gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

அம்பாள்

Written by

                          ஓம்சக்தி ஓம்

அம்பாள்- முழுமுதல் கடவுளின் பாகம், தாயுள்ளம் கொண்டவள்.

வேறுபெயர்கள்- காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அன்னபூரணி, அபிராமி, சிவகாமி, திரிபுரசுந்தரி, கற்பாம்பிகை, கமாலாம்பிகை என தலத்திற்கு ஏற்றவாறு.

உகந்த நாட்கள்- செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி தினங்கள் சிறப்பு, எந்நாளும் வழிபடலாம்.

உகந்த மலர்கள்- வெண்தாமரை. சாமந்தி, செண்பகம், செவ்வரளி, செம்பருத்தி, முல்லை, மருது, மல்லி, சிறப்பு. அருகம்புல் மற்றும் தாழம்பூ தவிர மற்ற பூக்களை உபயோகிக்கலாம்.

மாசிமகம்- மாசிமாதபௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் அமையும். மாசிமாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம். சிம்மராசிக்கு உரிய மகநட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது விசேடம். அன்றுதான் அம்பிகை அவதரித்த நாளாகும். அன்று இறைவனை கடலில் நீராட்டுவது வழக்கம்.

வணங்கும்முறை-  கோவிலுக்கு அருகில் சென்றதும் கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும். கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. உள்ளே சென்றதும் முதலில் துவஜஸ்தம்பம் எனும் கொடிமரத்தின் முன்பு எட்டு அங்கங்களும் தரையில் படும்படி விழுந்து வணங்கி எழவும். கோவிலின் உள்ளே இருக்கும் விநாயகரை வணங்கி கருவரைக்குச் செல்லவும். வழியில் தீபமேற்றும் இடத்தில் தீபம் ஏற்றி அங்கிருந்தபடியே அதை இறைவிக்கு காட்டி பின் அதற்குரிய இடத்தில் வைக்கவும். ஆண்கள் மேலாடை இல்லாமல் தரிசனம் செய்வது சிறப்பாகும். கருவறையில் இடப்பக்கம் ஆண்களும் வலது புறம் பெண்களும் தரிசனம் செய்தல் வேண்டும்.

நீங்கள் கொண்டுவந்த பழங்கள், பூக்கள் மற்றும் அர்ச்சனைக்குரிய பொருள்களை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு அமைதியாக இறைவியின் துதிகளை, திருநாமங்களைச் சொல்லிக் கொண்டிருங்கள். அர்ச்சகர் மந்திரங்கள் சொல்லி மணி ஒலி எழுப்பும்போது கண்களை மூடாமல் இறைவியைப் பார்த்து மனதாற வணங்குங்கள். ஆராதனை செய்த தீபத்தை ஏற்று குங்குமம் பெற்று ஓம் சக்தி எனச்சொல்லி நெற்றியில் இட்டுக் கொள்ளவும். சில கோவில்களில் ஒரே இடத்தில் இருந்து ஐயனோடு அம்மையும் தரிசனம் செய்யும் வண்ணம் இருக்கும். அம்மன் சன்னதியின் சுற்றில் சண்டிகேஸ்வரி இருப்பார். அவரை வணங்கவும். பின் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியை வணங்கவும். பின் பரிவார தேவதைகளை வணங்கவும். துர்க்கை சண்டிகேசுவரியை வணங்கி நவகிரகங்களை வல இடமாக ஒன்று அல்லது ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து வணங்கவும். பிறகு மற்ற சன்னதிகளை வணங்கி கோவிலை உள்சுற்றாக சுற்றிவந்து கொடிமரத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக வீழ்ந்து இருகை கூப்பி வணங்கி எழுந்திருந்து மண்டபத்தில் இறை சிந்தனையுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்து பின் புறப்படுங்கள்.


உள்ளே.....

1.“பராசக்தி”- அன்புகிடைக்க, ஆறுதல்பெற-தினமும்/ வேண்டும் போது. 

2.“அபிராமி தோத்திரம்”-ஆனந்தவாழ்வுக்கு-தினமும்- நேரம் கிடைக்கும் போது.

3.“ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை”- வறுமை நீங்க, வளம் பெருக- தினமும் / வேண்டும் போது. 

4.“லலிதா ஸ்தவ ரத்ன” தோத்திரம்-ஆனந்த வாழ்வுக்கு- துர்வாசர் அருளியது.தினமும்-நேரம் கிடைக்கும்போது

5.“காமாக்ஷி துக்க நிவாரண அஷ்டகம்”- சங்கடங்கள் நீங்க, வளம் பெருக- தினமும் / வேண்டும் போது.

6.“காமக்ஷி துதி”- துன்பம் நீங்கி, மோட்சம் பெற- தினமும் /வேண்டும்போது. 
7.“காமாக்ஷி துதி”- துதிபாடி வாய்பேசும் திறன்பெற்ற மூகசங்கரேந்திர சுவாமிகள்- இயற்றிய மூகபஞ்சசதி- ஆரோக்கியமாக வாழ, வளம்பெருக-வேண்டும்போது.

8.“காயத்ரிதேவி” ஜபம்- புத்திக்கூர்மை, வெற்றி கொள்ளும் ஆற்றல் பெற- தினமும் 

9.“காயத்ரிதேவி”-மாங்கல்ய பலம் பெற- சத்யவானை எமன் பிடியிலிருந்து சாவித்ரி மீட்ட துதி- காரடையான் நோன்பு அன்று. 

10.“சௌபாக்ய துதி”- தீர்க்க சுமங்கலி வரம் பெற- காரடையான் நோன்பு அன்று-(பெண்களுக்கு) 

11.“நவரத்தினமாலை”-ஆதிசங்கரர்- இனிய வாழ்வு, நீண்ட ஆயுள், நிலைத்த ஆரோக்கியம் பெற தினமும்/ நவராத்திரியன்று.

12.“சக்தி கவசம்”- எதிரி பயம் நீங்க, இன்னல்கள்விலக- தேவர்களை துன்புறுத்திய அசுரனை வதம்செய்து காத்தபோது பாடியது-தினமும்/நேரம் கிடைக்கும்போது. 

13.“அஷ்டாதச சக்தி பீடங்கள்”- 16பாக்கியங்கள்பெற- தினமும்- ஆடி18சிறப்பு. 

14.“ஸ்ரீமுக பஞ்சதுதி”

15.“ஸ்ரீ சௌந்தர்ய லஹரி” 

16.“ஸ்ரீ சௌந்தர்ய லஹரி” ஆதிசங்கரர் அருளியது- விஷக்காய்ச்சல் உபாதை தீர பஞ்சமி திதியன்று முறை உச்சரித்து உளமாற வணங்கவும். 

17.“அகிலாண்டேஸ்வரி” - கல்வி, செல்வம் பெருகும். இந்திரன் துதித்தது- செவ்வாய், வெள்ளி-16முறை. 

18.“அகிலாண்டேஸ்வரி”-செல்வம் பெருகும், பாக்கியங்கள் பெற- ஆதிசங்கர்- செவ்வாய், வெள்ளிக் கிழமை. 
19.“அகிலாண்டேஸ்வரி”- ஆண்டாள்- திருமணத்தடை நீங்க வெள்ளி- மற்றும் ஆடிப்பூரத்தன்று. 

20.“அண்ணபூரணி”- ஆதிசங்கரர்- செல்வம் பெருகும், பாக்கியங்கள் பெற செவ்வாய், வெள்ளிக் கிழமை. 

21.“சிவகாமசுந்தரி துதி”- வியாக்ரபாத மகரிஷி அருளியது- நியாமான கோரிக்கைகள் நிறைவேற-தினமும் 

22.“ஸ்ரீ பவானி துதி”-கிரகதோஷங்கள், பாவங்கள், துன்பங்கள் நீங்க- தினமும். 

23.“மீனாட்சி பஞ்சரத்தினம்”- ஆதிசங்கரர்- சகல சௌபாக்கியங்கள் பெற தினமும். 

24.“திரிபுரசுந்தரி”துதி- ஆதிசங்கரர் அருளியது- வாழ்க்கை சாந்தமுடன் அமைய, சௌக்கியங்கள் பெற-தினமும். 

25.“அம்பாள் நவமணிமாலை”-நன்மைகள் அடைய, தடைகள் அகல- ஆடிமாதத்தில் தினமும்- நேரம் கிடைக்கும் போது.

26.“திருவிளக்கு”- வினைகள் நீங்கி வாழ்வில் ஒளி, சந்தான பாக்யம் பெற- வெள்ளி / திருவிளக்கு பூஜையன்று.

27.“அம்மாபோற்றி”-வினைகள், எதிர்ப்புகள்நீங்க, வளமான வாழ்வு பாக்யம் பெற- தினமும் / வேண்டும்போது. 

28.“காளிகாம்பாள்”-துன்பம் நீங்கி, ஆறுதல்பெற- பாரதியார்- தினமும் / செவ்வாய்க் கிழமை.

29.“சீதளாதேவி துதி”- உஷ்ண பாதிப்புகள் நீங்க-வேண்டும்போது 

30.“மங்கள சண்டிகை துதி”- மங்களம் பெற, துயர் தீர - தினமும் / வேண்டும் போது.

“ஸ்ரீமங்களாஷ்டகம்”:--மங்களங்கள் பெருக-மனக்குறை- பாவங்களிலிருந்து விலகி-நீண்ட ஆயுளுடன்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

1.“பராசக்தி”- அன்பு கிடைக்க, ஆறுதல் பெற- தினமும் / வேண்டும் போது.

அன்பே சிவமாய் அணைப்பாள் நம்மை அன்னை பராசக்தி!
ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் ஆதி பராசக்தி!
இப்புவி இன்பம் யாவும் அளிப்பாள் அன்னை பராசக்தி!
உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை பராசக்தி!

எங்கும் நிறைந்த ஜோதியாய் நிற்பாள் அன்னை பராசக்தி!
ஏகட்சரமாய் அவனியிலே வந்தாள் ஆதி பராசக்தி!
ஐங்கார நாதனை ஆதியில் தந்தாள் அன்னை பராசக்தி!
ஓட்டியாண பீடத்தில் அமர்வாள் அன்னை பராசக்தி!

ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி!
ஒளவை எனவே அவனியில் வந்தாள் ஆதி பராசக்தி!
ஓம் என்றாலே தேடியும் வருவாள் அன்னை பராசக்தி!
ஓம் என்றாலே ஆடியும் வருவாள் அன்னை பராசக்தி!

ஓம் என்றாலே பாடியும் வருவாள் ஆதி பராசக்தி!
ஓம் என்றாலே உருவாய் வருவாள் ஆதி பராசக்தி!
ஓம் என்றாலே குருவாய் வருவாள் ஆதி பராசக்தி!
அன்னை பராசக்தி! ஜெய ஜெய ஆதி பராசக்தி!

மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப் பணிந்து வாழ்வோமே!

2.“அபிராமி தோத்திரம்”-ஆனந்த வாழ்வுக்கு- தினமும்- நேரம் கிடைக்கும் போது.

ஸ்ரீ லலிதையே! உனக்கு நமஸ்காரம். தேவி, எழில்மிகு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவளே! அடியார்கள் கோருவதைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்! 

மகேஸ்வரி, ஒரு தாடங்கத்தின் மூலம் முழுநிலவை உண்டாக்கக் கூடியவள் நீ. பக்தர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்! 

அமிர்தகடேஸ்வரனை காந்தனாக அடைந்து சரண் அடைந்தவர்களைக் காப்பாற்றும் வாத்சல்ய சுபாவம் உள்ளவளே! அம்மா, அபிராமியே உனக்கு நமஸ்காரம். எனக்கு நாளும் நல்ல ஆரோக்கியத்தை அருளுவாய்!

கல்யாணி, மங்களத்தைக் கொடுப்பவளே! சர்வ லோகங்களையும் மங்களகரமாக்குபவளே! நிலையான ஐஸ்வர்யம் கிடைக்கும்படி செய்வாயாக! அபிராமித்தாயே உனக்கு நமஸ்காரம்!

சந்திர மண்டலத்தின் நடுவே அமர்ந்த மகாதிரிபுர சுந்தரி நீயே அல்லவா! ஸ்ரீ சக்ர ராஜதானியின் அரசியான அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

தாமரை போன்ற கண்ணழகியே! முழுமையானவளே, முழு நிலவைக் காட்டுபவளே, எனக்கு எப்பொழுதும் சௌபாக்கியத்தை அருளுவாயாக! ஸ்ரீ அபிராமியே, உனக்கு நமஸ்காரம்!

ஆனைமுகனுக்கும் ஆறுமுகனுக்கும் அன்னையே, வேத சொரூபியே! செல்வத்துக்கு ஈஸ்வரியே. எனக்கு வித்தையில் கீர்த்தியைத் தருபவளே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!
சுவாசினிகளால் போற்றப்படுபளே, பெண்கள் கணவருடன் வாழும் காலத்தை அதிகரித்து சௌமாங்கல்ய பதவியை அதிகரிக்கச் செய்பவளே. எனக்கு நித்ய சௌமாங்கல்யத்தை அருள்வாய் தாயே! ஸ்ரீ அபிராமியே! உனக்கு நமஸ்காரம்!

மார்கண்டேயராலும் மகாபக்தரான சுப்ரமண்யர் என்ற அபிராமி பட்டராலும் நன்கு பூஜை செய்து வழிபடப் பட்டவளே! ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நீயே அல்லவா. ஸ்ரீ அபிராமியே உனக்கு நமஸ்காரம்!

கல்யாணியே! மங்களம் அருள்பவளே! என்னுடைய பூஜாகிரகத்தில் உள்ள திவ்யமான உனது பிம்பம், தீபம், புஷ்பம் மற்றும் மஞ்சள் குங்குமத்தை உன்னருளால் சாந்நித்தியமடையச் செய்வாயாக! உனது அருள் நிறைந்ததாக ஆக்குவாயாக!

ஸ்ரீ அபிராமியன்னையின் இந்ததுதியினை அகம் ஒன்றி தினம் சொல்ல எனக்கு ஆயுள், பலம், கீர்த்தி, ஆரோக்கியம் இவற்றோடு சகல சௌபாக்யமும் நிச்சயம் எனக்கும் கிடைக்க அருள் புரிவாய் அபிராமி தாயே!

தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவம்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாந்தரும் அன்பரென்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே!
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளைப் புவியடங்கக்
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே!

3.“ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை”- வறுமை நீங்க, வளம் பெருக- தினமும் / வேண்டும் போது.
ஞான கணேசா சரணம் சரணம் 
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரு சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்

ஆக்கும் தொழில் ஐங்கரனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே!

“வைரம்”
கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெளியார் நினையென்னில் 
அவம் பெருகும் பிழையோன் பேசத்தகுமோ!

பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்கெமனாக எடுத்தவளே!
வற்றாத அருட் சுனையே வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“நீலம்”
மூலக் கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக் குவையே சரணம்

நீலத் திருமேனியிலே நினைவாய்!
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்1
வாலக் குமரி வருவாய் வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!
“முத்து”

முத் தேவரும் முத்தொழிலாற்றிடவே
முன்னின்றருளும் முதல்வீ சரணம்!
வித்தே விளைவே சரணம் சரணம்!
வேதாந்த நிவாஸினியே சரணம்!

தத்தேறியநான் தனயன் தாய்நீ!
சாகாத வரம் தரவே வருவாய்!
மத்தேறு ததிக்கினை வாழ்வடைவேன்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“பவளம்”
அந்தி மயங்கிய வான விதானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்தமேடை!
சிந்தை நிரம்பவளம்பொழி யாரோ!
தேம்பொழிலாமிது செய்தவளாரோ!

எந்தையிடத்து மனத்தும் இருப்பாள்!
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தாள்!
மந்திர வேதமயப் பொருளானாள்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“மாணிக்கம்”
காணக் கிடையாக் கதியானவளே!
கருதக் கிடையாக் கலையானவளே!
பூணக் கிடையாப் பொலிவானவளே!
புனையக் கிடையாப் புதுமைத்தவளே!

நாணித் திருநாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடா தவளே!
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“மரகதம்”
மரகத வடிவே! சரணம் சரணம்!
மதுரித பதமே சரணம் சரணம்!
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்!

அரஹர சிவ என்றடியவர் குழும்
அவரருள் பெற அருள் அமுதே சரணம்!
வரநவ நிதியே சரணம் சரணம்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“கோமேதகம்”
பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் முன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தியெனத்
திடமாய் அடியேன் மொழியுந் திறமும்

கோமேதகமே குளிர் வான் நிலவே!
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்!
மாமெருவிலே வளர் கோகிலமே!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“பதுமராகம்”
ரஞ்சினி நந்தினி அங்கனி பதும!
ராகவி காஸ வியாபினி அம்பா!
சஞ்சல ரோக நிவாராணி வாணி
சாமபவி சந்த்ரகலாதரி ராணி!
அஞ்சன மேனி அலங்க்ருதபூரணி!
அம்ருத சொரூபிணி நித்யகல்யாணி!
மஞ்சுள மேரு ச்ருங்க நிவாஸினி!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

“வைடூரியம்”
வலையொத்த வினை கலையொத்த மனம்!
மருளப் பறையால் ஒலியொத் தவிதால்
நிலையற் றெளியேன் முடியத் தகுமோ!
நிகளம் துகளாக வரம் தருவாய்!

அலையற் றசைவற்று அநுபூதிபெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே!
மலயத்துவசன் மகளே வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!

 எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தினமாலை நவின்றிடுவார்
அவர் அற்புதசக்தியெல்லாம் அடைவார் சிவரத்தினமாய்த் திகழ்வாரே!

4.“லலிதா ஸ்தவ ரத்ன” தோத்திரம்-ஆனந்த வாழ்வுக்கு -துர்வாசர் அருளியது. தினமும்- நேரம் கிடைக்கும் போது

யானை முகமுடைய மகாகணபதியை நமஸ்கரிக்கிறேன். அவர்தம் இடது மடியில் தமது மனைவி வல்லபையை அமர்த்திக்கொண்டு அவளால் ஆலிங்கணம் செய்யப் பட்டிருக்கிறார்.

செங்கழுநீர் புஷ்பத்தை மலரச் செய்யும் சந்திரனை தன்னுடைய சிரசில் தரித்துக் கொண்டிருக்கிறார். குங்குமம் போன்ற சிவந்த நிறத்தை உடையவர். லலிதாதேவி எனது சிரசைக் காக்கட்டும். பூரண நிலவைப்போன்ற அம்பிகை எனது நெற்றியைக் காக்க வேண்டும். அன்னை பவானி எனது புருவங்களைக் காக்கட்டும். மலர்க் கணைகளைக் கொண்ட தேவி எனது இரண்டு கண்களை காக்கட்டும். பாலா எனது நாசியைக் காக்கட்டும். எல்லா வளத்தையும் அருளும் அம்பிகை எனது பற்களைக் காக்கட்டும். சுந்தரி என் நாக்கைக் காக்கட்டும். கீழ் உதட்டை ஆதிசக்தியும், முகவாய்க்கட்டையை சக்ரேஸியும் காக்கட்டும்.  காமேஸ்வரி, காதுகளையும், காமாட்சி கன்னங்களையும், சிருங்கார நாயகி முகத்தையும் சிம்மாஸனேஸ்வரி கழுத்தையும் காப்பாற்றட்டும். ஸ்கந்தமாதா எனது இரண்டு தோள்களையும், பாடலாங்கி கைகளையும், பத்மநிலயா கரதலங்களையும், விஜயா நகங்களின் வரிசையையும் காப்பாற்றட்டும்.

கரும்பை வில்லாக ஏந்திய கோதண்டினி மார்பையும், வயிற்றை மலைமகளும், மையப் பிரதேசத்தை கல்யாணியும், இடுப்பை சந்திரகலாதரியும் காக்கட்டும். உமையானவள் எனது தொடைகளைக் காக்கட்டும். மிருடானி இரண்டு முழங்கால்களையும் ஷோடஸி ஜங்கப்பிரதேசத்தையும், பாசம்ஸ்ருணி இவற்றைத் தரித்த அம்பாள் கால்களைக் காக்கட்டும்.

பராபட்டாரிகை எனும் பிடாரி அம்மன் காலையிலும், மத்யானத்தில் சிந்தாமணி கிருஹநாயகியும், மாலையில் ஸர்வாணியும், இரவில் சாட்க்ஷாத் பைரவியும் காக்கட்டும். கௌரி என் மனைவியைக் காக்கட்டும். பிந்து கிருஹ பீடத்திலிருக்கும் பிந்துவாஸினி எனது புத்திரர்களைக் காக்கட்டும். ஸ்ரீவித்யா எனது கீர்த்தியைக் காக்கட்டும். மஹாரக்ஞை எனது நடத்தையை நேர்படுத்தி ரட்சிக்கட்டும். காற்று, அக்னி, பூமி, ஆகாசம், நீர், சூரியன், சந்திரன், திக்குகள், காலன், பிராணன் என்று எல்லா உருவமாயும் வியாபித்துள்ள சிவையே, நீ என்னைக் காக்க வேண்டும். காளி, கபாலினி, சூலினி, பைரவி, மாதங்கி, பஞ்சமி, த்ரிபுரை, வாக்தேவி, விந்த்யவாஸினி, பாலா, புவனேஸ்வரி என்று பலபெயர்களால் அழைக்கப்படுகின்ற அன்னையே! என்னை எப்போதும் காக்கவேண்டும். புத்தம் புதிய சிவந்த குங்குமத்தைப் போன்ற நிறமுள்ள தங்களை எவர் தங்கள் ஹிருதய பூர்வமாக வழிபடுகிறார்களோ அந்த அடியவர்களின் மீது மகாலட்சுமியின் திருப்பார்வை எப்போழுதும் விழுந்து கொண்டே இருக்கும். அ, க, ச, ட, த, ப, ய, ச என்ற வர்க்காஷ்டங்களோடு அமையப்பட்ட வசினீ முதலிய தேவதைகளால் சூழப்பட்ட வெண்மை நிறமான தங்களை வழிபடுபவர்களின் வாக்கிலிருந்து எப்பொழுதும் இனிமையான சொற்களே வெளிவருகின்றன. அம்பாளின் அம்சமான சரஸ்வதி, மகாலட்சுமியே நமஸ்காரம். தங்க கம்பிபோன்ற நிறமுடையவளும், இரண்டு காதுகளிலும் ஆடுகின்ற அழகிய குண்டலங்களை உடையவளும், புன்முறுவல் பூத்த முகத்தையுடையவளுமான தங்களை வழிபடுபவர்கள், பூமியில் தாங்கள் வசிக்கும் பொழுதே குபேரன் போன்ற பெருமையை அடைவர், குளுமையான அமிர்தத்தை தலையின் நடுவில் இருந்து வர்ஷித்துக் கொண்டிருக்கின்ற அமிர்த வர்ஷினியாகிய தங்களை வழிபடுகின்றவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கிறது. இனிமையான புன்முறுவலை உடையவளும், மதத்தினால் சிவந்த கண்களை உடையவளும், யாணையின் தலையைப் போல கடுமையான ஸ்தனங்களை உடையவளும், சந்திர கலாதாரியும் ஆன தங்களை வழிபடும் பாக்யசாலியான உபாசகர்கள் சிலர், தங்களைக் காணும்பேறு பெறுகின்றனர். ஆர்யாத்விசதி என்ற அழகிய ஸ்தோத்திரம் ஸ்ரீலலிதாதேவியைப் புகழ்ந்து போற்றிப் பாடப்பட்டுள்ளது. அதிலுள்ள சிலமுக்கியமான ஸ்தோத்திரங்கள் கொண்ட இப்பகுதியை நாள்தோறும் படிப்பவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் என்பதை அந்த லலிதா தேவியால் மட்டுமே சொல்ல முடியும்.

5.“காமாக்ஷி துக்க நிவாரண அஷ்டகம்”- சங்கடங்கள் நீங்க, வளம் பெருக- தினமும் / வேண்டும் போது.

மங்கள ரூபிணி மதியிணி சூலினி மன்மத பாணியளே!
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே!
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பகக் காமினியே!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

கானுறு மலரெனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்!
தானுறு தவ ஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்!
மானுறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே!
பொங்கரிமாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே!
எங்குலந்தழைத்திட எழில்வடிவுடனே எழுந்த நல்துர்க்கையவளே!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணிநீ வருவாய்!
கணகண கங்கண கதிரொளிவீசிடக் கண்மணி நீ வருவாய்!
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல்பாணியாளே! கொஞ்சிடும்
குமரணைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே!
சங்கடம் தீர்ந்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எங்குல தேவியவளே!
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்!
கண்ணொளியதனால் கருணையேகாட்டிக்கவலைகள் தீர்ப்பவளே!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

இடர்தரும் தொல்லை இனிமேல்இல்லையென்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரும் அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்!
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய துர்க்காஸ்ரீ பரமேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்கநிவாரணி காமாக்ஷியே!

குங்கும அர்ச்சனை செய்தோர்க்கு அம்பாள் 
கோடிக்கோடி பொன் கொடுப்பாள்!
சந்தனத்தால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள்
சர்வா பீஷ்டங்களும் கொடுப்பாள்!

தேனால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள்
திவ்ய தரிசனம் கொடுப்பாள்!
பாலால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள்
பல ஜென்ம பாவங்களை தீர்ப்பாள்!

கனியால் அபிஷேகம் செய்தோர்க்கு அம்பாள்
கண்முன்னே வந்து நிற்பாள்!
தீராத விணைகளைத் தீர்ப்பாள்
தேவி திருவடி சரணம் அம்மா!

நின் திருவடி சரணம் சரணம் அம்மா!
பவ பய ஹாரிணி அம்பா பவானியே!
துக்க நிவாரணி துர்க்கே ஜெயஜெய!
கால விநாசினி காளி ஜெயஜெய!

சக்தி ஸ்வரூபிணி மாதாவே ஜெயஜெய!
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி 
துக்கநிவாரணி காமாக்ஷியே!

6.“காமக்ஷி துதி”- துன்பம் நீங்கி, மோட்சம் பெற- தினமும் /வேண்டும்போது.

 காஞ்சி மாபுரியில் வாழும் காமகோடி வாவா!
வாஞ்சையுடன் எந்தனுக்கு வரம்ருள வாவா!
மாவடியின் கீழமர்ந்த மாமணியே வாவா!
சேவடி தந்திடும் சிவ சக்தியே வாவா!

 பிருதியாகி வந்த பரிபூரணியெ நீ வா வா!
கதிவேறில்லை அம்மா என்னைக் காத்திடவே வா வா!
குஞ்சரனை ஈன்ற அம்ப கோதையே நீ வா வா!
சஞ்சிதமகற்றும் ஞானச் செல்வமே நீ வா வா!

 பஞ்ச தசாட்சரி என்றன் நெஞ்சமதிலே வா வா!
தஞ்சமென்றுன் தாள்பணிந்தேன் தேவியே நீ வா வா!
அஞ்சலென்றுரைத் தென்னை ஆதரிக்க வா வா!
கஞ்சதள லோசனி காமாட்சியே நீ வா வா!

 சர்வ சக்தியாய் விளங்கும் சாம்பவி நீ வா வா!
சங்கரி கிருபாகரி சடாட்சரி நீ வா வா!
கற்பகமளிக்கும் திவ்ய கற்பகமே நீ வா வா!
அற்புத நிலைதரும் அம்மையே நீ வா வா!

 மாதவன் சகோதரி மங்களாம்பிகை நீ வா வா!
பூதலத்தோர் பணிந்து புகழும் பூவையே நீ வா வா!
கந்தனுகந்த அர்த்தநாரியே நீ வா வா!
நர்த்தனமிடும் உமையே நவமணியே வா வா!

 அம்பா சிதம்பரி உன்னை நம்பினேன் வா வா!
அன்பே உருவாகி வந்த அம்பிகையே வா வா!
ராஜராஜேஸ்வரி அம்பா லலிதையே நீ வா வா!
தேஜோ மயமாகிய சௌபாக்யமே நீ வா வா!

 திருமணி ஞானமணி சிந்தாமணியே வா வா!
மௌனமணி மோட்சமணி மும்மணியே நீ வா வா!
ஏகாட்சரி திரியாட்சரி ஷடாட்சரி நீ வா வா!
நவாட்சரி தசாட்சரி சோடாட்சரி நீ வா வா!

மேருவினில் வீற்றிருக்கும் திரிபுர சுந்தரி நீ வா வா!
ஸ்ரீசக்ர ஸ்வரூபி பிந்துவாசியே நீ வா வா!

7.“காமாக்ஷி துதி”- துதிபாடி வாய்பேசும் திறன்பெற்ற மூகசங்கரேந்திர சுவாமிகள்- இயற்றிய மூகபஞ்சசதி- ஆனந்த ஆரோக்கியமாக வாழ, வளம் பெருக- வேண்டும் போது.

oபிறைசூடிய பெருமானுடன் இனைந்த சக்தியும் சிவபெருமானின் பேராளுமையின் வடிவமானவளும், சந்திரகலையை தனது சிரசில் கொண்டவளும் அழகானவளுமான தேவி, காஞ்சியின் நடுவில் அருளாட்சி புரிகிறாள்.

oகம்பாநதிக்கரையில் அமர்ந்துள்ள ஆதிகாமாட்சி பூமி, சூரியன், வாயு, ஆகாயம், அக்னி, வேள்விபுரிபவர், நீர், சந்திரன் ஆகிய உருவங்களில் காட்சி தருகின்றாள். பஞ்ச பூதங்களாலான பிரபஞ்சத்தில் சூரிய சந்திரர்கள் சாட்சியாக வேள்விகள் மூலம் தெய்வத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பும் சான்றோர்கள் நிரைந்த காஞ்சியில் உறைந்துள்ள காமாட்சி, கல்வியில் கரையில்லாதவள்.

oசிவசிவா, இது என்ன இந்த சான்றோர்கள் அன்னை காமாஷியின் அருளுக்குப் பத்திரமானவர்கள் இல்லையா. காட்டையும் வீட்டையும் சமமாகப் பாவிக்கின்றார்கள். கோவைப்பழம் போன்ற உதடுகளையுடைய பெண்ணையும், ஓட்டாஞ்சில்லையும் ஒன்றாக பார்க்கின்றார்களே!

oஉலகைப் படிக்கும் சக்தியான வித்யையே, சரஸ்வதியே, காத்யாயினியே, காளியே, காமகோடிகலையே, பாரதியே, பைரவியே, பத்திரையே, சாகினியே, சாம்பவியே, சிவையே உன்னை துதிக்கின்றேன்.

oகாமாட்சியே, வணங்குபவர்க்கு வேண்டியயாவும் அருளி முக்தியளிப்பவளும், அனைத்து உயிரினங்களையும் படைத்தவளும், சிம்மவாகினியும், சிவனை மகிழ்விப்பவளும், எதிரிக்கூட்டத்தை அழிப்பவளுமான நீயே துர்க்கை யல்லவா.

oதாயே காமாட்சி. நீயே பிரம்மாவின் தாமரை போன்ற முகத்திலும்-நாக்கில் சரஸ்வதியும், விஷ்னுவின் திருமார்பிலும், பரமனின் மடியிலும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என ஆவிர்பவித்த பதிவிரதையாக இருக்கிறாய்.

oஉன்பார்வையின் தீட்சண்யமே பகல் போன்ற ஒளி. கருநெய்தல் பூவைப்போன்ற இருட்டின் ஒளியை அது தடை செய்கிறது. இது எப்படி உள்ளது என்றால் இருட்டு என்கிற வினையாகிய அயர்வை உனது கடாட்ச தீட்சண்யம் அழித்து எனது இதயத் தாமரையை மலரச் செய்வதாக உள்ளது.

oமலையரசனின் மகளே காமாட்சியே, அன்னக்கரண்டியில் எடுத்த அன்னத்தைக் கொண்டு ஏழைகளின் பசிக் கொடுமையைப் போக்கும் அன்ன பூரணி நீயே!

oகாமாட்சி தூய ஆடை அணிந்து தாமரையில் குடி இருப்பவள். புத்தகமும் ருத்ராட்ச மாலையும் ஏந்திய அழகிய திருக்கரங்களை உடையவள். அடர்த்தியான இமைகளுடன் கூடிய கண்களையும் அழகிய வீணை ஏந்திய கரங்களையும் கொண்டவள். காமாட்சி நீயே பிரம்மாவின் பத்தினியான சரஸ்வதியாகவும் விளங்குகின்றாய்.

oசதிதேவியே, மூவுலகத்தின் தாயே. நீதான் சண்டிகா. நீயே சாமுண்டி. நீயே மாத்ருகாதேவி. நீயே யோகினி வடிவுடையவள். நீயே சாம்பவி. நீ அல்லவா ஐயாவும் விஜயாவும். வேறென்ன சொல்ல முடியும். நீயே எல்லாம்.

oஹே காமாட்ஷி. அண்டினவர்களுக்கு உனது கருணையானது செல்வம், கல்வி அளவற்ற கீர்த்தி, நல்ல புத்திரபாக்யம் மூவுலகிலும் மேலான தன்மை ஆகியவற்றை எளிதில் தருகிறது. திரிபுர தகனம் செய்த பரமேஸ்வரரின் அன்புக்கு அரிய மனைவியே பக்தர்களின் பாவத்தைப் போக்குகின்ற உன்னுடைய பாதகமலங்கள், வணங்குவோர்க்கு எல்லாம் தரும்.

8.“காயத்ரிதேவி” ஜபம்- புத்திக்கூர்மை, வெற்றி கொள்ளும் ஆற்றல் பெற- தினமும்

என்னுடைய அறிவைத் தூண்டி, என் சிந்தனையிலும், செயலிலும் ஆக்கப்பூர்வமான புத்துணர்வைத்தரும் பேரொளியே, உனக்கு நமஸ்காரம். மனதில் உறுதியும், செயலில் நேர்மையும் கொண்டு நானும் உயர்ந்து என்னைச் சார்ந்தோரையும் உயர்த்தும் நற்குணம் என்னை வந்தைடைய உதவுவாயாக.

9.“காயத்ரிதேவி”-மாங்கல்ய பலம்பெற-சத்யவானை எமன் பிடியிலிருந்து சாவித்ரி மீட்ட துதி-காரடையான் நோன்பு அன்று (பெண்களுக்கு)

 பிரணவாமாக விளங்கும் ஓம்காரத்தைத் தனது பெயருக்கு முன் உடையவளே! வீணை, புத்தகத்தை கரங்களில் தாங்கியிருப்பவளே! வேதங்களுக்குத் தாயானவளே! சாவித்ரிதேவி எனும் காயத்ரிதேவியே! உன்னை நான் தாள் பணிந்து வணங்குகின்றேன்! என் கணவரை விட்டுப் பிரியாதிருக்கும் தீர்க்க சௌமங்கல்ய வரத்தை எனக்கு அளிக்க வேண்டும் அம்மா! உன்னை வணங்குகின்றேன்!

 பதிவிரதையே! உயர்ந்த பாக்கியசாலியே! கணவன் மகிழும் வண்ணம் இன்சொல் கொண்டவளே! பக்தர்களைக் காப்பதே பிரதான கடமையாகக் கொண்டிருப்பவளே! சாவித்ரி தேவியே! நான் என்றென்றும் தீர்க்க சுமங்கலியாய் வாழ எனக்கு ஆசியளித்து, அனைத்து சௌபாக்கியங்களையும் அருள்வாய்! அம்மா தேவியே! உன்னை வணங்குகின்றேன்!

10.“சௌபாக்ய துதி”- தீர்க்க சுமங்கலி வரம் பெற- காரடையான் நோன்பு அன்று-(பெண்களுக்கு)

ஓம் எனும் ப்ரணவத்தை தனது பெயருக்கு முன்னால் தரித்துக் கொண்டுள்ளவளும், வேதங்களுக்குத் தாயானவளும், சரஸ்வதி வடிவினளுமான சாவித்ரி தேவியே, உன்னை வணங்குகின்றேன். கணவனைவிட்டுப் பிரியாத தீர்க்க சௌமங்கல்யத்தை தாங்கள் எனக்கு அருளவேண்டும். பதிவிரதையும், மிகுந்த பாக்யசாலியும், கணவனுக்குப் பிரியமான வார்த்தைகள் பேசுகிறவளும், பக்தர்களை காப்பதையே கடமையாகக் கொண்டவளும் ஆன அம்பிகையே, நான் தீர்க்க சுமங்கலியாக வாழ இனிது அருள்புரிவாய் தாயே!

11.“நவரத்தினமாலை”- ஆதிசங்கரர்- இனிய வாழ்வு, நீண்ட ஆயுள், நிலைத்த ஆரோக்கியம் பெற- தினமும்/ நவராத்திரியன்று

oஹாரம், கொலுசு, கிரீடம், குண்டலங்கள் அவயவயங்களை அலங்கரிக்க பிரகாசிப்பவளும், இந்திரன், பிரம்மா முதலிய தேவர்களின் கீரீடங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும், மிகக் கருத்த நாகங்கள், பாசம், வில், அங்குசம், சிவந்த ஒட்டியாணம் ஆகியவற்றைத் தரிப்பவளும், திலகம் போன்ற நெற்றிக் கண்ணினை உடையவளுமான பர தேவதையை மனதால் வணங்குகின்றேன்.

oமணமுள்ள வாசனைப் பாக்கு, கற்பூரம் இவற்றுடன் கூடிய அழகானதும், துளிரானதுமான வெற்றிலையை போட்டுக் கொண்டதால் ஏற்படும் வாசனையை உடையவளும், சந்தியா காலம் போன்ற அழகான சிவந்த உதடுகளை உடையவளும் நீண்ட கண்களை உடையவளும். களங்கமில்லாத இளம் பிறை சந்திரனை தலையில் அணிந்து கொண்டவளும். லக்ஷ்மி நாயகனான மஹாவிஷ்னுவின் சகோதரியுமான பரதேவதையை மனதால் தியானிக்கின்றேன்.

oபுன்முறுவல் பூத்த வதனமும், மாசற்ற கன்னப் பிரதேசமும், அணிகலன்களாலும் ஹாரங்களாலும் அணி செய்யப்பட்டதும், மிகப் பருத்தவையுமான தனங்களின் பாரத்தினால் வருத்தப்படும் நூல்போன்ற இடையை உடையவளும், வீரர்களின் கர்வத்தை அடக்குவது போன்ற கொலுசுகளைத் தரித்தவளும், பிரம்மா, விஷ்னு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன், ஆகியோரைத் தனது சிம்மாசனத்தின் கால்களாய்க் கொண்டவளும், மன்மதனுடைய விரோதியான பரமசிவனின் தர்மபத்தியான பரதேவதையை மனதார நமஸ்காரம் செய்கின்றேன்.

oபூமி பாரத்தைச் சுமக்கும் ஆதிசேஷனின் மணிபதித்த உலக உருவான பீடத்தை உடையவளும், கடலில் உண்டாகும் விசேஷ மணிகளாலான ஒட்டியானத்தை தரித்தவளும், அக்னி மண்டலத்தையே சரீரமாக கொண்டவளும், கடலின் சாரமான குண்டலத்தை அணிபவளும், ஆகாயமளாவிய சிரசை உடையவளும், எங்கும் நிறைந்த பரமாத்மா காற்று எனப் போற்றப்படுபவளும், அழகிய சூரிய சந்திரர்களையே தன்னிரு விழிகளாகவுடையவளுமான பரதேவதையை மனதால் நான் துதிக்கின்றேன்.

oஸ்ரீசக்ரத்தில் பிந்துவான முக்கோணம், அதைச் சுற்றியுள்ள ஆறு இதழ்களில் பிரகாசிக்கிறவளும் தாமரையை நாணித்தலை குனிய வைக்கும் முக வசீகரமும் ஒளியும் உடையவளும், சூரியனின் காந்திக்கும் மின்னலுக்கும் ஒப்பானவளும், சந்திர மண்டலத்திலிருந்து பீறிடும் அமிர்தமயமான கிரணங்களை நிகர்த்தவளும், சிவந்த உருவத்தை உடையவளும், வட்டமாய் மறைந்த தீப வரிசைகளைக் கொண்டவளுமான பர தேவதையை நான் மனதில் தியானிக்கின்றேன்,

oயணைமுகன், மயிலவாகனன் ஆகியோரின் தாகத்தைத் தீர்ப்பதற்காக ஞானப்பால் கொடுத்த தனங்களை உடையவளும், தேவமகளிர் பாதத்தில் விழுந்து வணங்கும் போது அவர்களின் திருமுடிகளால் ஸ்பரிசம் செய்யப்பட்ட திருவடிகளை உடையவளும், பிரம்மா, விஷ்னு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் என ஐந்து சிருஷ்டித் தொழில்களைச் செய்வோரை இயக்கி வைப்பவளும், ஆதி மாதாவும் விநாயகரின் முகத்தில் மகிழ்ச்சி தோன்றிடச் செய்பவளுமான பரதேவதையை மனதால் துதிக்கின்றேன்.

oதாமரையைப் போன்ற தளிர்க் கரங்களும், பாதங்களும் உடையவளும், பதுமராக மணியிலான ஒட்டியாணம் அணிந்தவளும், புடவை முடிச்சுடன் கூடிய இடுப்பினை உடையவளும், பிரம்மா முதல் சதாசிவன் வரையான பஞ்சமூர்த்திகள் தாங்கும் சிம்மாசனத்தை உடையவளும், லஷ்மியையும், ஓங்கார வடிவினளுமான பரதேவதையை மனதால் நான் வணங்குகின்றேன்.

oவேகத்தையும் பிரணவத்தையும் தனது பீடமாய் உடையவளும், அகரம் முதலான 51 அட்சர எழுத்துக்களையும் தனது மங்கள உருவாயுடையவளும், ஆகமங்களையே தன்னுடைய அவயவங்களாகக் கொண்டு ஒளியுடன் விளங்குபவளும், எல்லா வேதங்களில் முடிவுப் பொருளாக உருக்கொண்டவளும், மூல மந்திரமெனப்படும் ஸ்ரீவித்யா மந்திரமே தனது முகமண்டலமாயுள்ளவளும், நாதம் பிந்து இரண்டும் இணைந்த நாதபிந்து வடிவமாயுள்ளவளும், தினம் தினம் புதிதாகத் தெரியும் யௌவனத்தையுடையவளும், அட்சரமாயும், திரிபுர சுந்தரி என பெயருள்ளவளாயும் உள்ள பரதேவதையை நான் மனதால் வணங்குகின்றேன்.

oநெற்றிக்கு மேலே கருமேகத்தைப் போன்று வண்டுகளின் வரிசைகளைப் போல் விளங்கும் முன்நெற்றிக் கேசத்தையுடையவளும், மல்லிகை போன்ற மணமுள்ள மலர் மாலைகளை அணிந்தவளும், தாமரை மலர் போன்ற சிவந்த கன்னப் பிரதேசத்தையுடையவளும், சர்வலோக நாயகியான காளி என்ற பெயர் பெற்று விளங்குபவளுமான பரதேவதயை மனதால் வணங்குகின்றேன்.

oஒன்பது துதிகளால் தேவியைப் பணிந்துவிட்டு நாம ரத்தினமாகிய இந்த நவரத்தின மாலிகை என்கிற ஒன்பது சுலோகங்களையும் தினமும் படிக்கும் எனக்கு போகம், மோட்சம் என்ற இரண்டையும் அடைய, ஆசைகள் நிறைவேற அருள் புரிவாய் தாயே.

12.“சக்தி கவசம்”- எதிரி பயம் நீங்க, இன்னல்கள் விலக- தேவர்களை துன்புறுத்திய அசுரனை வதம் செய்து காத்த போது பாடியது- தினமும்/ நேரம் கிடைக்கும்போது.

அங்கையிற் கரகம் தாங்கும் பிரமாணி அருளினோடும் துங்கம் என் சென்னி காக்க! வயிணவி துகளிலாகம் எங்கணுங் காக்க! 
செய்ய வேந்தெழில் உருத்திராணி தங்குமெண்டிசையும் 
அன்பு தழைத்திட இனிது காக்க!

கொன்னுனைச்சூலி சென்னி மயிரினைக் குறித்துக் காக்க!
மன்னு வெண்பிறை தாழ் சென்னி வயங்கொளி நெற்றி காக்க!

பன்மயிற் புருவம் நாளும் பரிவோடு உமையாள் காக்க!

என்னையாள் முக்கண் ஈசன் இறைவி கண்ணிமைகள் காக்க!
வயமிகு இமயவல்லி மூக்கினை மகிழ்ந்து காக்க!
செயையொடு விசயை மேல்கீழ் இதழினைச் சிறந்து காக்க!
வயலிடைச் சுறுதிதூய வஞ்செவி காக்க! கணணென் பயில் 
மலருறையுஞ் செல்வி பல்லினை உவந்து காக்க!

சண்டிமென் கபோலங் காக்க!

தவள நாண்மலரின் வைகும் ஒண்தொடி நன் காக்க!

விசயை மங்கலை மற்றொவ்வாக் கண்கவர் நாடி காக்க!

காத்தியாயினி எஞ்ஞான்றும் முண்டக மலரில் தூய முகத்தினைச் சிறந்து காக்க!

களம் உண்டு இருண்ட நீல கண்டி மென்கழுத்துக் காக்க! 
கோளில் பூதாரசக்தி சுவர்ப் புறங் காக்க! கூர்மி நீளொளி
கந்தி காக்க! ஐந்திரி நெறினோடும் தோளினைக் காக்க!
பத்மை துணை மலர் அங்கை காக்க!

கமலை கைவிரல்கள் காக்க! விரசை கையுகிர்கள் காக்க!
திமிர முண்டொளிரும் வெய்யோன் மண்டலத்து உறையுஞ்
செல்வி எமது இருவாகு மூலங் காக்க! வானவர்களேத்த அழிர்
தலகரி நாணாளு மகள் மணிமார்பங் காக்க!

திரித்திரி இதயங் காக்க! தயிர்த்தியர்ச் செகு போண்மிக்க
கருந்தொடு முலைகள் காக்க! சகத்தினிலிறைமை பூண்டோடு
இருத்தகு வயிறு காக்க! திகழ் தபோகதி தன்னுள்ளந் தருத்தின்
உந்தி காக்க! வசைவளர் முதுகு காக்க!

கருதருவி கடை காக்க! கடிதலம் பாமை வாய்ந்த குருமணிச் சகனங் காக்க!

குகாரணி குய்யங் காக்க! அருடர 
வரும் அபாய கந்தினிய பாணங் காக்க! தெருளுடை 
விபுலை யென்றும் சிறப்புடைக் குறங்கு காக்க!

லலிதை மென் முழந்தாள் காக்க! வியற்சபை
கணைக்கால் காக்க! களிதரு கோரை வாய்ந்த 
பரட்டினைக் காக்க! மிக்க அளிகொள் பாதலத்திற்
செல்வோள் அணிகெழு புறந்தாள் காக்க!

ஒளிர்நகம் விரல்கள் சந்திரி உக்கி உவந்து காக்க! தலத்துறை 
மடந்தை உள்ளங் காலினை காக்க! தண்ணென் மலர்திரு 
மனையைக் காக்க! வயங்கு கேத்திரதை யோங்கி 
உலப்பில் கேத்திரங்கள் காக்க!

பிரியகரை ஒழிவறாது நலத்தகு மக்கள் தம்மை நன்குறக் காக்க 
வன்றே! உயர் சனாதனி எஞ்ஞான்றும் ஒழிவறும் ஆயுள் காக்க!

அயர்வறு கீர்த்தியாவும் மாதேவி காக்க!

மிக்க செயிரறு தருமம் யாவும் தனுத்திரி சிறந்து காக்க!

இயல்புடைக் குலத்தை வாய்ந்த குலதேவி காக்க!

சற்கதி பிரதை நல்லோரியைபினை தயாவிற் காக்க!

விற்கொடும் போரில் நீரில் வெளியினில் வனத்திற்

சூதில் இற்புதம் அதனில் ஓங்கு சர்வாணி காக்க!

வென்னாப் பொற்றரு மலர்கள் தூவிப் புங்கவர் ஏத்தினாரே!

13.“அஷ்டாதச சக்தி பீடங்கள்”- 16பாக்கியங்கள் பெற- தினமும்- ஆடி18சிறப்பு.

இலங்கையில் சங்கரி, காஞ்சியில் தேவி காமாட்சி, ப்ரத்யும்னத்தில் சிருங்கலாதேவி, க்ரௌஞ்ச பட்டணத்தில் சாமுண்டி. ஆலம்புராவில் ஜோகுளாம்பாள், ஸ்ரீசைலத்தில் ப்ரமராம்பிகா, கோலப்பூரில் மகாலட்சுமி, மாஹிரீல் ஏகவீரிகா, உஜ்ஜையினியில் மகாகாளி, பீடிகாவில் புருஹ்ருதிகா, அயோத்தியில் கிரிஜாதேவி, தட்சவாடகத்தில் மாணிக்யா, ஹரிசேத்திரத்தில்-கௌகாத்தியில் காமரூபா, ப்ரயாகையில் மாதேஸ்வரி, கயையில் மங்களகௌரி, வாரணாசியில் விசாலாட்சி, காஷ்மீரத்தில் சரஸ்வதி, என 18 திவ்ய பீடங்களில் வசிப்பவளை மகாயோகிகளும் காண அரிதானவளை மனப்பூர்வமாக வணங்குகிறேன். எதிரிகளின் பலம் குன்றவும், வீண் பயங்கள் அகலவும், அனைத்து ரோகங்களும் குணமாகவும், சகல செல்வங்களும் சேர அருள்புரிவாய் அம்மா!

14.“ஸ்ரீமுக பஞ்சதுதி”-தினமும்.

ஸ்ரீ காமாட்சி தேவியின் கருணை நிறைந்த கடைக்கண்களின் வரிசையானது இணையில்லாத கருப்பு நிறம் கொண்ட சந்திரிகை போலவும், மூவுலகங்களிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில், அளவில்லாத மழை போன்று நூல் இயற்றும் திறமையைப் பொழியும் மேகக் கூட்டம் போலவும், மன்மதனை எரித்த சிவபெருமானின் மனதை மோகம் கொள்ளச் செய்வதில் இணையில்ல இருள் குவியல் போலவும் இருக்கின்றது, தாயே உன்னை வணங்குகிறேன்.

15.“ஸ்ரீ சௌந்தர்ய லஹரி”-அழகு அலைகள்- கலை, கல்விகளில் சிறப்பிக்க-தினமும்

அம்பிகையே! பரமேஸ்வரன் உன்னை மணந்தது, விநாயகர் மற்றும் முருகன் ஆகியோரைப் புத்திரர்களாக அடைந்தது முதலான சரித்திரங்களை, உனது சந்நிதியில் இருந்தபடி வீணையில் இசைத்துக் கொண்டிருந்தாள் சரஸ்வதி தேவி. அதை, ‘ஸாது- நன்றாக இருக்கின்றது’ என்று பாராட்டுவதற்காக. ‘ஸா’ என்று ஆரம்பித்த உனது குரலின் இனிமையைக் கண்டு தனது வீணையை உறையில் வைத்து கட்டிவிட்டு அமைதியாக இருந்து விட்டாள் சரஸ்வதி தேவி. சரஸ்வதியை உனது குரல் இனிமையால் வெற்றி கொண்ட காமாட்சி தேவியே, எனக்கு கல்வி உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் தேர்ச்சி தந்தருள்வாய்!

அம்பிகையே பரமேஸ்வரன் பத்தினியே, நமஸ்காரம். அமிர்த வெள்ளம் பொங்கிப் பெருகுவது போன்ற இனிய சொற்களைப் பேசுபவளே, அந்த உன் பேச்சை சரஸ்வதிதேவியும் தன் காதுகளால் பருகிக் களிக்கின்றாள். உன்பேச்சை ஆமோதிக்கும் வகையில் அவள் தலையசைக்கும் போதெல்லாம் காது குண்டலங்களும் அசைந்து சேர்ந்திசைக்கும். அன்னையே உன் வாக்கைக்கேட்டு சரஸ்வதியும் மகிழ்கிறாள் என்றால், சாதாரண பாமரர் எத்தகையபேறு பெற்றவராவர். ஏன் பேச்சுத் திறனற்றவரும் பேச்சாற்றல் பெறுவரே! கல்வியில் சிறப்பும், உயர் தேர்ச்சியும், கலைகளில் உன்னதமும் பெற அருளும் அம்பிகையே உனக்கு எனது வணக்கங்கள்.

அம்பிகையே நான் பேசுவது எதுவாக இருந்தாலும், அது உன்பால் செய்யப்படும் பிரார்த்தனையாக இருக்கட்டும். நான் செய்யும் தொழில்கள், செயல்கள் யாவும் உன் வழிபாட்டுக்குரிய அபிநயமாக இருக்கட்டும். நான் நடப்பது உன்னைச் சுற்றி வரும் பிரதட்சணமாகட்டும். நான் உண்பதும், அருந்துவதும் உனக்குச் செய்யப்படும் நைவேத்யமாகட்டும். நான் படுத்துக் கொள்வது, உனக்காக செய்யப்படும் நமஸ்காரமாகட்டும். என் சுகானுபவங்கள் எல்லாம் நான் என்னையே உனக்குச் சமர்ப்பணம் செய்யும் தோரணையில் அமைந்திருக்கட்டும், சுருக்கமாகச் சொன்னால் நான் செய்யும் எல்லாம் உன் வழிப்பாடாகவே இருக்கட்டும் எனக்கு நீ அருள் புரிவாயாக.

மங்கள மூர்த்தியான மகாதேவன் பராசக்தியான உன்னுடம் கூடியவரக இருந்தால் மட்டுமே எல்லா உலகங்களையும் படைக்கக்கூடிய தகுதியைப் பெறுவார். அவ்வாறு உன்னுடன் சேர்ந்தில்லாவிட்டால் அவரால் நகரக் கூடமுடியாது. மகாவிஷ்ணு, சிவன், பிரம்மா முதலியவர்கள் பூஜிக்கும் உன்னை புண்ணியம் செய்யாதவன் வணங்குவதற்கோ துதிப்பதற்கோ தகுதியுடையவன் ஆகமாட்டான்.

பிரம்மா உன் கால்சுவட்டின் தூசிகளிலிருந்து ஒரு மிகச் சிறிய அணு கிடைக்கப்பெற்று, அதைக் கொண்டு உலகை படைக்கிறார். அப்படிப் படைக்கப்பட்ட உலகங்களை ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் தாங்குகிறார். அந்த உன் பாதத்துளியையே பரமசிவன் விபூதியாகத் தன்மேல் பூசிக்கொள்கிறார்.

பரமசிவன் பத்தினியே, மலர்ந்த கறுநெய்தல் காடு போல் பிரகாசிப்பதும், அடர்ந்து, வழவழப்பாகவும், மிருதுவாகவும் உள்ள உன்னுடைய கூந்தல், எங்கள் மனத்தில் இருக்கும் அறியாமை எனும் இருளைப் போக்கட்டும்.

வார்த்தைகளுக்கெல்லாம் பிறப்பிடமான தாயே, நீ எனக்குப் போட்ட பிச்சையான சொற்களால் இயற்றப்பட்ட இந்த பாமாலையால் உன்னை நான் துதிப்பது, கற்பூர ஒளியால் சூரியனை வணங்குவது போலவும், சந்திரகாந்தக் கல்லில்கசியும் நீர்த் துளிகளால் சந்திரனை மரியாதை செய்வது போலவும், கடல் நீரால் கடலரசனைத் துதிப்பது போலவும் இருக்கிறது.
16.ஸ்ரீ சௌந்தர்ய லஹரி: ஆதிசங்கரர் அருளியது- விஷக்காய்ச்சல் உபாதை தீர பஞ்சமி திதியன்று 16 முறை உச்சரித்து உளமாற வணங்கவும். 
அம்பிகையே! வணக்கம். என் ஐம்புலன்களாலும் பக்தி ரசத்தைப் பெருக்கும் வகையில் உன்னை வணங்குகின்றேன். சந்திரகாந்த சிலை வடிவினளாக உன்னை உருவகித்து தியானிக்கின்றேன். எனக்கு பாம்பு போன்ற விஷ ஜந்துகளை அடக்கும் கருடன் போன்ற ஆற்றலினை அருள்வாயாக. அம்மா, உன் பார்வை, விஷ ஜந்துகளால் ஏற்படும் உபாதைகளையும், விஷக் காய்ச்சலையும் அறவே ஒழிக்கின்றது. பாற்கடலை கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷம் தன்னைத் தாக்கக்கூடாது என்பதற்காக மகாவிஷ்னுவே அம்பிகையை தியானித்திருக்கின்றார் என்றால் உன் அருள்தான் எத்தகைய நன்மையை விளைவிக்கக் கூடியது! எனக்கு அருள் புரிவாய் அம்மா!

17.“அகிலாண்டேஸ்வரி” - கல்வி, செல்வம் பெருகும். இந்திரன் துதித்தது- செவ்வாய், வெள்ளி-16முறை.

அகிலமெல்லாம் காக்கும் அகிலாண்டேஸ்வரி! பிரம்மா- சரஸ்வதியாலும், மகாவிஷ்ணு- மகாலட்சுமியாலும் துதிக்கப்பட்டவள். அந்த தேவியை நான் மனதார பூஜிக்கின்றேன்! குடும்பத் துயர் எல்லாவற்றிலிருந்தும் காத்து என்னைக் கரையேற்றுபவள் அவள் என்று பரிபூரணமாக நம்புகிறேன்! துன்பங்களையும், மரண பயத்தையும் என்னிடமிருந்து விரட்டும் அன்னையை ஆராதிக்கிறேன்! பரமசிவனின் பத்தினியான அகிலாண்டேஸ்வரியை தூய உள்ளத்துடன் வழிபடுகிறேன்!

18.“அகிலாண்டேஸ்வரி”- ஆதிசங்கர்- பாக்கியங்கள் பெற- செல்வம் பெருகும்- செவ்வாய், வெள்ளிக் கிழமை.

oமங்கலத்துக் கெல்லாம் மங்களமானவளே! சிவனின் துனைவியே! எல்லாப் பொருளையும் அடைவதற்கு உதவியவளே! எல்லோராலும் சரணடையத் தகுந்தவளே! முக்கண்ணியே! கௌரியே! நாராயணியே! உனக்கு என் வணக்கம்.

oஉலகையே உய்விக்க வந்த அன்னையே! பராசக்தியே! தங்களுக்கு வணக்கம்! தங்களது நாமத்தை இடைவிடாது ஜபித்து வருபவர்களுக்குத் தாங்கள் மனமிரங்கி அருளாசி புரிகின்றீர்கள். அந்த அருளால் பலனடைந்தவர்கள், தம் ஜபத்தையே தங்களுக்கு மாலையாக அணிவிக்கிறார்கள்! அப்படி ஜெபிப்பது, தெய்வப்பசுவான காமதேனு அளித்த நெய்யினை, தங்களை எண்ணி வளர்த்த யாகத்தீயில் இட்டு ஆனந்தம் அடைவதற்குச் சமமானது! அத்தகைய பேரருள் புரியும் பராசக்தியே! நானும் தங்களை என் மூச்சிழையாக தியானிக்கின்றேன்! துதி செய்கின்றேன்! எனக்கு அனைத்து வளங்களையும் அருள்வீராக!
oமூன்று கண்களுடைய ஈஸ்வரியே, வணக்கம். பக்தர்களுக்கு நலன்களை விரும்பி வழங்கும் மங்களாம்பிகையே வணக்கம். தங்க வண்ணமாக பொலியும் தாயே வணக்கம். இம்மையில் சுகத்தையும், மறுமையில் மோட்சத்தையும் அருள்பவளே, வணக்கம். மகாமாயை வடிவாகத் துலங்குபவளே, வணக்கம். உலகம் உண்டாகக் காரணமாய் இருந்தவளே, வணக்கம். அனைத்து உலகங்களையும் போற்றிப் புரந்தருளும் தாயே, ஈஸ்வரியே வணக்கம். உன் பாதம் சரணடைந்தவர்களின் துயரங்கள் அனைத்தையும் போக்குபவளே வணக்கம், எட்டு விதமான செல்வங்களையும் தருபவளே வணக்கம்.

oஅமிர்தம் போன்றவராகிய ஜம்புகேஸ்வரரின் மனைவியே அகிலாண்டேஸ்வரியே உன்னை வணங்குகின்றேன். ரத்னமயமான பாதுகைகளை தரித்தவளே, அணிமாதி குணங்களையும், அஷ்ட சித்திகளையும் பக்தர்களுக்கு அளிப்பவளே. பக்தர்களுக்கு தீங்கு செய்பவர்களை விரட்டுபவளே உனக்கு என் வணக்கம். பகையையும் நட்பாக்கி அருளும் மங்கள ரூபிணியே வணக்கம்.

19.“அகிலாண்டேஸ்வரி”- ஆண்டாள்- திருமணத் தடை நீங்க வெள்ளி- மற்றும் ஆடிப்பூரத்தன்று.

அனைவரையும் காத்தருளும் கருணைமிக்க காத்யாயினி தேவியே, உனக்கு நமஸ்காரம். எல்லாவகை மாயைகளையும் பொருளுணர்த்தி விளங்க வைப்பவளே, உனக்கு நமஸ்காரம். மகத்தான யோக சித்திகளை அடைந்தவளே, உனக்கு நமஸ்காரம். நந்தகோபருடைய புத்திரரான கண்ணனைப் போன்றே எனக்கு கணவர் அமைய வேண்டும். அந்த பாக்யத்தை தேவி நீ எனக்கு அருள்வாயாக.

20.“அண்ணபூரணி”- ஆதிசங்கரர்- செல்வம் பெருகும், பாக்கியங்கள் பெற– செவ்வாய், வெள்ளிக்கிழமை.

பலவகை ரத்தினங்களால் ஜொலிக்கும் ஆபரங்களை அணிந்து பிரகாசிக்கும் அம்பிகையே, வணக்கம். தட்சனின் புதல்வியே! பேரழகு வய்ந்தவளே! பக்தர்கள் விரும்பும் வரங்களைத் தந்து அவர்களுடைய வறுமையை நீக்கி, மங்களங்களைப் பெருகச் செய்யும் கருணைமிக்கவளே! வணக்கம். மகேசுவரனின் மனைவியே, எப்போதும் மங்களமாக விளங்கும் தாயே! வணக்கம். என் வறுமையைப் போக்கி எனக்கு மங்களங்கள் அருள்வாயாக.

21.“சிவகாமசுந்தரி துதி”- வியாக்ரபாத மகரிஷி அருளியது- விரும்பிய நியாமான கோரிக்கைகள் நிறைவேற-தினமும்

oதாமரைகள் அடர்ந்த சிதம்பரம் தலத்தின் மத்தியில் வசிப்பவளும், நட (ன) ராஜனின் துணைவியானவளும், மலையரசன் மகளுமான சிவகாமிசுந்தரியை தினமும் நான் தியானிக்கின்றேன்.

oபிரும்மா, விஷ்னு ஆகியோரை முதன்மையாக முன்னிருத்திக் கொண்டு தேவர்களால் மதிக்கப்படுபவளும், தாமரை போன்ற கரத்தில் கிளியினை ஏந்தி நிற்பவளும் ஈசனின் அம்சம் இணைந்து பிரகாசிப்பவளுமான சிவகாமசுந்தரியை நான் தினமும் பூஜிக்கின்றேன்.

oவேதங்களின் உட்கருவான உபநிஷதங்களால் கொண்டாடப்படும் பெருமை உடையவளும், பக்தர்கள் விரும்பும் பலன்களை அளிப்பதையே லட்சியமாகக் கொண்டவளும், ரிஷி போன்றவர்களால் அர்ச்சிக்கப் பட்டவளுமான சிவகாமசுந்தரியை நான் தினமும் வணங்குகின்றேன்.

oபதினாறு வயதுடைய மங்கையும், தேவதையும், உமா எனப்படுபவளும், சிவனுடைய கண்வீச்சினால் எரிந்த மன்மதனை அம்பாளின் கடாட்சத்தால் மீண்டும் உயிர்பெற்றெழச் செய்த கருணைமிகு பார்வையுடையவளும், பாரிஜாத மரத்தினடியில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் வசிப்பவளுமான அருள்மிகு சிவகாம சுந்தரியை நான் தினமும் வணங்கி துதிக்கின்றேன்.

oஉலகம் உண்டாகக் காரணமானவளும் மும்மலங்களுக்கு (ஆசை, கோபம், வெறுப்பு) அப்பாற்பட்டவளும், தனக்கு இனையில்லாதவளும், உயர்ந்த வாக்விலாசத்தை அளிப்பவளும், மிகத்திறமையானவளும், மேகத்தைப் போன்ற கூந்தலை உடையவளுமான சிவகாமசுந்தரியை தினமும் வணங்குகின்றேன்.

o நந்தியெம்பெருமானால் வணங்கப்பட்டவளும், தனக்குரிய மந்திரங்களையோ, தன் பெயரையோ சொல்பவர்களுக்கு நன்மைகளை அளிப்பவளும், தன் பக்தர்களின் கீழ்நிலையை நாசம்செய்து உயர்ந்த நிலையை அளிப்பவளும், நடனத்திற்குத் தலைவியுமான சிவகாமசுந்தரியை நான் துதிக்கின்றேன்,
22.“ஸ்ரீ பவானி துதி”- கிரகதோஷங்கள், பாவங்கள், துன்பங்கள் நீங்க- தினமும்.

தேவியே, மகாதேவருடைய மனைவியும், மிகுந்த சக்தி வாய்ந்தவளுமாக விளங்கும் பவானியே, உனக்கு வணக்கங்கள். பரமசிவனிடத்தில் பேரன்பு கொண்டவரே, சம்சார வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலையைப் போக்குகிறவளே. உலகமனைத்திற்கும் தாயே. உமக்கு வணக்கம். பக்தர்களிடம் அன்பு கொண்டவளே, பக்தியால் அடையத்தக்கவளே, பக்தர்களுக்கு ஆறுதல் அளித்து அவர்களுடைய கிரக தோஷங்களை விலக்குபவளே, தீய கனவினால் ஏற்படும் அசுப பலன்களை அழிப்பவளே அன்னையே உன்னை வணங்குகின்றேன். எனக்கு அருள்புரிவாய் தாயே!

23.“மீனாட்சி பஞ்சரத்தினம்”- ஆதிசங்கரர்- சகல சௌபாக்கியங்கள் பெற தினமும்.

o உதிக்கும் ஆயிரம் கோடி சூரியன் போன்றவளே.
உன்னதத் தோள்களில் மணிமாலை பூண்டவளே,
பதிக்கும் மாதுளை போன்ற கொவ்வை உதடுடையவளே
சிரிக்கும் வெண்முத்து பல் சிங்கார ஒளியாளே

o உதிக்கும் மின்னல் போன்ற மஞ்சள் பட்டாடை அணிந்தவளே
விதி, விஷ்னு, இந்திரன் வணங்கும் தாயே
துதிக்கும் தத்துவ வடிவான கருணைக் கடலே
மீனாட்சிதேவியே உன் பாதங்களை வணங்குகின்றேன்.

o முத்துமாலை தவழும் நவரத்தன முடியாளே
முழுநிலா ஒளிபோன்ற முகத்தையுடையவளே
சிலம்பு தவழும் பாதமுடையவளே
வெண்மை நிற தாகம் உடையவளே

o வேண்டுபவர்களுக்கு வேண்டியதையளிக்கும் தேவதையே
கலைமகள் அலைமகளால் வணங்கப்படுபவளே
தாயே, கருணைக் கடலே மீனாட்சி 
தேவியே உன் பாதங்களை வணங்குகின்றேன்.

o ஸ்ரீ வித்தையானவளே, சிவனின் பாதியே,
ஹரீங்கார மந்திர ஒளி மிக உடையவளே
ஸ்ரீ சக்ர நடுவில் வசிப்பவளே
ஸ்ரீ சபையின் நாயகியே

o முருகனையும் விநாயகரையும் பெற்ற தாயே
மூவுலக மோகினியே, முழு அழகும் உடையவளே, 
கருனை மிகக் கொண்டவளே மீனாட்சி 
தேவியே நின் பாதங்களை பணிகின்றேன்.

o மிகுந்த அழகுடையவளே, பயத்தை போக்குபவளே,
ஞானம் கொடுப்பவளே, அப்பழுக்கற்றவளே,
நீலநிறத்தவளே, பிரம்மாவால் துதிக்கப்படுபவளே,
மகாவிஷ்ணுவின் அன்புத் தங்கையே,

o வீணை மற்றும் வாத்தியங்களின் ரசிகையே,
எல்லா அணிகலன்களும் அணிந்தவளே,
இகவாழ்வின் கருணை தெய்வமே மீனாட்சி 
தேவியே நின் பாதங்களை பணிகின்றேன்.

o யோகிகள் தேவர்கள் மனத்தில் வசிப்பவளே,
பக்தர்களுக்கு வேண்டும் வரங்களைத் தருபவளே,
பூப்போன்ற பாதங்களை உடையவளே,
பாம்பில் படுத்திருக்கும் பரந்தாமனால் பூஜிக்கப்பட்டவளே,

o நாதமாய், பிரம்மமாய் மிளிர்பவளே
எல்லாவித தத்துவமும் ஆனவளே, மிகுந்த 
புகழுடைய கருணைக் கடலே மீனாட்சி
தேவியே நின் பாதங்களை பணிகின்றேன்.

24.“திரிபுரசுந்தரி”துதி- ஆதிசங்கரர் அருளியது- வாழ்க்கை சாந்தமுடன் அமைய, சகல சௌக்கியங்களும் பெற-தினமும்.

o நீருண்ட கார்காலத்து மேகவரிசைபோல, தியானிக்கும் ஜனங்களது தாபத்தை அகற்றிக் குளிரச் செய்பவளும், கடம்பவனத்தில் உலாவி நிற்பவளும், மலையை நிகர்த்த நிதம்பங்களும் தாமரையை நிகர்த்த கண்களும் அமையப்பெற்றவளும், தேவ மாதர்களால் பணி செய்யப்பட்டவளும், முக்கண்ணது குடும்பத்தை நடத்துபவளும் முப்புரமெரித்த சிவபெருமானது கோபத்தைத் தணித்த சுந்தரியுமான த்ரிபுரசுந்தரிதேவியைச் சரணமடைகின்றேன்.

o கதம்ப வனத்தில் வசிப்பவளும், தங்கமயமான யாழை ஏந்தியவளும், விலையுயர்ந்த ரத்தின மாலை அணிந்தவளும், மாதக திரவியத்தை வாயில் கொண்டு விளங்குகிறவளும், தயைபுரிந்து ஐச்வர்யமளிப்பவளும், மாசற்ற கடாக்ஷத்தால் எங்கும் சஞ்சரிப்பவளும், முக்கண்ணனின் மனைவியுமான த்ரிபுரசுந்தரிதேவியை யான் அடைக்கலமடைகின்றேன்.

o கதம்ப வனத்தை வீடாகக் கொண்டவளும், மலையை ஒத்த கொங்கைகளின் பாரத்தில் மாலை அணிந்தவளும், கருணைக் கடலின் கரையாகி விளங்குபவளும், சிவந்த கன்னங்களால் பிரகாசிப்பவளும், மெய்மறந்து இனியமொழி, பாட்டுகளால் ஆனந்திப்பவளும், மேகம் போன்றவளுமான ஒரு லீலா விபூதியால் நாம் கவசமணிந்தவர்கள் போலக் காப்பாற்றப்பட்டு வருகிறோம்.

o பூமியில் கடம்பக் காட்டின் நடுவில் வசிப்பவளும், ஆகாயத்தில் சூரிய மண்டலத்தில் நடுவில் யோகிகளால் தியானிக்கப்படுபவளும், மூலாதாரம் முதலிய ஆறு தாமரை போன்ற சக்கரங்களில் சரீரத்தில் தோன்றுபவளும், உண்மையில் சுத்த சத்வ ப்ரதானமாய் மின்னல் கொடி போல் நிர்மலமாக இருப்பவளும், ரஜோகுனத்தின் சேர்க்கையால் செம்பருத்தியின் சிவந்த நிறம் பெற்றவளும், சந்திரகலையைச் சேகரமாக அணிந்து உலகங்களைக் களிக்கச் செய்கின்றவளுமான த்ரிபுரசுந்தரிதேவியை வணங்குகின்றேன்.

o சிரசில் சுருண்ட குழல்களால் எழில் பெற்றிருப்பவளும், மார்பில் அணைக்கப்பட்ட வீணையால் விளங்குபவளும், மிருதுவான தாமரையில் அமர்ந்துகொண்டு மிருதுவான இருதய கமலம் படைத்தவர்களிடம் அன்பு காட்டுகிறவளும், மதத்தால் சிவந்த கண்களின் பார்வையால் மதனனை அழித்த ஈசனையும் நன்கு மயக்குகிறவளும், இனிமையாகப் பேசும் இயற்கையுள்ளவளும், மதங்க முனிவரின் புதல்வியுமான த்ரிபுரசுந்தரிதேவியை பணிகின்றேன்.

o அரவிந்த பாணமேந்தி, சிவப்புப்புள்ளி நிரம்பிய கரிய ஆடைதரித்து மதுபாத்திரத்தைக் கையில் கொண்டு, மதுவை அருந்தி, தானும் சுழன்று, உலகங்களையும் சுழற்றுகிறவளும், நெருக்கமான கொங்கை பாரங்களால் நிமிர்ந்தவளும், தொங்கும் வேணீபந்தமுடையவளுமான த்ரிபுரசுந்தரிதேவியை சரணமடைகின்றேன்.

o குங்குமப்பூ கலந்த சந்தனம் பூசிக்கொண்டு, நெற்றியிலும் வகிட்டிலும் கஸ்தூரிப் பொட்டு தரித்து, சதுர்புஜங்களிலும் கணை, வில், கயிறு, அங்குசம் என்ற நான்கு ஆயுதங்களைத் தாங்கி, மாலை, நகை, ஆடைகளில் சிவந்த நிறமுள்ளவளாய், மந்தஹாசத்துடன் அபாங்கத்தால் சற்று நோக்கி, ஜனங்களனைவரையும் மாயா வலையில் சிக்கச் செய்யும் தாயை ஜபகாலத்தில் நினைக்க வேண்டும்.

o கூந்தலைச் சேர்த்து வாரிப் பின்னலாக்கிக் கொண்டும், நல்ல மணம் பொருந்திய பூச்சு பூசிக்கொண்டும், ரத்தின பூஷணங்கள் அணிந்து விளங்கும் உத்தம மாதர்கள், சேடிப்பெண்களால் சூழப்படுவார்கள். அப்படி த்ரிபுரசுந்தரியின் கூந்தலைச் சேர்த்து அழகுபடுத்துவார்கள் இந்திரலோகத்து மாதர்களான அப்சரஸ் பெண்கள். வாசனைப் பூச்சு பூசுபவள் பிரம்மனின் மனைவியான சரஸ்வதிதேவி. ரத்தினாபரணங்களால் அழகுபடுத்துபவள் விஷ்ணுவின் மனைவியான லக்ஷ்மிதேவி. பணிவிடை செய்யக் காத்திருக்கும் சேடிகளாகச் சூழ்ந்து நிற்கிறார்கள் தேவகன்னிகைகள். இவ்விதம் சகல உலகுக்கும் தாயான த்ரிபுரசுந்தரிதேவியை சேவித்து சரணமடைந்து வணங்குகின்றேன்.

25.“அம்பாள் நவமணிமாலை”-நன்மைகள் அடைய, தடைகள் அகல-ஆடிமாதத்தில் தினமும்- நேரம் கிடைக்கும் போது.

oவேதவடிவினளும், தன் இனிய சொற்களினால் கிளியின் பேச்சை வென்றவளும், கருவண்டுக் கூட்டம் போன்ற கூந்தலை உடையவளும், சம்சார சாகரத்தைக் கடக்க உதவும் தோணி போன்றவளும், வீணை, கிளிக்குஞ்சு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவளும், சரஸ்வதியினால் நமஸ்கரிக்கப் பட்டவளும், பரமசிவனுடைய பத்தினியுமான அன்னையை வணங்குகின்றேன்.

oநீலோத்பவ மலரின் வண்ணம்போன்ற சரீரத்தை உடையவளும், பூமண்டலத்தைக் காப்பதையே தனது லட்சியமாகக் கொண்டவளும், கண்களினால் பெண்மான்களை வென்றவளும், மதங்க மகரிஷியின் மகளும், சங்கரனின் மனம் கவர்ந்தவளுமான அம்பாளை வணங்குகிறேன்.

oலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் ஏந்தியிருக்கும் தாமரை போன்ற மென்மையான கைகளை உடையவளும், இரண்டு கைகளிலும் தாமரையைத் தரித்தவலும், தூய்மையானவளும், சந்திர சூடனான பரமசிவனுடைய சகல வித்யைகளின் உருவமாக இருப்பவளுமான பராசக்தியை வணங்குகிறேன்.

oஅழகிய சந்திரன் போன்ற முகத்தை உடையவளும், முல்லைமலர் போன்ற பற்களை உடையவளும், நவநிதிகளில் ஒன்றான முகுந்தம் என்ற நிதிக்கு இருப்பிடமானவளும், மன்மதனை கருணையினால் உயிர்த்தவளும், தேவர்களின் நலனுக்காக அசுரர்களை அழித்தவளுமான பராசக்தியை துதிக்கிறேன்.

oஉன்னதமான ஸ்தனங்களினால் குடத்தை வென்றவளும், பரமசிவனால் அணைத்துக் கொள்ளப்பட்டவளும், ஸ்கந்தமாதாவும், சும்பன் நிசும்பன் ஆகிய அசுரர்களை வதம் செய்தவளும், தன் முன்னால் ரம்பை என்ற ஓசர மங்கையை நடனம் செய்கின்ற பெருமையை உடையவளும், அகங்காரமில்லாத மற்றவளுமான அன்னையை வணங்குகிறேன்.

oகோவைப்பழத்தை வென்ற சிவந்த கீழுதடை உடையவளும், லோகமாதாவும், நடையினால், அன்னத்தை வென்றவளும், பக்தர்களின் குடும்பத்தைக் காப்பாற்றுபவளும், கணபதியுடன் காட்சி தருபவளுமான அம்பிகையை ஆராதிக்கிறேன்.

oசரணடையும் பக்தர்களை ரஷிப்பவளும், பாத கமலங்களை சேவிக்கின்றவர்களை துன்பத்திலிருந்து விடுவிப்பவளுமான தேவி தங்களைத் தவிர வேறு யாரையும் நான் அறியவில்லை. உனக்கு எனது வணக்கங்கள்.

oநமஸ்கரிக்கும் அடியவரை ரட்சிப்பதையே விரதமாகக் கொண்டவளும், சாமர்த்தியமுள்ளவளும், சூரியன் முதலான தேவதைகளுக்கும் அதிபதியான தேவியாக இருப்பவளும், சிம்மவாஹினியும், சத்ருக்களை அழிப்பவளும், தேவர்களை காத்தருளும் தேவியுமான தங்களைத் தவிர வேறு யாரையும் நான் அறியேன். உனக்கு எனது வணக்கங்கள்.

oபாக்கியமுள்ளவளும், தேவர்களால் வணங்கத்தக்கவளும், இமயகுமாரியும், மூன்று உலகங்களிலும் சிறந்தவளும், மந்தாரம் முதலிய தேவ விருட்சங்கள் அடங்கிய தோட்டத்தில் விளளையாடுபவளான தங்களைத் தவிர வேறு தெய்வத்தை நான் அறியவில்லை. உனக்கு எனது வணக்கங்கள்.

oபராசக்தியின் மேலான இந்த நவமணி மாலையை பக்தியுடன் படித்த என் வாக்கில் சரஸ்வதியும், வீட்டில் மகாலட்சுமியும் பூரிப்புடன் நடமாடட்டும். உனக்கு எனது வணக்கங்கள்.

oபராசக்தியே, தாங்கள் என்னை அதல பாதாலத்தில் தள்ளினாலும் சரி, பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபதியாக்கினாலும் சரி, தங்களின் இரண்டு பாதங்களையும் பற்றுகிறேன். எனக்கு அஷ்ட லட்சுமி கடாட்சம் அருளி என்னைக் காப்பாய் தாயே!

26.“திருவிளக்கு”- வினைகள் நீங்கி வாழ்வில் ஒளி, சந்தானபாக்யம் பெற- வெள்ளி / திருவிளக்கு பூஜையன்று.

மகாலக்ஷ்மி தாயே, மங்களங்கள்
அனைத்தையும் பெற வேண்டி
நான் செய்கின்ற பூஜையின் பலனை
அளிப்பதற்காக இந்த 
தீபத்தில் தீபலட்சுமியாக 
எழுந்தருளி எனக்கு அருள் 
புரிந்து எம்மைக் காப்பாய்!

o திருவிளக்கே திருவிளக்கே! 
தேவி பராசக்தி திருவிளக்கே!
தேவியின் வடிவே திருவிளக்கே! 
தேவியே உன்னை வணங்குகின்றேன்!

o இருளை அகற்றும் திருவிளக்கே! 
இன்பம் அளிக்கும் திருவிளக்கே!
எங்கும் ஒளிதரும் திருவிளக்கே! 
லட்சுமியே உனக்கு வணக்கம்!

o மங்கள ஜோதியாம் திருவிளக்கே! 
மாலையில் ஒளிதரும் திருவிளக்கே!
காலையில் ஒளிதரும் திருவிளக்கே!
சரஸ்வதி உனக்கு வணக்கம்!

o திருமகள் வடிவே திருவிளக்கே!
தேவரும் பணியும் திருவிளக்கே!
தெள்ளிய ஜோதியே திருவிளக்கே!
சாரதே உனக்கு வணக்கம்!

o அஷ்டலட்சுமி வடிவே திருவிளக்கே!
ஆனந்த நர்த்தினி திருவிளக்கே!
ஆலய பூஷணி திருவிளக்கே!
ஆதிபராசக்தி உனக்கு வணக்கம்!

o பாக்ய லட்சுமியாம் திருவிளக்கே!
பக்தியைஅளித்திடும் திருவிளக்கே!
பதவியைத் தந்திடும் திருவிளக்கே!
பவானி உனக்கு வணக்கம்!

o ஜெகமெல்லாம் விளங்கும் திருவிளக்கே!
ஜெகதீஸ்வரி வடிவே திருவிளக்கே!
அழகை அளிக்கும் திருவிளக்கே!
அம்மா உனக்கு வணக்கம்!

o சௌக்ய ரூபிணி திருவிளக்கே!
சந்தான பலம் தரும் திருவிளக்கே!
சம்பத்தை அளிக்கும் திருவிளக்கே!
சக்தியே உனக்கு வணக்கம்!

o ஊன்ஆனாய் உயிர் ஆனாய்!

உயிரில் ஊறும் உணர்வாணாய்!
வான் ஆகி ஐம்பூத வகை எல்லாம் நீ ஆனாய்!

தேன் ஆரும் மலர்க்கொன்றைச் சிவம் என்னும் பொருள் ஆனாய்! 
நான் ஆனாய் உயிருக்கு உயிரே ஞானப் பேரொளியுமையே!

o சீலத் திருவிளக்கே! ஸ்ரீதேவி லட்சுமியே!
கோலத் திருவிளக்கே! கும்பிட்டேன் நின் அடியே!
தில்லைவனநாதனும் சிவகாமி அம்மையும்
சிந்தையில் குடியிருக்க செய்தவிணை தீர்ந்திடும்!
o தந்தைதாய் தமர்சார்ந்த குருவரசும்
சிந்தைமகிழ் வாழ்வை தேவியே தந்தருள்வாய்!
தொட்டிலுக்குப் பிள்ளையும் தொழுவுக்குப் பால்பசுவும்
பட்டறைக்கு நெல்லும் பதிந்த மரக்காலும்
o உனக்கெரிக்க எண்ணெய்யும் எனக்குண்ண சேறும்
தட்டாமல் தாயே தந்தருள்வாய் தகவுறவே.
இருள்நீக்கும் தேவியே! 
இடர்போக்கும்தேவியே!

o வீட்டை விளக்கும் தேவியே!
தீபலக்ஷ்மி தேவியே! தீப ஒளியே!
தூயலக்ஷ்மி தேவியே! தூய ஒளியே!
வேண்டும் வரம் தருவாய் ஜோதி லக்ஷ்மியே!

o விளக்கே! திருவிளக்கே! வேந்தன் உடன் பிறப்பே!
ஜோதி மணிவிளக்கே! சீதேவி பொன்மணியே!
ஆருயிர் விளக்கே! அனையா ஜோதியே!
அந்தி விளக்கே! அலங்கார நாயகியே!
o காந்தி விளக்கே காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரிபோட்டுக்
குளம்போலே எண்ணேய் விட்டுக்
கோலமுடன் ஏற்றி வைத்தேன்!

o ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மடிப்பிச்சை தாரும் அம்மா!

o சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாரும் அம்மா!
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா!
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா!
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா!
o புகழுடைம்பைத் தாரும் அம்மா!
பக்கத்தில் நில்லுமம்மா!
அல்லும் பகலும் என்றன்
அண்டையிலே நில்லுமம்மா!

o சேவித் தெழுந்திருந்தேன்! தேவி வடிவங்கண்டேன்!
வச்சிரக் கிரீடங்கண்டேன்! வைடூரிய மேனி கண்டேன்!
முத்துக்கொண்டை கண்டேன்! முழுப்பச்சை மாலை கண்டேன்!
சவுரிமுடி கண்டேன் தாழை மடல் சூடக் கண்டேன்!

o பின்னலழகு கண்டேன் பிறைபோல் நெற்றி கண்டேன்!
சாந்துடன் நெற்றி கண்டேன்! தாயார் வடிவம் கண்டேன்!
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்!
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசையக் கண்டேன்!

o கைவளையல் கலகலென்னக் கணையாழி மின்னக் கண்டேன்!
தங்க ஒட்டியாணம் தகதகென ஜொலிக்க கண்டேன்!
காலிற் சிலம்பு கண்டேன்! காலாழி பீலி கண்டேன்!
மங்களநாயகியை மனங்குளிரக்கண்டு மகிழ்ந்த அடியாள் நான்

o அன்னையே அருந்துணையே அருகிருந்து காரும்மா! 
வந்த வினையை அகற்றி மகாபாக்கியம் தரும் அம்மா!
உன்றன் தாளடியில் சரணம் என்றேன்!
மாதாவே உன்றன் மலரடியில் நான் பணிந்தேன்!

o ஓம் சிவாயை நம
ஓம் சிவசக்தியே நம
ஓம் இச்சா சக்தியே நம
ஓம் கிரியா சக்தியே நம

o ஓம் சொர்ணசக்தியே நம
ஓம் ஜோதி லட்சுமியே நம
ஓம் தீப லட்சுமியே நம
ஓம் மகா லட்சுமியே நம

o ஓம் தன லட்சுமியே நம
ஓம் தான்ய லட்சுமியே நம
ஓம் தைரிய லட்சுமியே நம
ஓம் வீர லட்சுமியே நம

o ஓம் விஜய லட்சுமியே நம
ஓம் வித்யா லட்சுமியே நம
ஓம் ஜெய லட்சுமியே நம
ஓம் வர லட்சுமியே நம

o ஓம் கஜ லட்சுமியே நம
ஓம் காமவல்லியே நம
ஓம் காமாட்சி சுந்தரியே நம
ஓம் சுப லட்சுமியே நம

o ஓம் ராஜ லட்சுமியே நம
ஓம் கிருக லட்சுமியே நம
ஓம் சித்த லட்சுமியே நம
ஓம் சீதா லட்சுமியே நம
o ஓம் திரிபுர லட்சுமியே நம
ஓம் சர்வமங்கள காரணியே நம
ஓம் சர்வதுக்க நிவாரணியே நம
ஓம் சர்வாங்க சுந்தரியே நம

o ஓம் சௌபாக்கிய லட்சுமியே நம
ஓம் நவகிரக தாயினியே நம
ஓம் அண்டர் நாயகியே நம
ஓம் அலங்கார நாயகியே நம

o ஓம் ஆனந்த சொரூபியே நம
ஓம் அகிலாண்ட நாயகியே நம
ஓம் பிரமாண்ட நாயகியே நம
ஓம் வாகீஸ்வர்யை நம
o ஓம் விசாலாக்ஷியை நம
ஓம் சுமங்கல்யை நம
ஒம் காள்யை நம
ஓம் சண்டிகாயை நம

o ஓம் பைரவ்யை நம
ஓம் புவனேஸ்வர்யை நம
ஓம் நித்யாயை நம
ஓம் சானந்த விபாவாயை நம
o ஓம் தத்துவ திரியாயை நம
ஓம் குணத் திரியாயை நம
ஓம் சத்ய ஞானாயை நம
ஓம் தமோப ஹாயை நம
o ஓம் மஹேஸ்வர்யை நம
ஓம் பிரியங்கனாயை நம
ஓம் திரிபுர சுந்தர்யை நம
ஓம் கௌரியை நம
o ஓம் கல்யாண்யை நம
ஓம் கல்யாணகுண சாலின்யை நம
ஓம் கமநீயாயை நம
ஓம் தேவ்யை நம

o ஓம் சுந்தர்யை நம
ஓம் ஸௌந்தர்யை நம
ஓம் சுந்தர ரூபாயை நம
ஓம் அம்பிகாயை நம
o ஓம் ஏகாட்சர்யை நம
ஓம் திரியட்சர்யை நம
ஓம் ஷடாட்சர்யை நம
ஓம் அஷ்டாட்சர்யை நம

o ஓம் நவாட்சர்யை நம
ஓம் ஷோடாட்சர்யை நம
ஓம் அபர்ணாயை நம
ஓம் பார்வத்யை நம
o ஓம் பத்ம வாஸின்யை நம
ஓம் பங்கஜ தாரிண்யை நம
ஓம் திரிலோசனாயை நம
ஓம் ஏக ரூபாயை நம

o ஓம் மஹா ரூபாயை நம
ஓம் பிந்து ஸ்வரூபிண்யை நம
ஓம் திரிகோணவாஸின்யை நம
ஓம் பாலாயை நம
o ஓம் நித்ய யௌவனாயை நம
ஓம் லலிதாயை நம
ஓம் திரிசூல தாரிண்யை நம
ஓம் கட்க தாரிண்யை நம
o ஓம் கேடக தாரிண்யை நம 
ஓம் சங்க தாரிண்யை நம
ஓம் சக்ர தாரிண்யை நம
ஓம் பாச தாரிண்யை நம
o ஓம் அங்குச தாரிண்யை நம 
ஓம் பத்ம தாரிண்யை நம
ஓம் மாலா தாரிண்யை நம
ஓம் டமருக தாரிண்யை நம
o ஓம் கபால தாரிண்யை நம 
ஓம் நாக தாரிண்யை நம
ஓம் பிராண தாரிண்யை நம
ஓம் சர்வ மங்களாயை நம
o ஓம் சமஸ்த ஐஸ்வர்ய தாயின்யை நம
ஓம் சரஸ்வத்யை நம
ஓம் தீபலக்ஷ்மியை நம
ஓம் தீப துர்க்கா தேவ்யை நம

ஓம் ஜோதிரூபாயை நமோ நம
தீபலட்சுமியே உனக்கு வணக்கம்!
ஜெயஜெய தேவி லட்சுமி 
உனக்கு வணக்கம்!

தீபலட்சுமி அங்க பூஜை- மலர்களால்
o தீபலட்சுமியே உன் பாதங்களை பணிகிறேன்
கமலாசனியே உன் கணுக்கால்களை வணங்குகிறேன்
மலர்மகளே உந்தன் முழங்கால்களை பணிகிறேன்
திருமகளே உன் திருத்தொடையை பூஜிக்கிறேன்

o இலக்குமியே உன் இடையை பூஜிக்கிறேன்
கலைமகளே உன் நாபிக் கமலத்தினை நமஸ்கரிக்கிறேன்
வரலஷ்மியே உன் வயிரை பூஜிக்கிறேன்
இதய கமல வாசினியே உனது இதயத்தினை பூஜிக்கிறேன்

o மாலவன் நாயகியே உன் திருமார்பை வணங்குகிறேன்
திருமகளே உன் கழுத்தினை நமஸ்கரிக்கிறேன்
தீப மகளே உன் தோள்களை பணிகிறேன்
அலைமகளே உன் திரு விரல்களை வணங்குகிறேன்

o திருமகளே உன் திருக்கரங்களை பணிகிறேன்
மகாலக்ஷ்மியே உனது திருமுகத்தினைத் துதுக்கிறேன்
கலைமகளே உனது அருள் நிறைந்த கண்களை பணிகிறேன்
அலைமகளே உந்தன் அதரத்தை துதிக்கிறேன்

o திருமகளே உனது நெற்றியைப் பணிகிறேன்
பூமகளே உனது கூந்தலை பூஜிக்கிறேன்
ஸ்ரீதேவி உந்தன் சிரத்தினைப் பணிகிறேன்
மங்களங்களைத் தரும் மகாலட்சுமியே மனதாரப் பணிகிறேன்

o ஒளிவளர் விளக்கே போற்றி
ஓரைந்து முகத்தாய் போற்றி
திருவருள் விளக்கே போற்றி
திருவிளக்குத் தாயே போற்றி
o நந்தா விளக்கே போற்றி
நல்ல விளக்கே போற்றி
வழிகாட்டும் விளக்கே போற்றி
வாழிக்கும் விளக்கே போற்றி

o பொன்னும் மெய்பொருளும் தருவாய் போற்றி
போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
முன்னறி வொளியாய் மிளிர்ந்தாய் போற்றி
மூவுலகும் நிறந்திருந்தாய் போற்றி
o வரம்பிலின்பமாக வளர்ந்திருந்தாய் போற்றி
இயற்கை அறிவொளியானாய் போற்றி
ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
பிறர் வயமாகாப் பெரியோய் போற்றி

o பேரின்பப் பெருக்காய் பொலிந்தோய் போற்றி 
பேரருட் கடலாம் பொருளே போற்றி
முடிவிலாற்றல் உடையதாய் போற்றி
மூவுலகுந் தொழ மூத்தோய் போற்றி

o அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி
ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி
இருள் கெடுத்து இன்பமருள் எந்தாய் போற்றி

o மங்களநாயகி மாமணி போற்றி
வளமை நல்கும் வல்லியே போற்றி
அறம் வளர் நாயகி அம்மையே போற்றி
மின் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி

o தையல் நாயகித் தாயே போற்றி
தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி
முக்கட்சுடரின் முதல்வி போற்றி
ஒளிக்கும் ஒளியாய் உயர்வாய் போற்றி

o சூடாமணியே சுடர் ஒளி போற்றி
இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
அருள் பொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி
அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி

o இல்லற விளக்காம் இறைவி போற்றி
சுடரே விளக்காம் தூயாப் போற்றி
இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவி போற்றி

o ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
அருமறைப் பொருளாம் ஆதி போற்றி
தூண்டு சுடரினைய சோதி போற்றி
ஓதும் ஒளி விளக்கே போற்றி

o சோதியே போற்றி சுடரே போற்றி
இருள் கொடுக்கும் இல்லக விளக்கே போற்றி
சொல்லக விளக்காம் சோதியே போற்றி
பலர்காண் பல்கலை விளக்கே போற்றி

o நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
உணர்வு சூழ் கடந்தோர் விளக்கே போற்றி
உடம்பெனும் மனையக விளக்கே போற்றி

o உள்ளத்தகளி விளக்கே போற்றி
மடம்படும் உணர்நெய் விளக்கே போற்றி
உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
இடம்படும் ஞானத்தீ விளக்கே போற்றி

o நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
சோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி

o தில்லைப் பொது நட விளக்கே போற்றி
கற்பனை கடந்த சோதியே போற்றி
கருணையே உருவாம் விளக்கே போற்றி
அற்புதக் கோல விளக்கே போற்றி

o அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
சிற்ப ரவியோம விளக்கே போற்றி
பொற்புடன் நடஞ்செயல் விளக்கே போற்றி
உள்ளத்திரளை ஒழிப்பாய் போற்றி

o கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
பெருகு அருள் சுரக்கும் பெரும போற்றி
இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி

o அருவே உருவே அருவுரு போற்றி
நந்தா விளக்கே நாயகியே போற்றி
செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
தீப மங்கள் ஜோதி விளக்கே போற்றி

o மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி
பாகம் பிரிய பராபரை போற்றி
ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
ஏகமும் நடஞ்செய எம்மான் போற்றி

o ஊழிஊழி உள்ளோய் போற்றி
ஆழியான் காணா அடியோய் போற்றி
அந்தமிலா இன்பம் அருள்வோய் போற்றி
முந்தைய வினையை முடிப்போய் போற்றி

o பொங்கும் கீர்த்தி பூரணி போற்றி
தண்ணருள் சுரக்கும் தாயே போற்றி
அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
இருநிற மக்கள் இறைவி போற்றி

o குருவென ஞானம் கொடுப்பாய் போற்றி
ஆறுதல் எமக்கிங்களிப்பாய் போற்றி
தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி
பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி

o எத்திக்குந் துதி ஏயந்தாய் போற்றி
அஞ்சலென்றருளும் ஆன்பே போற்றி
தஞ்சமென்றவரைச் சார்வோய் போற்றி
ஓதுவோர் அகத்துறை ஒளியே போற்றி

o ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி
எல்லா உலகமும் ஆனாய் போற்றி
பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
புகழ்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி

o செல்வாய் செல்வம் தருவாய் போற்றி
பூங்குழல் விளக்கே போற்றி
உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி

o செல்வம் கல்வி சுறப்பருள் போற்றி
நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி
விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
நலம் எல்லாம் உயிர்க்கும் நல்குவாய் போற்றி

o தாயே நின்னருள் தந்தாய் போற்றி
தூய நின் திருவடி தொழுதனம் போற்றி
போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி

o போற்றி என் அன்பொளி விளக்கே போற்றி
போற்றி போற்றி திருவிளக்கே போற்றி
மங்களங்கள் யாவுக்கும் காரணமான
தீபலக்ஷ்மியே, ஆயுள், ஆரோக்யம்
o செல்வம் யாவும் தந்து, எதிரிபயம்
நீக்கி எமைக் காப்பாற்றுக!
அண்டாண்ட புவனங்கள்
கொண்டாடும் ஜோதியே வணக்கம்.

o அந்தரங்களை அழித்தோங்கும் தீபமே வணக்கம்
காஞ்சிமாபுரி வாழ் காமகோடி நித்ய தீபமே வணக்கம்
எல்லையில் வாழ் சிவகாமி தீபமே வணக்கம்
அண்னாமலை வளர் அருணாசல தீபமே வணக்கம்

o உண்ணாமுலையாக ஓங்கும் மெய்தீபமே வணக்கம்
மயிலை நகர் மணக்கும் கற்பகவல்லி தீபமே வணக்கம்
காசி விஸ்வேசர் களிக்கும் மெய்தீபமே வணக்கம்
மதுரையில் விளையாடும் மீனாஷி தீபமே வணக்கம்

o காளஹத்தியில் வாழும் ஞானாம்பாள் தீபமே வணக்கம்
மயிலாபுரியில் வாழ் அபயாம்பாள் தீபமே வணக்கம்
கண்ணப்பன் கண்டு களிக்கும் மெய்தீபமே வணக்கம்
அஞ்ஞானம் பொசுக்கும் ஞானதீபமே வணக்கம்

o வேதனையகற்றும் மெய்தீபமே வணக்கம்
காலனைக் காலால் உதைத்த அபிராமி தீபமே வணக்கம்
மார்க்கண்டனைக் காத்த மெய்ஞான தீபமே வணக்கம்
கோமதி கௌரி கௌமாரி தீபமே வணக்கம்

o திருபுராதியர்கள் துதித்த மெய்தீபமே வணக்கம்
எந்நாளும் அணையாத அகண்ட மெய்தீபமே வணக்கம்
பெண்களுக்கு அணியான பதிவ்ருதா தீபமே வணக்கம்
சகல் சௌந்தர்யங்களும் தந்திடும் தீபமே வணக்கம்

o எந்நாளும் அழியாத செல்வ தீபமே வணக்கம்
எம்வாதை இல்லாமல் காக்கும் மெய்தீபமே வணக்கம்
தஷணம் வந்து காக்கும் தாஷாயணி தீபமே வணக்கம்
பஷமாம் என் கிரஹம் வாழும் தீபமே வணக்கம்

பரபிரம்ம ஸ்வரூபிணியாம் தீபமே வணக்கம்

திருவிளக்கு தீப ஆராதனை:

o அறிந்தும் அறியாமலும் தெரிந்தும்
தெரியாமலும் செய்த சகல
குற்றங்களையும் பொறுத்துக் காத்து
ரட்சித்து அருள் புரியவேணும் தாயே

o ஓம் அரனார் செல்வன்
அம்பிகை தனயன்
யானைமுகனுக்கிளையோன்
ஓம் சரவணபவனே! முருகையா!

27.“அம்மாபோற்றி”- வினைகள், எதிர்ப்புகள் நீங்க, வளமான வாழ்வு பாக்யம் பெற- தினமும் / வேண்டும்போது.

ஓம் நின் னருள் போற்றி! நின் பொது போற்றி!
ஓம் நின் புகழ் போற்றி! நின் உரு போற்றி!
ஓம் நின் இயல் போற்றி! நின் நிலை போற்றி!
ஓம் நின் நெறி போற்றி! நின் சுகம் போற்றி!
ஓம் நின் உளம் போற்றி! நின் மொழி போற்றி!
ஓம் நின் செயல் போற்றி! நின் குணம் போற்றி!
ஓம் நின் முடி போற்றி! நின் நடு போற்றி!
ஓம் நின் னடி போற்றி! போற்றியே!

ஓம் நின் இடம் போற்றி! நின் வலம் போற்றி!
ஓம் நின் நடம் போற்றி! நின் நலம் போற்றி!
ஓம் நின் திறம் போற்றி! நின் தரம் போற்றி!
ஓம் நின் வரம் போற்றி! நின் கதி போற்றி!

ஓம் நின் கலை போற்றி! நின் பொருள் போற்றி!
ஓம் நின் ஒளி போற்றி! நின் வெளி போற்றி!
ஓம் நின் தயை போற்றி! நின் கொடை போற்றி!
ஓம் நின் பதம் போற்றி! போற்றியே!

ஓம் அம்மா போற்றி! அருளே போற்றி!
ஓம் அறிவே போற்றி! பொருளே போற்றி!
ஓம் அழகே போற்றி! இறைவி போற்றி!
ஓம் அன்பே போற்றி! பண்பே போற்றி!

ஓம் அரியே போற்றி! அரியின் சோதரி போற்றி!
ஓம் அரவே போற்றி! அரவின் உருவே போற்றி!
ஓம் அரனே போற்றி! அரனின் நாயகி போற்றி!
ஓம் அரசி போற்றி! மூவர்கரசி போற்றி!
அடியேன் பணிந்தேன் அருள்வாய் போற்றி போற்றியே!
28.“காளிகாம்பாள்”-துன்பம் நீங்கி, ஆறுதல்பெற-பாரதியார்- தினமும் / செவ்வாய்க் கிழமை.

o யாதுமாகி நின்றாய் காளி! எங்கும் நிறைந்தாய் காளி!
தீது நன்மை எல்லாம் காளி! தெய்வ நீதி ஆன்றோ!
பூத மைந்தும் ஆனாய் காளி! பொறிகளைந்தும் ஆனாய்! 
போதமாகி நின்றாய் காளி! பொறியை விஞ்சி நின்றாய்!

o இன்பமாகிவிட்டாய் காளி! என்னுள்ளே புகுந்தாய்!
பின்பு நினையல்லால் காளி! பிரிது நானும் உண்டோ!
அன்பளித்து விட்டாய் காளி! ஆண்மை தந்து விட்டாய்!
துன்பம் நீக்கி விட்டாய்! தொல்லை போக்கி விட்டாய்!

o ஆதிசக்தி தாயே! என்மீது அருள்புரிந்து காப்பாய்!
எந்தநாளும் நின்மேல் தாயே! இசைகள் பாடிவாழ்வோம்!
காளிமீது நெஞ்சம் என்றும் கலந்து நிற்க வேண்டும்!
பின்பு நினையல்லால் காளி பிறிது நானும் உண்டோ!

29.“சீதளாதேவி துதி”- உஷ்ண பாதிப்புகள் நீங்க-வேண்டும்போது

சீதளாதேவியே வணக்கம். உன்னைச் சரணடைந்தோரின் உடல் உபாதைகளும் சரும நோய்களும், கொப்புளங்களும் அவற்றால் ஏற்படும் பயமும் வேதனையும் தீர்க்கும் தாயே உன்னை வணங்குகின்றேன். எனக்கு எல்லா நோய்த் துயரங்களையும் பயத்தையும் நீக்கி அருள் புரிவாய் தாயே!

30.“மங்கள சண்டிகை துதி”- மங்களம் பெற, துயர் தீர - தினமும் / வேண்டும் போது.

மங்களை உன்றன் பத்ம மலரடி சூடினாலே
மங்களம் வாய்த்தல் உண்மை மற்றுமென் மங்களையே!

மங்களம் நாணுன் நாணே! மாதர்கள் போற்றும் தேவி! மங்களம் 
தருக அம்மா! மாந்தர்கள் வணங்குகின்றோம்!

யாவுமாய் ஆகி நின்ற தேவியே சண்டி நீயும்
ஏவுவுல் தரிக்க வல்லாய்! எல்லாமாய் ஆனாய் அன்றோ!
மூவரில் முதன்மையானாய்! முரிந்திடும் புருவ வில்லாய்!
தேவரும் வியப்பில் வீழ தேர்ந்தனை கருணை கொண்டாய்!

நீலமா மலரை உன்றன் நீள்விழி மணந்த தம்மா!
கோலமே கூற்றம் தனனிக் கொளுத்திடும் செம்மைகொண்டாய்
ஆலமே சூழ்ந்த தேனும் அங்கொரு மஞ்சள் கொண்டாய்!
வாழவே உன்னை வேட்டோம் வகையருள் சண்டிகாவே!
வாழ்க்கையாம் கடலில் வீழ்ந்து வருந்தினம் வந்துனது வாசல்
ஆழ்மனத் தன்பினாலே அமைந்தனம் அன்னை அன்றோ!
தாழ்ந்தனம் தேவி உன்றன் தளிரடிப் பாதம் பற்றும்
ஏழைகள் துயரைத் தீர்க்க இக்கணம் எழுக தாயே!

காக்கவே காக்க நீயே! கணிபவள் நீயே தாயே!
நீக்கரும் மங்களங்கள் நிமலைதான் சண்டிகாவே!
போக்குவை விபத்தினின்றும் பொலிய மங்களமே நல்கு!
தேக்கரும் கருணை வெள்ளம் தினமுனை தோத்தரித்தோம்!

மகிழ்வினை நல்கும் தேவி! மங்களம் நல்கும் தேவி!
மகிழ்வதைத் தருவதற்கோ மலைத்திடா அன்னை நீயே!
மகிழ்வினைச் சுபத்தை நல்கு! மகிழ்வெனச்சுபமாய் ஆனாய்
மகிமையும்கொண்டாய்அம்மா! மனதினில்உன்னைக்கொண்டோம்!

மங்களம் நீயே! ஈசை மங்களம் 
எங்கும் ஆனாய்! மங்களம் 
எதிலும் நல்கும் மங்கள சண்டி நீயே!
மங்களம் புவனம் எல்லாம் மல்கிடவைக்கும் தாயே!

தோத்திர மாலை கொள்ள தோன்றிய மங்களமும் நீயே!
தோத்திரம் செய்வோர் தம்முள் தோன்றிடும் மங்களமும் நீயே!
தீத்திறம் அளிக்க வல்ல தேவியே! மனு வம்சத்து
தோத்திரம் கொள்ள வந்தாய்! தூயவளே வணங்குகின்றோம்!

வாழ்வினில் இன்பம் சேர்ப்பாய்! 
மங்களம் அனைத்தும் நல்கி!
தாழ்விலாச் சுவர்க்கம் சேர்க்கும்
சண்டியே போற்றுகின்றேன்!

சார்ந்தனை எங்கும் என்றும் சர்வமங்கள தாரையாய்!
பாரிதில் எல்லாச் செய்கை பரிபவம் இன்றிக் காப்பாய்!
ஆரெவர் வாரந்தோறும் அரிய செவ்வாய்தான் பூஜை 
நேரிடில் அருளைச் செய்யும் நேர்மையே சண்டி போற்றி!

இயங்குவை நிலைத்த தானே எல்லாமும் நீயே தாயே!
மயங்கியபோது வந்தே மதியினை நல்கும் தேவி
தயங்கியே தேவர் மூவர் தகுமறை முனிவர் போற்ற
வயங்கிய தாளைப் பற்றி வணங்கியே வாழ்த்துகின்றோம்!

மங்கள சண்டி தன்றன் மாண்பினை உரைக்கும் இந்த
மங்களங்கள் நல்க வல்ல மாதேவன் சொன்ன தோத்திரம்
எங்கனும் சொன்னோர் கேட்டோர் அவர்தம் புத்ரர் பௌத்ரர்
பொங்கு மங்களமே தங்க புவியினில் வாழ்வர் மாதோ!

காயத்திரி- நன்மைகள் நடைபெற தினமும் முடிந்தவரை

ஓம் பூர் புவஸ் ஸீவக
தத்ச விதுர் வரேண்யம் 
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்பிரசோதயாத்

நாராயணி- மாங்கல்ய பாக்யம்பெற தினமும் முடிந்தவரை

சர்வமங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்தே சாதஹே 
சரண்யே தயஹே கௌரி
நாராயணி நமஸ்துதே!

“ஸ்ரீமங்களாஷ்டகம்”-

மங்களங்கள் பெருக- மனக் குறைவின்றி- பாவங்களிலிருந்து விலகி- நீண்ட ஆயுள்- சகல ஐஸ்வர்யங்களும் பெற்றிட தினமும்-காலை/மாலை.

oபிரம்மனே! மஹாவிஷ்னுவே! பரமேஸ்வரனே! இந்திரனே! அக்னியே! யமனே! நிருதியே! வருணனே! வாயுவே! குபேரனே! முருகனே! கணபதியே! சூரியனே! சந்திரனே! ருத்திரர்களே! விச்வ தேவர்களே! ஆதித்யர்களே! அச்வினி தேவர்களே! சாத்தியர்களே! வஸுக்களே! பித்ருக்களே! சித்தர்களே! வித்யாதரர்களே! யஷர்களே! கந்தர்வர்களே! கின்னரர்களே! மருத்துக்களே! மற்றும் ஆகயத்தில் சஞ்சரிக்கும் அனைத்து தேவர்களே! உங்கள் அனைவரையும் வணங்குகின்றேன். எனக்கு என்றும் மங்களம் அருளுங்கள்.

oசரஸ்வதி, மகாலட்சுமி, பூமிதேவி, பார்வதி, சண்டிகை, பத்ரகாளி, பிராஹ்மி முதலிய மாத்ரு கணங்கள், தட்சனின் மகள்களான அதிதி, திதி, சதி, முதலியோர், சாவித்ரி, கங்கை, யமுனை, அருந்ததி, தேவர்களின் மனைவிகள், இந்திராணி முதலிய தேவலோகப் பெண்களும் விண்ணில் சஞ்சரிக்கும் தேவமாந்தரும் எனக்கு நீங்காத மங்களத்தை அளிக்கட்டும்.

oமத்ஸ்யமூர்த்தி, கூர்மமூர்த்தி, வராஹமூர்த்தி, நரசிம்மப் பெருமாள், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், ஸ்ரீகிருஷ்ணர், கபிலர், நரநாராயண மூர்த்தி, தத்தாத்ரேயர், பிருகு மற்றும் நரகாசுரனை வதம் செய்த மகா விஷ்ணுவின் மற்ற எல்ல அவதாரங்களும், சுதர்ஸ்ன சக்கரம் முதலிய ஆயுதங்களும், அவதாரம் செய்த மூர்த்திகளின் மனைவிகளும், அவர்களின் புத்திரர்களும், விஷ்னுவின் எல்ல அம்சா அவதாரங்களும் எனக்கு தீராத மங்களத்தை அளிக்கட்டும்.

oவிஸ்வாமித்திரர், வசிஷ்டர், அகஸ்தியர், உசத்யர், ஆங்கீரஸ், காச்யபர், வியாசர், கண்வர், மரீசு, கிரது, பிருகு, புலஹர், சௌனகர், அத்ரி, புலஸ்தியர் முதலான மஹரிஷிகளும் மற்றும் பல முனிவர்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்களும், அஸ்வனி முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களும், நம் பிரஜாபதிகளும் நாகராஜன் முதலிய சர்ப்பக் கூட்டங்களும், மனுக்களும் எனக்கு வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.

oமநு புத்ரிகளான ஆகூதி, தேவஹூதி, ப்ரஸீதி ஆகிய மூவரும், எல்லா முனிவர்களின் பத்தினிகளும், மனுக்களின் பத்தினிகளும், சீதை, குந்திதேவி, பாஞ்சாலி, நளன் மனைவி தமயந்தி, ருக்குமணி, சத்யபாமா, தேவகி மற்றுமுள்ள அரசர்களின் மனைவியர், கோபிகைகள், பதி விரதைகள், நற்குலப்பெண்மணிகள் யாவரும் எனக்கு எல்லாவித மங்களத்தையும் கொடுக்கட்டும்.

oகருடன், அனந்தன், ஹனுமான், மஹாபலி, சனகர் முதலான யோகிகளும், சுகர், நாரதர், பிரகலாதன், பாண்டவர்கள், ந்ருகன், நளன், நஹூஷன், அரிச்சந்திரன், ருக்மாங்கதன் முதலிய விஷ்னு பக்தர்களும் மற்றும் சூரிய, சந்திர குலத்தில் உதித்த உத்தமர்களும், அரசர்களும் எனக்கு வளமான மங்கலத்தை உண்டாக்கட்டும்.

oஅந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், ஸ்ம்ருதிகள், துளசி, கங்கை, முதலி8ய சர்வ தீர்த்தங்கள், சகல வித்யைகள், பலவிதசாஸ்திரங்கள், இதிஹாசங்கள், சகல புராணங்கள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், சாங்கியம், யோகங்கள், யம நியமங்கள், எல்லா கர்மங்கள், காலங்கள், சத்யம் முதலான அனைத்து தர்மங்களும் எனக்கு போதிய மங்களத்தை அளிக்கட்டும்.

o சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், கங்கை, காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள், எட்டு திக்கு யானைகள், மேகங்கள், சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள் எனக்கு நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.                                                      ஓம்சக்தி ஓம்

குருஸ்ரீ பகோராயின் சந்தோஷப்பூக்களின் இதழ்களில் சில......

o‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’

oஎல்லா உயிர்க்கும் சந்தோஷத்தை அடைய, அதைத் தேட உரிமை உண்டு. வாழ்வின் இரகசியம் அல்லவா! அது அற்புத இலக்கணம்.

oசந்தோஷம் போதும் இனி எந்த சந்தோஷமும் வேண்டாம் எனக்கூறக்கூடிய நிலையில் எந்த ஒரு உயிரும் இயங்குவதாக இல்லை.

oமனிதனால் முடியாதது அவனது கடந்த இழந்தகாலத்தை மீண்டும் பெறுவது. இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்.

o உனது வாழ்நாள் ஒவ்வொருநாளாக குறைந்து கொண்டிருக்கின்றது. இறந்தவனையும், நடந்தவைகளையும் பற்றி சிந்தித்து என்ன பயன்! இருக்கும் காலத்தில் நீ உன் ஆன்மாவின் மேன்மைக்காக சிந்தி.

o‘அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்’ என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.

o“மனதின் வினைகளான பிறர்பொருளை அபகரித்தல், பிறருக்கு தீங்கு செய்ய நினைத்தல், பிறர் உயர்வு கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகியவைகளின்றி புண்ணியமான பிறர் பொருள் வேண்டாம் என எண்ணுதல், அனைவரும் நலமாக வாழ நினைத்தல், அவர்தம் நல் வாழ்வு கண்டு மகிழ்வு அடைதல்” ஆகியவை உங்களின் மேலான வாழ்வுக்கு சிறப்பானதாகும்.

       “சந்தோஷப்பூக்களை நுகர்ந்து வாழ்வியல் பயன் பெறுங்கள்”

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26879890
All
26879890
Your IP: 54.235.6.60
2024-03-19 12:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg