gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

நவகோள்கள்

Written by

 

சூரியன் உலகிற்கு கண்ணால் காணும் முதல் கடவுள், சூரிய நாராயணன் என்பர்.
வேறுபெயர்கள் ஆதவன், பாஸ்கரன், ஞாயிறு. லோகமித்ரன்
பன்னிரண்டு மாதத்திலும் ஒவ்வொரு வடிவில் தோன்றுவதால் காலநிலையும் மாறும்.

சித்திரை-தத்தா, ததா- உயிர்களுக்கு வெப்பத்தை தருபவன்-கத்ரி.

வைகாசி-ஆர்யமா- காற்று.

ஆனி-மித்ரன் -சந்திரனுக்கு ஒளி, சமுத்திரங்களை கட்டுப்படுத்துதல்.

ஆடி-வருணன்- காற்று, மழை.

ஆவணி-இந்திரன்- மழை, இடி.

புரட்டாசி- விவஸ்வான்- அக்னிக்கு ஆதாரம்.

ஐப்பசி-துவஷ்டா- மூலிகைகளும் தாவரங்களும் வளர ஒளி. கார்த்திகை- சூர்யநாராயணன்- சிவஞோதி, விஷ்ணு தீபப்பிகாசர்.

மார்கழி- அம்சுமான்- குளிர்ப்பனி, இதமான வெப்பம். 

தை-பகலவன்- உயிர் நிலைக்க வெம்மை.

மாசி- பூஷன்- விதை முளைக்க வெப்பம்.

பங்குனி-பர்ஜன்யன்- ஆறு, குளநீரை அள்ளி மேகமாய் பரவி தெளிப்பது. 

உகந்த நாட்கள்- ஞாயிற்றுக்கிழமை. எந்நாளும் வழிபடலாம்(சூரிய உதயத்தின்போது)

உகந்த மலர்கள்- செந்தாமரை மற்றும் சிகப்பு நிற மலர்கள்

நிவேதனம்- சூடான நிவேதனம்- கோதுமையால் செய்த இனிப்பு அல்லது சர்க்கரைப் பொங்கல்

விழாதினம் சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள்- மகர சங்கராந்தி. உயிர்களின் உணவுக்கு தாவரங்கள் தானியங்கள் மிக மிக முக்கியம். தாவரங்களுத் தேவையான வெப்பத்தையும், நீரையும் சூரியன் மூலமாகவே பெறுகின்றன.

சூரியகதிர்கள் வெப்பம், ஒளி, மழை தருவன. சர்வேஸ்வரனின் பிரதிநிதியாகிய சூரியனுக்கு நன்றி தெரிவிக்கவே இந்நாளில் பொங்கலிட்டு படையல் சாத்துகின்றோம்.
சிறப்புகள் பொதுவான காயத்திரி மந்திரம் சூரியனின் ஆற்றலை நோக்கி கூறியதாகும். சிவனின் அட்டமூர்த்தங்களில் சூரியனும் ஒன்று. உயிருள்ள, உயிரற்ற பொருளகள் எல்லாவற்றின் ஆத்மா சூரியன் என ரிக் வேதம் சொல்கின்றது. எல்லாப் புராணங்களிலும் சூரியன் சிறப்பாக போற்றப்படுகின்றது. நம் வாழ்வின் ஓர் அங்கம். ஆரோக்கிய வாழ்வு தரும் நம் கண்களாலேயே காணப்படும் கண்கண்ட கடவுள். தினமும் காணும் ஓர் அற்புத சக்தி.
ஏற்ற திதி- ரத சப்தமி- சூரிய ஜெயந்தி, ரத சப்தமி- உத்ராயண தை அமாவாசைக்குப் பின் சுக்லபட்ச சப்தமி அன்று வரும். அன்றுதான் ரத சப்தமி எனப்படும். சூரியன் தன் தட்சிணாயனப் (தெற்கு நோக்கிய) பயணத்தை முடித்துக் கொண்டு வடக்கு நோக்கிப் பயனப்படும் நாள். அன்று காலையில் வாசலில் தேர்க் கோலமிட்டு, ஏழு எருக்கு இலைகள், அருகம்புல், ஏகாமயம் (சாணம்) அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக் கொண்டு சூரிய பகவானை தியானம் செய்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஸ்நானம் செய்யவும்."யத்யத் கர்மக்ருதம் பாபம் மயாஸப்தஸூ தன்மே ரோகம் சசோகம்சமா கரீ ஹந்து சப்தமீ" அதாவது ஏழு ஜென்மங்களில் என்ன பாபம் செய்திருந்தாலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளை இந்த ரதசப்தமி ஸ்நானம் நீக்கட்டும் என்பதாகும். அதிகாலையில் எழுந்து குளித்து ஆதித்ய ஹிருதயம், சூரிய அஷ்டோத்திரம் படிப்பது நன்று. திரு அண்ணாமலை சேஷாத்திரி, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் அவதரித்த நாள். பீஷ்மர் மனம், வாக்கு, செயல் மூன்றாலும் பாவம் செய்யாமலிருந்தும் பாஞ்சாலியின் துகில் உரியப்படும் பாவச்செயலை கண்டித்து தடுக்கவில்லை  என்பதனால் அவர் விரும்பும்போது உயிர்போகும் என்ற வரம் பெற்றிருந்தும் உத்ராயண காலம் வந்ததும் உயிர்போக விரும்பியும் போகமல் துன்பம் மேலிட வியாசரிடம் கேட்டபோதுபோது  2எருக்க இலைகளை கண்களின்மீதும் 3 எருக்க இலைகளை கழுத்திலும் வைத்து அதன் மீது சூரிய ஒளி படும்படிச் செய்து சூரியனை வேண்டச் சொல்லி கங்கை நீரால் நீராட்ட அவரது பாவங்கள் தீர்ந்தன. சூரியன் கதிர்கள் அவருக்கு முக்தி வழங்கிய நாள். 
வணங்கும் முறை- தினமும் காலை குளித்ததும் தூய உடம்புடன் சூரியனைப் பார்த்து வணங்கவும். நீர் நிலைகளில் குளித்தாலும் அங்கிருந்தபடியே சூரிய வணக்கம் செய்வது சிறந்தது. வீட்டில் சூரிய கிரணங்கள் உங்கள்மேல் விழும் இடத்தில் நின்று கொண்டு சூரிய வணக்கத்திற்குரிய சுலோகங்களைச் சொல்லி வணங்கவும். குருஸ்ரீ பகோராயின் நவகிரக துதிப்பாடல்கள் பகுதியிலிருந்து உங்கள் விருப்பினைப் பொறுத்து தேர்வு செய்து சொல்லவும். நிரந்தர பலன் கிடைக்கும். தினமும் ஆதித்தன் வழிபாடு அன்றைய நிகழ்வுகளுக்கு உதவி புரிவதாய் அமையும்.

சூரிய ஜெயந்தி  காரண நிகழ்வு: காஷ்யப முனிவரின் மனைவி அதிதி. கணவனுக்கு உணவளித்துக் கொண்டிருந்த காரணத்தினால் வாசலில் யாசகம் கேட்ட அந்தணருக்கு மெதுவாக உணவளித்ததால் கோபமுற்ற அந்தணர், எந்தக் கர்பத்தைக் காக்க மெதுவாக வந்து யாசகமிட்டாயோ அந்தக் கர்ப்பம் கலைவது என சாபமிட்டான். முனிவரிடம் நடந்ததைக் கூற காஷ்யப முனிவர் சிவபெருமானைத் தியானித்து ஏழு எருக்க இலைகளை அவள் தலையிலும், தோள்களிலும் வைத்து சூரியன்முன் சிறிது நேரம் நிறுத்தி வணங்கி  நீராடச் செய்தார். அமுதம்போல் அணைவரையும் வாழவைக்கும் மகன் பிறப்பான் என ஆசி கூறினார். அவ்வண்ணமே சூரிய பகவான் ரதசப்தமியன்று தோன்றினார்- அதனால் அன்று அவரது ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

சூரியனின் ரதசாரதி கருடனின் சகோதரனான அருணன். சூரியனின் புதல்வர்களே யமன், சனி, சுக்ரீவன், கர்ணன். சூரியன் அருளால் அட்சய பாத்திரம் பெற்றனர் பாண்டவர்கள்.

உள்ளே.....

1.“சூரியன் துதி”-சூரியோதயத்தின்போது தினமும்-சகல நன்மைகள். 

2.“சூரியன்துதி”-அகத்தியர்-சூரியோதயத்தின்போது தினமும்- கவலை, நோய் நீங்கி வாழ்வு பிரகாசமடைய. 

3.“சூரிய துதி”- சூரியோதயத்தின் போது தினமும்/ ஞாயிறுக் கிழமை -சகல நன்மைகள் 

4.“சூரியசதகம் துதி”-மயூரகவி-சூரியோதயத்தின்போது தினமும்/ ஞாயிறுக் கிழமை -சகல நன்மைகள். 

5.“சூரிய கவசம்”- தினமும்/ ஞாயிற்றுக் கிழமை

6."சூரியன்”-சீரானவாழ்விற்கு-தினமும்/ ஞாயிறு 

7.“சூரியகீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-சூரியோதயத்தின் போது தினமும்/ ஞாயிறுக் கிழமை -கோளின் அனுக்கிரகம்- சகல நன்மைகள். 

 

சந்திரன்- அதிதேவதை- பார்வதி தேவி

உகந்த நாட்கள்- திங்கள்கிழமை. வளர்பிறை திங்கள் சிறப்பு. பௌர்ணமி திங்களிலும் வழிபடலாம். 

உகந்த மலர்கள்- அல்லி மற்றும் வெண்ணிற மலர்கள்

நிவேதனம்- அரிசிகலந்த நிவேதனம்

8.“சந்திரன்துதி”-தினமும்/ திங்கள்கிழமை-சகல நன்மைகள். 

9.“சந்திரன்”-சீரானவாழ்விற்கு- தினமும்/திங்கள் 

10.“சந்திரன் துதி”- உறுதியான மனநிலை பெற, பிணிகள்அகல, மனநோயநீங்க- பௌர்ணமி / சித்ராபௌர்ணமி. 

11.“சந்திரன்கீர்த்தனை”-முத்துசாமிதீட்சிதர்- தினமும்/திங்கள் கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள். 

12.“சந்திர கவசம்”- தினமும்/ திங்கட் கிழமை 

 

செவ்வாய் (அங்காரகன்)- அதிதேவதை-  முருகன்

உகந்த நாட்கள்- செவ்வாய்கிழமை. 

உகந்த மலர்கள்- செண்பக மலர்கள்

நிவேதனம்- துவரை தானியம் கலந்த நிவேதனம் உடன் குங்குலிய தூபம் சிறப்பு

13.“செவ்வாய் துதி”- சீரானவாழ்விற்கு- தினமும்/ செவ்வாய்க் கிழமை 

14.“அங்காரகன் துதி”-துர்பாக்யம், வறுமை நீங்க,பாக்யங்கள் பெற- தினமும்/ செவ்வாய்க் கிழமை. 

15.“அங்காரகன்”-சீரான வாழ்விற்கு- தினமும்/ செவ்வாய்க் கிழமை 

16.“அங்காரகன் கீர்த்தனை”- முத்துசாமி தீட்சிதர்- தினமும்/ செவ்வாய்க்கிழமை-கோளின் அனுக்கிரகம்- சகல நன்மைகள். 

17.“அங்காரகக் கவசம்”- நோய், கடன் நீங்க, பாக்யங்கள் பெற- தினமும்/ செவ்வாய்க்கிழமை 

 

புதன் அதிதேவதை-  மகாவிஷ்ணு

உகந்த நாட்கள்- புதன்கிழமை. 

உகந்த மலர்கள்- வெண்காந்தாள் லர் பச்சை நிற வஸ்திரம்

நிவேதனம்- பச்சைப்பயிறு சுண்டல் நிவேதனம் பாசிப்பருப்பு பாயசம்

18.“புதன் துதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/புதன் கிழமை 

19.“புதன்”-சீரான வாழ்விற்கு-தினமும்/ புதன்கிழமை 

20.“புதன்கீர்த்தனை”- முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ புதன் கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள். 

21.“புத கவசம்- நோய், துன்பம் நீங்க, புண்ணியங்கள் பெற- தினமும்/ புதன் கிழமை 

 

குரு- தேவகுரு- பிரஹஸ்பதி, வியாழபகவான்

உகந்த நாட்கள்- வியாழக்கிழமை. 

உகந்த மலர்கள்- முல்லை லர் மஞ்சள் நிற வஸ்திரம்

நிவேதனம்- கொண்டைக்கடலை நிவேதனம் உடன் ஆம்பல்மலர் தூபம்

22.“குரு துதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/வியாழக்கிழமை 

23.“குரு”-சீரான வாழ்விற்கு-தினமும்/வியாழக்கிழமை 

24.“குரு துதி”- வாழ்வில் வளம் பெற- தட்சிணாமூர்த்தி சன்னதியில்- தினமும் / வியாழக் கிழமை. 

25.“குருகீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ வியாழக் கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள். 

26.“குரு கவசம்”- துன்பம் நீங்க, வெற்றி பெற-தினமும்/ வியாழக் கிழமை. 

 

சுக்கிரன்- வெள்ளி- அசுரகுரு- பார்க்கவன்

உகந்த நாட்கள்- வெள்ளிக்கிழமை. 

உகந்த மலர்கள்- பவளமல்லி

நிவேதனம்- மொச்சை தானியம் நிவேதனம் கல்கண்டு கலந்தபால்

27.“சுக்கிரதுதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/வெள்ளிக்கிழமை 

28.“சுக்ரன் துதி”-சீரான வாழ்விற்கு-தினமும்/வெள்ளி

29.“சுக்கிரன் கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/வெள்ளிக்கிழமை  -கோளின் அனுக்கிரகம்- சகல நன்மைகள்.  
30.“சுக்கிர கவசம்”- துன்பம் நீங்க, நினைத்தவைகூட- தினமும்/ வெள்ளிக் கிழமை 

 

சனிபகவான்- சனீஸ்வரன்- சனைச்சரன் 

உகந்த நாட்கள்- சனிக்கிழமை. 

உகந்த மலர்கள்- கருங்குவளைலர், கறுப்பு நிற வஸ்திரம், வன்னி பத்ரம்(இலை), 

நிவேதனம்- எள் தானியம்

31.“சனி துதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/சனிக்கிழமை 

32.“சனி”- சீரான வாழ்விற்கு-தினமும்/சனிக்கிழமை 

33.“சனி கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ சனிக் கிழமை -கோளின் அனுக்கிரகம் -சகல நன்மைகள். 

34.“சனிகவசம்”-வெற்றி, புகழ், பெருவாழ்வு கிடைக்க,துயர்,விணை, பிணி, கவலை போக்க-தினமும்/சனிக்கிழமை. 

35.“சனி கவசம்”- காரியங்களில் தடையின்றி வெற்றி மற்றும் பெருவாழ்வு கிடைக்க, தினமும்/ சனிக் கிழமை. 

 

இராகுபகவான்-நிழல் கிரகம்

உகந்த நாட்கள்- சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினம் 

உகந்த மலர்கள்- மந்தாரலர்

நிவேதனம்- உளுந்து கலந்த பலகாரங்கள்

36.“ராகு”- சீரான வாழ்விற்கு-தினமும்/ஞாயிற்றுக்கிழமை 

37.“ராகு”- சீரான வாழ்விற்கு-தினமும்/ ஞாயிறு 

38.“ராகு கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ ஞாயிற்றுக்கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள். 

39.“ராகு கவசம்”- புகழ், நீண்ட ஆயுள் கிடைக்க, நோய் நீங்க - தினமும்/ ஞாயிற்றுக் கிழமை. 

 

கேதுபகவான்-நிழல் கிரகம்

உகந்த நாட்கள்- சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினம் 

உகந்த மலர்கள்- செவ்வல்லிலர்

நிவேதனம்- கொள்ளு தானிய நிவேதனம் மற்றும் பலவகை கலந்த சாதம்

40.“கேது”- சீரான வாழ்விற்கு-தினமும்/ஞாயிற்றுக்கிழமை 

41.“கேது”-சீரானவாழ்விற்கு- தினமும்/ஞாயிறு 

42.“கேது கீர்த்தனை-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ ஞாயிற்றுக் கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள். 

43.கேது கவசம்- வேண்டுவன கிடைக்க, நோய், பகை நீங்க - தினமும்/ ஞாயிற்றுக் கிழமை. 

 

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--மங்களங்கள் பெருக-மனக்குறை- பாவங்களிலிருந்து விலகி-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

1.“சூரியன் துதி”-சூரியோதயத்தின்போது தினமும்-சகல நன்மைகள்.

o சூரியனால் தான் காலமும் நேரமும் பகுக்கப்படுகின்றன! ஐம்பூத இயக்கங்களுக்கும் மூலகாரணமாக விளங்குபவரே! சூரியனே! வேதங்களின் சாரமாகத் திகழ்பவரே! ஒளி பரவாத இடமே இல்லாதவரே! சூரிய ஒளியைக் கண்டதுமே பிறப்பு, இறப்பு, முதுமை, நோய், குடும்ப சோதனைகள் இவை மீதான பயம் விலகிவிடுகின்றது. உதய காலத்தில் பிரம்மா, மதிய காலத்தில் ஈசன், அஸ்தமன காலத்தில் திருமால் என மும்மூர்த்திகளின் வடிவங்களாகத் தோன்றும் சூரியனை நான் வணங்குகின்றேன்.

o செம்பருத்திப் பூ போல ஒளிர்பவரும், காஸ்யப பிரஜாபதியின் குமாரரும், மிகுந்த ஓளியினையுடையவரும், இருட்டின் எதிரியும், சகல பாவங்களையும் போக்குபவருமான திவாகரனை, பகலை உருவாக்கும் பகலவனை வணங்குகின்றேன்.

ஆதித்தாய நமஹ! சூர்யாய நமஹ! பாஸ்கராய நமஹ! ரவியே நமஹ! தினகராய நமஹ! திரைலோக்ய சூடாமணியே நமஹ! திவாகராய நமஹ! லோகமித்ராய நமஹ! ஜோதிஸ்வரூபாய நமஹ! அருணாயை நமஹ! வரத ஹஸ்தாய நமஹ! சூரிய நாராயண சுவாமியே நமஹ!

2.“சூரியன் துதி”- அகத்தியர்- சூரியோதயத்தின்போது தினமும்- கவலை நோய் நீங்கி வாழ்வு பிரகாசமடைய.

o தாமரை மீது வீற்றிருக்கும் ஆதவனே, தேவர்களுக்கெல்லாம் முதன்மையான சூரிய பகவானே, பானுமூர்த்தி எனப் போற்றப்படும் தங்களை வணங்குகின்றேன். தர்மம், கருனை வடிவாகவும், அனைத்து தத்துவ வடிவினராகவும் ஒளிரும் தினகரனே, தங்களை வனங்குகின்றேன். க்ஷயம் எனும் காசநோய், அபஸ்மரம் எனும் வலிப்பு நோய், குன்மம் எனும் வயிற்று நோய் போன்ற கொடிய நோய்களையும், எல்லாவகை தோஷங்களையும் நீக்கி நலம் அளிக்கும் கதிரவனே உனக்கு எனது வணக்கங்கள். எனக்கு அருள் புரிவாய்!

3.“சூரிய துதி”- சூரியோதயத்தின் போது தினமும்/ ஞாயிறுக் கிழமை -சகல நன்மைகள்.

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
விரியா போற்றி வினைகள் களைவாய்

4.“சூரிய சதகம் துதி”- மயூரகவி- சூரியோதயத்தின் போது தினமும்/ ஞாயிறுக் கிழமை -சகல நன்மைகள்.

oதேவர்கள் தமது சித்தாந்த முறைப்படி சூரியனை வழிபடுவர். சாரணர்கள் சொற்களாலும், கந்தர்கள் கானமிசைத்தும் துதிப்பர். நாகர்கள் அடிபணிந்து வணங்குவர். பைசாசர் மனதை அடக்கி வழிபடுவர். சாக்கியர் தமது ஆகம விதிப்படி பூஜிப்பர். மகரிஷிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மனதால் துதிப்பர். யோகியர் ஆத்ம சொரூபமே சூரியன் என உணர்ந்து அன்புடன் கும்பிடுவார்கள். விடியற்காலையில் எல்லோராலும் இவ்வாறு நமஸ்கரிக்கப்படும் பகலவன் எங்களைப் பாதுகாப்பாற்றட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஆகாயவீதியில் செல்லும் சூரியன், ஆகாயகங்கை வற்றிவிடாதபடி தன் வெப்ப ஒளியை மென்மையாக்கிக் கொண்டான். அதனால் அது மலர்ந்த தங்கத் தாமரையோடு பொலிவு பெற்றது. சோலைகள் அழகு குன்றாமல், மணமிக்க பிரதேசமாயின. பனிபடர்ந்த மேருமலையின் பொற்சிகரங்கள் உருகாமல் தூய்மை பெற்றன. ஜடப் பொருட்களான அவை மீதும் கூட இத்தகைய அருள் கொண்ட சூரியன், எப்போதும் எம்மைக் காப்பானாக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியன் இருளை மட்டுமின்றி பாபங்களையும் அழிக்கின்றான். உயர்வான தாமரைகளை மட்டும் மலரச் செய்வதில்லை. சிறிய குன்றின் அருகிலுள்ள தாவரங்களையும் செழிக்கச்செய்து அவற்றையும் மலரச் செய்கின்றான். சரணமென்று சொல்பவர்களுக்கு தனது சத்ய சொரூபத்தைக் காட்டுவதோடு முக்தியையும் அளிக்கின்றான். சூரியன் எல்லோருடைய விருப்பங்களையும் நிறைவேற்றிடும் ஆற்றல் மிக்கவன். வல்லமை மிக்க பகலவன் எங்களைக் காப்பாற்றட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஉலகங்களை ஒவ்வொன்றாகத் தாண்டிச் செல்லும் மாறி மாறிச் செல்லும் சஞ்சல சுபாவம் உள்ளவர் சூரியன். ஆனால் தான் தாண்டி செல்லும் அத்தனை உலகங்களுக்கும் உதவி நன்மை செய்வதையே அசைக்க முடியாத கொள்கையாகக் கொண்டவன். மனிதர்கள் பார்வையைத் தன் ஒளியால் கூசச் செய்யக்கூடியவன். ஆனால் அப்படிக் கூசச் செய்வதன் மூலம் அந்தப் பார்வையைத் தெளிவாக்குபவன். தீட்சண்யமாக்குபவன். மனிதர்களுக்கு நன்மையே செய்யும் எண்ணமுள்ளவன். அனைத்தையும் எரிக்கும் இயல்புடையவன் சூரியன். யோகியர்க்கு முக்தியை வழங்குபவனாக இருப்பவன் அவனே. சூரியன் சகல உலகிறக்கும் செல்வமெல்லாம் அருள்பவன்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oமூவுலகத்திலும் பருவங்கள் ஒழுங்காக வந்து போகின்றன. முரண்பாடுகள் இல்லை. தானியங்கள் செழுமையாக விளைகின்றன. செடியும் கொடியும் மரமும் நன்றாகப் பழம் தரவும், மழைக்காலத்தில் நன்றாக மழை பொழியவும், தெய்வ காரியங்கள் நன்கு நடைபெறவும், அதனால் எல்லோருடைய மனமும் மகிழ்ந்து காற்று நன்கு வீசவும், நட்சத்திரங்கள் பிரகாசிக்கவும், எல்லா திக்குகளுக்கும் மகிழ்ச்சி பரவவும், கடல் தன் எல்லையை கடக்காதிருக்கவும் சூரியன் தான் காரணம். அத்தகைய சூரியன் அனைத்து செல்வங்களையும் அருள்வாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oகைலாயத்தில் மான் தோலணிந்த சிவன், அம்பிகையை தன் உடலில் பாதியாக இணைத்துக் கொண்டுள்ளார். பரந்தாமனாகிய பத்மநாபன், சேஷசயனராக பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார். பிரமன் யோக நிஷ்டையில் சிந்தைகொண்டு சிருஷ்டியைச் செய்கிறார். இவை அத்தனைக்கும் காரணம் சூரியன். மூவுலகிற்கும் தலைவனாக எப்போதும் மூவுலகையும் பற்றிய சிந்தனையுடனேயே பணியாற்றிக் கொண்டிருப்பதுதான். மும்மூர்த்திகளும் ஒரே சிந்தையோடு அவரவர் பணியைப் புரிந்துகொண்டு இருக்கக் காரணம், சூரியன் மூவுலகையும் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதுதான்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியமண்டலம் வேதங்கள் அறிந்த அனைவரையும் தன்னகத்தே கொண்டது. சூரிய மண்டலமே ரிக்வேதம். சூரிய ஒளிக்கதிர்கள் சாமவேதம். யோகத்தால் மட்டுமே காணக்கூடிய புருஷன் யஜுர்வேதம். மூன்று வேதத்தின் உருவமாகவும் உள்ளவர் சூரியன். அவன் விகாரமற்றவன், வேதங்களால் அறியத்தக்கவன். அந்தச் சூரியன் செல்வமெல்லாம் வழங்கட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oதேவமாத எனப்பெயர் பெற்ற அதிதிக்கு இந்திரன் முதலான தேவர்கள் மக்களாகப் பிறந்திருந்தாலும் தாயின் பெயரால் ஆதித்யன் என்ற பெயரோடு திகழ்பவன் சூரியன் ஒருவரே! சூரியன் மட்டுமே தேவர்களின் பகைவர்களை அடக்கும் ஆற்றல் பெற்றவன் என்று மூவுலகத்தோரும் போற்றி மகிழ்கின்றனர். இத்தகைய பெருமை கொண்ட சூரியன் எல்லா நலமும் தருவானாக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியனையும் பரமசிவனைப் போல் அஷ்டமூர்த்தியென்பர். அதாவது எட்டு வடிவங்களை எடுப்பவன். பூமி, நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், தலைவன், திங்கள், சூரியன் ஆகிய எட்டு மூர்த்தங்களைக் கொண்டவன். ஒளிக்கு இருப்பிடம்-பூமி, மழை நீர், தூய்மையான காற்று, எரிப்பதால் நெருப்பு, ஆகாய வீதியில் பவனி வருவதால் ஆகாயம், அன்றாட பிரத்யக்ஷ தெய்வம்-தலைவன், அமாவாசையன்று திங்களுடன் இணைவதால் சந்திரன், தனி உருவம் கொண்டதால் சூரியனும் அஷ்டமூர்த்தி-பரமசிவன்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசெந்தாமரையாளின் கைகளால் வருடப்பெறும் மகாவிஷ்னுவின் திருவடியில் தோன்றும் ஒளிக்கதிர் போல சூரியனின் கதிர்கள் உள்ளன. விநதையின் புத்திரனான கருடன் மேல் ஏறிக் கொண்டு விண்ணில் ஏழு உலகையும் கடந்து உலகைக் காக்கின்றான் பரந்தாமன். அதேபோல சூரியனும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில், அருணன் சாரதியாகப் பணியாற்ற வலம் வந்து மேற்கு திக்கின் எல்லையைக் காண்கின்றார். மகாவிஷ்னுவைப்போல விளங்கும் சூரியநாராயணன் காப்பாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

o சூரியனை முன்னிரு ஸ்லோகங்களில் சிவனுக்கும் திருமாலுக்கும் ஒப்பிட்டது போல, பிரம்மாவுடன் ஒப்பிடப்படுகிறார். பிரம்மா நீரைப் படைத்ததுபோல, சூரியனும் இருகூறு கொண்டு முதலில் நீரைப்படைத்தார். பிரம்மா குலமகளுக்கு சிருஷ்டியின்போது பெருமை சேர்ப்பது போல, சூரியனும் மேருமலைக்கு உதயகிரி எனப் பெருமை சேர்த்தார். பிரம்மா பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம், என மூவுலகுக்கும் எட்டாத மேனியுடையவர். சூரியனும் மூவுலகுக்கும் மேலான பிரகாசமான ஒளியோடு விளங்குகின்றார். நாற்றிசைக்கும் நான்முகன் பெருமைசேர்க்க சூரியன் நாலா திசையிலும் ஒளிபரப்புகிறார். இவ்வாறாக பிரமனைப்போல் விளங்கும் சூரியன் காப்பாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oசூரியன் மறைந்தபிறகு நீர்நிலைகள், குளங்கள், தடாகங்கள் மற்றும் புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் நீராடிய பலன் கிடைக்காது. ஆதவன் அஸ்தமித்த பிறகு கடலில் நீராடினாலும்சரி, தேவகங்கையில் நீராடினாலும் சரி, பாவங்கள் போகாது. அனைத்து நீர் நிலைகளையும் புண்ணிய தீர்த்தமாக விளங்கச்செய்யும் பகலைத்தரும் சூரியன் நம்மைக் காப்பாராக! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஉலகத்தில் கிழக்கு திசை, காலை வேளை ஆகியவை நன்மை பயப்பனவாகக் கருதப்படுகின்றன. அதற்குக் காரணம் அவை சூரியனின் ஆதிக்கத்திலிருப்பதுதான். ஒரு தீவுக்கு அல்லது கண்டத்திற்கு மாலை வேளையாகவும், இரவுக்காலமாகவும் விளங்குவது, எதிர்த் தீவில் விடியற்காலமாகவோ நண்பகலாகவொ விளங்கும். இப்படி உதயம், அஸ்தமனம், பகல், இரவு என்பவை மாறி, மாறி உண்டாகக் காரணமாக இருந்து காலச்சக்கரத்தை சுழலச் செய்யும் சூரியன் எக்காலத்திலும் நம்மைக் காப்பாற்றட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஎட்டு வகையான சித்திகளைப் பெற்ற அருட்சித்தர்கள் வழிபடும் ஆதித்யனின் ஒளிக்கற்றைகள், அழியச்செய்யும் கொடிய பெரு நோய் உள்ளிட்ட எல்லாவித நோய்களையும் போக்கக் கூடியவை. உயிர்களின் துன்பத்தையும், பாபத்தையும் முற்றிலும் போக்க வல்லது. நோய் உள்ளவர்கள் தினம் பராயணம் செய்தால் சூரியபகவான் அருள்பெற்று நோயிலிருந்து விடுபடுவர்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oமூவுலகிற்கும் கண்ணாக விளங்கும் சூரியஒளி, கண்ணொளியிலிருந்து மாறுபடுகிறது. தாமரை போன்றது கண். பரிதியின் ஒளியைப் பெற்று தாமரை பிரகாசிக்கும். ஆனால் சூரியஒளி, தாமரையின் ஓலியைத் தான்பெறாது, அந்த தாமரையின் ஒளியை மேலும் பிரகாசமாக்குகிறது. கண், கருவிழியால் பெருமை பெறுகிறது. ஆனால் சூரியனோ விண்ணின் கண்ணான விண்மீன்களின் ஒளியைப் பறித்து விடுகின்றது. கண் இமைத்தால் ஒரு நொடி. சூரியன் ஒரு நாளையே உருவாக்கிறது. இவ்வாறு கண்ணினும் சிறந்து விளங்கும் சூரியனின் ஒளி எங்கள் பாவத்தைப் போக்கட்டும். இதை தொடர்ந்து படிப்பதனால் கண் நோய்கள் நீங்கட்டும்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

oஉலக நன்மைக்காக, மயூரகவியினால் செய்யப்பட்ட இந்த சூரிய சதகத்தின் பாடல்களை பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள், அனைத்து பாவங்கள், பழிகளிலிருந்தும் விடுபடுவர். உடல்நலம், கவிபுனைதல், நல்லபுத்தி, ஆற்றல், ஒப்பற்றபலம், ஒளிமயமான வாழ்வு, நீண்ட ஆயுள், கல்வி, பொருள், நன்மக்கட்பேறு போன்ற சகல நலன்களையும் சூரியன் அருளால் பெறுவர் என்பது திண்ணம்! சூரியபகவானை நான் வணங்குகின்றேன்!

5.“சூரிய கவசம்”- தினமும்/ ஞாயிற்றுக் கிழமை

முடி புனைந்து அரும்பொற்பைம்பூண் முயங்க மெய் முழுதும் 
பூண்டு வடியிசை மறை புகன்று மாதவர் அங்கி ஓம்பக் கொடி
அணி நெடுந்தேர் ஏறிக் குலம்படு கமல மங்கை கடிமணம்
செய்யத் தோன்றும் கதிரவன் திருத்தாள் போற்றி!

திருவளர் தலை புரக்கச் சீர்மலி கிருணி என்றும்
உருமலி நெற்றி காக்க! ஓங்கு சூரியன்
ஆதித்தன் குருமலி நயனம் காக்க! குழைச்செவி 
திவாகரன் தாள் மருவினான் காக்க!

நாசி வளரொளி பானு காக்க! மலர்முகம் இரவி காக்க! வளை 
கடல் உலகுக்கு எல்லாம் பலர்புகழ் விழியாய் நின்றோன் 
பவளவாய் புரக்ககண்டர் கலர் அறிவரிய செய்யகதிர் விபாவசு 
புரக்க வலர் கிரகபதி கந்தம் அகம் மகிழ்ந்து என்றும் காக்க!

அரும் பிரபாகரன் தான் அமர்புயம் இரண்டும் காக்க!
தரும்புகழ்க் கையிரண்டும் தழற்கதிர் புரந்து காக்க!
வரும் பெரும் பானுமான் என் மனநெறி வாழாது காக்க!
விரும்பும் ஏழ்பரி உகைப்போன் மேவரு மருங்குல் காக்க!

விண்மணி நாபி காக்க! மேவு பன்னிருவர் ஆனோன்
நண்ணிய கடி புரக்க நயம்பட பொலியுஞ் சக்தி 
எண்ணுறு சவிதாக் காக்க! எழிற்படு தொடை இரண்டும்
பண்ணவர் தலைவன் காக்க! பாற்கரன் முழந்தாள் காக்க!

நயம்படு சங்கம் காக்க! நயக்கும் மார்த்தாண்டச் செல்வன்
பயம்படு பரடு காக்க! பயில் உறு கோள்கட்கு ஈசன்
சயம்படும் அடிகள் காக்க! சார் தினமணி சரீரம்
வயம்படு மித்திரன்தான் மனமகிழ்ந்து என்றும் காக்க!

அறமாதி தருபானு கவசநூல் வைகறையில் 
அமர்ந்து போற்றில் திறமாகும் தேவரொடும் 
அறிஞர் புகழப்படுவார் சித்தத்துள்ளே!
உறமேவும் பொருள் பெறுவர் கிரகபயம் 
ஒழிவர் உயிர் உடல் நீங்கில் பெறலாய 
கனலிபதம் பெற்று உய்வர்!

அவனிமிசைப் பிறந்துள்ளாரே! ஆண்டு ஒன்று போற்றி 
செயின் அறன்கடையும் கொடுநோயும் அரியகோளும் 
மூண்டொன்றும் செயாதோட்டும் முடிசூடி உலகம் ஒரு மூன்றும்
காவல் பூண்டொன்று அரசு செய்யும் வாழ்வளிக்கும் புகழ் 
அனைத்தும் பொருந்தக்கூட்டும் காண்டகும் ஏழ்பரி நெடுந்தேர் 
உகைந்து உலவும் கதிர்கடவுள் கவசக் கல்வி!

வேறுபடும் ஒளிபடைத்து விளங்கும்பல் மணியிழைத்து மேவும் பைம்பொன் வீறுமணி பலபுனைந்து கற்பகம் போல் பொலிவு எய்தி விரவும் தண்தேன் ஆறுபடு கடம்ப மலர் நிகர்மேனிச் செங்கதிரை அகத்திருத்தின் ஊறுசெய வருநோய்கள் எவையும் 
அனல்கொளும் பஞ்சின் ஒழிந்து போமே!

6.“சூரியன்”-சீரானவாழ்விற்கு-தினமும்/ஞாயிற்றுக்கிழமை

காசினி யிருளை நீக்கும் கதிரொளி வீசி எங்கும் 
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும் 
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த 
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி!

(பிரகாசமான தனது கதிர்களால் உலகின் இருளைப் போக்குபவரும், வழிபடும் பக்தர்களுக்கு வளமும் நலமும் அளிப்பவரும், ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் ஏறி மேருமலையை இடைவிடாது வலம் வருபவருமான சூரிய பகவானே, உம்மை வழிபடுகிறேன் எம்மைக் கப்பாற்றுவீராக!)

7.“சூரிய கீர்த்தனை”- முத்துசாமி தீட்சிதர்- சூரியோதயத்தின் போது தினமும்/ ஞாயிறுக் கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

oஅழகான சாயாதேவியின் கணவரான சூரியபகவானே! உன்னை வணங்குகின்றேன்! காரணம், காரியம் என இரண்டுமாயிருப்பவரே, உலகத்திற்கு ஒளியைக் கொடுப்பவரே, சிம்மராசியின் அதிபதியே, மகான்களால் துதிக்கப்படும் தேஜஸை உடையவரே, ஆரோக்யத்தை அளிப்பவரே. உன்னை வணங்குகின்றேன்.

oநீர் தாமரையின் தோழன். உலகின் நண்பர். பிரகாசிப்பவர். அயிரக்கணக்கான கதிர்களை உடையவர். கர்ணனை மகனாகக் கொண்டவர். கொடிய பாவங்களைப் போக்கடிப்பவர். அக்னி வடிவினர். குருகுஹனின் வழிபாட்டால் ஆனந்தப்பட்டவர். நல்ல கிரணங்களை உடையவர். உன்னை வணங்குகின்றேன்.

oபண்டிதர்களால் செய்யப்படும் நற்காரியங்களுக்கு சாட்சியாக இருப்பவர். சந்திரன் முதலான கிரகங்களுக்கு அதிபதி. நற்காரியங்களுக்கெல்லாம் நீயே சாட்சி. மிகவும் அழகான ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை உடையவர். எட்டு எழுத்துள்ள மந்திர ஸ்வரூபியாய் உள்ளவர். பொன்மேனியை உடையவர். உன்னை வணங்குகின்றேன்.

oபிரும்மா, விஷ்னு, சிவன் ஆகியோரின் அம்சமாக விளங்குபவர். இகபர சுகங்களைதருபவர் நீயே, உன்னை வணங்குகின்றேன்.

8.“சந்திரன்துதி”-தினமும்/ திங்கள்கிழமை-சகல நன்மைகள்.

எங்கள் குறைகளெல்லாந் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய் 
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுராய் போற்றி

9.“சந்திரன்”-சீரான வாழ்விற்கு- தினமும்/ திங்கட்கிழமை

அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்து உதித்தபோது
கலைவளர் திங்களாகிக் கடவுளார் எவரும் ஏத்தும் 
சிலைமுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய்

மேரு மலை வலமாய் வந்த மதியமே!

10.“சந்திரன் துதி”- உறுதியான மனநிலை பெற, பிணிகள் அகல, மனநோய் நீங்க- பௌர்ணமி / சித்ராபௌர்ணமி.

அமிர்தம் போன்ற தண்ணொளிக் கிரணங்களால் உலகம் முழுவதையும் உயிர்ப்பிக்கும் சந்திர பகவானே! உங்களுக்கு நமஸ்காரம்! அமிர்த மண்டலத்தில் சஞ்சரிக்கும் நீங்கள், எனக்கு பூரண உடல் நலத்தை அருளுமாறு வேண்டிக் கொள்கிறேன். எனக்கு ஆரோக்கியத்தை அருளுங்கள்! தாங்கள் அனைவருக்கும் அரசன்! மகாலட்சுமியின் சகோதரர்! பச்சிலைகள் எல்லாம் உங்களால்தான் துளிர்கின்றன! இரவு நேரத்து அதிபதியே, தாங்கள் என்னை உடல், மன நோய்களிலிருந்து காக்க வேண்டும். என் வாழ்வில் பரிபூரண மகிழ்ச்சி நிலவவேண்டும்! நமஸ்காரம்!

தயிர், சங்கு, பனி ஆகியவை போன்ற வெண்ணிறமுள்ளவரும், பாற்கடலைக் கடையும்போது உதித்தவரும், ஈஸ்வரனின் சிரத்தினை அலங்கரிப்பவருமான சந்திரனை வணங்குகின்றேன்.

11.“சந்திரன் கீர்த்தனை”- முத்துசாமி தீட்சிதர்- தினமும்/ திங்கள்கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

oஏ மனமே, நல்லோரின் மனம் போன்ற குளிர்ந்த சுபாவத்தை உடைய சந்திரனை வணங்குவாயாக.

oஇந்திரன் முதலிய லோக பாலர்களினால் வணங்கப்பட்டவன். தாரையின் நாயகன். மனத்தைச் குளிரச் செய்பவன். பதினாறு கலைகளைத் தயாரிப்பவன். இரவை உண்டுபணுபவன். லஷ்மிக்கு சகோதரன். எப்போதும் அமிர்தத்தை உண்டு பண்ணுபவன். உன்னை வணங்குகின்றேன்.

oசிவனின் தலையை அலங்கரிப்பவன். குளிர்ந்த கிரணங்களை உடையவன். நான்கு புஜங்களை உடையவன். மன்மதனை குடையாகக் கொண்டவன். வெங்கடேசனின் ஒரு கண்ணாக இருப்பவன். விராட புருஷனுடைய மனதிலிருந்து தோன்றியவன். மூலிகைகளை உண்டு பண்ணுபவன். உன்னை வணங்குகின்றேன்.

oஆம்பல் பூக்களுக்கு நண்பன். பிரும்மா, குரு, குஹன் முகத்தில் இருப்பவன். முயலை அடையாளமாகக் கொண்டவன். பிருஹஸ்பதியின் சாபத்திற்கும், பின் அனுகிரஹத்திற்கும் பாத்திரமானவன். உன்னை வணங்குகின்றேன்.

oசரத்கால நிலவைப்போல் வெளுத்த பிரகாசிக்கும் மேனியை உடையவன். கங்கணம், கேயூரம், பூமாலை, கிரீடம் முதலியவற்றை அணிந்திருப்பவன். தாமரைப் பூக்களுக்கு விரோதி. ரோஹினியை மகிழ்வூட்டுவதில் சாமர்த்தியமானவன். இவ்வளவு பெருமைகளை உடைய சந்திரனே உன்னை வணங்குகின்றேன்.

12.“சந்திர கவசம்”- தினமும்/ திங்கட் கிழமை

o நஞ்சம் அமுதமா நயக்கு நாயகன் 
செஞ்சடைக் கானகம் செறியும் அம்புலி 
விஞ்சிடு பண்ணவர் விருந்து அருந்துறும் 
தஞ்சமாம் தானவன் தாள் வழுத்துவாம்!

o நலம்படு சென்னி காக்க! நயம்படு மோடதீசன்
வலம்படு நெற்றி காக்க! வளர் கலாநிதி வாழ்நோக்கம்
தலம்படு நெடிய கீர்த்திச் சந்திரமன் புரக்க!
புலம்படு செவி இரண்டும் பொலி கலாநிதி புரக்க!

o ஆங்கமை சபாகரன் தான் அமர்தரு நாசி காக்க!
தேன்கமழ் குமுத நண்பன் திருமுகம் புரக்க! செங்கை
ஓங்கு சோமன் புரக்க! உயர் சுதாகரந்தான் தந்த
நீங்குறா தென்றும் காக்க! நிசாகரன் கடி புரக்க!

o வளர்ச்சி தொடை புரக்க! மான்படு மதியப் புத்தேள்
தளர்வறு முழந்தாள் காக்க! சார் துவிசாதிபன் தான்
கிளர்சங்கம் காக்க! என் சொற்கேட்டிடு கிரணச் செல்வன்
உளர்தரு மடி புரக்க! உடலம் சந்திரன் புரக்க!

o பூவேறு மணிமகுடம் கேயூரம் அழகு ஒழுகப் 
பூண்ட மூர்த்தி சேவேறு சிவன் சடைமேல் 
சென்று ஆபரணம் திருமால் செங்கண்
மாவேறு நான்கு புயம் உடையன் என மதி 
உருவம் மனத்தில் எண்ணிப் பாவேறு கவச முறை 
படிப்பவர் கேட்பவர் வெற்றிப் பயன் கொள்வாரே!

13.“செவ்வாய் துதி”- சீரானவாழ்விற்கு- தினமும்/ செவ்வாய்க் கிழமை

சிறப்புறு மணியே செவ்வாய் தேவே
குறைவிலாது அருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் போக்கு.

14.“அங்காரகன்துதி”- துர்பாக்யம், வறுமை நீங்க, பாக்யங்கள் பெற- தினமும்/ செவ்வாய்க் கிழமை.
சிவந்த மணமிக்க பூமாலை அணிந்தவனே, காதுகளில் தங்க குண்டலங்களைத் தரித்தவனே, கிரகங்களுக்கொல்லாம் நாயகனே, அங்காரகனே, செவ்வாயே, உனக்கு வணக்கம். உம்முடைய திருப்பார்வையால் எமக்கு ஏற்பட்டிருக்கும் துர்பாக்யங்களை விலக்குவாயாக, என் ஏழ்மையை விரட்டுவாயாக, அளவற்ற செல்வத்தை அருள்வாயாக, அன்பு அகலாத உத்தம பத்தினியை நான் அடையச் செய்வாயாக, அங்காரகனே உன்னை வணங்குகின்றேன்.

பூமி தேவியின் கர்ப்பத்தில் பிறந்தவரும், மின்னலைப் போல் பிரகாசிப்பவரும், குமாரனும், சக்தி ஆயுதத்தைக் கையில் உடையவருமான மங்களனை, செவ்வாயை வணங்குகின்றேன்.

15.“அங்காரகன்”-சீரான வாழ்விற்கு- தினமும்/ செவ்வாய்க் கிழமை

வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ரமங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீள் நிலம் தனில் அளிக்கும்
குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி! போற்றி!

16.“அங்காரகன் கீர்த்தனை”- முத்துசாமிதீட்சிதர்- தினமும்/ செவ்வாய்க்கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

தன்னை வணங்குபவரை கற்பகமரம் போல் ஆதரிப்பவரும், கிழமைகளுக்குள் செவ்வாய் மங்களவாரமாக விளங்குபவரும், பூமாதேவியின் குமாரருமான அங்காரகனை நான் வணங்குகின்றேன்.

சிருங்காரமான மேஷ விருச்சிக ராசிகளுக்கு அதிபதியும், சிவந்த மேனியரும், செவ்வாடை அணிந்தவரும், சக்தி, சூலம் என்ற ஆயுதங்களைத் தாங்கியவரும், மங்களமானவரும், சங்கு பொன்ற கழுத்தையுடையவரும், மிருதுவான பாதங்களையுடையவரும், மகர ராசியில் உச்சமாக இருப்பவரும் ஆன அங்காரகனை நான் வணங்குகின்றேன்.

தேவாசுரர்களால் வணங்கப்பட்டு மந்தஹாசமுகத்தினராய் விளங்குபவரும், நிலத்தை தருபவரும், சகோதர பாசத்தை அளிப்பவரும், சிவந்த கண்களையுடயவரும், எளியோர்களைக் காப்பாற்றுபவரும் ஆன அங்காரகனை நான் வணங்குகின்றேன்.

வைத்தியநாத ஷேத்திரத்தில் விஷேசமாக பூஜிக்கப்படுபவரும், தேவகணங்கள், குருகுஹன் ஆகியோரின் கடாக்ஷத்திற்கு பாத்திரமானவரும், சூரியன், சந்திரன், குரு ஆகியோருக்கு மித்திரனும், அழகான மனைவியையுடையவரும், முழங்காலில் கைவைத்து அழகாக தோற்றமளிப்பவரும், நான்கு கரங்களையுடையவரும், மிக விசித்திரமானவருமான அங்காரகனை நான் வணங்குகின்றேன்.

17.“அங்காரகக் கவசம்”- நோய், கடன் நீங்க, பாக்யங்கள் பெற- தினமும்/ செவ்வாய்க் கிழமை.

நம்பு முழந்தாள் படுக்கும் இடக்கையும் 
அபநல நன்கு கொண்ட வம்புபடு மலர்
பொருவும் வலக்கையும் நாற்புயமும் வானநாடும்
அம்புவியும் தொழுமேடம் உகைத்துவரும் பேர் 
அழகும் அமையக் கொண்ட செம்பொன் அணி பல 
புனையும் செம்மேனிச் சேய் உருவம் சிந்தித்தி உய்வாம்!

நாட்டும் அங்காரகன் தான் நயம்படு சென்னி காக்க!
கூட்டும் வையத்தரணி மைந்தன் குளிர்மதி முகம் புரக்க!
கேட்டு உணர் செவி இரண்டும் கேழ்த்த செந்துகிலோன் காக்க!
நட்டம் செங்கண்ணோன் காக்க! நாசி வெற்புடையோன் காக்க!

நிலமகன் நோட்டம் காக்க! நெடும்புயம் அரத்த மாலை
நலமலி புயத்தோன் காக்க! நலம்படு கையிரண்டும் 
வலமலி வேலோன் காக்க! மனநான்கு புயத்தோன் காக்க! 
பலவுநோய் கடியும் ஈசன் பருமணி உதரம் காக்க!

கடலுடைப் பூமி மைந்தன் கடிதடம் புரக்க ஊரும் மிடல்படு 
கதையோன் காக்க! வியன் முழந்தாள் கணைக்கால் படர்புகழ்க் 
குசன் புரக்க பரவடி பௌமன் காக்க! உடல்படும் அங்கம் 
எல்லாம் உறுதகர் ஊர்வோன் காக்க!

படிக்கும் அங்காரக கவசம் பகைகடியும், பூதமொடு பகர் 
பிரேதம் இடிக்குரல் வெம்பிசாசம் அழிந்திடும், சித்தி 
எவ்வகையும் இசைய நல்கும், முடிக்கவரும்
நோய்முடிக்கும் செல்வமொடு புத்தி முத்தி 
முழுவதும் நல்கும், பிடிக்கும் எழில் பாக்கியங்கள்
பெருவிக்கும், கடன்போக்கிப் பெருமை ஈட்டும்!

வகுக்கும் அங்காரக கவசம் ஓதுவோன் வளர் 
குருதி வாரந்தன்னில் தொக்குநிறஞ் சிவக்குமலர் 
செவ்வொளிச் சந்தனக் கலவை தூபம் தீபம் 
பகுக்கும் அக்காரம் கலக்கு நல்லடிசின் முதல் 
பலவும் பயிலக் கொண்டு மிகுக்குமனப் பத்தியொடு 
நிலமகன் பூசனை மறைநூல் விதியால் செய்து!

ஒருநால்வர் பன்னிருவர் எண்மருள்தன் பொருள் 
தகுதிக்கு உற்றவற்றால் பெருவாய்மை மறையவருக்கு 
ஊட்டி நிலமகன் விரதம் பேணிக் கொள்ளில் கருநாகம்
தேள் முதலாம் கொடியவற்றால் வருந்துயரம் கழிந்து 
போகும்! திருஏறும் வினையகலும் நோய் ஒழியும்! 
உரைக்கு மொழி திண்ணம்! திண்ணம்!

செவ்வாய் தோஷங்கள் விலக தினமும் 51முறை

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாசே நாய தீமஹி
தந்நோ ஷண்முக ப்பிரசோதயாத்

18.“புதன் துதி”- சூரியோதயத்தின் போது தினமும்/ புதன் கிழமை -சகல நன்மைகள்.

 இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்பொலியானே
உதவியே ய்ருளும் உத்தமா போற்றி

19.“புதன்”-சீரான வாழ்விற்கு- தினமும்/ புதன் கிழமை

 மதன் நூல் முதலாய் நான்கு மறை புகல் கல்வி ஞானம் 
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன் பசு பாரி பாக்கியம் சுகம்பல கொடுக்க வல்லான்
புதன்கவி புலவன் சீர்மால் பொன்னடி போற்றி! பொற்றி!

20.“புதன் கீர்த்தனை”- முத்துசாமி தீட்சிதர்- தினமும்/ புதன் கிழமை-கோளின் அனுக்கிரகம்- சகல நன்மைகள்.

அதிபதி யாகிய புத பகவானை நான் வணங்குகின்றேன். தேவர்களால் போற்றப்படுபவரும், சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்த புத பகவானை நான் வணங்குகின்றேன்.

அறிவாளிகளால் அறியப்பட்டவர், அந்தணர்களால் சந்தோஷிக்கப்பட்டவர், இனிய கவியியற்றுபவர், புகழத்தக்க செல்வங்களை அளிப்பவரான புத பகவானை நான் வணங்குகின்றேன்.

குங்கும வண்ணமுள்ளவர், குருகுஹனுக்கு சந்தோஷம் அளிப்பவர், செவ்வாய்க்கு எதிரி, ரத்ன கிரீடம், மாலை, தோள்வளை, காப்பு ஆகியவைகளை அணிந்தவர். மிக அழகான மிதுன, கன்யா ராசிகளுக்கு

கையில் புத்தகங்களை வைத்துக் கொண்டிருப்பவர். அடியார்களால் போற்றப்படுபவர், பாபம் முதலிய துர்க்குணங்கள் இல்லாதவர், சிவனடியார்களுக்கு நன்மை செய்பவர். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவராகிய புத பகவானை நான் வணங்குகின்றேன்.

ஞாழல்- கோங்கு- குங்குமம் மொட்டு போன்ற கருநிறம் உள்ளவரும், உவமையேயில்லாத அழகுடையவரும், ஞான வடிவமானவரும், சந்திரனின் குமாரரும், நற்குணங்களின் இருப்பிடமானவருமான புதபகவானை வணங்குகின்றேன்.

21.“புத கவசம்”- நோய், துன்பம் நீங்க, புண்ணியங்கள் பெற- தினமும்/ புதன் கிழமை.

 அம்பொனாடை அழகுபடப்பனை 
பம்பு குங்கும மேனியும் பார் எலாம் 
நம்பு புத்தக கையும் நயந்துகொள் 
தம்பிரான் புதன் தால் மலர் ஏத்துவாம்!

 வரும்புதன் சென்னி காக்க!
வளர்தரு மதியின் மைந்தன்
அரும்பிறை நெற்றி காக்க!
அறிஞன் கண் இரண்டும் காக்க!

 விரும்பு உறு செவி இரண்டும் 
விதுமகன் காக்க! மெய்க்கண்
தரும்பல சுகந்தம் பூசும்
சவுமியன் உயிர் புரக்க!

 புத்தகம் ஏந்து நாதன்
புயவரை இரண்டும் காக்க!
நித்தமும் தேவர் போற்று 
நின்மலன் மருங்குல் காக்க!

 வித்தக வன நாதன்
விழைகரு நாபி காக்கச்
சுத்தநூல் கலைவல்லாளன்
சொலும்கடி தடம் புரக்க!

 தேவர்கள் தலைவன் என்றும் 
திருமலி தொடை புரக்க! 
மேவரும் உரோகிணி மைந்தன் 
விழைதரு முழந்தாள் காக்க!

 ஆவன தருவோன் சங்கம்
அளிக்க வில் அமர் கரத்தோன் 
பாவடி காக்க மேனி 
பனிமதி புதல்வன் காக்க!

 நலமேவும் புதகவசம் படிப்பவர் 
கேட்பவர் கேட்க நயந்து செய்வோர் 
வலமேவும் துன்பு ஒழிய நோய் ஒழியப்
பல்லாண்டு வாழ்க்கை எய்தி
நிலமேவும் புத்திரரும் பௌத்திரரும்
மிகப்பெருக நினைந்த எல்லாம் 
அலமேவும்படி பெறுவர் புண்ணியமும் 
மெய்க்கதியும் அடைவர் அன்றோ!

22.“குரு துதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/வியாழக்கிழமை

குணமிகு வியாழக் குருபகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்திவ் யாழ பரகுரு நேசா
க்ரகதோஷமின்றிக் கடாக்ஷீத் அருள்வாய்

23.“குரு”-சீரான வாழ்விற்கு- தினமும்/வியாழக்கிழமை.

மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி 
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும் 
இறையவன் குரு வியாழன் இருமலர்ப் பாதம் போற்றி!

24.“குரு துதி”- வாழ்வில் வளம் பெற- தட்சிணாமூர்த்தி சன்னதியில்- தினமும் / வியாழக் கிழமை.

குருவும், பிரகஸ்பதியும், ஜீவனும், ஆச்சார்யனும், புத்திமான்களுள் சிறந்தவனும், வாக்கிற்கு ஈஸ்வரனும், நீண்ட தாடி, மீசை உள்ளவனும், பீதாம்பரம் தரித்தவருமான உம்மை வணங்குகின்றேன். அமிர்தமயமான பார்வையுள்ளவனும், கிரகங்களுக்குத் தலைவனும், கிரகங்களின் பீடையைப் போக்குகிறவனும், கருணைப் பார்வை உள்ளவனும், அழகிய உருவம் கொண்டவனும், தேவர்களால் பூஜிக்கத் தகுந்தவனுமான குருவே உன்னை வணங்குகின்றேன்.

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் ஆசார்யரும், தங்க நிறமுள்ளவரும், மூன்று உலகங்களிலும் வணங்கப்படுபவருமான குருபகவானை வணங்குகின்றேன்.

25.“குருகீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்- தினமும்/ வியாழக் கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

பிரும்மனுக்கு பிறந்தவரும், தாரையின் கணவருமான பிருஹஸ்பதியே உன்னை வணங்குகின்றேன்!

மிகவும் பலம் வாய்ந்தவரும், வாக்குகளுக்கு அதிபதியும், அழகான தனுர், மீன ராசிகளுக்கு அதிபரும், இந்திரன் முதலானோர்களால் போற்றப்படும் ஆக்ருதியை உடையவரும், விஷ்னு முதலியவர்களால் புகழப்படும் மிகுந்த அறிவாளியான குரு பிரஹஸ்பதியே நான் உன்னை வணங்குகின்றேன்!

தேவகுரு, வஜ்ரதாரி, நல்ல அழகர், மூவுலகிற்கும் குரு, கிழத்தன்மையில்லாதவர். கோபமில்லாதவர். கசனின் தந்தை, தன்னை அண்டியவர்களுக்கு கற்பக விருஷம் போன்றவர். பரமசிவன், குரு, குஹன் ஆகியோரின் மகிழ்ச்சிக்கு ஆளானவராகிய குருவே நான் உன்னை வணங்குகின்றேன்!

புத்ர பாக்யத்தைக் கொடுப்பவர். எளியோரின் பந்து, பரா முதலிய நான்கு வாக்குகளின் லக்ஷணத்தைப் பிரகாசிக்கச் செய்பவர். கருணைக்கடல். சுத்தமானவர். குறையற்ற நீதிசாஸ்திரத்தை இயற்றியவர். தடங்கலில்லாதவர். உலகத்தை ஆட்சி செய்பவர். களங்கமற்றவர். உலகைக் காப்பவர். நிர்க்குணஸ்வரூபி. வேள்விகளின் பயனை கொடுப்பவராகிய குரு பிரகஸ்பதியே நான் உன்னை வணங்குகின்றேன்!

26.“குரு கவசம்”- துன்பம் நீங்க, வெற்றி பெற- தினமும்/ வியாழக் கிழமை.

 சீரியன் மனத்துள் வேண்டும் 
சித்தி தந்து அளித்துச் செய்யும்
பாரியல் கருமம் கூட்டிப்
பரவு மெய்ஞான வாழ்வு 
மேரியல் செல்வப் பேறும் 
யாவையும் ஒருங்கு நல்கும் 
தெரியல் அறிஞன் தேவர்
தேசிகன் திருத்தாள் போற்றி!

 அரும் பிரஸ்கபதி பேர்
ஆண்டகை சென்னி காக்க!
வந்திரு நெற்றி காக்க!
வானவர் குரவன் கன்னம்
விரும்பினன் காக்க! நாட்டம்
வேண்டுவ தருவோன் காக்க!
பருங்குமிழ் பொருவு நாசி 
பண்ணவர் அரசன் காக்க!

 பாட்டு அமர் செவ்வாய் வேத
பாரகன் காக்க! துண்டம்
கூட்டு முற்றறிவன் காக்க!
குலவரைப் புயம் இரண்டும் 
வேட்டமர் சுகம் தந்து ஆள்வோன்
விரும்பினன் காக்க! செங்கை 
வாட்டும் வச்சிரம் கைக்கொள்ளும்
வான்வன் வழாது காக்க!

 பருவரை பொருவு மார்பம்
பயிலுங்கீட்பதி புரக்க!
விருதனம் வாக்கு வல்லோன் 
என்றும் வந்து எய்திக் காக்க
வருசுகம் நல்கும் நாதன்
வயங்கு எழில் வயிறு காக்க!
பொருவரு நீதி வல்லோன்
பொற்பு உரு நாபி காக்க!

 எங்கும் சென்று அளிக்கும் ஈசன்
எழிற்கடி புரக்க! ஊருத்
தங்கு புண்ணியன் புரக்க!
சங்க மெய்ஞானம் ஈயும்
புங்கவன் புரக்க! பாதம்
புகல் உலகெல்லாமாகும்
அங்கணன் புரக்க! மேனி
அமர் குருப் புரத்து காக்க!

 காலையும் உச்சிப் போதும்
கதிரவன் குடபான் மேவு
மாலையும் வானோர் போற்ற
வருகுரு கவசம் என்னும்
நூலை அன்போடு உரைக்கும்
நுண்ணியன் வேட்டாங்கு எய்திச்
சோலை அம் தரு விண்ணாட்டுச் 
சுரரையும் வெற்றி கொள்ளும்!

குருதிசை தோஷங்கள் விலக தினமும் 11முறை

ஓம் தட்சிணா மூர்த்தியே வித்மஹே
த்யா நஸ்தாய தீமஹி
தந்நோ தீச ப்பிரசோயாத்

27.“சுக்கிரதுதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/வெள்ளிக்கிழமை

சுக்கிர மூர்த்தியே சுபமிக ஈவாய்
வக்ரமின்றி வரமிக அருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்கருளே.

மூர்க்கவான் சூரன் வாணன் முதலியோர் குருவாய் வையம்
காக்க வான்மழை பொய்விக்கும் கவிமகன் கனகம் ஈவோன்
தீர்க்க வானர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும் 
பார்க்கவன் சுக்கிரன் தன் பாதபங்கயங்கள் போற்றி!

28.“சுக்ரன்துதி”-சீரானவாழ்விற்கு-தினமும்/வெள்ளிக் கிழமை.

வீரத்தில் சிறந்தவர்களும், மூர்க்ககுணம் உடையவர்களுமான அசுரர்களின் குல குருவாக இருப்பவரும், பூவுலகம் செழித்திட அவசியமான மழையைப் பொழியச் செய்பவரும், கவிமகன் என்று அழைக்கப் படுபவரும், தன்னை வழிபடுவோருக்கு பொன், பொருள், போகம் போன்ற சகல செல்வங்களையும் அளிப்பவரும் இறந்தவரையும் மீண்டும் எழச்செய்யும் மிருத சஞ்சீவி மந்திரத்தினை அறிந்தவருமாகிய சுக்ரபகவானின் திருவடித் தாமரைகளைப் பணிக்கின்றேன்.

பனி, மல்லிகை, தாமரை போன்ற நிறமுள்ளவரும் அசுரர்களின் பரமகுருவும், சகல சாஸ்திரங்களையும் அறிந்தவருமான சுக்கிரனை வணங்குகின்றேன்.

29.“சுக்கிரன் கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ வெள்ளிக் கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

சகல தத்துவங்களையும் அறிந்த ஸ்ரீசுக்ர பகவானை நான் வணங்குகின்றேன்!

ஹே! சுக்ர பகவானே! என்னை எப்போதும் காப்பாயாக! விருஷப, துலா ராசிகளுக்கு அதிபரே! அசுரர்களின் நலனைக் கோருபவரே, விஷ்னுவின் கருணையால் இழந்த ஒரு கண்ணை மீளப்பெற்றவரே, கிரீடத்தை தரித்திருப்பவரே, வெண்மையான மேனியை உடையவரே உன்னை நான் வணங்குகின்றேன்!

இருபது வருச தசாகாலமுடையவரே. எட்டு கர்வங்களுக்கு உட்பட்டவரே. அற்புதமான கவியே. மனைவியைக் கொடுக்கவல்ல களத்திராகார அதிபதியே, சூரியன், குரு ஆகியோரின் எதிரியே. நவாம்சம், ஹோரை, த்ரேக்காணம் முதலியவைகளையும், வர்கோத்தம ஸந்தர்ப்ப காலத்தில் வக்ரம், உச்சம், நீசம், தன்வீடு, கேந்திரம், த்ரிகோணம் இவைகளை உடையவரே உன்னை நான் வணங்குகின்றேன்!

ஜனன லக்னத்தை முப்பாதாகப் பிரிக்கும் த்ரிம்சாம்ஸம், ஜனன லக்னத்தை அறுபதாகப் பிரிக்கும் ஷஷ்டியாம்ஸம், ஐராவதாம்ஸம், பாரிஜாதாம்ஸம், கோபுராம்சம் ஆகியவைகளில் ராஜ யோகத்தைச் செய்து கொடுப்பவரும், குருகுஹனால் சந்தோஷிக்கப் பட்டவருமான சுக்ரபகவானே நான் உன்னை நான் வணங்குகின்றேன்!

30.“சுக்கிர கவசம்”- துன்பம் நீங்க, நினைத்தவைகூட- தினமும்/ வெள்ளிக் கிழமை.

பங்கய நாளம் குந்தம்
படர்மதி பனியான் பால்போல்
தங்குறும் வெள்ளை மெய்யும்
சத்தும் வெண்துகிலும் செவ்வி
பொங்குறும் அக்கமாலைப்
பொலிவு நூற்கேள்வியும்கொள்
புங்கனவன் புகரா மேலோன்
பொன்னடிக் கமலம் போற்றி!

பாங்கொடு வணங்கும் சென்னி 
பார்க்கவன் பரிந்து காக்க!
தீங்கறு கிரகநாதன்
திருநுதல் புரக்க நாட்டம்
ஓங்குதானவர்தம் ஆசான்
ஓம்புக செவி இரண்டும்
தாங்குவெண் சாந்தம் போன்று
தயங்கு ஒளி மெய்யோன் காக்க!

பொலி கவி நாசி காக்க!
புதுமதி பொருவும் துண்டம்
வலிகெழு திதியின் மைந்தர்
வழுத்திடப் பாடுவோன் காக்க!
நலிவறு முசனன் செவ்வாய்
நயந்தனன் புரக்க கண்டமலி
சிவ பத்தியாளன்
வைகலும் புரந்து காக்க!

ஒளிபடு மேனி அண்ணல்
உயர்வரைப் புயம் புரக்க
தெளிவு உறுயோகச் செல்வன்
திருமலி மார்பம் காக்க!
விளிவரும் அக்க மாலை
மேனியில் தரிக்கு அண்ணல்
அளிபடு கருணையோடும்
ஆலிலை வயிறு காக்க!

புவமலி கலைஞன் காக்க!
புணர்கடி உலகுக்கு எல்லாம்
நிலவு உயிராகி நின்றோன்
நெடுந்தொடை புரக்க யாரும் 
பலதுதி புகன்று போற்றும்
பண்ணவன் முழந்தாள் காக்க!
நலமலி பிருகு மைந்தன்
நயம்படு கனைக்கால் காக்க!

பண்ணவர் தலைவன் என்றும்
படர்தரு பரடு காக்க!
நண்ணுறு குணக்குன்று அன்னான்
நடைப்படு பாதம் காக்க!
வண்ண வெண்துகில் புனைந்த
வள்ளல் என்மேனி முற்றும்
அண்ணுநோய் பலவும் போக்கி
அந்தியும் பகலும் காக்க!

தக்கவர் பரவிப் போற்றும்
தைத்தியர் குருவை வேண்டிச்
சுக்கிர கவசமென்னும்
தோத்திரக் கவிநூல் பாடி
நெக்குநெக்கு உருகு நெஞ்சோர் 
நினைந்தன யாவும் கூடும்
மக்களும் மனையும் வாழ்வும்
வைகலும் பெருகு மாதோ!

31.“சனி துதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/சனிக்கிழமை

சங்கடந்தீர்க்கும் சனி பகவானே
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே
இச்சகம் வாழ இன்னருள் தாதா

32.“சனி”- சீரான வாழ்விற்கு- தினமும்/ சனிக் கிழமை

முனிவர்கள் தேவர்கள் ஏழு மூர்த்திகள் முதலினோர்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ?
கனிவுல தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
சனியனே உனைத் துதிப்பேன் தமியனேற்கு அருள்செய்வாயே!

33.“சனி கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ சனிக் கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

சூரிய குமாரரும், மிகவும் தைரியம் உள்ளவருமான சனீஸ்வரபகவானை நான் வணங்குகின்றேன்.

சம்சாரக் கடல் பற்றிய பயத்தை மக்களுக்கு உண்டாக்குபவர். மிகக் கொடூரமான பலன்களை அளைப்பவர். பரமசிவனின் பக்தர்களுக்கு அதிசய பலன்களைக் கொடுப்பவர். சனீஸ்வரபகவானை நான் வணங்குகின்றேன்.

கருமையான தேகமுள்ளவர். யமனின் சகோதரர். காகவாகனர். நீலவஸ்திரம், பூமாலை உடையவர். நீல ரத்தினங்களை அணிந்தவர். மாலினி மந்திரத்தால் துதிக்கப்பட்டவர். சனீஸ்வரபகவானை நான் வணங்குகின்றேன்.

மகர கும்பராசிகளின் அதிபர். எள்ளன்னம், நல்லெண்ணெய் தீபத்தில் பிரியமுள்ளவர். கருணைக்கடல். பயமற்றவர். காலதண்டத்தால் முழங்காலை இழந்தவர். அண்டினவர்களுக்கு காமதேனு போன்றவர். காலசக்ரத்தை உடைப்பதில் சூரியனைப் போன்றவர். கற்பிக்கப்பட்ட சாயாதேவியின் புதல்வரை வணங்குகின்றேன்.

நீலவண்ண ஆடைகளில் ஜொலிப்பவரும், நீல வண்ணமாயுள்ளவரும், சூரியகுமாரரும், யமனுடைய சகோதரரும், சாயாதேவி, சூரியன் என்ற தேவ தம்பதிகள் இனைந்ததால் உண்டானவருமான சனி பகவானை வணங்குகின்றேன்.

34.“சனி கவசம்”-வெற்றி, புகழ், பெருவாழ்வு கிடைக்க, துயர், விணை, பிணி, கவலை போக்க- தினமும்/ சனிக் கிழமை.

 நெருங்கிடு பிணியெல்லாம்
நீக்கு நோன்மையும்
ஒருங்கு மொய்ம்பு இரண்டும்
ஆங்குறும் கருத்துகில்
மருங்குலும் கழுகிவர் 
வனப்பும் கொண்டு அமர்
அருங்கதிர் மதலை தாள்
அன்போடு ஏத்துவாம்!

 மறுவறும் எனது சென்னி
வளர்புகழ் சனி புரக்க
பெறுமுகம் அன்பர் அன்பன்
பேனுக செவி கறுக்கும்
அறுவை நன்கு அணிவோன் காக்க!
அச்சமே விளைக்கும் மெய்யோன் 
நறுமலர் விழிபுரக்க 
நாசி கை காரி காக்க!

 கருங்களம் உடைய தேவன்
கவின்படு கண்டம் காக்க!
பெருங்கவின் படுபுயத்தோன்
பெருவரைப் புயம் புரக்க!
வருங்கை நீலோற்பலம்போல்
வளர் ஒளி அண்ணல் காக்க!
ஒருங்குறும் எனது நெஞ்சம்
உடல்கரியவன் புரக்க!

 சுந்தரம் தழுவும் உந்தி
கட்கமாம் வயிற்றோன் காக்க!
சந்தமார் விகடம் செய்வோன்
தடம்படு கடிபுரக்க
நந்திய கோர ரூபன்
நற்றொடை புரக்க நாளும்
முந்துறு நெறிய ரூபன்
மொழிதரு முழந்தாள் காக்க!

 மங்கலம் ஈயும் ஈசன்
வனப்புறு கணைக்கால் காக்க!
தங்குறு பரடு இரண்டும்
தகு குணாகரன் புரக்க!
மங்கெனப் படுவோன் பாதம்
பழுதறப் புரக்க! பார்மேல் 
செங்கதிர் அளிக்கும் மைந்தன்
திருந்துமென் அங்கங் காக்க!

 நன்றிததமும் சனிக்கவசம் நாள்தோறும் 
அன்பினொடு நவின்று போற்றில் வென்றிதரும் 
விறல் உதவும், புகழ் அளிக்கும், பெருவாழ்வு 
மேவ நல்கும் கன்றுபவத் துயர் ஒழிக்கும், விணை 
ஒழிக்கும், பிணி ஒழிக்கும், கவலை போக்கும், 
அன்றியும் உள் நினைந்தவெலாம் அங்கை 
நெல்லியம் கனியாம் அவனியோர்க்கே!

 அருஞ்சுவணம் முதலவற்றின் அமைக்கும்
இயந்திரம் எள்ளுள் அமரவைத்து
வருஞ்சுகந்த மலராதிக்கு அரியவற்றால்
பூசித்து மனுப்புகன்று பெருஞ்சுகம் 
கொண்டிட விழைவோன் கருந்துகிலோடு 
அந்தணர்க்குப் பெட்பின் ஈயில் கருஞ்சனி 
உள் மகிழ்ந்து உறுநோய் சுளைந்து
நலமுழுதும் உளங்கனிந்தே நல்கும்!

 ஆங்கதனோடு அரும்பொருளும் 
மற்றவனுக்கு அளிப்பன் எனில்
அவனுக்கு என்றும் தீங்கு அகல 
மேன்மேலும் பெருகி எழும்
வாழ்நாளும் செல்வப் பேறும்
ஈங்குமனை மக்கள் முதல்
பற்பல சுற்றப் பொலிவும்
உதவும் காண்பீர்!

35.“சனி கவசம்”- காரியங்களில் தடையின்றி வெற்றி மற்றும் பெருவாழ்வு கிடைக்க, தினமும்/ சனிக் கிழமை.

• கருநிறக் காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும்
ஒருபெரும் கிரகமான ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள்கேட்டு வணங்குகின்றேன்! ஆதரித்தெம்மைக் காப்பாய்!
பொருலோடு பொன்னை அள்ளி பூவுலகில் எமக்குத் தாராய்!

• ஏழரைச் சனியாய் வந்தும் எட்டில் இடம் பிடித்தும்
கோளறு நான்கில் தந்து கொண்டதோர் கண்டகத்தில்
ஏழினில் நின்ற போதும் இன்னல்கள் தாரா வண்ணம்

ஞாலத்தில் எம்மைக் காக்க நம்பியே தொழுகின்றேன் நான்!

• பன்னிரு ராசிகட்கு, பாரினில் நன்மை கிட்ட
எண்ணிய எண்ணம், எல்லாம் ஈடேற வழிகள் காட்ட
எண்ணையில் குளிக்கும் நல்ல ஈசனே உனைத்துதித்தேன்!
புண்ணியம் எனக்கு தந்தே புகழ் கூட்ட வேண்டும் நீயே!

• கருப்பினில் ஆடை ஏற்றாய் காகத்தில் ஏறி நின்றாய்!
இரும்பினை உலோகமாக்கி எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீலவண்ணம் அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா பேரருள் தருக நீயே!

• சனியெனும் கிழமை கொண்டாய் சங்கடம் விலக வைப்பாய்!
அணிதிகழ் அனுஷம், பூசம், ஆன்றதோர் உத்திரட்டாதி,
இனிதே உன் விண்மீனாகும்! எழில் நீலா மனைவியாவாள்!
சனியாக உனக்கு ஆண்டு பத்தொன்போதென்று சொல்வர்!

• குளிகனை மகனாகப் பெற்றாய் குறைகளை அகல வைப்பாய்!
எழிலாள சூரியன் உன் இணையற்ற தந்தை யாவார்!
விழிபார்த்து பிடித்துக் கொள்வாய்!விநாயகர்,அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச்செல்வாய்! துணையாகி அருள் தாராய்!

• அன்னதானத்தின் மீது அளவிலாப் பிரியம் வைத்த
மன்னனே! சனியனே! உன்னை மனதாரப் போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்! உய்ர்வெல்லாம் எமக்குத் தந்தே
மன்னர் போல் வாழ்வதற்கெ மணியான வழிவகுப்பாய்!

• மந்தனாம் காரி, நீலா மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே சனியெனும் எங்கள் ஈசா!
வந்திடும் துயரம் நீக்கு! வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும் இனிய நாளாக மாற்று!

36.“ராகு”- சீரான வாழ்விற்கு-தினமும்/ஞாயிற்றுக்கிழமை

அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா அருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கன்னியே ரம்மியா போற்ற

37.“ராகு”- சீரான வாழ்விற்கு- தினமும்/ஞாயிற்றுக் கிழமை

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே அற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன் பரன் கையில் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய்! ரட்சிப்பாயே!

38.“ராகு கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ ஞாயிற்றுக் கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

சூர்ய சந்திரர்களால் பார்க்கப்படுபவரும், விகாரமான சரீரத்தை உடையவருமான ராகுவை நான் வணங்குகின்றேன்.

தேவன், அசுரன் என்ற இருசுபாவமுள்ளவர். வியாதிகளைப் போக்குபவர். சர்ப்பங்களால் ஏற்படும் பயத்தைப் போக்குபவர். முறத்தை சுகமான ஆசனமாக உடையவர். ராகுவை நான் வணங்குகின்றேன்.

கையில் சூலத்தை ஏந்தியிருப்பவர். பயங்கரமான முகத்தையுடையவர். கடினமான மனதையுடையவர். ‘கயாந’ எனத் தொடங்கும் மந்திரத்தை சொல்பவர்களை கருணையுடன் பார்ப்பவர். ராகுவை நான் வணங்குகின்றேன்.

கத்தி, கேடயம், நீலவஸ்திரமணிபவர். கோமேதகத்தை ஆபரணமாக்கிக் கொண்டவர். சனி, சுக்ரன் ஆகியோரின் நன்பர். குருகுஹனை சந்தோஷப்படுத்துபவர். ராகுவை நான் வணங்குகின்றேன்.

பாதி சரீரமுள்ளவரும், மிகுந்த வீர்யமுள்ளவரும், சந்திர சூரியரை கதிகலங்கச் செய்பவரும், சிம்ஹிகையின் கர்பத்தில் உதித்தவருமான ராகுவை வணங்குகின்றேன்.

39.“ராகு கவசம்”- புகழ், நீண்ட ஆயுள் கிடைக்க, நோய் நீங்க - தினமும்/ ஞாயிற்றுக் கிழமை.

 வெம்கடு உமிழ்முகம் விளங்கு பாம்பு உருவ
பொங்கொளி மணிமுடி பூண்ட பொற்சிரம்
அங்கு அமை வடிவொடும் அன்பர் போற்றிச்செய்
சிங்கிகை அளித்திடு சேயைப் போற்றுவோம்!

 பொலியும் நீலாம்பரத்தோன்
பொற்பு உறு சிரம் புரக்க!
நலிவறும் உலகம் போற்றும் 
நாயகன் நெற்றி காக்க!
மலிபகழ் இராகு நாட்டம் 
வரம்படப் புரக்க கன்னம்
மெலிவறும் பாதி மேனி
வித்தகன் மேவிக் காக்க!

 நஞ்சு உமிழ் பவள வாயான்
நாசிகை புரக்க கண்டம்
விஞ்சு எழில் சூலபாணி
விழைவொடு புரக்க, செவ்வாய்
வஞ்சி சிங்கி கைதன் மைந்தன்
மருவினன் புரக்க! கண்டம்
துஞ்சு உறு கண்டம் உண்போன்
தொலைவறப் புரந்து காக்க!

 பொன்பொலி புயங்க நாதன்
புயவரை புரக்க! பூங்கை
மின்பொலி நீலமாலை
வித்தகன் புரக்க! மார்பம்
மன்பொலி தவமே என்றும்
வடிவு எனக் கொள்வோன் காக்க!
தென்பொலி உந்தி என்றும்
செழுமதி உண்போன் காக்க!

 நயம்படு விகடச் செல்வன்
நற்கடி தடம் புரக்க!
பயம்படு வானோர் போற்றும்
பண்ணவன் தொடை புரக்க!
வயம்படு முழந்தாள் கோலமலி
சுவர்ப்பானு காக்க!
சயம்படு நாக வேந்தன்
தளர்வறு கணைக்கால் காக்க!

 விண்ணெழு கிரகநதன்
விளங்கு ஒளிப் பரடு காக்க!
மண்ணுறும் அடி இரண்டும் 
மலிபுகழ்க் கோர ரூபன்
நண்ணினன் புரந்து காக்க!
நயக்குமென் அங்கமெல்லாம்
தண்ணிய நீலச் சாந்தம்
தரிப்பவன், புரந்து காக்க!

 தண்ணமரும் புனலாடிச் சந்திமுதல்
கடன் அனைத்தும் தவறாது ஓம்பி
விண்ணமரும் மதிவிழுங்கும் ராகு கவசம்
புகல்வோன் விரும்பும் உள்ளத்து
எண்ணம்வரும் அவை பெருவன் 
புகழ்பெறுவன் செல்வம் எலாம் எய்தி 
வாழ்வன், மண்ணமரும் நோய் அகன்று 
வளர்ந்து ஏறும் பேராயுள் மருவி வாழ்வன்!

40.“கேது”- சீரான வாழ்விற்கு-தினமும்/ஞாயிற்றுக்கிழமை

கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேது தேவே கேண்மையாய் ரக்ஷீ.

41.“கேது”-சீரான வாழ்விற்கு- தினமும்/ஞாயிற்றுக் கிழமை

பொன்னையின் னுதிரத்தில் கொண்டோன் புதல்வர்தம் பொருட்டால் ஆழி தன்னையே கடைந்து முன்னத் தண் அமுது அளிக்கல் உற்ற பின்னைநின் கரவால் உண்ட பெட்பினில் சிரம்பெற்று உய்ந்தாய் என்னைஆள் கேதுவே இவ்விருநிலம் போற்றத்தானே!

42.“கேது கீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்-தினமும்/ ஞாயிற்றுக்கிழமை-கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.

அசுரர்களுக்குள் பெரியவரும், நவகிரகங்களில் சாயாகிரகம் என போற்றப்படும் கேது பகவானை நான் வணங்குகின்றேன்.

மிக விசித்திரமான கிரீடத்தை அணிந்திருப்பவர். மங்களகரமான வஸ்திரம் அணிந்திருப்பவர். மனிதனையே ஆசனமாகக் கொண்டு அவன்மீது அமர்ந்திருப்பவர். சுகமாக இருப்பவர். ஒன்பது கிரகங்களுடனும் கூடியிருப்பவர். கேதுபகவானை நான் வணங்குகின்றேன்.

‘கேதும் க்ருண்வன்’ என்ற மந்திரத்தையுடையவர். கோபமே தனமாகக் கொண்ட ஜைமினி வம்சத்தில் உதித்தவர். கொள்ளு முதலான தான்யங்களைப் புசிப்பவர். முக்கோண வடிவ கொடியை உடையவர். குருகுஹனின் வெண் சாமரத்தை ஏந்தியிருப்பவர். கேதுபகவானை நான் வணங்குகின்றேன்.

குணம், தோஷம் இவைகளை வென்ற ஞானிகளுக்கு ஆபரணமாக இருப்பவர். கிரஹணம் முதலிய கார்யங்களைச் செய்பவர். கிரகங்களை அப்பிரதக்ஷிணமாகச் சுற்றுபவர். கேதுபகவானை நான் வணங்குகின்றேன்.

பூவரசம் பூவினைப் போல் பிரகாசிப்பவரும், நட்சத்திரங்களுக்குத் தலைமையானவரும், ருத்ரகுமாரரும், பயங்கரமானவருமான கேதுவை வணங்குகின்றேன்.

43.கேது கவசம்- வேண்டுவன கிடைக்க, நோய், பகை நீங்க - தினமும்/ ஞாயிற்றுக் கிழமை.

 சித்திர வண்ணமே, திருந்து மேனியும்
அத்துவசம் பொரு மணிகொள் காட்சியும்
புத்தொளி மணிமுடிப் பொலிவும் கொண்டருள்
வைத்தமர் கேதுவை வணக்கம் செய்குவாம்!

 சித்திர வண்ணன் காக்க!
சிரம்நெற்றி தூமவண்ணன்
நித்தமும் காக்க! நாட்டம்
நீடு பிங்காக்கன் காக்க!
பக்தர் கைதொழும் செங்கண்ணன்
பலகறு செவி புரக்க! 
வித்தநேர் மேனி அண்ணல் 
மேம்படு நாசி காக்க!

 சிங்கிகை அளிக்கும் மைந்தன்
திருமலி சுபுகம் காக்க!
கங்குலும் பகலும் கேது
சுந்தரம் காக்க! கந்தம்
போங்கு ஒளிக் கிரகநாதன்
புரக்க தோள் புலவர் கோமான்
அங்கு அமர்ந்து அளிக்க உந்தி
அரவுரு அமைந்தோன் காக்க!

 காண்டகு கோர ரூபன்
கடிதடம் புரந்து காக்க!
மாண்டகு மருங்குல் காக்க!
வான்வரும் அசுரர் கோமான்
தூண்டகு தொடை இரண்டும் 
சுடர்ச்சிரம் பெரியோன் காக்க!
வேண்டகு கோபமூர்த்தி
எழில் முழந்தாள் புரக்க!

 வெற்றிசேர் குரூர ரூபன்
மேம்படு பதம் புரக்க!
பற்றிலா மக்கள் யார்க்கும்
பலவகைத் துன்பஞ் செய்யும்
செற்றமார் கிரக வேந்தன்
தெரிக்கும் என் அங்கமெலாம்
அற்றமொன்றானு மேவாது
அமர்ந்து இராப் பகல் புரக்க!

 காண்டகு கேதுவின் கவசம் போற்றிடின்
முண்டெழு பகையெலாம் முடிந்து மாய்ந்திடும்
வேண்டுவ யாவையும் விரைவின் எய்திடும்
பூண்டநோய் போமெனப் புகலும்நூல் எலாம்.

ராகு, கேது தோஷங்கள் விலக தினமும் 11முறை

ஓம் காத்யாய நாய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்பிரசோயாத்

நவக்கிரக தோஷங்கள் விலக தினமும் 11முறை

ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர ப்பிரசோயாத்

44.“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரியிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

oசகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

o‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’

oகடற்கரையில் உலாவும்போது அப்போது வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுறுவதால், அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழந்து விடுகின்றீர்கள். புதிய சூழலில் இருந்தாலும் மனம் பழையதில் கிடந்து தவிக்கின்றது.

oஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா! அது அற்புத இலக்கணம்.

oசந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை.

oமனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்தகாலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.

oஉனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன்! இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.

oகாலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது.
“சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880130
All
26880130
Your IP: 107.23.85.179
2024-03-19 12:56

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg