய்!

என்மேல் ஏன் கோபம் அண்ணே! 
தன்னையே தான் வெறுத்தல் விவேகமோ!
என்னுயிருக்கும் உயிராவான் கோவிந்தன்
உன்னுயிர்க்கும் அவனே உயிரன்றோ!

யாதுமோர் உயிர் ஏதிலுமோருயிர்
ஏதுயிரும் கோவிந்தன் கோயிலே அன்றோ!
யாது பொருளுமில்லை உன் வெறுப்பில் அண்ணே!
பேத எண்ணம் நீத்தெங்கும் ஒருயிரைக் காண்.

பகையென்றும் நட்பென்றும் பாராதே, மகனென்றும் 
உறவென்றும் மயங்காதே, சிவனடி சேரவேண்டின் சீக்கிரமே
எவனின்று அகல்வதும் வேண்டாம், சேர்வதும் வேண்டாம் 
நட்பென்று, யார் மாட்டும் நிற்பாய் ஒன்றுபோல.

சேமம் உனக்கு சொல்வேன், 
காமம் வேண்டாம், கோபம் வேண்டாம் 
ஆபத்தினின்று தப்புவாயேல் அகற்றுவாய் 
லோபத்தை, ஒழிப்பாய் மோகத்தை,

இந்த நான்கையும் ஒழிதமர்ந்தே
சிந்திப்பாய் நான் என்னும் பொருளை
உண்மை ஞானம் அடையப் பேதையர் 
இம்மையிலும் வேகுவார் நரகத்தில்.

பாடுவாய் ஹரிநாமம், ஓதுவாய் கண்ணனின் கீதை, தேடுவாய் 
ஈசனுருவம் இடைவிடா பாவனையால், நல்லோர் மாட்டிலே 
மனத்தை நிறுத்து, செல்வம் உண்டேல் ஏழைக்குதவு
சுருக்கமாய் சொன்னேன்.பெருக்குவதேன்.

மண்ணுலகத்தில் சாவதென்பது உறுதி இதை
கண்ணாரக் கண்டும் ஐயோ பாபத்தை விடாரே!
எளிதென்றே தோன்றும் பொது மகளிர் போகம்
அழியாத் துயரம் அறியாயோ பின்வரும் ரோகம்.

வியர்த்தம் பணம் பணமென்றலைவது, 
அர்த்தம் என்பது அனர்த்தமே காண், 
எள்ளளவும் சுகமில்லை பணம் சேர்ந்த பாவிக்கு,
கள்ளனை மட்டுமல்ல, பெற்ற மகனையும் அஞ்சுவான்,

சந்தேகமில்லை உண்மையிது அறிவாய்
எந்த ஊரிலும், யாரிடத்துமுள்ள பணத்தின் கதியாம்
அகக் கோயிலை காப்பாய்! மகனே மிகக் கவனம் 
வைப்பாய்! மிகக் கவனம் வைப்பாய்!

சுவாசத்தை ஒழுங்காக்கி அமர்ந்து, 
அவாவை அடக்கி ஐவர் மூர்க்கரை 
மெய்யெது, மோகமெது என்றோர்ந்து
செய்யும் ஜபமும் தியானமுங் கொண்டு

பையப் பையப் பயில்வாய் அலையாதிருக்கவே, 
மெய்பொருளின் சித்தத்தை நிலை நிறுத்தவே!
குருவின் பாதகமலத்தில் குறையா பக்தி வைப்பாயேல்
பிறவிச் சிறையினின்று துரிதம் மீள்வாய் உறுதி

புலனும் மனமும் ஒழுங்குபட்டால்
காண்பாய் உன்உள்ளத்தினுள்ளேயே!
உலகத்தையாளும் தேவனின் 
ஒளிமயமான ஒளிஉருவை!

