ஓம்நமசிவய!
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!
#*#*#*#*#
16.அக்னி நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை!
பஞ்ச பூதங்களில் நெருப்பு மட்டுமே தன்னிடம் சேரும் பொருளை அதன் உருவை மாற்றி தானாக மாற்றிக் கொள்ளும் சிறப்பான தன்மையுடையது. இதனால் யாகம் மற்றும் ஹோமங்களில் அக்னி முதன்மையாக கருதப்படுகின்றது. மேலும் அக்னி யாகத்தில் இடப்படும் அவிர் பாகத்தை உரியவர்களிடம் (பித்ரு தேவர்கள், அதி தேவதைகள்) சேர்க்கும் பிரதி நிதியாகவும் செயல் படுகின்றது.
அவிர்பாகத்தை அதிகமாக உண்டு அவதிப்பட்ட அக்னி நட்சத்திரகாலத்தில் அந்த அகினிக்கு உதவியாக இருக்க வேண்டி சில காரியங்களைச் செய்யாமல் இருக்க நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.
இக்காலத்தில் செடி கொடி மரங்களை வெட்டுதல், மட்டை நார் உரித்தல், கிணறு குளம் தோண்டுதல், விதை விதைத்தல், விவசாய நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்பு பணிகள் செய்தல் கூடாது. பூமி பூஜை செய்தல், விவசாயப் பணிகள் ஆரபித்தல், கிரகஹப் பிரவேசம் செய்தல், புது வீட்டிற்கு பால் காய்ச்சுவது, முடி காணிக்கை செலுத்துதல், காது குத்தல், ஆகியவற்றை தவிர்க்கவும். குருவிடம் தீட்சை எடுத்துக் கொள்ளக்கூடாது.
#*#*#*#*#