ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப் பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
இறையருள் அறிவு!
ஐம்புலன்களையும் அடக்கும் தேவர்களும் இல்லை என்பதால் அவைகளை அடக்குக என்பவர் அறிவில்லாதவர்கள். ஐம்புலன்களும் அடங்கிவிட்டால் உடல் அறிவற்ற சடப் பொருளாகிவிடும் என்பதால் ஐம்புலன்களையும் அடக்காத அறிவை அறிந்தேன் என்கின்றார் திருமூலர். அதாவது அடக்க நினைத்தால் அடங்காமல் அலையும் ஐம்புலன்களும் மனமும், அவைகளை அன்பே சிவமாம் இறையருள் அறிவைக் கொண்டு அறிய முயன்றால் அவ்வறிவுக்கு ஐம்புலன்களும் மனமும் அடங்கிப் பணி செய்யும் என்கிறார்.
&&&&&