24.ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிந்தா”

• ஸ்ரீ ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரியா கோவிந்தா

• நித்ய நிர்மலா கோவிந்தா
நீல்மேகஸ்யா கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா

• நந்த நந்தன கோவிந்தா
நவநீத சோர கோவிந்தா
பசு பாலக ஸ்ரீ கோவிந்தா
பாப விமோசன கோவிந்தா

• துஷ்ட சம்ஹார கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலக கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா

• வஜ்ர மகுடதர கோவிந்தா
வராக மூர்த்திவி கோவிந்தா
கோபி ஜனலோல கோவிந்தா
கோவர்த்தனோத்தார கோவிந்தா

• தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்தன கோவிந்தா
பட்சி வாகன கோவிந்தா
பாண்டவ ப்ரிய கோவிந்தா

• மத்ஸ்ய கூர்ம கோவிந்தா
மதுசூதனஹரி கோவிந்தா
வராக நரசிம்ம கோவிந்தா
வாமன ப்ருகுராம கோவிந்தா

• பலராமாநுஜ கோவிந்தா
பௌத்த கல்கிதர கோவிந்தா
வேணுகான ப்ரிய கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா

• சீதா நாயக கோவிந்தா
ச்ரித பரிபாலக கோவிந்தா
தரித்ர ஜனபோஷக கோவிந்தா
தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா

• அனாத ரட்சக கோவிந்தா
ஆபத் பாந்தவ கோவிந்தா
சரணாகத வத்ஸல கோவிந்தா
கருணா சகார கோவிந்தா

• கமல தாளக்க்ஷ கோவிந்தா
காமித பலதா கோவிந்தா
பாப விநாசக கோவிந்தா
பாஹி முராரே கோவிந்தா

• ஸ்ரீ முத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீ வத்சாங்கித கோவிந்தா
தரணீ நாயக கோவிந்தா
தினகர தேஜா கோவிந்தா

• பத்மாவதி ப்ரிய கோவிந்தா
ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா
அபயஹஸ்தப்ரதர்சன கோவிந்தா
மர்த்யாவதாரா கோவிந்தா

• சங்க சக்ரதர கோவிந்தா
சார்ங்க கதாதர கோவிந்தா
விரஜா தீரஸ்த கோவிந்தா
விரோதி மர்தன கோவிந்தா
• சாளகிராமதர கோவிந்தா
சகஸ்ர நாமா கோவிந்தா
லக்ஷ்மீ வல்லப கோவிந்தா
லக்ஷ்மண ஆக்ரஜ கோவிந்தா

• கஸ்தூரி திலக கோவிந்தா
காஞ்சனாம்பரத கோவிந்தா
கருடவாகன கோவிந்தா
கஜராஜ ரக்ஷ்க கோவிந்தா

• வானர சேவித கோவிந்தா
வாரதி பந்தன கோவிந்தா
ஏழுமலைவாச கோவிந்தா
ஏக ஸ்வரூபா கோவிந்தா

• ஸ்ரீராம கிருஷ்ண கோவிந்தா
ரகுகுல நந்தன கோவிந்தா
பிரத்யக்ஷ் தேவா கோவிந்தா
பரம தயாகர கோவிந்தா

• வஜ்ர கவசதர கோவிந்தா
வைஜெயந்தி மால கோவிந்தா
வட்டிகாசு ப்ரிய கோவிந்தா
வசுதேவ தனயா கோவிந்தா

• வில்வ பத்ரார்ச்சித கோவிந்தா
பிட்சுக சம்ஸ்துத கோவிந்தா
ஸ்திரீபும் ரூபா கோவிந்தா
சிவகேசவ மூர்த்தி கோவிந்தா

• பிரம்மாண்ட ரூபா கோவிந்தா
பக்த ரட்சக கோவிந்தா
நித்ய கல்யாண கோவிந்தா
நீரஜநாப கோவிந்தா

• ஹதீராம் ப்ரியா கோவிந்தா
ஹரி செர்வோத்தம கோவிந்தா
ஜனார்த்தன் மூர்த்தி கோவிந்தா
ஜகத்சாக்ஷீ ரூபா கோவிந்தா

• அபிஷேகப்ரிய கோவிந்தா
ஆபன் நிவாரண கோவிந்தா
ரதன கிரீடா கோவிந்தா
ராமாநுஜநுத கோவிந்தா

• சுயம் ப்ரகாச கோவிந்தா
ஆஸ்ரித பக்ஷா கோவிந்தா
நித்யசுப ப்ரத கோவிந்தா
நிகில லோலேசா கோவிந்தா

• ஆனந்தரூபா கோவிந்தா
ஆத்யந்த ரஹித கோவிந்தா
இகபர தாயக கோவிந்தா
இபராஜ ரக்ஷ்க கோவிந்தா

• பரம தயாளோ கோவிந்தா
பத்மநாப ஹரி கோவிந்தா
திருமல வாசா கோவிந்தா
துளசி வனமால கோவிந்தா

• சேஷாத்ரி நிலய கோவிந்தா
சேஷசாயினி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

25.“ஸ்ரீ மகாவிஷ்ணு துதி” - சகல மங்களங்கள் - லட்சுமி கடாட்சம் பெற- ரிக்வேதம்- ஸ்ரீ சூக்தம்- தினமும் / வேண்டும்போது.

oவிஷ்ணு பகவானே! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்கிறவளும், வெள்ளி- பொன் ஆபரங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் எனக்குக் கிட்டும் படி அருள வேண்டும்.

oஅந்த லக்ஷ்மி கடாட்சம் என்னிடம் இருந்தால் நான் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடைய முடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் என்னைவிட்டுப் பிரியாமல் இருக்க அருள் புரியுங்கள்.

oகுதிரைப்படை, தேர்ப்படையின் நடுவே யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை என்னிடத்தில் வருமாறு அழைக்கிறேன். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி என்னை வந்தடையட்டும்.

oமகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிரகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரில் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஓலியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், ஸ்ரீ என்ற பெயரை உடையவளுமான லட்சுமிதேவியை என் இருப்பிடத்திற்கு அழைக்கிறேன்.

oபக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளூம், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவலும், வேத, இதிகாச புராணங்கலில் போற்றப்படுபவளுமான தேவியை நான் சரணடைகிறேன். என்னுடைய வறுமை அழியட்டும். எனக்கு அருள் கிடைக்கட்டும்.

oசூரியனைப்போல் ஒளி நிறைந்தவளே! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வமரம் தோன்றியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப்போலவே மனங்களின் உள்ளேயும் வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும், வறுமையையும் போக்கி அருள வேண்டும்.

oநீ என்னை அடைய வரும்போது தேவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்த மகாவிஷ்ணுவும் உடன் வருவார். இந்த பூமியில் பிறந்திருக்கும் எனக்குக் கீர்த்தியும், ஐஸ்வர்யத்தையும் கொடுத்து அருள் புரியவேண்டும்.

oஉன் அனுகிரகத்தை அடைந்தால் அதன் பலத்தால் பசி, தாகம், பீடை இவற்றை உண்டுபண்ணுகிற மூதேவியை என்னைவிட்டு அகலும் படி செய்வேன். சகலவிதமான வறுமையையும் மேன்மேலும் வரவிடாமல் என்னுடைய வீட்டிலிருந்து நீ அகற்றியருள்வாய்.

oவாசனைமிக்க திரவியங்களை முதலில் அனுப்பி அதன்பிறகு வந்தவளும், தீயவர்களால் அடைய முடியாதவளும், எப்பொழுதும், எப்பொருட்களாலும் நிறைவுற்றவளும், கரீஷிணி என்ற திருநாமத்தைப் பெற்றவளும், அனைவராலும் போற்றப்படுகின்றவளுமான உன்னை இங்கே எங்கள் இல்லத்தில் நித்தியவாசம் செய்து நீங்காதிருக்கும் படி அழைத்து வேண்டுகின்றேன்.

oமனதினுடைய விருப்பத்தையும், சந்தோஷத்தையும், வாக்கினுடைய உண்மையையும் அடைவோம். பசுக்கள், உணவுப் பொருட்களை அடைவோம். பலவிதமான உருவத்தை அடைவோம். என்னிடத்தில் லக்ஷ்மிதேவியானவள் நித்யவாசம் செய்யவேண்டும்.

oகார்த்தம ப்ராஜாபதி எனும் மகரிஷியால் தேவி, புத்ரமதி ஆனாள். கார்த்தமனே என்னிடத்தில் நித்யவாசம் செய்வாயாக. தாமரை மாலையை அணிந்து கொண்டிருக்கிற உனது தாயாராகிய ஸ்ரீதேவியை எனது வீட்டில் வசிக்கச் செய்வாயாக.

oஓ சிக்லீதரே, தண்ணீர், நெய், தயிர், பால் முதலிய பொருட்கள் என்னுடைய வீட்டில் குறைவின்றிப் பெருகவேண்டும். எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிற உம்முடைய தாயை ஸ்ரீதேவியை எனது வீட்டில் வசிக்கச் செய்ய அருள்வாய்.

oகருணையால் நனைந்தவளும், தாமரைப் பூவில் வாசம் செய்கின்றவளும் நிறைவின் உருவானவளும், தாமரைப் பூமாலையைத் தரித்தவளும், எல்லா உயிர்களையும் மகிழ்விப்பவளும், பொன் போன்ற பரிசுத்தமான மேனியை உடையவளுமான மகாலட்சுமி என் இருப்பிடத்திற்கு வருமாறு செய்தருளுங்கள்.

oபகவானாகிய அமுதத்தால் நனைந்த திருமேனியை உடையவளும், செங்கோலுக்கு அடையாளமாக தண்டாயுதத்தை கையில் தரிப்பவளும், மெலிந்த திருமேனியை உடையவளும், கண்களுக்கு ஆனந்தகரமான வடிவினை உடையவளும், தங்கத்தினால் செய்யப்பட்டு பூமாலையை அணிந்தவளும், சூரியனைப் போன்ற பிரகாசமுடையவளும், தங்கமயமான லட்சுமி தேவியை என்னிடம் வரவழைத்து அவள் என்னிடம் நித்யவாசம் செய்ய அருளுங்கள் திருமாலே!

oஓ பகவானே, எந்த லக்ஷ்மி என்னிடம் வசிக்கையில் ஏராளமான பொன் பொருள்களும், பசுக்களும், சேவகர்களூம், குதிரைகளூம், உற்றார் உறவினர்களும், நண்பர்களையும் நான் அடைவேனோ, அப்படிப்பட்ட ஸ்ரீமகாலக்ஷ்மி என்னிடம் நிரந்தரமாக நித்யவாசம் செய்ய அருளவேண்டும்.

o தாமாரையில் பிரியம் உள்ளவளே, தாமரைக்குச் சொந்தக்காரியே, தாமரையைக் கையில் தரித்தவளே, தாமரையில் வசிப்பவளே, தாமரைபோல் நீண்ட கண்களை உடையவளே, உலகத்து மக்களால் விரும்பப் படுகின்றவளே விஷ்ணுவின் மனத்திற்குப் பிரியமானவளே, உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை என் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.

oலட்சுமி தேவியின் விலையாட்டால் செய்யப்பட்ட இந்த உலகம் பிரகாசமானது. உலகில் பிறந்தவர்களுக்கு எல்லா ஐஸ்வர்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வல்லது. அவளை உபாசனை செய்பவர்கள் ஜனன மரணமில்லாத பிரம்மானந்தத்தை அடைவார்கள். இன்றும் நாளையும் எப்போதும் சுயமான பிரகாசமான நிலையை அடைவார்கள். இல்லத்தில் சகல போகமும், பரத்தில் மோட்சமும் அடைவார்கள்.

oஎவனொருவன் இந்த ஸ்ரீசூக்தத்தின் பலன்களை அறிகிறானோ அவனுடைய செல்வங்களே மேலும் மேலும் வளர்ந்து ஐஸ்வர்யங்களை உண்டாக்குகின்றன. ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள இந்த ஸ்ரீசூக்தத்தை முன்னிருத்தி ஹோம காரியங்களைச் செய்பவர் புத்திர சந்தானத்தோடும், பசுக்களோடும், ஐஸ்வர்யங்களோடும் அனைத்து வளங்களையும் பெறுவர். எனக்கு அவைகள் கிடைக்கட்டும்.

oஇந்த உலகங்கள் அனைத்தும் ஸ்ரீமகாவிஷ்ணு, லட்சுமிதேவி இருவரையும் சேர்ந்தது. அதனால் பெரிய பிராட்டியான தேவியை உபாசனை செய்கின்றோம். விஷ்ணு பத்தினையை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதேவிதான் தூண்டிவிட வேண்டும். லட்சுமி நாராயணரை வழிபடுவதர்கான புத்தியையும், அதை நிறைவேற்ற சக்தியையும் அருளவேண்டும்.

26.ஸ்ரீகிருஷ்ணர்- புத்ர பாக்யம் பெற-108 முறை தினமும்

ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ க்ருஷ்ண ப்பிரசோயாத்

27.ஸ்ரீ ராமர் - துன்பங்கள் விலக- தினமும் 11முறை

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம ப்பிரசோதயாத்

28.ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் -கல்வி ஞானம் - தினமும் 11முறை
ஓம் வாகீச்வராய வித்மஹே
ஹயக் ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ஸ ப்பிரசோயாத்

29.ஸ்ரீ மகா விஷ்ணு- சௌபாக்யங்கள்பெற தினமும் 11முறை
ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்பிரசோயாத்

30.ஸ்ரீ ஆதிசேஷன் - நோய்கள் குணமாக தினமும் 11முறை 
ஓம் சஹஸ்ர சீர்ஷாய வித்மஹே
விஷ்ணூ தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்பிரசோயாத்

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

oசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

                            ஓம்நமோநாராயணாயஓம்

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

oஎந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்ததில்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றிகொண்டதே அவர்களை வாழ்வில் பெரிய மனிதனாக்கியதாகும்.
o‘அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்’ என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.
oகாலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.
oமறைத்த உண்மையும், தெரிந்த உண்மையும் எப்போதும் சுடும். அதை சொல்லியே தீருவேன் எனச் சொல்லி அனைவரையும் காயப்படுத்தக் கூடாது.
oபூனைக்கு பால் பிடித்தமான ஒன்று. அதை வளர்க்கும் நீங்கள் கடமையுடன் பசியடங்க பால் கொடுத்தால் சரி. இல்லையெனில் பூனை பால் இருக்குமிடம் தேடத்தான் செய்யும். அப்படித் தேடி அதன் பசியைப் போக்கிக்கொண்டால் அது திருட்டுப்பூணை என்ற பட்டம் பெற்றுவிடுகிறது. பூனைக்கு பசி எடுப்பது தவறா! இது யார் தவறு!
oசெய்த பிழைகளுக்கு, குற்றங்களுக்காக குற்ற உணர்வுகளுடன் வாழ்ந்து துன்பத்தில் இருப்பதைவிட மன்னிப்பு கேட்பது ஒன்றும் தவறல்ல. குற்றத்தில் இருந்து ஒருவர் விடுதலை பெற்றாலும் குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறவேண்டும்
oபகைவனை அழிப்பது என்றால், பகைமையை அழிப்பது என்று கருதவேண்டும். பகைவனைக் கொல்வதல்ல! அப்படிச் செய்தால் பகைமை அழியாது. தொடர்ந்து வரும்.
 “சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879889
All
26879889
Your IP: 3.229.122.112
2024-03-19 12:02

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg