இருள் சூழ்ந்த மேகத்தில் அடர்த்தியாக ஈரப்பதம் நிறைந்த நீர் திவலைகள். இடி இடித்தது. மின்னலடித்தது. நீர்திவலைகள் மேகக் கூண்டிலிருந்து விடுபட்டுச் சிதறியது. ஒவ்வொன்றாக பூமியை நோக்கி பாய்ந்தது. முன்னாள் சென்றுகொண்டிருந்த நீர்த்துளியைப் பார்த்து பின்னால் வந்து கொண்டிருந்த துளி சொல்லியது, இவ்வளவு வேகம் ஏன்! அவசரமாகச் சென்று கடலில் விழுந்து உப்பு நீராகி யாருக்கும் பயனின்று போகாதே. பார்த்து பச்சைக் கம்பளம் போன்ற புல் வெளியில் விழுந்து சுகமாக இருக்கலாம் என்றது.
எங்கே விழவேண்டும் என்று நான் மேகக்கூட்டத்திலிருந்து விடுவிக்கும்போதே தீர்மானிக்கப் பட்டுவிட்டது. எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் இடத்தை நான் சென்றடைகிறேன். எனது ஆசை எல்லாம், ஆற்றிலே, குளத்திலே விழுந்தால் மக்களுக்குப் பயன்படுவேன். கடலில் விழுந்தால் மீண்டும் ஆவியாகி எனது பணியைச் மீண்டும் செய்வேன். பசும் புல்லில் படுத்து என்ன பயன் எனக்கூறி புவியை நோக்கி வேகமாகச் சென்றது.
பின்னால் வந்து கொண்டிருந்த துளி முதல் துளி எங்கே விழுகின்றது எனக் கவனித்தது. கடலை நோக்கிச் சென்ற அது அங்கிருந்த சிப்பியின் வாயினுள் விழுந்தது. பின்னாலில் அது ஓர் முத்தாக சுடர் விட்டது.
பின்னால் வந்த துளி மிகவும் பசுமையான புல்வெளியில் ஓர் புல்லின் மேல் அமர்ந்து ஆசுவாசப்படுத்தி தான் நினைத்தமாதிரியே புல்வெளிக்கு வந்தது கண்டு ஆனந்தப்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மழைவிட அந்தபுல்வெளிக்கு வந்த மனிதர்களின் செருப்பு காலடியில் மிதிபட்டு சிதறி கரைந்து மறைந்தது.
வாழ்வு பயணத்தில் உயர எண்ணங்களில் உயர்வு வேண்டும்.