நியமம்
தவநெறியில் நிற்றல், கற்றல், உள்ளதைக்கொண்டு மனநிறைவு கொள்ளுதல், தூய்மை, கடவுளிடம் சரன் ஆகியவற்றைக் கொண்டது, பட்டினி மேற்கொண்டு விரதம் கடைபிடித்தலும், உடலின் செயல்களை அடக்கி ஆளுதலும் உடல் சம்பந்தமான தவம். வேதங்களையும், சாஸ்திரங்களையும், மந்திரங்களையும் கற்பது சுவாத்யாயம். இது உடலில் உள்ள சத்துவப் பகுதியை சுத்தமாக்குகிறது. மற்றவர் கேட்கும்படி உரத்த ஒலியுடன் ஏற்றத்தாழ்வாக மந்திரங்களை உச்சரிக்கும் முறை அதமம் ஆகும். உதடு அசைந்து ஒலி வராமல் உச்சரிப்பது மத்திமம் ஆகும். உதடு அசையாமல் மனத்திலே நினைத்தல் சிறந்தது. உத்தமம் ஆகும். இது திருப்தி தரும். சௌசம் அல்லது தூய்மை அகத் தூய்மை, புறத் தூய்மை எனப்படும். உடலை நீரால் சுத்தம் செய்வது புறத்தூய்மை, வாய்மையாலும் நற்குணங்களாலும் மனதை தூய்மையாக்குவது அகத்தூய்மை ஆகும்.உடலைப் பேனுதல், நல்லொழுக்கம் கைகொள்ளல், அதிகமாகவும் இன்றி, குறைவாகவும் இன்றி எளிய உணவு உண்ணுதல், வாத, பித்த சிலேட்டுமம் ஆகிய தோஷங்களை அதிகப் படுத்தும் உணவுகளையும், தன் உடம்பிற்கு ஒவ்வாத உணவையும் கைவிடல் வேண்டும்.
இளம் வயதில் புலால் உண்ணுபவராக இருந்தாலும் யோகப் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்தவுடன் உண்ணாமலிருக்க வேண்டும். வாழ்வுப் பாதயில் இதை இப்படி செய்வது இன்ன காலத்தில் செய்வது எனத் திட்டமிட்டும் எளிமையாகவும் வாழ்தல் வேண்டும். பராசக்தி வடிவமான குண்டலினி சக்தி தலையின் மேலே உள்ள ஜோதி வடிவமான பரம் பொருளை அடையும் என்ற நீதியை உணர்ந்திருக்க வேண்டும் என்பது நியதியாகும்.
உடல் மனத்தூய்மை, அருள் கொள்வது, மிதமான உணவு, பொறுமை, நேர்மை, வாய்மை, ஐம்பெரும் பாவங்களை நீக்கல் முதலியன நியமம் எனப்படும். தவநியமங்கள், ஜபங்கள், எப்போதும் மகிழ்வுடன் இருத்தல், இறைபற்று, தானம் தருதல், சிவவிரதம் மேற்கொள்வது, சித்தாந்த தத்துவம் கேட்பது, வேள்வி, சிவபூசை, அறிவு சிறத்தல் முதலியனவும் நியமத்துள் அடங்கும்.
பொதுவாக இமயம், நியமம் இரண்டும் இரண்டறக் கலந்தைவையாகும். இமயம், நியமம் இரண்டையும் மேற்கொள்வது என்பது மிகச்சிறந்த ஒழுக்கப் பயிற்சியாகும். இவை இரண்டும் யோகத்திற்கு அடிப்படை. இவையில்லையேல் யோகப்பயிற்சிகள் கைகூடாது என்பதை அறிக.
எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ ஒரு யோகி எவரையும் துன்புறுத்தக்கூடாது.
“இராஜயோகம்” தன்னகத்தே கீழ்க்கானும் எட்டு படிகளைக் கொண்டுள்ளது.
1. இமயம்
2. நியமம்
3. ஆசனம்(அ)இருக்கை
4. பிரணாயாமம்(அ)பிராணணைக்கட்டுப்படுத்தல்
5. பிரத்தியாஹாரம்(அ)புலன் ஒடுக்கம்
6. தாரணை
7. தியானம்(அ)ஆழ்ந்து சிந்தித்தல்
8. சமாதி(அ)மெய்மறந்த உயர் நினைவு நிலை
******